search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pujara"

    இந்தியாவின் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான சவுராஷ்டிரா அணியில் புஜாரா, ஜடேஜா இடம்பிடித்துள்ளனர். #Pujara #Jadeja
    இந்தியாவின் முதன்மையான உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடராக விஜய் ஹசாரே டிராபி கருதப்படுகிறது. ரஞ்சி டிராபியில் விளையாடும் அணிகள் இதில் பங்கேற்று விளையாடும். இந்த தொடர் வரும் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.

    இதற்கான சவுடிராஷ்டிரா அணியில் புஜாரா, ஜடேஜா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். இருவரும் இந்திய ஒருநாள் அணியில் சமீப காலமாக விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



    சவுராஷ்டிரா தனது முதல் ஆட்டத்தில் 19-ந்தேதி உத்தர பிரதேசத்தை எதிர்கொள்கிறது. அக்டோபர் 4-ந்தேதி வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் தொடங்குவதால் இருவரும் தொடரின் முதல் பாதி ஆட்டங்களில் மட்டுமே பங்கேற்பார்கள்.
    மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் இளம் வீரர்களை தேட வேண்டிய நிலை ஏற்படும் என எம்எஸ்கே பிரசாத் எச்சரித்துள்ளார். #BCCI #TeamIndia
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 படுமோசமாக தோற்றது. இதனால் இந்திய அணி மீது விமர்சனம் எழுந்து வருகிறது. விராட் கோலி 593 ரன்கள் குவித்தார். கடைசி டெஸ்டின் கடைசி இன்னிங்சில் மட்டுமே டக்அவுட் ஆனார். மற்ற போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆனால் தொடக்க வீரர்கள் மோசமாக விளையாடினார்கள். ரகானே, புஜாரா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் இந்தியா தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் இந்திய தேசிய அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்எஸ்கே பிரசாத், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றால் இளம் வீரர்களை தேடவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

    இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வீரர்களை தேர்வு செய்யும்போது, அவர்களுக்கு மோதுமான அளவு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அதன்பின்னர்தான் அவர்களை நீக்குவதும், புதிய வீரர்களை தேடும் வேலைகளில் இறங்க வேண்டும்.

    இங்கிலாந்து தொடரில் தொடக்க வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கனும். இங்கிலாந்து தொடக்க வீரர்கள் கூட பெரிய அளவில் சாதிக்கவில்லை. சூழ்நிலை இரு அணிகளின் தொடக்க வீரர்களுக்கும் மிகவும் கடினமாக இருந்தது.



    மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான புஜாரா, ரகானே ஆகியோருக்கு போதுமான அனுபங்கள் உள்ளது. அவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், இன்னும் அதிக அளவில் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திருக்கனும்.

    போதுமான அளவிற்கு வாய்ப்புகள் கொடுத்த பிறகு, வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனில், உள்ளூர் மற்றும் இந்தியா ஏ அணிகளில் விளையாடும் இளம் வீரர்களை தேடவேண்டியது அவசியமானது’’ என்றார்.
    இந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்தாததுதான் தொடரை இழக்க காரணம் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #Sehwag
    இங்கிலாந்து- இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-4 இழந்தது. லார்ட்ஸ் டெஸ்டை தவிர மற்ற போட்டிகளில் கடுமையாக போராடிய போதிலும் வெற்றியை பறிக்க முடியவில்லை.

    இந்திய அணி கேப்ட்ன் விராட் கோலி மட்டுமே தொடர் முழுவதும் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தவான் 162 ரன்களும், கேஎல் ராகுல் 299 ரன்களும், ரகானே இரண்டு அரைசதத்துடன் 257 ரன்களும், புஜாரா ஒரு சதத்துடன் 278 ரன்களும் அடித்தனர்.



    இவர்கள் அனைவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுவே தோல்விக்கு முதன்மையான காரணம் என்று முன்னாள் தொடக்க வீரரும் அதிரடி பேட்ஸ்மேனும் ஆன சேவாக் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இங்கிலாந்து தொடரை 4-1 என கைப்பற்றியதற்கு வாழ்த்துக்கள். இந்தியா சிறப்பாக விளையாடியது. ஆனால், நிலையான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தவில்லை. ரிஷப் பந்த், லோகுஷ் ராகுல் கடைசி டெஸ்டின் கடைசி நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினார்.



    இந்த தொடர் முழுவதும் விராட் கோலி, பந்து வீச்சாளர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினா்ரகள். வெளிநாட்டு தொடரில் சிறப்பாக விளையாட இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும்’’ என்று பதவிட்டுள்ளார்.
    இங்கிலாந்து தொடரை இழந்தது குறித்து ரவி ஷாஸ்திரி, பாங்கர் பதில் அளிக்காவிடில் வெளிநாட்டு தொடரை வெல்லது இம்பாசிபில் என கங்குலி தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடைபெற்று முடிந்துள்ள நான்கு போட்டிகளில் இங்கிலாந்து மூன்றில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியில் விராட் கோலியை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடவில்லை.

