search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடும்ப அட்டைதாரர்கள்"

    • 79 சதவீத குடும்ப அட்டைதாரர்கள் கலைஞர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் சரி பார்க்கப்பட உள்ளது.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க, கடந்த 18 -ந்தேதி முதல் 20-ந் தேதி வரை இரண்டாம் கட்டமாக வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி விடுபட்டுப் போனவர்கள், அரசு அறிவிப்பின்படி முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுபவர்கள் உள்ளிட்டோரும் விண்ணப்பித்தனர்.

    இதன் அடிப்படையில் இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 4,02,617 குடும்ப அட்டைகளில், 3,18,045 குடும்ப அட்டைதார்கள் கலைஞர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். அதாவது 79 சதவீதம் குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

    இந்த விண்ணப்பங்கள் தமிழ்நாடு மின் ஆளுமை மூலம் சரி பார்க்கப்பட உள்ளது. அதன்பின் தேவைப்படும் விண்ணப் பங்கள் மட்டும் அரசு அலுவலர்களால் கள ஆய்வு செய்யப்பட உள்ளன.

    கிராமப் பகுதிகளில் கிராம நிர்வாக அலுவ லர்கள், கிராம வருவாய் உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்களும், நகர் பகுதிகளில் பில் கலெக்டர்களும் கள ஆய்வில் ஈடுபட உள்ளனர். மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, திருவாடானை, ராமேசுவரம், கீழக்கரை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய 9 தாலுகாக்களில் கள ஆய்வில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.

    மாவட்டத்தில் உள்ள 775 ரேஷன் கடைகளுக்கு தலா ஒருவர் வீதம் 775 கள ஆய்வு அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர் என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை விருதுநகர் கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • இந்த அரிசி போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் வட்டம், கட்டையாபுரம் நுகர்ப்பொருள் வாணிப கழக நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகத்தை கலெக்டர் மேக நாதரெட்டி தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர் குடும்ப அட்டைதாரர்களுக்கு, செறிவூட்டப்பட்ட அரிசியை குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் மதிய உணவு திட்டங்களுக்கு வழங்க அறிவுறுத்திருந்தார். அதனடிப்படையில், இன்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கட்டையா புரம் நியாயவிலை கடையில் குடும்ப அட்டை தாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    விருதுநகர் மாவட்டத்தில் 992 நியாயவிலை கடைகள் செயல்பட்டு வருகிறது. அதில் 48,575 ஏ.ஏ.ஒய். குடும்ப அட்டைத்தாரர்கள் மற்றும் 2,44,128 பி.எச்.எச். குடும்ப அட்டைதாரர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி மாதத்திற்கு 6582.685 மெட்ரிக் டன் தேவைப்படுகிறது. இந்த செறிவூட்டப்பட்ட அரிசியானது 1:100 என்ற விகிதத்தில் கலக்கப்பட்டு (அதாவது ஒரு டன் செறிவூட்டப்பட்ட அரிசி குருணைகள் 100 மெ.டன் அரிசியுடன் கலக்கப்பட்டு) சமமான செறிவூட்டப்பட்ட அரிசியாக தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு பொது விநியோகத்திட்ட அங்காடிகள் மூலம் விலையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

    செறிவூட்டப்பட்ட அரிசியானது ரத்தசோகையை தடுக்கிறது. போலிக் அமிலம், கருவளர்ச்சிக்கும், இரத்த உற்பத்திக்கும் பயன்படுகிறது. வைட்டமின் பி12 நரம்பு மண்டலத்தில் இயல்பான செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

    எனவே மாவட்டத்தில் இன்று முதல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் செறி வூட்டப்பட்ட அரிசியானது வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் விஜயகுமார், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) செந்தில்குமார், துணை மேலாளர் கண்ணன், துணை மேலாளர் (கணக்கு) பழநி, உதவி மேலாளர் (வாணிபம்) அழகர்சாமி, உதவி மேலாளர் (தரக்கட்டுப்பாடு) மணிபாரதி மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×