search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செறிவூட்டப்பட்ட அரிசி"

    • 1,185 பகுதி, முழுநேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன.
    • 3 லட்சம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர்.

    தாராபுரம் :

    தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ரேஷன் கடைகளில் படிப்படியாக செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களுக்கு உட்பட்ட 1,149, நுகர்பொருள் வாணிப கழக கட்டுப்பாட்டில் 22, மகளிர் குழுக்கள் வாயிலாக 14 என மொத்தம் 1,185 பகுதி, முழுநேர ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளிலும், தமிழக அரசின் உத்தரவுபடி இம்மாதம் முதல் செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் தொடங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    முதற்கட்டமாக ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்குவதற்காக, மாவட்ட நுகர்பொருள் வாணிப கழகம் வாயிலாக மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மூட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டும் வருகிறது.புதிய திட்டத்தில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி பொருட்கள் பெறும் (பி.எச்.எச்-.,- ஏ.ஏ.ஒய்.,) கார்டு பயனாளிகளுக்கும் இந்த அரிசி வழங்கப்பட உள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகள் வாயிலாக மட்டும் 3 லட்சம் கார்டுதாரர்கள் பயன்பெறுவர் என நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்பட்டு நியாயவிலை கடைகள் மூலம் விலையின்றி வழங்கப்படும்.
    • செறிவூட்டப்பட்ட அரிசியில் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, போலிக் அமிலம் கருவளர்ச்சி மற்றும் ரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பாக செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவுகளை மாவட்ட கலெக்டர் சாந்தி பொதுமக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி அட்டைதாரர்களான குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்னுரிமை குடும்ப உணவுபொருள் வழங்கல் துறை சார்பாக பொது விநியோகதிட்டத்தின்கீழ் நியாயவிலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டு, செறிவூட்டப்பட்ட அரிசியானது ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களுக்குகீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரப்படுகிறது.

    செறிவூட்டப்பட்ட அரிசியானது 1.4.2023 முதல் நியாயவிலை அங்காடிகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது 1:100 என்ற விகிதாச்சாரத்தில் கலக்கப்பட்டு சமமான செறிவூட்டப்பட்ட அரிசி தயாரிக்கப்பட்டு நியாயவிலை கடைகள் மூலம் விலையின்றி வழங்கப்படும்.

    பெண்கள், குழந்தைகள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றவர்களுக்கு ஊட்டச்சத்து பற்றாக்குறையை தவிர்க்கும் பொருட்டு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுகிறது.

    செறிவூட்டப்பட்ட அரிசியில் உள்ள ஊட்டசத்தானது ரத்த சோகையினை தடுக்கவும், உடலுக்கு தேவையான இரும்பு சத்து, போலிக் அமிலம் கருவளர்ச்சி மற்றும் இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தின் இயற்கையான செயல்பாட்டிற்கு வழிவகுக்கிறது. பொது விநியோகதிட்டத்தின் கீழ் நியாய விலை அங்காடிகள் மூலம் ஊட்டச்சத்து மிக்க செறிவூட்டப்பட்ட அரிசியை பெற்று பயன்பெருமாறு கேட்டுக ்கொள்ளப்படுகிறார்கள்.

    மேலும், இந்நிகழ்ச்சியில் செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன் குறித்து அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட கலெக்டர் சாந்தி, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கினார்.

    • செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் உணவு பொருட்களை பயன்படுத்துங்கள் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செறிவூட்டப்பட்ட அரிசியில் தயாரிக்கப்பட்ட உணவு பொருள்களை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராமநாதபுரம் மண்டலத்தில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழகம் செறிவூட்டப்பட்ட அரிசிகள் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டு அதன் அடிப்படையில் விநியோகிக்கப்படுகிறது.

    இந்த பொருட்களில் வைட்டமின்-ஏ மற்றும் வைட்டமின்-டி சத்து நிறைந்துள்ளதால் கண்நோய் மற்றும் தோல் நோய்கள் இல்லாமல் பாதுகாக்கப்படுகிறது. தற்போது தமிழக அரசு, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசியினை பொது விநியோகத் திட்டத்திற்கும் வழங்குகிறது.

    மாணவர்கள் பெற்றோர்களிடம் இதன் பயன் குறித்து எடுத்து சொல்லி அனைவரும் செறிவூட்டப்பட்ட அரிசி மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுப் பொருள்களை பயன்படுத்தி உடல் ஆரோக்கியமுடன் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் அவர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மண்டல மேலாளர் ஜோதிபாசு, துணை மண்டல மேலாளர் மேகவர்ணம், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் முத்துக்குமார், தர கட்டுப்பாட்டு அலுவலர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்கம் இணை பதிவாளர் கோவிந்தராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • இந்த அரிசி போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் வட்டம், கட்டையாபுரம் நுகர்ப்பொருள் வாணிப கழக நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை கலெக்டர் மேக நாதரெட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசியை குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களுக்கு வழங்க அறிவுறுத்திருந்தார். அதனடிப்படையில், இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கட்டையா புரம் நியாயவிலை கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 992 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் 48,575 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் 2,44,128 பி.எச்.எச். குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மாதத்திற்கு 6582.685 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது 1:100 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு (அதாவது ஒரு டன் செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகள் 100 மெ.டன் அரிசியுடன் கலக்கப்பட்டு) சமமான செறிவூட்டப்பட்ட அரிசியாக தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொது விநியோகத்திட்ட அங்காடிகள் மூலம் விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

    செறிவூட்டப்பட்ட அரிசியானது ரத்தசோகையை தடுக்கிறது. போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தில் இயல்பான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

    எனவே மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் செறி வூட்டப்பட்ட அரிசியானது வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் விஜயகுமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமார், துணை மேலாளர் கண்ணன், துணை மேலாளர் (கணக்கு) பழநி, உதவி மேலாளர் (வாணிபம்) அழகர்சாமி, உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மணிபாரதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×