    தற்போதைய இந்திய அணியால் இங்கிலாந்து மண்ணில் தொடரை கைப்பற்ற முடியும் என்று முன்னாள் வீரர்கள் நம்பினார்கள். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், மோசமான பேட்டிங்கால் இந்தியா தோல்வியை சந்தித்ததால், அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

    இந்நிலையில் இந்தியாவின் தோல்விக்கு ரவி ஷாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும். இல்லையெனில் இந்தியா வெளிநாட்டு மண்ணில் தொடரை வெல்வது இயலாத காரியம் ஆகிவிடும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கங்குலி கூறுகையில் ‘‘தற்போதுள்ள இந்திய வீரர்களின் பேட்டிங் திறமை குறைந்து விட்டது என்று நம்புகிறேன். இதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. புஜாரா அல்லது ரகானே ஆகியோரிடம் உறுதிப்பாடு மிகவும் குறைந்து காணப்பட்டது. நான்கு வருடத்திற்கு முன்பு, அடிலெய்டில் விராட் கோலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த உத்வேகம் இந்த தொடரில் இல்லை. புஜாராவிற்கும் அப்படித்தான்.

    ஒரு பேட்ஸ்மேன் சிறப்பாக விளையாடியபோது மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பியதற்கு தலைமை பயிற்சியாளரான ரவி ஷாஸ்திரி முழு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் பதில் அளிக்க வேண்டும். இந்த கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றால் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வெல்வது நடக்கக்கூடிய விஷயமாக இருக்காது’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் 84 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்து இங்கிலாந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. விராட் கோலி (103), புஜாரா (72), ஹர்திக் பாண்டியா (52 நாட்அவுட்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    இதன் மூலம் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இந்தியா ஒட்டுமொத்தமாக 520 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இங்கிலாந்துக்கு 521 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணியின் அலஸ்டைர் குக், ஜென்னிங்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் எடுத்திருந்தது. குக் 9 ரன்னுடனும், ஜென்னிங்ஸ் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜென்னிங்ஸ் நேற்றைய 13 ரன்னிலேயே இஷாந்த் ஷர்மா பந்தில் ஆட்டமிழந்தார். குக் 17 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் ஷர்மா பந்தில் வெளியேறினார்.

    அடுத்து வந்த ஜோ ரூட் 13 ரன்னில் பும்ரா பந்திலும், போப் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இவர்களை லோகேஷ் ராகுல், விராட் கோலி சிறப்பாக கேட்ச் பிடித்து வெளியேற்றினார்கள்.



    5-வது விக்கெட்டுக்கு பென் ஸ்டோக்ஸ் உடன் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இங்கிலாந்து 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது. பட்லர் 19 ரன்னுடனும், பென் ஸ்டோக்ஸ் 3 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    விராட் கோலியை போன்று மற்ற பேட்ஸ்மேன்கள் கவர் டிரைவ் ஷாட் அடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை என்று புஜாரா புகழாரம் சூட்டியுள்ளார். #ENGvIND #ViratKohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை.

    இந்திய அணியின் ஸ்கோர் 224 ரன்னாக இருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. புஜாரா 208 பந்தில் 72 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.



    புஜாரா எதிர்முனையில் விளையாடிய விராட் கோலியின் ஆட்டத்தை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் விராட் கோலியை போன்று மற்ற வீரர்கள் ‘கவர் டிரைவ்’ ஷாட் ஆடுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. குறிப்பாக இங்கிலாந்து மண்ணில் கடினம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.



    மேலும் சிறப்பாக விளையாடியது குறித்து புஜாரா கூறுகையில் ‘‘கவுன்ட்டி போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் உதவியது. கவுன்ட்டி போட்டி மூலம் அதிக அளவில் கற்றுக் கொண்டேன். கவுன்ட்டி போட்டியில் அதிக அளவில் ரன்கள் குவிக்காவிடிலும், சவாலான ஆடுகளத்தில் விளையாடினேன். அது எனக்கு மிகவும் உறுதியை அளித்தது’’ என்றார்.
    டிரென்ட் பிரிட்ஜ் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து 521 என்ற இமாலய ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா. #ENGvIND #ViratKohli

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் அடித்தனர். பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்னுடனும், புஜாரா 56 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. புஜாரா 208 பந்தில் 72 ரன்கள் எடுத்து பென் ஸ்டோக்ஸ் பந்தில் ஆட்டமிழந்தார். புஜாரா - விராட் கோலி ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இவர்களும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலி சிறப்பாக விளையாடி 191 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 197 பந்தில் 103 ரன்கள் எடுத்து கிறிஸ் வோக்ஸ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். விராட் கோலி அவுட்டாகும்போது இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 281 ரன்கள் சேர்த்திருந்தது. 449 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது.



    கோலி ஆட்டமிழந்த பிறகு அதிரடியாக ரன்குவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ரிஷப் பந்தை இந்தியா களம் இறக்கியது. அவர் 1 ரன் எடுத்த நிலையில் வெளியேறினார். அதன்பின் ரகானே உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். 

