search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஐபிஎல் போட்டியை கண்டுகளித்த ஓபிஎஸ்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் பதிவு
    X

    ஐபிஎல் போட்டியை கண்டுகளித்த ஓபிஎஸ்- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் பதிவு

    • போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.
    • ஓபிஎஸ் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை பார்த்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 139 ரன்களை எடுத்தது.

    இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி வீரர்களின் அபார ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி சிஎஸ்கே தனது 6வது வெற்றியைப் பதிவு செய்தது.

    இந்த போட்டியைக் காண திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் நேரில் கண்டுகளித்தனர்.

    இந்த நிலையில், இந்த போட்டியை முன்னாள் முதmமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் கண்டு ரசித்தார்.

    அவர் சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி ஸ்டாண்டில் அமர்ந்து போட்டியை பார்த்தார். இந்த புகைப்படத்தை டுவிட்டரில் டேக் செய்தருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக பதிவு ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

    அந்த பதிவில், தோனிக்கு பதிலாக தன்னை கேப்டன் ஆக்குமாறு சிஎஸ்கே அணி நிர்வாகத்துடன் சண்டையிடும் ஓபிஎஸ் என்று குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×