search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் போட்டி"

    • அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது
    • குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார்

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 2-வது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு மோதுகினறன.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இப்போட்டி நடைபெறுகிறது.

    கடந்த இரண்டு சீசன்களாக குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்ட்யா, இந்த முறை மும்பை அணி கேப்டனாக களமிறங்குகிறார். அதேநேரம், குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் தலைமையில் இன்று முதல்முறையாக களமிறங்க உள்ளது. இதனால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    அகமதாபாத் மைதானம் கடந்த தொடரில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருந்ததால், பல போட்டிகளில் ரன் மழை பொழிந்தது. இன்றைய போட்டியிலும் ஆடுகளம் அதேநிலையில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற மும்பை ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • ஐபிஎல் போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளன.
    • லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் - லக்னோ அணிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மோத உள்ளன.

    கடந்த ஆண்டு 5-வது இடம் பெற்று ஏமாற்றம் அளித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் களம் இறங்குகிறது.

    கடந்த இரண்டு ஆண்டுகளும் தொடர்ச்சியாக 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் அணியை வழிநடத்துகிறார்.

    இந்நிலையில், இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்குகிறது.

    • கடந்த ஐ.பி.எல். போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் (இம்பேக்ட்) விதி அறிமுகம் செய்யப்பட்டது.
    • வேகப்பந்து வீரரான ஜெய்தேவ் உனட்கட் இதை வரவேற்றுள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஒவ்வொரு சீசனிலும் ஐ.பி.எல். விதி முறைகளில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. டி.ஆர்.எஸ். உள்பட பல்வேறு விதிமுறைகள் இந்தப் போட்டியில் இருக்கிறது.

    கடந்த ஐ.பி.எல். போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வீரர் (இம்பேக்ட்) விதி அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    ஐ.பி.எல். போட்டி பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் வகையில் இருப்பதால் பந்துவீச்சாளர் களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் காரணமாகவே ஒரு ஓவரில் இரண்டு பவுன்சர்ஸ் வீச அனுமதி வழங்கப் பட்டுள்ளது. உள்ளூர் போட்டியான சையது முஷ்டாக் அலி கோப்பையில் சோதனை முறையில் செய்யப்பட்டது. தற்போது ஐ.பி.எல். போட்டியில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    வேகப்பந்து வீரரான ஜெய்தேவ் உனட்கட் இதை வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒரு ஓவருக்கு இரண்டு பவுன்சர்கள் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும் பேட்ஸ்மேன்களை விட பந்து வீச்சாளர்கள் கூடுதல் நன்மையை அளிக்கும் விஷயங்களில் இதுவும் ஒன்று நான் உணர்கிறேன்.

    ஒரு பந்து வீச்சாளரான நான் இந்த விதியை மிகவும் முக்கியமாக கருதுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.
    • டெல்லி அணி 9-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே.அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

    டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட் இழப் புக்கு 223 ரன் குவித்தது. இதனால் டெல்லி அணிக்கு 224 ரன் என்ற கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    கான்வே 52 பந்தில் 87 ரன்னும் (11 பவுண்டரி , 3 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 50 பந்தில் 79 ரன்னும் (3 பவுண்டரி, 7 சிக்சர்), ஷிவம் துபே 9 பந்தில் 22 ரன்னும் (3 சிக்சர்), ஜடேஜா 7 பந்தில் 20 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். கலீல் அகமது, நோர்க்கியா, சேட்டன் ஷகாரியா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 146 ரன்னே எடுத்தது. இதனால் சென்னை அணி 77 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    கேப்டன் வார்னர் அதிகபட்சமாக 58 பந்தில் 86 ரன்னும் (7 பவுண்டரி, 5 சிக்சர்), எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினார்கள். தீபக் சாஹர் 3 விக்கெட் டும், பதிரனா, தீக் ஷனா தலா 2 விக்கெட்டும், துஷார் தேஷ்பாண்டே ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    சி.எஸ்.கே. பெற்ற 8-வது வெற்றியாகும். 17 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது.

    டெல்லி அணியை இந்த சீசனில் 2-வது தடவையாக வீழ்த்தியது. சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் 27 ரன்னில் தோற்கடித்து இருந்தது.

    இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

    சி.எஸ்.கே. அணி 12-வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு நுழைந்து சாதனை படைத்தற்காக செய்முறை எதுவும் இல்லை. சிறந்த வீரர்களை தேர்வு செய்து அவர்களுக்கான உகந்த மற்றும் சவுகரியமான சூழலையும், இடத்தையும் உருவாக்கிட வேண்டும். அதற்காக சில வீரர்கள் தங்களின் இடத்தை கூட தியாகம் செய்ய வேண்டும்.

    மேலும் அணி நிர்வாகமும் ஒரு நல்ல சூழலை உருவாக்கி கொடுத்து இருக்கிறது. பயிற்சியாளர்கள் குழுவும், உதவியாளர்களும் எங்களுக்கு எப்போதுமே ஊக்கமாக இருக்கிறார்கள்.

    வீரர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இல்லையேல் நாம் எதுவும் செய்ய இயலாது. ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் (டெத் ஓவர்) பந்து வீசுவதற்கு தன்னம்பிக்கை மிக முக்கியம் என்று நினைக்கிறேன். துஷார் தேஷ்பாண்டே தொடர்ந்து அழுத்தமான சூழல்களில் இருந்து தன்னை மேம்படுத்தி கொண்டார். அவரிடம் தற்போது தன்னம்பிக்கை இருக்கிறது.

    பதிரனா டெத் ஓவர்களை வீசுவதற்கென்றே இயல்பான திறமையை பெற்றுள்ளார். தொடர்ந்து அதே வீரர்களுடன் விளையாடும்போது உதவியாக இருக்கிறது.

    தனிப்பட்ட சாதனைகளை பற்றி கவலைப்படாமல் அணியின் நலனுக்காக ஆடும் வீரர்களை தேர்வு செய்வதே முக்கியம். வீரர்கள் 10 சதவீத திறனுடன் வந்தாலும் ஓவர்களை அணியில் 50 சதீதம் வரை சிறந்த வீரராக மாற்றலாம்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    டெல்லி அணி 9-வது தோல்வியை தழுவியது. அந்த அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கு ஐ.பி.எல். போட்டிகள் நடந்தன.
    • மைதானம் தொடர்பாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் கவுன்சில், மாநில அரசு இடையே சட்டப்போராட்டம் நடந்து வந்ததால் இங்கு போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

    தர்மசாலா:

    விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் இந்த 20 ஓவர் திருவிழாவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று விட்டது. டெல்லி கேப்பிட்டல்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கான ரேசில் 7 அணிகள் இருக்கின்றன.

    இந்நிலையில் தர்மசாலாவில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் 64-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 19,000 பார்வையாளர்கள் கொண்ட தர்மசாலா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி இன்று நடைபெற உள்ளது.

    10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான ஏற்பாடுகளை இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க நிர்வாகம் சிறப்பாக முடித்துள்ளது. இந்த சீசனின் 64வது மற்றும் 66வது ஐ.பி.எல். போட்டிகளை காண மைதானம் தயாராக உள்ளது. தரையைச் சுற்றி ஹார்டிங் மற்றும் எல்இடிகள் நிறுவப்பட்டுள்ளன. மைதானம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 1,200 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    கடைசியாக 2013-ம் ஆண்டு இங்கு ஐ.பி.எல். போட்டிகள் நடந்தன. மைதானம் தொடர்பாக இமாச்சல பிரதேச கிரிக்கெட் கவுன்சில், மாநில அரசு இடையே சட்டப்போராட்டம் நடந்து வந்ததால் இங்கு போட்டிகள் நடைபெறாமல் இருந்து வந்தது.

    ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது எஞ்சிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியுடன் உள்ளது.

    அத்துடன் அந்த அணி ரன்-ரேட்டிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 12 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி, 8 தோல்வி என 8 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.

    முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த டெல்லி அணி அடுத்த 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி கண்டு எழுச்சி பெற்றது. ஆனால் அதன் பிறகு கடந்த 2 ஆட்டங்களில் சென்னை, பஞ்சாப் அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. ஐ.பி.எல். தொடரில் இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டங்களில் பஞ்சாப்பும், 15 ஆட்டங்களில் டெல்லியும் வெற்றி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.
    • ஓபிஎஸ் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை பார்த்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்களின் அபார ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி சிஎஸ்கே தனது 6வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்த போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.

