search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சொத்துக்காக மனைவியை அடித்து எரித்து கொன்றேன்: கைதான கணவர் வாக்குமூலம்
    X

    செல்லக்கண்ணு

    சொத்துக்காக மனைவியை அடித்து எரித்து கொன்றேன்: கைதான கணவர் வாக்குமூலம்

    • சொத்துக்காக மனைவியை அடித்து எரித்து கொன்றேன் என்று கைதான கணவர் வாக்குமூலம் கொடுத்தார்.
    • ஞானம்மாள் அடித்து கொலை செய்யப்பட்ட பிறகே அவரது உடல்எரிக்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம்அருகே எம்.புதுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 70). இவரது மனைவி ஞானம்மாள் (67). இவர் நேற்று முன்தினம் அவரது வீட்டில்உடல் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது அண்ணன் பாண்டுரங்கன் எனது தங்கையின்சாவில் மர்மம் இருப்பதாக மரக்கா ணம் காவல் நிலையத்தில் புகார்கொடுத்தார். மரக்காணம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இறந்துகிடந்த ஞானம்மாள் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது ஞானம்மாளின் கணவர் எனக்கும், எனது மனைவிக்கு ம்சம்பவத்தன்று காலையில் வாய்த் தகராறு ஏற்பட்டது. இதனால் மன முடைந்த எனது மனைவிவீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்றுபோலீசாரிடம் கூறினார்.

    இதையடுத்து போலீசார்,மர்மமான முறையில் இறந்து கிடந்த ஞானம்மாளின்உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக புதுவை மாநிலம் கனகசெட்டிக்குளத்தில் உள்ள ஒரு தனி யார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரது உடலை உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள், ஞானம்மாள் அடித்து கொலை செய்யப்பட்ட பிறகே அவரது உடல்எரிக்கப்பட்டுள்ளது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவித் திருந்தனர். இதனை தொடர்ந்து போலீசார், ஞானம்மாளின்கணவர் செல்லக்கண்ணுவை காவல் நிலையம் கொண்டுசென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்போலீசாரிடம் வாக்குமூலமாக கூறியதாவது:-

    ஞானம்மா ளைஎனக்கு திருமணம் செய்து கொடுத்த போது அவரது அண்ண ன்பாண்டு ரங்கன், தனது தங்கைக்கு 1.5 ஏக்கர் நிலத்தை வாங்கி எழுதி வைத்தார். அந்த நிலத்தை தற்போது என் பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கு மாறு என் மனைவியிடம் நான் கேட்டேன். அதற்கு அவர், அப்படி எழுதி கொடுக்க மாட்டேன் என்று கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த நான், சம்பவ த்தன்று எனது மனைவியை அடி த்தேன். இதில் அவர் மயங்கி கீழே விழுந்தார். அப்போது அருகில்கிடந்த கயிற்றை எடுத்து கழுத்தை இருக்கினேன். அதில் எனது மனைவிஇறந்துவிட்டார். இந்த சம்பவத்தை மறைக்க நான் வீட்டில் இருந்த மண்எண்ணையை அவரது உடலில் ஊற்றி எரித்தேன். இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்துவிட லாம் என்று நினைத்தேன். ஆனால்போலீசார் நடத்திய முறையான விசாரணையால் நான் மாட்டிக்கொண்டேன். இவ்வாறு அவர் கூறினார். சொத்துக்காக மனைவியை, வயதான காலத்திலும் கணவன் அடித்து கொன்று மண்எண்ணை ஊற்றி எரித்துகொன்ற சம்பவம் அப்பகுதி பொதுமக் கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×