என் மலர்
நீங்கள் தேடியது "Thirumangalam murder"
- இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
- கழுத்தை அறுத்து உடலை சுடுகாட்டில் போட்டுள்ளனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் முருகேசன் (வயது 52). இவர் அப்பகுதியில் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவரது நண்பர் மங்கம்மா பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (33).
இந்நிலையில் முருகேசனின் மகன் மணி (27) தனது இருசக்கர வாகன சான்றிதழை ராஜசேகரிடம் அடமானம் வைத்து ரூ.25 ஆயிரம் கடனாக பெற்றார். அதை திருப்பி கொடுத்த நிலையில் ரூ.1000 மட்டும் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனிடையே கடந்த 25-ந் தேதி ராஜசேகரும், அவரது நண்பருமான அணைக்கரைப் பட்டியை சேர்ந்த பென்னி என்ற பார்த்திபனும் டி.கல்லுப்பட்டி பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு தனது நண்பர்கள் சரவணன், பூமர் சரவணன், சங்கர் ஆகியோருடன் வந்த மணி ராஜசேகர் மற்றும் பென்னி என்ற பார்த்திபனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் மற்றும் சிலர் முருகேசனின் கழுத்தை அறுத்து உடலை மங்கம்மாள்பட்டியில் உள்ள சுடுகாட்டில் போட்டுள்ளனர். தலையை டி.கல்லுப்பட்டி- பேரையூர் ரோட்டில் உள்ள மதுக்கடையில் வைத்து விட்டு அங்கேயே மது அருந்தி விட்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்தவர்கள் முருகேசனின் தலையை கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசுக்கு புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முருகேசன் கொலை தொடர்பாக ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் ஆகிய இருவரையும் டி.கல்லுப்பட்டி போலீசார் இன்று கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள கல்லுப்பட்டி ஜோசியர் தெருவைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியர். இவருக்கு நாகராஜ் (வயது 45), செந்தில் நாயகன் (43), ஞானேஸ்வரன் (40) என 3 மகன்கள் உள்ளனர். 3 மாடிகள் கொண்ட வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு பகுதியில் வசித்தனர்.
கடந்த 2014-ம் ஆண்டு தனது சொத்துக்களை 3 மகன்களுக்கும் வெள்ளைச்சாமி உயில் எழுதி வைத்துள்ளார். கடந்த ஆண்டு அவர் இறந்த நிலையில் உயில் விவகாரம் தெரியவந்தது. அதில் மற்றவர்களை விட செந்தில் நாயகனுக்கு அதிக அளவில் சொத்துக்களை வெள்ளைச்சாமி பிரித்து எழுதி இருந்தார். இது தொடர்பாக சகோதரர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் செந்தில் நாயகன் தனது பெயருக்கு சொத்துக்களை மாற்றும் பணியில் ஈடுபட்டார். இது நாகராஜூக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
நேற்று இரவு வீட்டின் கீழ் தளத்தில் உள்ள தனது வீட்டில் செந்தில் நாயகன் படுத்திருந்தார். இன்று அதிகாலை அங்கு வந்த நாகராஜ், வீட்டில் இருந்த அம்மிக்குழவிக்கல்லை எடுத்து செந்தில் நாயகன் தலையில் போட்டார். இதில் தலை நசுங்கிய அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் டி.கல்லுப்பட்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது தான் சொத்து தகராறில் தம்பியை, அண்ணனே கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து நாகராஜ் கைது செய்யப்பட்டார்.
கொலை செய்யப்பட்ட செந்தில்நாயகன், மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி டிஸ்மிஸ் செய்யப்பட்டவர். அவருக்கு திருமணமாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