    இந்த நிலையில், இந்த போட்டியை முன்னாள் முதmமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் கண்டு ரசித்தார்.

    அவர் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை பார்த்தார். இந்த புகைப்படத்தை டுவிட்டரில் டேக் செய்தருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

    அந்த பதிவில், தோனிக்கு பதிலாக தன்னை கேப்டன் ஆக்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் சண்டையிடும் ஓபிஎஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
    • முதலில் பந்தை எப்படி வீச வேண்டும்; பேட்ஸ்மேன்கள் அதை எப்படி அடிப்பார் என்பதில் பவுலர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.

    சென்னை:

    ஐ.பிஎல் போட்டியில் சி.எஸ்.கே.அணி பஞ்சாப்பிடம் வீழ்ந்து 4-வது தோல்வியை தழுவியது.

    சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 200 ரன் குவித்து.

    கான்வே 52 பந்தில் 92 ரன்னும் (16 பவுண்டரி, 1 சிக்சர்), ருதுராஜ் கெய்க்வாட் 31 பந்தில் 37 ரன்னும் (4 பவுண்டரி, 1 சிக்சர்) ஷிவம் துபே 17 பந்தில் 28 ரன்னும் (1 பவுண்டரி, 2 சிக்சர்), எடுத்தனர். அர்ஷ்தீப் சிங், சாம் கரண், ராகுல் சாஹர், சிக்கந்தர் ராசா தலா 1 விக்கெட் எடுத்தனர்.

    பின்னர் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    பிரப்சிம்ரன் சிங் 24 பந்தில் 42 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்), லிவிங்ஸ்டோன் 24 பந்தில் 40 ரன்னும் (1 பவுண்டரி , 4 சிக்சர்), சாம் கரண் 20 பந்தில் 29 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    துஷ்கர் தேஷ்பாண்டே 3 விக்கெட்டும் , ஜடேஜா 2 விக்கெட்டும் , பதிரனா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது தோல்வி ஏற்பட்டது. உள்ளூர் மைதானமான சேப்பாக்கத்தில் 2-வது தோல்வியை தழுவியது. இந்த தோல்வியால் சி.எஸ்.கே. கேப்டன் டோனி பந்து வீச்சாளர்களை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ஆட்டத்தின் நடுப்பகுதியில் நாங்கள் ஆட்டத்தை தவறவிட்டோம். 200 ரன் என்பது போதுமான ஸ்கோராகும். பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

    ஆனால் பந்து வீச்சுதான் சரியாக அமையவில்லை. இரண்டு மோசமான ஓவர்களை வீசியது ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது. பதிரனா நன்றாக வீசினார். ஆனால் அதை தவிர திட்டங்கள் தவறாக இருந்ததா அல்லது செயல்படுத்துதல் மோசமாக இருந்ததா? என்பதை நாம் பார்க்க வேண்டும்.

    முதலில் பந்தை எப்படி வீச வேண்டும்; பேட்ஸ்மேன்கள் அதை எப்படி அடிப்பார் என்பதில் பவுலர்கள் தெளிவாக இருக்க வேண்டும். பந்து வீச்சில் தவறு செய்துவிட்டோம். என்ன தவறு நடந்தது என்பது குறித்து யோசிக்க வேண்டும்.

    எங்களது பந்து வீச்சாளர்கள் அனுபவம் இல்லாதவர்கள். இதனால் பேட்டிங்கில் தான் அதனை ஈடு செய்ய வேண்டும். எனவேபேட்டிங்கில் இன்னும் கூடுதலாக 10 ரன்கள் வரை சேர்த்து இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு டோனி கூறியுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நாளை மறுநாள் (3-ந் தேதி) லக்னோவில் சந்திக்கிறது.

    பஞ்சாப் அணி பெற்ற 5-வது வெற்றியாகும். அந்த அணி அடுத்த போட்டியில் மும்பையை அதே தினத்தில் எதிர்கொள்கிறது. 

    • சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • ஆட்டம் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    சென்னை:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 30-ந் தேதி நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் மாலை 3.30 மணிக்கு நடக்கிறது.

    இதற்கான டிக்கெட் விற்பனை வருகிற 27-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    ×