search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் பெரியகருப்பன்"

    • வட்டியில்லா கடன் 2023-24ம் நிதியாண்டில் ரூ.1500 கோடி வரை வழங்கப்படும் என்றார் அமைச்சர் பெரியகருப்பன்.
    • வேளாண் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

    சென்னை:

    ஆடு, மாடு, கோழி, மீன் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வட்டியில்லா கடன் வழங்கப்படும்.

    இந்த வட்டியில்லா கடன் 2023-24ம் நிதியாண்டில் ரூ.1,500 கோடி வரை வழங்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

    கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் விவசாயிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மூலமாக பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    வேளாண் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளும் கூட்டுறவு வங்கிகளை அணுகி பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிராமங்கள் தோறும் இருக்கும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், ஆடு, மாடு, கோழி, மீன்கள் போன்றவற்றை வளர்க்கும் விவசாயிகள், தங்களுடைய ஆதார் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை சமர்ப்பித்து கடன் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • அனைவருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு 1112 பயனாளிக ளுக்கு ரூ.3.13 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசிய தாவது:-

    தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு முதல்-அமைச்சர் பயனுள்ள பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகி றார். அரசின் நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் மாதந்தோறும் கடைகோடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முகாமில் 159 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு 125 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ள்ளது.

    முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசில் எல்லோருக்கும் எல்லாமும் என்ற தத்துவத் தின் அடிப்படையில் அனை வருக்குமான அரசாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக மக்களை தேடி அரசு என்ற உன்னத நிலை தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

    அதனடிப்படையில் அனைத்து துறை அரசு முதல் நிலை அலுவலர்க ளையும் ஒருங்கி ணைத்து நடைபெற்று கொண்டி ருக்கும் இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்து உள்ளனர்.

    இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு அத்து றையைச் சார்ந்த அலுவலர் களை முறையாக அணுகி அதன் மூலம் பயன்பெற்று தங்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம், ஒன்றிய செயலாளர் பாலசுப்பிர மணியன், ஊராட்சி தலை வர் புவனேஸ்வரி காளி தாஸ், திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், பேரூராட்சி சேர்மன் கோகிலா ராணி நாராய ணன், மாவட்ட மாணவர் அணி தி.மு.க. அமைப்பாளர் ராஜ்குமார், திருப்பத்தூர் ஒன்றிய துணை அமைப்பா ளர் கண்ணன் மற்றும் ஒன்றிய, பேரூர், நகர் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • மருத்துவ முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்
    • சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள அரளிக்கோட்டை கிராமத் தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் மருத்துவ முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும், கர்ப்பிணிகளுக்கு ஊட்ட சத்து பெட்டகங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    ஒவ்வொரு வட்டாரத்திலும் 3 முகாம் களை நடத்திட உத்தரவிடப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மொத்தம் 36 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தற்போது 2-வது முகாம் நடந்துள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு நோய்களுக்கான தன்மையை கண்டறிந்து அதுக்கான உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு உடல்நலம் சார்ந்த பரிசோதனைகள் மேற்கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், சுகாதார துணை இயக்குநர் விஜய்சந்திரன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கதிர் ராஜ்குமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் மதிவாணன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் சதீஷ்குமார், சன் சீமான் சுப்பு, ஊராட்சி மன்றத்தலைவர் புவனேஷ்வரி காளிதாஸ், வட்டார மருத்துவ அலுவலர் நபிஷா பானு, ஏரியூர் மருத்துவர் பிரேம்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • திருப்பத்தூரில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது.
    • அமைச்சர் பெரியகருப்பன் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார்.

    திருப்பத்தூர்

    திருப்பத்தூரில் உள்ள மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம் முன்பு தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா நடந்தது. மாவட்ட திட்ட செயலாளர் முருகேசன் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் தொ.மு.ச. கொடியை ஏற்றி வைத்து பேசினார். கோட்ட செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். இதில் திட்ட தலைவர் ராமமூர்த்தி, பொருளாளர் சரவண குமார், மாநில தொழிலாளர் நல செயலாளர் ரவிந்திரன், மதுரை மண்டல செயலா ளர் ராஜேஷ் கண்ணன், பேரவை செயலாளர் திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர் முத்துராம லிங்கம், வட்டச் செயலாளர் சோமு, மாநிலத் துணைத் தலைவர் இராமு, திருப்பத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், மற்றும் கோட்டம், உப கோட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், மற்றும் சங்கபொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 10 நாட்களில் தக்காளி விலை மளமளவென உயர்ந்துவிட்டது.
    • தக்காளியை மொத்தமாக பதுக்கும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    சென்னை:

