search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "property dispute"

    • இவர்களுக்கு இடையே பொதுச் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது.
    • ராமசாமியை கொடுவாளின் மூக்கால் தலையில் வெட்டினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே சிறுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி. அவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துரைசாமி, வெங்கடேசன் ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு இடையே பொதுச் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. மூத்த மகன் துரைசாமிக்கு சாதகமாக தாய் வள்ளியம்மாளும் இளைய மகன் வெங்கடேசனுக்கு சாதகமாக தந்தை ராமசாமி இருந்து வந்ததார். இந்நிலையில் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு வள்ளியம்மாள் கணவர் ராமசாமியை அசிங்கமாக திட்டி தடியால் தாக்கி யதாக கூறப்படுகிறது.

    இளைய மகன் வெங்கடே சனை அவரது அண்ணன் துரைசாமி மற்றும் துரைசாமி மனைவி அலமேலு ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கடேசனை தாக்கினர். இதனை பார்த்த துரைசாமியின் உறவினர் சுப்பிரமணி என்பவர் ராமசாமியை கொடுவாளின் மூக்கால் தலையில் வெட்டினார். தலையில் காயம் ஏற்பட்ட ராமசாமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், வெங்கடேசன் சின்னசேலம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டனர்.இதுகுறித்து ராமசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பேர் மீது வழக்கை பதிவு செய்து கீழ்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகி ன்றனர்.

    • மனைவி வீட்டிற்கு வந்து விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து எடுத்துக் குடித்துள்ளார்.
    • இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆம்பூர் குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 33) விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருநாவலூர் அருகே சிவா பட்டினம் என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை உள்ளனர். மேலும் அய்யனார் சிவா பட்டினத்தில் மனைவி வீட்டில் உள்ளார். இந்நிலையில் அய்யனார் ஆமூர்குப்பம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு சென்று அய்யனாரின் தந்தையான சங்கரிடம் சொத்தைப் பிரித்து தருமாறு அய்யனார் கேட்டுள்ளார். அதற்கு சங்கர் சொத்தை தர மறுத்துவிட்டார்.

    இதனால் மனமுடைந்த அய்யனார் சிவா பட்டினத்தில் உள்ள மனைவி வீட்டிற்கு வந்து விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்து எடுத்துக் குடித்துள்ளார். பூச்சி மருந்து குடித்தும் வெகு நேரமாகியும் ஒன்றும் செய்யவில்லையாம் இதனால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப் பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அய்யனார் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து தகவல் அறிந்த திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நேற்று முத்து அவரது வீட்டில் வெளியில் நின்று கொண்டிருந்தார்.
    • தாக்குதலில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மேலிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 33) இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த செந்தில் (27) இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்னதாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முத்து அவரது வீட்டில் வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்திலுக்கு முத்துவிற்கும் இடையே மீண்டும் சொத்து தகராறு காரணமாக வாய் தகராறு ஏற்பட்டது. இந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் செந்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து செந்திலை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த காடம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய முத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

    • சொத்து தகராறில் விவசாயிக்கு கத்திக்குத்து ஏற்பட்டது.
    • இதுபற்றிய புகாரின்பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியப்பாவை கத்தியால் குத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரைகொண்டான் பகுதியை சேர்ந்தவர் அய்ய னார் (வயது 66), விவசாயி. இவரது தம்பி பச்சையப்பன். இவர்களுக்கு சொந்தமான நிலம் அருகருகே உள்ளது.

    இந்த நிலையில் அய்ய னார் வயலில் இருந்த வேலியை அகற்றியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட பச்சையப்பனின் மகன் அய்யனார் (25) பெரியப்பா அய்யனாரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதைத்தொடர்ந்து இரவில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதனை அய்யனார் பார்த்து கொண்டிருந்தார். அப்போது அவரது தம்பி மகன் அய்யனார் அங்கு வந்து தனது பெரியப்பா வயிற்றில் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த அய்யனார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றிய புகாரின்பேரில் தளவாய்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியப்பாவை கத்தியால் குத்திய வாலிபரை தேடி வருகின்றனர்.