    ரஹானே 29 ரன்களும், அடுத்து களமிறங்கிய சமி 3 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 110 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 352 ரன்களை எட்டிய போது, இந்திய அணி டிக்ளேர் செய்தது. பாண்டியா 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    இதன் மூலம் இந்திய அணி 520 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்சை முடித்துக்கொண்டது. 521 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்க உள்ளது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. 
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டின் 3-வது நாள் காலை முழுவதும் விராட் கோலி மற்றும் புஜாரா விக்கெட் இழக்காமல் சிறப்பாக விளையாடினார்கள். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 329 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது.

    168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் இந்தியா 2 விக்கெட் இழப்பிற்க 124 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 33 ரன்களுடனும், விராட் கோலி 8 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. புஜாரா மற்றும் விராட் கோலி ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    புஜாரா 147 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். மறுமுனையில் நின்ற விராட் கோலி 82 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடியை வீழ்த்த இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் கடும் முயற்சிகள் எடுத்தனர். ஆனால் பலன்ஏதும் கிடைக்கவில்லை. இருவரும் 3-வது நாள் ஆட்டம் மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.



    இந்தியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 2 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 54 ரன்னுடனும், புஜாரா 56 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியா இன்று காலை விக்கெட் இழப்பின்றி 70 ரன்கள் எடுத்தது. தற்போது வரை இந்தியா 362 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
    புஜாரா மெதுவாக விளையாடுவது மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியை கொடுக்கும் என்று மொஹிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.

    லார்ட்ஸில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க திணறி வரும் வேலையில், புஜாரா மிகவும் மெதுவான ஆட்டத்தை வெளிப்படுத்துவது மற்ற வீரர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று முன்னாள் வீரர் மொஹிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து மொஹிந்தர் அமர்நாத் கூறுகையில் ‘‘புஜாராவின் ஆட்ட நுணுக்கம் அவரை நீண்ட நேரம் க்ரீஸில் நிற்க வைக்க உதவுகிறது. என்றாலும், அவர் ரன் அடிக்காமல் அப்படியே நின்று விடுகிறார்.

    அப்போது ஒருமுனையில விக்கெட் விழும்போது, ஸ்கோர்டு போர்டில் ரன் அதிகரிப்பதில்லை. மேலும், விளையாட வரும் அடுத்த பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. அடிக்கடி ரொட்டேட் செய்தால் பந்து வீச்சாளர்களை அதிக அளவில் யோசிக்க வைக்க உதவும்’’ என்றார்.
    இன்றைய ரன்அவுட் மூலம் டெஸ்ட் போட்டியில் புஜாரா 7 முறை ரன்அவுட் ஆகி மிகவும் மோசமான சாதனைக்கு உள்ளாகியுள்ளார். #ENGvIND #Pujara
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் களம் இறங்கியது.

    மழை விட்டுவிட்டு பெய்ய ஆட்டமும் தடைபட்டு தடைபட்டு நடந்தது. 9-வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் புஜாரா அடித்துவிட்டு ஒரு ரன் ஓட முயன்றார். அப்போது ரன்அவுட் ஆனார். இந்த ரன்அவுட் மூலம் இந்தியா 15 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது.

    அதன்பின் மழையால் ஆட்டம் நடைபெறவில்லை. புஜாரா டெஸ்ட் போட்டியில் ரன்அவுட் ஆவது இது முதல் முறையல்ல. இந்திய வீரர்கள் கடைசியாக 10 முறை ரன்அவுட் ஆனதில் 7 முறை புஜாராதான் ரன்அவுட் ஆகியுள்ளார்.



    இதற்கு முன் செஞ்சூரியனில் (2018) நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் ரன்அவுட் ஆனார். அதற்கு முன் இலங்கைக்கு எதிராக தரம்சாலாவில் (2017) ரன்அவுட் ஆகியுள்ளார்.

    2016-ல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கிங்ஸ்டனில் ரன்அவுட் ஆகியுள்ளார். 2013-ல் ஜோகன்னஸ்பர்க்கில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராகவும், 2012-ல் இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தாவிலும் ரன்அவுட் ஆகியுள்ளார்.
    லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு தேர்வு செய்துள்ளது. புஜாரா, குல்தீப் யாதவ் இடம் பிடித்துள்ளனர். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நேற்று தொடங்குவதாக இருந்தது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் டாஸ் கூட சுண்டப்படாமல் முதல்நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

    2-வது நாள் இன்று உள்ளூர் நேரப்படி சரியான 11 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்தார்.



    இந்திய அணியில் ஷிகர் தவான், உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் போப் அறிமுகமாகியுள்ளார். பென் ஸ்டோக்ஸிற்குப் பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் புஜாராவிற்கு இடமில்லை. #ENGvIND
    இங்கிலாந்து -  இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    அலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், அடில் ரஸித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    முரளி விஜய், தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரகானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, அஸ்வின்.
    ×