    தக்காளி விலை எப்போதும் இல்லாத அள வுக்கு விலை உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் தக்காளி விலை கிலோ ரூ.200 வரை உயர்ந்துவிட்டது. இந்த விலை இன்னும் உயரும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    கடந்த மாதம் தக்காளி விலை 100 ரூபாயாக உயர்ந்த போது கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளியை விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது.

    சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் கூட்டுறவு கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது தவிர சில ரேஷன் கடைகளிலும் தக்காளி விற்கப்பட்டது. ஆனாலும் பொதுமக்கள் பல பேருக்கு தக்காளி குறைந்த விலையில் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் தக்காளி தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. கடந்த 10 நாட்களில் தக்காளி விலை மளமளவென உயர்ந்துவிட்டது. இப்போது ஒருகிலோ தக்காளி ரூ.180 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது.

    இந்த விலையை கட்டுப்படுத்த அரசு இப்போது முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்காக உயர்மட்ட அளவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச்செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக அரசுத்துறை உயர்அதிகாரிகளை அழைத்து ஆலோசித்தார். இந்த கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் தக்காளியை மொத்தமாக பதுக்கும் வியாபாரிகளை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

    கூட்டுறவுத்துறை மூலம் தக்காளியை மொத்தமாக வாங்கி கொள்முதல் விலைக்கே கூட்டுறவு கடைகளில் விற்பனை செய்யவும் விரிவான ஏற்பாடுகளை செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.

    சென்னை:

    தக்காளி விலை கிலோ ரூ.130 வரை உயர்ந்து விட்டதால் அதை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரியகருப்பன் இன்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள், கூட்டுறவு சங்க பதிவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

    தக்காளியை குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளை முதல் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

    வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை என 3 ஆக பிரித்து மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். பின்னர் அனைத்து மாவட்டங்களிலும் சில ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யும் அளவில் இந்த திட்டம் விரிவுப்படுத்தப்படும்.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 111 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும். ஒரு கிலோ தக்காளி ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அமைச்சர் பெரியகருப்பன் கூறினார்.

    • தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
    • சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பண்ணை பசுமை கடையை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் தக்காளி விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த கூட்டுறவுத்துறையின் மூலம் செயல்பட்டு வரும், பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கணிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த வாரம் முதல் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தோராயமாக நாள் ஒன்றுக்கு சென்னை, கோயம்பேடு மார்கெட்டிற்கு 800டன் வரையிலான வரக்கூடிய தக்காளி வரத்து தற்போது 300டன் என்ற அளவில் குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.90 முதல் ரூ.100 வரை விற்கப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில், கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் 62 பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள் 3 நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறைந்தபட்சமாக தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு ரூ.60 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலையானது வெளிச்சந்தையுடன் ஒப்பிடுகையில் ரூ.30 முதல் ரூ.40 வரை குறைவானதாகும்.

    திருவல்லிக்கேணி நகர கூட்டுறவுச் சங்கத்தின் கீழ் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, ராஜா அண்ணாமலைபுரம், கீழ்ப்பாக்கம், பெரியார்நகர் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அம்மா உணவத்திற்கும் தனியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளது.

    இந்த தற்காலிகமான தக்காளி விலையேற்றத்தை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டவிரோதமாக தக்காளியை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிகை விடப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்நாட்டில் உள்ள 35,000-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் மூலம் தக்காளி விற்பனையினை விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.10.78 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் சான்றிதழ் வழங்கினார்

    சிவகங்கை

    சிவகங்கையில் கூட்டுறவுத்துறை சார்பில் 371 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் கடன் தள்ளுபடிக்கான சான்று மற்றும் 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30.10 லட்சம் கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

    மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2022-23-ம் ஆண்டில் 472 பேருக்கு ரூ.14.65 கோடி மதிப்பீட்டில் மகளிர் சுய உதவி குழு கடன் வழங்கப்பட்டுள்ளது. ேமலும் முதல்-அமைச்சரின் ஆணையின் படி தமிழகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களில் அன்றைய தேதியில் நிலுவையில் இருக்கும் மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியி டப்பட்டது.

    அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 732 மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் 38 ஆயிரத்து 681 உறுப்பினர்களிடம் நிலுவையாக இருந்த ரூ.82.04 கோடி மகளிர் சுய உதவி குழு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

    அதற்கான தொடக்க நிகழ்வாக இன்றைய தினம் 371 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.10.78 கோடி மதிப்பீட்டில் கடன் தள்ளுபடிக்கான சான்றுகள் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதை தவிர, 7 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.30.10 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    அரசின் திட்டங்களின் மூலம் பயன்பெற்று வரும் பெண்கள், திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்களின் வாழ்வா தாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) கோ.ஜினு, மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) ரவிச்சந்திரன், ஆவின் பால்வளத்தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்றத் தலைவர் துரைஆனந்த், காரைக்குடி சரகத்துணை பதிவாளர் சீமான், சிவகங்கை துணை பதிவாளர் பாலச்சந்திரன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து மற்றும் பலர் பங்கேற்றனர்.

    • மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.
    • தமிழகத்தில் சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் மகளிர் சுய உதவி குழு வளர்ச்சி அடைய செய்தனர்.

    சென்னை:

    சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் கூட்டுறவு துறையின் கீழ் சென்னை மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, பயனாளிகளுக்கு சான்றிதழ் வழங்குதல் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு புதிய வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெரம்பூர் ஆர்.மகேஷ் தலைமையில் நடைபெற்றது. நிர்வாக இயக்குனர் அமல தாஸ் வரவேற்றுப் பேசினார். 

    சிறப்பு அழைப்பாளர்களாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்களை வழங்கினார்கள். 

    விழாவில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது:-

    மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்தார். அதன் பேரில் முதல்-அமைச்சர் அதற்கென ஒரு தொகையை ஒதுக்கீடு செய்து தற்பொழுது அதை நடைமுறைப்படுத்தி வருகிறார். 

    251 குழுக்களுக்கு 4.98 கோடி வாரி வழங்கி மகளிரின் இன்னலை போக்கியவர் நமது முதல்வர். கடன் தள்ளுபடி பெற்றவர்கள் தொழில் செய்வதற்கு உதவியாக வருமுன் காப்போம் என்கின்ற வாசகத்திற்கு இணங்க 18 குழுக்களுக்கு 1.21 கோடி கடன் உதவியாக தந்திருப்பவர் நமது முதல்வர். 

    பொதுமக்கள், தொழில் முனைவோர் அதிக வளர்ச்சி பெற வேண்டும் என்கின்ற நோக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் 452 பேருக்கு 3.18 கோடியை அவர்களது வாழ் வாதாரத்திற்காக கடனாக வழங்கக் கூடிய முதல்வர் நமது முதல்வர். கூட்டுறவுத் துறையைப் பொறுத்தவரையில் பயிர் கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, உட்பட அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யக் கூடிய ஒரே துறை நமது அரசின் கூட்டுறவு துறை தான்.

    இவ்வாறு அவர் பேசி னார். 

    அமைச்சர் பெரியகருப்பன் பேசியதாவது:-

    கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது இந்து சமய அறநிலையத்துறை எனக்கு வழங்கப்பட்டது. ஆனால் நமது முதல்-அமைச்சர் பதவி ஏற்றதும் இந்து சமய அறநிலையத் துறையை அமைச்சர் பி.கே.சேகர்பாபுவுக்கு வழங்கினார். அவர் அந்தத் துறையில் என்னை விட கூடுதலாக மிகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    மகளிர் சுய உதவிக் குழு என்கின்ற ஒன்றிற்கு விதை விதைத்தவர் நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்.

    தமிழகத்தில் சிறிய அளவில் தொடங்கி பெரிய அளவில் மகளிர் சுய உதவி குழு வளர்ச்சி அடைய செய்தனர். மறைந்த நமது முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான் காரணம். இன்றைய காலகட்டத்தில் அது மிக பெரிய அளவில் வருவதற்கு நமது முதல்-அமைச்சர் தான் காரணம். 

    ஏனெனில் நமது முதலமைச்சர் அப்பொழுது அமைச்சராக இருந்த போது தான் மகளிர் சுய உதவிக் குழு மிகப்பெரிய விஸ்வரூபத்தை எடுத்தது. 

    அன்று மகளிர் சுய உதவி குழுக்களை ஊக்கப்படுத்தி திறன் பட செயலாற்றியவர் தான் நமது முதல்-அமைச்சர். 

    நமது முதல்-அமைச்சர் மகளிர்களின் பொருளாதாரம் உயர்வதற்கு 20 ஆயிரம் கோடி வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும் என நிர்ணயம் செய்தார். ஆனால் நிர்ணயம் செய்யப்பட்ட அளவைவிட கூடுதலாக கடந்த 2022 -ம் ஆண்டு 21 ஆயிரம் கோடி கடன் தொகையாக வழங்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டது.

    தற்போது இந்த துறை நமது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. நமது முதல்-அமைச்சர் போல் மிகவும் சிறப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது பணியை சிறப்பாக செய்து வருகிறார்.

    ஆண்களுக்கு நிகராக பெண்களும் முன்னேற வேண்டும் என்று எண்ணுபவர் நமது முதல்-அமைச்சர். அதுமட்டுமின்றி கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் விவசாய கடன் வெறும் ரூ.6000 கோடி மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் நமது முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் 3 ஆண்டுகளில் 10 ஆயிரம் கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் இன்னும் சில தினங்களில் விவசாயிகளுக்கான கடன் தொகையின் அளவு ரூ.12 ஆயிரம் கோடியை எட்ட உள்ளது.  

    இவ்வாறு அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேசினார்.

    நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், கூட்டுறவுத் துறை பதிவாளர் சண்முக சுந்தரம் உள்பட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • 1,150 பேருக்கு பட்டங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    • ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தொடங்கி வைத்தார்.

    முதல்வர்அப்பாஸ் மந்திரி வரவேற்று அறிக்கை சமர்ப்பித்தார். சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, கல்வியியல் கல்லூரி அறிக்கை சமர்ப்பித்தார்.

    சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு 1,150 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    முன்னாள் கல்லூரி மாணவியும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி,முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதின், கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அஹமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அஸ்ரப் அலி, ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
    • சில குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டினார்கள்.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டம் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் விளக்கி கூறினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கே:- பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாததால் அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்களே? என்ன காரணத்தால் கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை?

    ப:- பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பையும் முதல்-அமைச்சர் வழங்கினார். அதில் சில குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டினார்கள். பல கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பை கொடுக்கும் போது ஒரு சில இடங்களில் எங்காவது தவறு நடந்திருந்தால் அதை மிகைப்படுத்தி காட்டும் காரணங்களால் இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த முடிவு எடுத்திருக்கலாம்.

    கே:- பொங்கல் பணம் ரூ.1000 மக்களுக்கு எப்படி கொடுக்க போகிறீர்கள்? டோக்கன் வழங்கப்படுமா?

    ப:- அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுதொடர்பாக ஆலோசனை நடத்தி முறையான அறிவிப்பு வெளியிடுவோம். எனவே மக்களை குழப்பிவிட வேண்டாம். நாளை மாலை 3 மணிக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறோம்.

    கே:- தவறுகள் நடைபெறாத அளவுக்கு பொங்கல் தொகுப்பை வழங்க முடியாதா?

    ப:- அதுபற்றி முதல்-அமைச்சர் சிந்தித்து கொண்டு இருக்கிறார். இதுபற்றி முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் தனிப்பெரும் கருணை வள்ளலாரின் 200-வது முப்பெரும்விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில்அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 45 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வள்ளலாரின் போதனைகள் அடங்கிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    இந்த விழாவில் வள்ள லாரின் கொள்கைகளை வலியுறுத்தும் தலைப்பு களில் பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு மற்றும் கவிதைப் போட்டி போன்றவை மன்னர் மேல் நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 177 பேர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

    வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மூத்த சன்மார்க்கிகள் 12 பேருக்கு வெள்ளி டாலர்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்கவர்களை கவுரவிக்கும் வகையிலும், எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி மற்ற மாநி லங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ்,காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×