    • சொத்துக்காக மனைவியை அடித்து எரித்து கொன்றேன் என்று கைதான கணவர் வாக்குமூலம் கொடுத்தார்.
    • ஞானம்மாள் அடித்து கொலை செய்யப்பட்ட பிறகே அவரது உடல்எரிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 70). இவரது மனைவி ஞானம்மாள் (67). இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டில்உடல் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது அண்ணன் பாண்டுரங்கன் எனது தங்கையின்சாவில் மர்மம் இருப்பதாக மரக்கா ணம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்துகிடந்த ஞானம்மாள் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது ஞானம்மாளின் கணவர் எனக்கும், எனது மனைவிக்கு ம்சம்பவத்தன்று காலையில் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் மன முடைந்த எனது மனைவிவீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்றுபோலீசாரிடம் கூறினார். 

    இதையடுத்து போலீசார்,மர்மமான முறையில் இறந்து கிடந்த ஞானம்மாளின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், ஞானம்மாள் அடித்து கொலை செய்யப்பட்ட பிறகே அவரது உடல்எரிக்கப்பட்டுள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித் திருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார், ஞானம்மாளின்கணவர் செல்லக்கண்ணுவை காவல் நிலையம் கொண்டுசென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியதாவது:-

    ஞானம்மா ளைஎனக்கு திருமணம் செய்து கொடுத்த போது அவரது அண்ண ன்பாண்டு ரங்கன், தனது தங்கைக்கு 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கி எழுதி வைத்தார். அந்த நிலத்தை தற்போது என் பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கு மாறு என் மனைவியிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், அப்படி எழுதி கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த நான், சம்பவ த்தன்று எனது மனைவியை அடி த்தேன். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அப்போது அருகில்கிடந்த கயிற்றை எடுத்து கழுத்தை இருக்கினேன். அதில் எனது மனைவிஇறந்துவிட்டார். இந்த சம்பவத்தை மறைக்க நான் வீட்டில் இருந்த மண்எண்ணையை அவரது உடலில் ஊற்றி எரித்தேன். இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்துவிட லாம் என்று நினைத்தேன். ஆனால்போலீசார் நடத்திய முறையான விசாரணையால் நான் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். சொத்துக்காக மனைவியை, வயதான காலத்திலும் கணவன் அடித்து கொன்று மண்எண்ணை ஊற்றி எரித்துகொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக் கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • அண்ணன் சமுத்திரம், அவரது மகன் மணிகண்டன் மற்றும் உறவினர் தலைமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர்.
    • அப்போது அதனை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாளை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது மாரிமுத்துவும் அரிவாளால் மணிகண்டனை வெட்டி உள்ளார்.

    ராஜபாளையம்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த மீனாட்சிபுரம் தெற்கு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 59), விவசாயி. இவரது அண்ணன் சமுத்திரம் (60). இவர்களுக்கு இடையே பூர்வீக சொத்து தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    சமுத்திரம் தனது தம்பிக்கு சொந்தமான இடத்தில் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாரிமுத்து தனது நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டு இருந்தார். அதில் நாற்றுகள் அழுகி விட்டதால் நேற்று மாலை ஜே.சி.பி. எந்திரம் மூலம் எலுமிச்சை நாற்றுகளை அகற்றி விட்டு நிலத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் அண்ணன் ஆக்கிரமித்து இருந்த இடத்தையும் சீர் செய்ததாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த அவரது அண்ணன் சமுத்திரம், அவரது மகன் மணிகண்டன் மற்றும் உறவினர் தலைமுத்து ஆகியோர் மாரிமுத்துவிடம் தகராறு செய்து அரிவாளால் வெட்டி உள்ளனர்.

    அப்போது அதனை தடுக்க முயன்ற மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாளை மிரட்டி உள்ளனர். இந்த சம்பவத்தின்போது மாரிமுத்துவும் அரிவாளால் மணிகண்டனை வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த மாரிமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி மாரிமுத்துவின் மனைவி மாரியம்மாள் தளவாய்புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சமுத்திரம், மணிகண்டன், தலைமுத்து ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சொத்து தகராறில் அண்ணனே தம்பியை கொலை செய்த சம்பவம் ராஜபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சொத்து தகராறில் தந்தையை கீழே தள்ளி கொன்ற மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவா் குப்பன் (வயது 70) தொழிலாளி. இவருக்கு 4 மகன்கள், 1 மகள் உள்ளனர். குப்பன் தனது குடும்ப சொத்தான 1½ ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்து கொடுக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் குப்பனின் 3-வது மகன் ஆறுமுகம் என்பவர் தனது குழந்தைகள் பெயரில் 50 சென்ட் நிலத்தை குப்பனிடம் இருந்து எழுதி வாங்கி கொண்டார்.

