search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உழவர் உழைப்பாளர் கட்சி"

    • ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன் என்பவர் அந்த விவசாயியை காலால் எட்டி உதைத்த சம்பவம் ஜனநாயக விரோத செயல்.
    • இது போன்ற நிகழ்வுகள் நிகழாத வண்ணம் அந்த ஊராட்சி செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம்:

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பிள்ளையார்குளம் ஊராட்சி. இங்கு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயி அம்மையப்பன் என்பவர் பேசி கொண்டு இருந்தபோது ஊராட்சி செயலாளர் தங்கப்பாண்டியன் என்பவர் அவரை காலால் எட்டி உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், கிராம சபை கூட்டத்தில் விவசாயி தாக்கப்பட்டதற்கு உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டம்,பிள்ளையார் குளம் ஊராட்சி, கங்கா குலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி அம்மையப்பன் கேட்ட நியாயமான கேள்விகளுக்கு பதிலளிக்காமல் ஊராட்சி செயலாளர் தங்க பாண்டியன் என்பவர் அந்த விவசாயியை காலால் எட்டி உதைத்த சம்பவம் ஜனநாயக விரோத செயல்.

    இது மொத்த விவசாயிகளையும் அவமதிக்கின்ற செயலாகவே கருதப்படுகிறது. கிராம சபை கூட்டம் என்பது மக்கள் கேள்வி கேட்பதற்கே என்பது கூட தெரியாமல் ஒரு அரசு ஊழியர் இருப்பதா? எனவே விவசாயியை தாக்கிய அந்த ஊராட்சி செயலாளரின் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காயம் பட்ட அந்த விவசாயின் மருத்துவ செலவுகளை அரசு ஏற்க வேண்டும்.

    இனியும் இது போன்ற நிகழ்வுகள் நிகழாத வண்ணம் அந்த ஊராட்சி செயலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார். இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி கூறியதாவது:-

    விருதுநகர் மாவட்டம், பிள்ளையார் குளம் ஊராட்சி, கங்கா குலம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபையில் மிகவும் பொறுமையாக, நிதானமாக கேள்வி கேட்டவிவசாயி அம்மையப்பனை காலால் எட்டி உதைத்து, கடுமையாக தாக்கிய ஊராட்சி செயலர் தங்க பாண்டியனை நிரந்தரமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும், அரசு ஊழியரால் ஏற்பட்ட அவமானத்தால் பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனுக்கு ரூ. 10லட்சம் தமிழ்நாடு அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.

    அரசு ஊழியரால் பாதிக்கப்பட்ட விவசாயி அம்மையப்பனுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் தமிழக விவசாயிகள் சங்கம் போராட்டத்தில் குதிக்க தயங்காது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உழவாலயத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • உழவர் தின விழாவை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைமை அலுவலகம் உழவாலயத்தில் கட்சித் தலைவர் செல்லமுத்து தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், மாநில பொருளாளர் பாலசுப்ரமணியம், மாநில மகளிர் அணி செயலாளர் கே.சி.எம். சங்கீத பிரியா, ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன்,இளைஞரணி செயலாளர் காடாம்பாடி கணேசன், திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி, கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் வரும் ஜூலை 5ந்தேதி உழவர் தின விழாவை சிறப்பாக நடத்துவது. தமிழக அரசு ரேசன்கடைகளில், தேங்காய் எண்ணெய் விற்பனை செய்ய நடவடிக்கை வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு பின் கட்சித் தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:- திருப்பூர், கோவை மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இங்கு உள்ள பல விவசாயிகள் தென்னை விவசாயத்திற்கு மாறிவிட்டனர். இந்தநிலையில் தற்போது தேங்காய் விலை குறைந்துள்ளது.

