என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ரேசன்கடைகளை திறக்க கோரி மார்க்சிஸ்டு ஆர்ப்பாட்டம்
- செயற்குழு உறுப்பினர் ராமச் சந்திரன்,மூத்த தலைவர் முருகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
- அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும்
புதுச்சேரி:
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி புதுவை நகரக்குழு சார்பில் காந்திவீதி- முத்துமாரியம்மன் கோவில் வீதி சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நகர செயலாளர் மதிவாணன் தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர் ராமச் சந்திரன்,மூத்த தலைவர் முருகன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர்.
நிர்வாகிகள் கலியமூர்த்தி, பிரபுராஜ், சரவணன், ஜோதிபாசு, மணவாளன், வீரமணிகண்டன், தாட்சாயிணி, மது, ரஞ்சித், பாரி, சுப்பிரமணியன், மனோகர், விஜி, வனஜா கண்டன உரையாற்றினர்.
மார்க்சிஸ்ட்டு மாநில செயலாளர் ராஜாங்கம் சிறப்புரையாற்றினார். மணவாளன் நன்றி கூறினார்.
புதுவை அரசு ரேஷன்க டைகளை திறந்து அத்தி யாவசிய பொருட்களை வழங்க வேண்டும்.
குடும்பதலைவிக்கு ரூ.ஆயிரம், சிலிண்டருக்கு ரூ.300 மானியம், பெண்களுக்கு இலவச பஸ் வசதியை செய்துதர வேண்டும். ஏழை மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். அரசு துறைகளில் காலியாக உள்ள 10 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்