    இது பற்றி அறிந்த 2-வது மகன் சின்னவன் என்பவர் தனது தந்தை குப்பனிடம் சென்று ஆறுமுகத்தின் குழந்தைகளுக்கு சொத்து எழுதி கொடுத்தது பற்றி கேட்டு்ள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சின்னவன் தனது தந்தை குப்பனை தள்ளிவுள்ளார். இதில் மயக்கமடைந்த குப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவலின் பேரில் சங்கராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சின்னவன் தள்ளிவிட்டதில் குப்பன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    ஈரோடு அருகே வீட்டை என் பெயருக்கு எழுதி வைக்காததால் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு நாராயண வலசு, வாய்க்கால் மேடு, இந்திரா நகரைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). இவரது மனைவி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மகன் நாராயணமூர்த்தி (39). திருமணமாகவில்லை. மகள் தங்கமணி (36) திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார்.

    ராமசாமி மகன் நாராயணமூர்த்தி மகள் தங்கமணி மற்றும் அவரது கணவர் ஆகியோர் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். நாராயணமூர்த்தி சரியாக வேலைக்கு செல்லாமல் அவ்வப்போது வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறில் ஈடுபடுவாராம். மேலும் நாராயணமூர்த்தி தனது தந்தையிடம் வீட்டை எனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். அதற்கு அவரது தந்தை ராமசாமி மறுத்து விட்டார். நேற்று முன்தினம் அவர்கள் இடையே வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    அப்போது ராமசாமி தனது பெயரில் உள்ள வீட்டை தனது மகள் தங்கமணிக்கு எழுதி வைப்பதாக கூறினார். இதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த நாராயணமூர்த்தி வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழல் மற்றும் கட்டையால் ராமசாமியை தாக்கினார். இதில் படுகாயமடைந்த ராமசாமி உயிருக்காக போராடினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தங்கமணி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உயிருக்கு போராடிய ராமசாமியை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி ராமசாமி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராமசாமியின் மகள் தங்கமணி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார்.

    அதன்பேரில் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து நாராயணமூர்த்தியை கைது செய்தனர்.

    அப்போது அவர் கூறும்போது சம்பவத்தன்று வீட்டை எனது பெயருக்கு எழுதி வைக்குமாறு என் தந்தையிடம் கேட்டேன். அதற்கு அவர் மறுத்து என்னை உதாசீனப்படுத்தினார். எனது வீட்டை உனது பெயருக்கு எழுதி கொடுக்க மாட்டேன் எனது மகள் தங்கமணி பெயரில்தான் எழுதி வைப்பேன். நீ குடித்து குடித்து விட்டை அழித்து விடுவாய் என்றார். இதனால் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த இரும்பு ஊதுகுழலை எடுத்து தந்தையை தாக்கினேன். மேலும் அருகில் இருந்த கட்டையை எடுத்து அவரை அடித்தேன்.

    இவ்வாறு நாராயண மூர்த்தி போலீசில் வாக்கு மூலமாக தெரிவித்தார். இதையடுத்து நாராயண மூர்த்தியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் சொத்து தகராறு காரணமாக தம்பியை அண்ணனே அடித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சஞ்சாய் நகரை சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 42). இவரது தம்பி ஆரோக்கியசாமி (40). விவசாயிகளான இவர்களுக்கு இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இது தொடர்பாக அருளானந்தம் மனைவி விக்டோரியா மேரி, ஆரோக்கியசாமி மனைவி லீமா ரோஸ்மேரி இடையேயும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சொத்து தகராறு தொடர்பாக பட்டுக்கோட்டை போலீஸ்நிலையத்திலும் புகார் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. நேற்று அருளானந்தம், ஆரோக்கியசாமி இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருளானந்தம் கட்டையால் ஆரோக்கியசாமியை அடித்துள்ளார்.

    இதில் பலத்த காயம் அடைந்த ஆரோக்கியசாமி சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆரோக்கியசாமி பரிதாபமாக இறந்தார்.

    இதுப்பற்றி பட்டுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சொத்து தகராறில் தம்பியை அடித்து கொன்ற அருளானந்தம், அவரது மனைவி விக்டோரியா ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சொத்து தகராறில் அண்ணன் கழுத்தை, தம்பி பிளேடால் அறுத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் பிள்ளையார் பாளையம் சிஎஸ்எம் தோப்பு தெரு பகுதிகைச் சேர்ந்தவர் சண்முகம் (54). சமையல் தொழில் செய்து வருகிறார்.

