search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Periya Karuppan"

    • முந்தைய அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்படுத்தி கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் நிருபர்களிடம் கூறியதாவது:

    தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தேர்தல் வாக்குறுதிகளில் 85 சதவீதத்தை நிறைவேற்றியுள்ளோம். முந்தைய அ.தி.மு.க. அரசு 10 ஆண்டுகளில் 6 லட்சம் கோடி ரூபாய் கடன் ஏற்படுத்தி கஜானாவை காலி செய்து விட்டு சென்றனர்.

    அந்த இக்கட்டான சூழ்நிலையில், ஆட்சிக்கு வந்து தனது திறமையான நிர்வாகத்தால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை, பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு போன்ற பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறார்.

    இந்தியாவிலேயே தமிழ்நாடு வளர்ச்சி திட்டங்களில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

    ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்வது குறித்து விவசாயிகள் விடுத்த கோரிக்கை குறித்து உணவுத்துறை அமைச்சரும், வேளாண்மை துறை அமைச்சரும் பேசி வருகின்றனர். விரைவில் நல்ல தகவல் வரும். மகளிர் உரிமை தொகை திட்டத்தை அனைத்து மகளிருக்கும் வழங்குவது குறித்து முதலமைச்சர்தான் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பையும் முதல்-அமைச்சர் வழங்கினார்.
    • சில குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டினார்கள்.

    சென்னை:

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தலைமையில் அனைத்து மண்டல இணை பதிவாளர்கள் மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இந்த கூட்டத்தில் கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ராதா கிருஷ்ணன், பதிவாளர் சண்முகசுந்தரம், கூடுதல் பதிவாளர் சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டம் குறித்து அமைச்சர் பெரியகருப்பன் நிருபர்களிடம் விளக்கி கூறினார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-

    கே:- பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்யாததால் அரசை கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்துகிறார்களே? என்ன காரணத்தால் கரும்பு கொள்முதல் செய்யப்படவில்லை?

    ப:- பொதுமக்களுக்கு சென்ற ஆண்டு 21 பொருட்களுடன் கரும்பையும் முதல்-அமைச்சர் வழங்கினார். அதில் சில குறைபாடுகளை பலர் சுட்டிக்காட்டினார்கள். பல கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பை கொடுக்கும் போது ஒரு சில இடங்களில் எங்காவது தவறு நடந்திருந்தால் அதை மிகைப்படுத்தி காட்டும் காரணங்களால் இதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த முடிவு எடுத்திருக்கலாம்.

    கே:- பொங்கல் பணம் ரூ.1000 மக்களுக்கு எப்படி கொடுக்க போகிறீர்கள்? டோக்கன் வழங்கப்படுமா?

    ப:- அதுபற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. அதுதொடர்பாக ஆலோசனை நடத்தி முறையான அறிவிப்பு வெளியிடுவோம். எனவே மக்களை குழப்பிவிட வேண்டாம். நாளை மாலை 3 மணிக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறோம்.

    கே:- தவறுகள் நடைபெறாத அளவுக்கு பொங்கல் தொகுப்பை வழங்க முடியாதா?

    ப:- அதுபற்றி முதல்-அமைச்சர் சிந்தித்து கொண்டு இருக்கிறார். இதுபற்றி முதல்-அமைச்சர் முடிவெடுப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் செஸ் விளையாடிய உள்ளனர்.
    • தமிழகம் தான் செஸ் விளையாட்டின் தாயகம்.

    திருபுவனம்:

    சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, நாளை முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் இதை அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டம் தோறும் இந்த போட்டியை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சிகள் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மாநில ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், தமிழர்களுக்கு செஸ் விளையாட்டு ஒன்றும் புதிதானது அல்ல என்றார்.

    3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் செஸ் விளையாடியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார். கீழடி அகழ்வாராய்ச்சியில் சதுரங்க ஆட்டக்காய்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், செஸ் விளையாட்டின் தாயகமே தமிழகம் தான் என்றும் கூறினார். 

    ×