search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajasthan royals"

    • ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின.
    • இந்த போட்டியில் கடைசி பந்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, பராக் மற்றும் சாம்சனின் அதிரடியால் 20 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 196 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி, தொடக்கம் சிறப்பாக அமையவில்லை என்றாலும் ஃபினிஷிங் அற்புதமாக அமைந்தது. கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் களத்தில் இருந்த ரஷித்கான் அதிரடியாக விளையாடி வெற்றி பெற வைத்தார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணி தனது முதல் தோல்வியை பதிவு செய்தது.

    இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
    • ஆர்சிபி 4 போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்துள்ளது.

    ஐபிஎல் 2024-ன் 19-வது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் கூறுகையில் "இந்த ஆடுகளத்தில் முதலில் பந்து வீச விரும்புகிறோம். இது புது ஆடுகளம். வேகப்பந்து வீச்சுக்கு (சீம்) உதவியாக இருக்கும். ஆட்டத்தின் பின் பகுதியில் பனியின் தாக்கம் இருப்பதாக எதிர்பார்க்கிறோம்" என்றார்.

    • ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
    • ஒரு சிக்சர் அடித்தால் 6 வீடுகளுக்கு சோலார் மின்சார வசதி வழங்கப்படும் என ஆர்ஆர் அறிவித்துள்ளது.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தி வருகிறது. இதுவரை நடந்து முடிந்த லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடத்தையும் டெல்லி, மும்பை அணிகள் கடைசி இரண்டு இடத்தையும் பிடித்துள்ளன.

    இந்நிலையில் நாளை ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி புதிய ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய ஜெர்சி அறிமுகப்படுத்தும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மேலும் ஒரு அறிவிப்பை ராஜஸ்தான் அணி அறிவித்தது.

    அதன்படி இந்த போட்டியில் அடிக்கும் ஒவ்வொரு சிக்சருக்கும் 6 வீடுகளுக்கு சூரிய தகட்டின் மூலம் மின் இணைப்பு வழங்கப்படும் எனவும் ராஜஸ்தான் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அம்மாநில மக்கள் வரவேற்றுள்ளனர்.

    • என்னைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பது எனக்கு தெரியும்.
    • எனது அம்மா இன்று என்னை நினைத்து பெருமைப்படுவார்.

    ஜெய்ப்பூர்:

    17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் நேற்று மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 20 ஓவர்கள் முடிவில் 185 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 84 ரன்கள் குவித்தார். பின்னர் சேசிங் செய்த டெல்லி முடித்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 173 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக ராஜஸ்தான் வீரர் ரியான் பராக் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் ரஞ்சிக் கோப்பை போன்ற சமீபத்திய உள்ளூர் தொடரில் விளையாடி பெரிய ரன்கள் அடித்ததுதான் பார்முக்கு வர உதவியதாக ரியான் பராக் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அம்மா இங்கே இருக்கிறார். அவர் 3 - 4 வருடங்களாக என்னுடைய தடுமாற்றங்களை பார்த்தவர். இன்று அவர் என்னை நினைத்து பெருமைப்படுவார். என்னைப் பற்றி என்னுடைய கருத்து என்ன என்பது எனக்கு தெரியும். அது நான் 0 ரன்கள் எடுக்கிறேனா இல்லையா என்பதை தாண்டி எப்போதும் மாறாது.

    இந்த வருடம் எனக்கு உள்ளூர் தொடர் அபாரமானதாக அமைந்தது. அது தற்போது உதவுகிறது. சில நேரங்களில் டாப் 4 இடங்களில் விளையாடும் பேட்ஸ்மேன்களில் ஒருவர் 20 ஓவர்களும் விளையாட வேண்டும். பிட்ச்சில் பந்து மெதுவாக நின்று வந்தது. கடந்த போட்டியில் சஞ்சு பையா அப்படி விளையாடினார். நான் கடினமாக வேலை செய்தேன். அதற்காக மகிழ்ச்சியடைகிறேன்.

    என்று கூறினார்.

    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு.
    • டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் கொடுத்தார்.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 பந்துகளில் 5 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் 16 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.

     


    போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஹெட்மயர் 7 பந்துகளில் 14 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முகேஷ் குமார் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. டெல்லி அணிக்கு டேவிட் வார்னர் சிறப்பான துவக்கம் கொடுத்தார். இவர் 34 பந்துகளில் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 23 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிக்கி புய் ரன் ஏதும் எடுக்காமல் ஏமாற்றினார்.

     


    பிறகு களமிறங்கிய கேப்டன் ரிஷப் பண்ட் 28 ரன்களை குவித்தார். இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய அபிஷேக் பொரெல் 9 ரன்களில் ஆட்டமிழக்க அக்சர் பட்டேல் களத்துக்கு வந்தார். ட்ரிஸ்டன் டப்ஸ்-உடன் பொறுப்பாக ஆடிய அக்சர் பட்டேல் 15 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை குவித்தது. இதன் மூலம் ராஜஸ்தான் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ராஜஸ்தான் சார்பில் நான்ட்ரி பர்கர் 2 விக்கெட்டுகளையும், சாஹல் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். ஆவேஷ் கான் ஒரு விக்கெட் எடுத்தார்.

    இந்த சீசனில் ராஜஸ்தான் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய போட்டி ஜெய்பூரில் நடைபெறுகிறது.
    • டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 7 பந்துகளில் 5 ரன்களை குவித்து பெவிலியன் திரும்பினார். இவருடன் களமிறங்கிய ஜாஸ் பட்லர் 16 பந்துகளில் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களில் தனது விக்கெட்டை பறிக் கொடுத்தார்.