    இவரது தம்பி சீனிவாசன் (49). இவர் சமையல், எலெக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். சண்முகம், சீனிவாசன் இருவரும் அவர்கள் தாயார் வீட்டில் முன்பாகத்திலும், பின் பாகத்திலும் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சீனிவாசன் முன்பாக சொத்தை தனது தாயாரிடம் கேட்டு சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு 10 மணியளவில் குடிபோதையில் வந்த சீனிவாசன் தனது தாயார் மற்றும் அண்ணன் சண்முகத்திடம் சொத்து கேட்டு சண்டை போட்டுள்ளார்.

    இதை தட்டி கேட்ட அண்ணன் சண்முகம் கழுத்தை தன்னிடம் இருந்த பிளேடால் சீனிவாசன் அறுத்துள்ளார். அவர் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    தப்பி ஓடிய சீனிவாசனை, சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி கைது செய்தார். சொத்து தகராறில் அண்ணன் கழுத்தை, தம்பி பிளேடால் அறுத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கயத்தாறு அருகே சொத்து தகராறில் மத போதகரை அண்ணன் மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜா கோயில்பிள்ளை (வயது 60). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    மேலும் இவர் கடலூரில் கிறிஸ்தவ மத போதகராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராஜா கோயில்பிள்ளையின் அண்ணன் பால் தங்கசாமி. இவர் குடிநீர் வடிகால் வாரியத்தில் ஊழியராக பணியாற்றினார். இவருடைய மகன் ராஜா (32), ஆட்டோ டிரைவர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பால் தங்கசாமியும், அவருடைய மனைவியும் இறந்து விட்டனர். இதனால் ராஜாபுதுக்குடியில் உள்ள பூர்வீக வீட்டில் ராஜா தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில்தான் திருமணம் ஆனது.

    இந்த நிலையில் ராஜா கோயில்பிள்ளைக்கும், ராஜாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. பூர்வீக சொத்துக்களை ராஜா கோயில்பிள்ளை அபகரித்ததாக ராஜா புகார் கூறியிருந்தார். இதுகுறித்த வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    கடலூரில் இருக்கும் ராஜா கோயில்பிள்ளை அடிக்கடி சொந்த ஊருக்கு சென்று, தனது நிலங்களை பார்த்து வந்தார். அதேபோல் நேற்று முன்தினம் இரவில் சொந்த ஊரில் உள்ள தனது நிலங்களை பார்ப்பதற்காக இவர் தனியாக புறப்பட்டு வந்தார்.

    நேற்று மதியம் அவர், ராஜாவின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜா திடீரென அரிவாளால் ராஜா கோயில்பிள்ளையை சரமாரியாக வெட்டினார்.

    இதில் தலை, கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியானார். பின்னர் ராஜா அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    இதுபற்றி கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெபராஜ், கயத்தாறு இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கொலை செய்யப்பட்ட ராஜா கோயில்பிள்ளையின் உடல் பிரேத‌ பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளி ராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர். 

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கல்லுப்பட்டி ஜோசியர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். இவருக்கு நாகராஜ் (வயது 45), செந்தில் நாயகன் (43), ஞானேஸ்வரன் (40) என 3 மகன்கள் உள்ளனர். 3 மாடிகள் கொண்ட வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு பகுதியில் வசித்தனர்.

    கடந்த 2014-ம் ஆண்டு தனது சொத்துக்களை 3 மகன்களுக்கும் வெள்ளைச்சாமி உயில் எழுதி வைத்துள்ளார். கடந்த ஆண்டு அவர் இறந்த நிலையில் உயில் விவகாரம் தெரியவந்தது. அதில் மற்றவர்களை விட செந்தில் நாயகனுக்கு அதிக அளவில் சொத்துக்களை வெள்ளைச்சாமி பிரித்து எழுதி இருந்தார். இது தொடர்பாக சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    இந்த நிலையில் செந்தில் நாயகன் தனது பெயருக்கு சொத்துக்களை மாற்றும் பணியில் ஈடுபட்டார். இது நாகராஜூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    நேற்று இரவு வீட்டின் கீழ் தளத்தில் உள்ள தனது வீட்டில் செந்தில் நாயகன் படுத்திருந்தார். இன்று அதிகாலை அங்கு வந்த நாகராஜ், வீட்டில் இருந்த அம்மிக்குழவிக்கல்லை எடுத்து செந்தில் நாயகன் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது குறித்த தகவல் கிடைத்ததும் டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது தான் சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நாகராஜ் கைது செய்யப்பட்டார்.

    கொலை செய்யப்பட்ட செந்தில்நாயகன், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். அவருக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ×