search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mupperum ceremony"

    • வள்ளலாரின் 200-வது முப்பெரும் விழாவில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
    • அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்கினார்.

    சிவகங்கை

    சிவகங்கையில் தனிப்பெரும் கருணை வள்ளலாரின் 200-வது முப்பெரும்விழா நடந்தது.கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இதில்அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 45 மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் வள்ளலாரின் போதனைகள் அடங்கிய புத்தகங்களை பரிசாக வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசியதாவது:-

    இந்த விழாவில் வள்ள லாரின் கொள்கைகளை வலியுறுத்தும் தலைப்பு களில் பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டு மற்றும் கவிதைப் போட்டி போன்றவை மன்னர் மேல் நிலைப் பள்ளியில் நடத்தப்பட்டது. இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 177 பேர் கலந்து கொண்டு திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

    வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்க சங்கத்தில் ஈடுபாடு கொண்டுள்ள மூத்த சன்மார்க்கிகள் 12 பேருக்கு வெள்ளி டாலர்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

    இதுபோன்று வரலாற்று சிறப்பு மிக்கவர்களை கவுரவிக்கும் வகையிலும், எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ளும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலை நோக்கு சிந்தனையுடன் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி மற்ற மாநி லங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை ஆதீனம் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஞானப்பிரகாச தேசிக சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிக்குமார், உதவி ஆணையர் செல்வராஜ்,காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×