    உதாரணமாக கடந்த சில வாரங்களுக்கு முன் தேங்காய் ஒன்றின் விலை ரூ.13 முதல் ரூ. 14.50 வரை விலை கிடைத்தது. தற்போது தேங்காய் ஒன்றின் விலை ரூ.10 முதல் 11.50 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். தென்னை விவசாயத்திற்கு பயன்படும் மருந்துகள், உரம், போன்றவைகள் கடுமையாக விலை அதிகரித்துள்ள நிலையில் தேங்காய் விலை குறைவால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

    மேலும் ரேசன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில் இறக்குமதி செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அதற்கு மாற்றாக தேங்காய் எண்ணெயை வினியோகிக்க அரசு முன்வர வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசு உரம், இடுபொருள்களுக்கு மானியம் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு விவசாயிகளிடமிருந்து இனாம் நிலங்களை கைப்பற்றுவதை விடுத்து அந்த நிலங்களை பண்படுத்தி பல வருடங்களாக கஷ்டப்பட்டு கடன் பட்டு, மலடாக இருந்த நிலத்தை ,விளை நிலமாக மாற்றிய விவசாயிகளுக்கு அவர்களது பெயரிலேயே பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    • 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது.
    • தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளனர்.

    பல்லடம் :

    பாமாயில் இறக்குமதி ஒப்பந்தத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சமீபத்தில் 200 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளியை வெளியிட்டதாக தெரிய வருகிறது.இது தென்னை விவசாயிகளுக்கு வேதனை அளிக்கிறது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான தென்னை விவசாயிகள் தேங்காய்க்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாக உள்ளனர். கொப்பரைக்கும் உரிய விலை கிடைப்பதில்லை.

    எனவே நீண்ட காலமாக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகிறோம். சமீபத்தில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இந்த நிலையில், நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் இந்த பாமாயில் ஒப்பந்த புள்ளி அறிவிப்பு விவசாயிகளுக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்ககவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தென்னை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் உரம், இடுபொருள்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்.
    • குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது.

    பல்லடம் :

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- பொன் விளையும் பூமி என்று அழைக்கப்படும் தஞ்சை டெல்டா பகுதியில், மத்திய அரசு நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டம் என்பது முட்டாள்தனமா னது. இந்த திட்டம் டெல்டா மாவட்டங்களை கடுமையாகப் பாதிப்பதுடன், உணவுப் பாதுகாப்பையும், விவசாயிகள் மற்றும் கிராம மக்களின் வாழ்வாதார த்தையும் பாதிக்கும்.

    நிலக்கரி திட்டத்திற்கு சுரங்கம் அமைக்கும்போது அந்த பகுதியில் நிலத்தடி நீர் முற்றிலும் இல்லாமல் போய்விடும். சுமார் 40 கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்திற்கு நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். இதன்மூலம் அங்குள்ள அனைத்து விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த குடும்பங்கள் வாழ்வாதார த்தை இழந்து விடும் அபாயம் உள்ளது.எனவே நிலக்கரி சுரங்கத் திட்ட டெண்டரை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்யவேண்டும். இதற்கு தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் ஜாதி, மதம், அரசியல் கட்சி பேதம் இன்றி எந்தவிதமான தியாகத்தையும் செய்து,தஞ்சை வேளாண் மண்டலத்தை காப்போம். ஏற்கனவே தமிழ்நாடு அரசு கடந்த 2020-ம் ஆண்டு தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், கரூர் மற்றும் திருச்சி ஆகிய 8 மாவட்ட ங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்துள்ளது. இதன்படி பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலத்தில், எந்த ஒரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பா ட்டையும் மேற்கொள்ள க்கூடாது என்று மிகவும் தெளிவாக குறிப்பிடப்ப ட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அனுமதியை பெறாமல் தன்னிச்சையாக மத்திய அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை எதிர்த்து, தமிழ்நாடு அரசு ,மத்திய அரசுக்கு கடுமையாக அழுத்தம் அளிக்க வேண்டும். இல்லையெனில் விவசாயிகள், பொதுமக்க ளைத் திரட்டி, போரா ட்டங்கள் முன்னெடுக்க ப்படும்.விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், ஆளுகின்ற பா.ஜ.க.அரசு விவசாயிகளுக்கு பயன் தரும் திட்டங்களை அறிவித்து நல்ல பெயர் எடுப்பதை விட்டுவிட்டு, இது போன்ற விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை அறிவித்து ஏனோ கெட்ட பெயரை சம்பாதிக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின் போது உழவர் உழைப்பாளர் கட்சி மாநில பொருளாளர் பாலசுப்பிரமணியம்,மாநில செயலாளர் சின்ன காளிபாளையம் ஈஸ்வரன், மாநில மகளிர் அணி செயலாளர் கே.சி.எம்.சங்கீத பிரியா, ஊடக பிரிவு செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்ற வாக்குறுதி நிறைவேற்றாமல் உள்ளது.
    • ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும்.