    இதன் காரணமாக ராஜஸ்தான் அணி துவக்கத்திலேயே அதிக விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. இதன் பிறகு ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. ரியான் பராக் நிதானமாக ஆடினார். அஸ்வின் 19 பந்துகளில் 29 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். பிறகு வந்த ஜூரெல் 12 பந்துகளில் 20 ரன்களை குவித்தார்.

    போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை குவித்துள்ளது. ராஜஸ்தான் அணிக்கு ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஹெட்மயர் 7 பந்துகளில் 14 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

    டெல்லி அணி சார்பில் கலீல் அகமது, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். முகேஷ் குமார் மற்றும் அன்ரிச் நார்ட்ஜே தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர். 186 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்குகிறது.

    • இன்றைய போட்டி ஜெய்பூரில் நடைபெறுகிறது.
    • டெல்லி அணி முதல் போட்டியில் தோல்வி அடைந்தது.

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 9 ஆவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. ஜெய்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இந்த தொடரில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் தலா ஒரு போட்டியில் விளையாடி உள்ளன. இதில் ராஜஸ்தான் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தனது முதல் போட்டியில் தோல்வியை தழுவியது.

    முதல் போட்டியில் பெற்ற வெற்றியை தொடர ராஜஸ்தான் அணியும், இந்த தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் டெல்லி அணியும் களமிறங்குகிறது.

    • ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.

    கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து ஆடம் ஜம்பா விளகியுள்ளார்.
    • குஜராத் அணியில் இருந்து ராபின் மின்ஸ் விலகியுள்ளார்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா இடம் பிடித்திருந்தார். ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் இருப்பதால், அதிக பணிச்சுமை (heavy workload) காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். அவரை 1.5 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி தக்கவைத்திருந்தது.

    இந்த நிலையில் ரஞ்சி தொடரில் அசத்திய மும்பை அணியின் இடம் பிடித்திருந்த சுழற்பந்து வீச்சாளர் தனுஷ் கொடியானை ராஜஸ்தான் ராயல்ஸ் அவரது அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் சேர்த்துள்ளது.

    கொடியான் ரஞ்சி தொடரில் 502 ரன்கள் அடித்ததுடன், 29 விக்கெட்டுக்கள் கைப்பற்றி தொடர்நாயகன் விருது வென்றார். 8-வது இடத்தில் களம் இறங்கிய அவர் 120, 89 ரன்கள் எடுத்து பாரோடா, தமிழ்நாட்டு அணிகளுக்கு எதிராக அசத்தினார்.

    அதேபோல் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்த ராபின் மின்ஸ் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி காயம் அடைந்தார். அவருக்குப் பதிலாக கர்நாடகா மாநிலத்தின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பி.ஆர். சரத்தை குஜராத் அணி அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு அணியில் இணைத்துள்ளது.

    பிஆரு் சரத் 28 ஒருநாள், 20 முதல்தர கிரிக்கெட், 43 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது.
    • இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடருக்கான முதல் இரண்டு வாரங்களுக்கான போட்டி அட்டவணையையும் பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. இதையடுத்து இத்தொடருக்காக அனைத்து ஐபிஎல் அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    இந்நிலையில் காயம் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த பிப்ரவரி 23, 2024 அன்று, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தனது இடது தொடையில் அறுவை சிகிச்சை செய்தார். தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் உள்ள அவர், விரைவில் தேசிய கிரிக்கெட் அகாடமியில் மறுவாழ்வு செயல்முறையைத் தொடங்குவார். இதன் காரணமாக வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் அவர் பங்கேற்க முடியாது" என்று தெரிவித்துள்ளது.

    கடந்த 2022-ம் ஆண்டு வீரர்கள் ஏலத்தில் பிரசித் கிருஷ்ணாவை ரூ.10 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்திருந்த நிலையில், கடந்த சீசனில் அவர் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனையடுத்து அவருக்கு மாற்று வீரராக சந்தீப் சர்மா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் பிரசித் கிருஷ்ணா நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் காயம் காரணமாக அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    • வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது
    • இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    வரும் ஐ.பி.எல் தொடரில் ஒரு போட்டியில் மட்டும் மட்டும் பிங்க் நிற ஜெர்சி அணிந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடவுள்ளது.

    இந்தியா முழுவதும் உள்ள மகளிரை கௌரவிக்கும் வகையில் பிங்க் நிற ஜெர்சியில் விளையாட உள்ளோம் என ராஜஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறவுள்ள பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தான் முழு பிங்க் நிற ஜெர்சியில் ராஜஸ்தான் அணி விளையாடுகிறது.

    இதற்கான ஜெர்சியை ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன், மற்றும் அணியின் பயிற்சியாளர் குமார் சங்ககாரா அறிமுகப்படுத்தியுள்ளனர்.

    189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன.
    மும்பை:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் தகுதிச்சன்று இன்று நடைபெற்றது. இன்றைய ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

    கொல்கத்தா எடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது.

    இதனால், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பில் 188 ரன்கள் சேர்த்தது.

    அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 56 பந்துகளில் இரண்டு 6, 12 பவுண்டரிகளில் 89 ரன்களை குவித்தார். தொடர்ந்து, சாம்சன் 47 ரன்கள், படிக்கல் 28 ரன்கள், ஹட்மயர் மற்றும் ரியான் பராங் தலா 4 ரன்கள், ஜெய்ஸ்வால் 2 ரன்கள், அஷ்வின் 2 ரன்களை சேர்த்தனர்.    

    குஜராத் டைட்டன்ஸ் தரப்பில் ஷாமி, யாஷ் தயால், சாய் கிஷோர், ஹர்திக் பாண்டியா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி விளையாடி வருகின்றன.

    இதையும் படியுங்கள்.. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் சிறந்த கேப்டன் இவர்தான்- வீரேந்திர சேவாக் கருத்து
    ×