என் மலர்
நீங்கள் தேடியது "DMK Celebrity"
- கதிர்காமம் தொகுதி செயலாளராக பதவி வகிக்கிறார்
- பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. செயலாளர் வடிவேல். இன்று அவரது பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் மாநில தி.மு.க அமைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா கலந்துகொண்டு வடிவேலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் அணிபால் கென்னடி, சம்பத், தொகுதி துணை செயலாளர் தங்க. தமிழ்வாணன், தி.மு.க நிர்வாகிகள் தங்கவேல், சன்.சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில அணிகளின் நிர்வாகிகள், தொகுதி செயலாளர்கள், தொகுதி தி.மு.க நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், தி.மு.க உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பிறந்தநாள் கொண்டாடி வடிவேலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
முன்னதாக ஜிப்மர் மருத்துவமனை மகளிர் மற்றும் குழந்தைகள் பிரிவு எதிரே வடிவேல் தலைமையில் காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது, சத்திய மூர்த்தி வீதி டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், கதிர்காமம் ஆகிய பகுதிகளில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.
டாக்டர் கலைஞர் ஆட்டோ ஸ்டாண்ட் சார்பில் தொ.மு.ச மாநில அமைப்பாளர் அண்ணா அடைக்கலம் ஏற்பாட்டில் நடந்த அன்னதான நிகழ்ச்சியில் வடிவேல் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதில் தொ.மு.ச நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, சிவமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சண்முகபுரம் மார்க்கெட் பகுதியில் அன்னதானமும், ராஜீவ் காந்தி உடல் ஊனமுற்றோர் இல்லத்தில் உணவும் வழங்கப்பட்டது.
இன்று மாலை கதிர்காமம் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட பூமியான் பேட் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பிறந்தநாள் விழா நிகழ்ச்சிக்கு திமு.க நிர்வாகிகள் மற்றும் வடிவேல் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
- இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது.
- கழுத்தை அறுத்து உடலை சுடுகாட்டில் போட்டுள்ளனர்.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டி பிள்ளைமார் தெருவை சேர்ந்த அய்யாவு மகன் முருகேசன் (வயது 52). இவர் அப்பகுதியில் தி.மு.க. பிரமுகராக உள்ளார். இவரது நண்பர் மங்கம்மா பட்டியை சேர்ந்தவர் ராஜசேகர் (33).
இந்நிலையில் முருகேசனின் மகன் மணி (27) தனது இருசக்கர வாகன சான்றிதழை ராஜசேகரிடம் அடமானம் வைத்து ரூ.25 ஆயிரம் கடனாக பெற்றார். அதை திருப்பி கொடுத்த நிலையில் ரூ.1000 மட்டும் திரும்ப கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்துள்ளது. இதனிடையே கடந்த 25-ந் தேதி ராஜசேகரும், அவரது நண்பருமான அணைக்கரைப் பட்டியை சேர்ந்த பென்னி என்ற பார்த்திபனும் டி.கல்லுப்பட்டி பகுதியில் பேசிக் கொண்டிருந்த போது அங்கு தனது நண்பர்கள் சரவணன், பூமர் சரவணன், சங்கர் ஆகியோருடன் வந்த மணி ராஜசேகர் மற்றும் பென்னி என்ற பார்த்திபனை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இது தொடர்பாக டி.கல்லுப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் மற்றும் சிலர் முருகேசனின் கழுத்தை அறுத்து உடலை மங்கம்மாள்பட்டியில் உள்ள சுடுகாட்டில் போட்டுள்ளனர். தலையை டி.கல்லுப்பட்டி- பேரையூர் ரோட்டில் உள்ள மதுக்கடையில் வைத்து விட்டு அங்கேயே மது அருந்தி விட்டு சென்றுள்ளனர்.
அங்கிருந்தவர்கள் முருகேசனின் தலையை கண்டு அதிர்ச்சியடைந்து இதுகுறித்து டி.கல்லுப்பட்டி போலீசுக்கு புகார் அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் முருகேசன் கொலை தொடர்பாக ராஜசேகர், பென்னி என்ற பார்த்திபன் ஆகிய இருவரையும் டி.கல்லுப்பட்டி போலீசார் இன்று கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
- பண்ருட்டியில் தி.மு.க. பிரமுகர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- அங்கிருந்த பொதுமக்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.
கடலூர்:
பண்ருட்டி களத்து மேட்டு தெருவை சேர்ந்தவர்தில்லைகோவிந்தன்(வயது69).தி.மு.க. பிரமுகர் திருமணம் ஆகாதவர். இவர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். சமீபத்தில் களத்து மேட்டுப்பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு வீடுகள் இடிக்கப்பட்டதால்அங்கிருந்த பொதுமக்கள் வேறு இடங்களுக்கு சென்று விட்டனர்.இவருக்கு என்று குடும்பம் இல்லாததாலும் அங்கும் யாரும் இல்லாததாலும் விரக்தியில் இருந்து வந்த இவர் நேற்று இரவு விஷம் குடித்தார். அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரன் சப் -இன்ஸ்பெக்டர் ரங்கநாதன் ஆகியோர் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர் கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பண்ருட்டியில் தி.மு.க. பிரமுகர் மர்ம சாவு உறவினர்கள்- வி.சி.க.வினர் மறியல் செய்தனர்.
- மறியல் செய்தவர்களிடம் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேஉள்ள அங்குசெட்டிபாளையத்தை சேர்ந்தவர் வினோத்பாபு ஜெயபால் . (வயது 33). தி.மு.க.பிரமுகர். இவர் நெய்வேலியில் உள்ள தனியார் ஐ.ஏ. எஸ். அகாடமியில் வேலை பார்த்த வந்தார்.
இவர் ஓய்வு எடுப்பதற்காக பண்ருட்டி திருவதிகை ஆயில் மில் பஸ் நிறுத்தம் செட்டிபட்டறையில் வாடகை வீட்டுக்கு வருவது உண்டு. இவருக்கு திருமணமாகி விட்டது.
இன்று காலை வேலைக்கு செல்வதாக தனது மனைவியிடம் வினோத்பாபு ஜெயபால் கூறி விட்டு சென்றார். அதன்பின்னர் வழக்கம் போல் பண்ருட்டி திருவதிகை வாடகை வீட்டில் தங்கினார். அப்போது நீண்டநேரம் ஆகியும் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது வினோத்பாபு ஜெயபால் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் உறவினர்கள், வி.சி.க. மற்றும் தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். அப்போது வினோத்பாபுஜெயபால் சாவு குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பண்ருட்டியில் சென்னை- கும்பகோணம் சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதித்தது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சந்திரன் (பண்ருட்டி) அசோகன் ( நெல்லிக்குப்பம்) நந்தகுமார் (புதுப்பேட்டை) ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்தனர்.
அப்போது மறியல் செய்தவர்களிடம் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.