    பல்லடம் :

    பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசு தற்போது கியாஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருப்பது ஏழை எளியவர்களை கடுமையாக பாதிக்கும். கியாஸ் சிலிண்டர் என்பது அனைத்து தரப்பு மக்களுக்கும் அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. கொரோனா காலத்திற்கு பின்னர் வேலைவாய்ப்புகள் குறைந்ததால் ஏழைகளின் குடும்ப சுமை அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அத்தியாவசிய தேவைகளான சமையல் கியாஸ் விலை உயர்வு ஏழை, எளிய, மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

    ஏற்கனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கியாஸ் சிலிண்டரின் விலையை குறைக்கும் வகையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கியாஸ சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும். எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கியாஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
    • நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன.

    பல்லடம் : 

    பல்லடம், ஆனைமலையாறு- நல்லாறு திட்டம் குறித்து பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது. உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து தகவல். இதுகுறித்து பல்லடத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவக்கி வைக்க சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அவரிடம் விவசாயிகளின்,தேங்காய் தக்காளி சின்ன வெங்காயம் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு, உரிய விலை கிடைக்காததால் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், மழையில் நனைந்து வீணாகின்றன. ஆனைமலை - நல்லாறு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனு பிரதமரிடம் வழங்கப்பட்டது. கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் கூறினார்.

    இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பா.ஜ.க.தலைவர் அண்ணாமலைக்கு நன்றி இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 13 ஆயிரம் நெல் மூட்டைகள் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, மழையில் நனைந்து வீணாகி உள்ளது.
    • பல்வேறு காரணங்களை கூறி உண்மையான விவசாயிகள் பலருக்கு நகை கடன் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பல்லடம் :

    மதுபானக்கடைகளை காப்பதில் இருக்கும் அக்கறை நெல் மூட்டைகளை காப்பதில் இல்லையே என உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பல்லடத்தில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து செய்தியாளரிடம் கூறியதாவது:- தமிழகத்தில் உணவு தானிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் டெல்டா மாவட்டங்களில் விளைவிக்கப்படும் நெற்பயிர்கள் மழையில் நனைந்து வீணாகும் அவலம் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. மதுராந்தகம், சிலாவட்டம் பகுதியில், 13 ஆயிரம் நெல் மூட்டைகள் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்டு, மழையில் நனைந்து வீணாகி உள்ளது. விவசாயிகள் கஷ்டப்பட்டு உழைத்து விளைவித்த நெற்பயிர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை.மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் அரசு, விவசாயிகள் விளைவிக்கும் நெற்பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுக்கிறது. சமீபத்தில், பல்வேறு காரணங்களை கூறி உண்மையான விவசாயிகள் பலருக்கு நகை கடன் தள்ளுபடி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கான அரசு ஆணையை ரத்து செய்யக்கோரி பொள்ளாச்சியில் வரும் 27-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் உழவர் உழைப்பாளர் கட்சியினர் கலந்துகொள்வோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×