search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே பரபரப்பு சொத்து தகராறு காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து
    X

    பண்ருட்டி அருகே பரபரப்பு சொத்து தகராறு காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து

    • நேற்று முத்து அவரது வீட்டில் வெளியில் நின்று கொண்டிருந்தார்.
    • தாக்குதலில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே மேலிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 33) இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த செந்தில் (27) இவர்கள் இருவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்னதாகவே தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முத்து அவரது வீட்டில் வெளியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த செந்திலுக்கு முத்துவிற்கும் இடையே மீண்டும் சொத்து தகராறு காரணமாக வாய் தகராறு ஏற்பட்டது. இந்த வாய் தகராறு சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறியது. இதில் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர். இந்த தாக்குதலில் முத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.

    இதில் ரத்த வெள்ளத்தில் செந்தில் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து செந்திலை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு செந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்த காடம்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து கத்தியால் குத்திய முத்துவை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

    Next Story
    ×