search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "projects"

    • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அரியலூர் மாவட்ட கோவில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது
    • திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அரியலூர் மாவட்டத்தில் திருக்கோவில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 186 திருக்கோவில்களில் பணிபுரியும் 186 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதுடன் திருக்கோவில் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தின் கீழ் ஓய்வூபெற்ற இசைக் கலைஞர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் 24 நபர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000 வீதம் மொத்தம் ரூ.72,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், திருக்கோவில் புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 42 திருக்கோவில்களில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளும், திருக்கோவில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இதே போன்று திருக்கோவில் பணியாளர்களுக்கு 2 சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவில்களில் பணிபுரியும் 26 ஆண் பணியாளர்கள் மற்றும் ஒரு பெண் பணியாளர் என மொத்தம் 27 பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தற்பொழுது முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இத்தொகை ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.மேலும் ஏழை, எளிய இணைகளுக்கு இலவச திருமண திட்டமும் செயல்படுத்த பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருமணம் நடைபெற்ற 3 இணைகளுக்கும் திருமண நாளன்று ஒவ்வொருவருக்கும் தலா திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டு நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்சி, பூஜைப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.இதில் ஒவ்வொரு இணைகளுக்கும் தலா ரூ.50,000 மதிப்பில் மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    • அய்யப்பன் எம்.எல்.ஏ. நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
    • விழாவிற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார்.

    கடலூர்:

    கடலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட 2 வது வார்டில் 15.50 லட்சம் ரூபாய் செலவில் சிமெண்ட் சாலை, 3-வது வார்டு செம்மண்டலம் காந்தி நகர் ரூ.14 லட்சம் மதிப்பில் நியாய விலைக்கடை கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதற்கு முன்னாள் மாவட்ட பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் தலைமை தாங்கினார். மாநகராட்சி கவுன்சிலர்கள் கீதா குணசேகரன், பிரகாஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அய்யப்பன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு நியாய விலைக்கடை கட்டிடம் கட்டும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் தமிழரசன், சரத் தினகரன், சுமதி ரங்கநாதன், பாரூக் அலி, கர்ணன், கீர்த்தனா ஆறுமுகம், ராதிகா பிரேம்குமார், மகேஸ்வரி விஜயகுமார், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், லட்சுமி செக்யூரிட்டி கே.ஜி.எஸ்.தினகரன், முன்னாள் கவுன்சிலர்கள் இளங்கோவன், வனிதா சேகர், வார்டு அவைத்தலைவர் அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுதாகர், நிர்வாகிகள் ராமலிங்கம், தெய்வநாயகம், செல்வராஜ், சம்மந்தம், முருகன், பாஸ்கர், அஷ்ரப் அலி, மணிகண்டன், சதிஷ், ஆனந்த், பாலசந்தர், செந்தில், மணிவண்ணன், சதாசிவம், சுரேஷ், தண்டபாணி, அருணாச்சலம், சிவகுஞ்சிதம், ஆறுமுகம், சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.24.55 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆய்வு செய்தார்.
    • சுகாதார வளாகம் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சிக்குட் பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    காரைக்குடி நகராட்சிக் குட்பட்ட செஞ்சை, முத்துப் பட்டினம் ஆகியப்பகுதி களில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டுமானப் பணிகளையும், நமக்கு நாமே திட்டம் 2021-22-ன் கீழ் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ரூ.1.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணி களையும் கலெக்டர் செய் தார்.

    இறகுப்பந்து உள்விளை யாட்டு அரங்கம் கட்டும் பணிகளையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் பருப்பு ஊரணி, சோமு பிள்ளை தெரு, கணேசபுரம் ஆகிய இடங்களில் கட்டப் பட்டு வரும் சுகாதார வளா கம் கட்டுமான பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார்.

    கலைஞரின் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.30 கோடி மதிப் பீட்டில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் மற்றும் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணிக ளையும், முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 14 நகராட்சி பள்ளிகளில் 1,631 குழந்தைகள் பயன்பெறும் வகையில் ரூ.18.57 லட்சம் மதிப்பீட்டில் செயல் படுத்தப்பட்டு வரும் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டப்பணிகளை யும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது காரைக்குடி நகராட்சி ஆணையாளர் லட்சுமணன், நகராட்சிப் பொறியாளர் கோவிந்தராஜன், நகர்நல அலுவலர் திவ்யா மற்றும் நகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • கலெக்டர் தகவல்
    • 100 கிராம ஊராட்சிகள் தேர்வு

    வேலூர்:

    அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச் சித் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் தரிசு நிலங்களை மேம்படுத்தும் வகையில், ரூ.3.70 கோடியில் திட்டப் பணிகள் மேற் கொள்ளப்பட்டுவருகிறது.

    இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:-

    தமிழகத்தில் அனைத்து கிரா மங்களும் 5 ஆண்டுகளில் ஒட்டு மொத்த வேளாண் வளர்ச்சி, தன்னிறைவு அடைந்திடும் வகையில், ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது.

    புதிய நீர் ஆதாரங்களை உரு வாக்கி, தரிசு நிலங்களை சாகுப டிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றி, சாகுபடி பரப்பை அதிகரித்தல், வேளாண் உற்பத்தி, உற்பத்தி திறனை அதிகரித்தல், உழவர்க ளின் பொருளாதார நிலையை மேம்படுத்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

    இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சமு தாய நீர் ஆதாரத்தை உருவாக் குதல், பண்ணைக் குட்டைகள் அமைத்தல், சிறுபாசன குளங் கள், ஊரணிகள், நீர் வரத்துக் கால் வாய்களைத் தூர்வாரி மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிற 2021 - 2022- ஆம் ஆண்டில் 317 சிறு கிராமங்களை உள் ளடக்கிய 43 கிராம ஊராட்சிக ளில் 390.26 ஏக்கர் பரப்பளவில்22 தொகுப்புகள் தேர்ந்தெடுக் கப்பட்டு 293 விவசாயிகள் பயன் பெறும் வகையில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறி யியல் துறை மூலம் ரூ.2 கோடியே 73 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    2022 - 2023 ஆம் ஆண்டில் 271 சிறு கிராமங்களை உள்ளடக்கிய 57 கிராம ஊராட்சிகளில் 293.10 ஏக்கர் பரப்பளவில் 20 தொகுப்பு கள் தேர்ந்தெடுக்கப்பட்டு 230 விவ சாயிகள் பயன்பெறும் வகையில் மொத்தம் ரூ.95 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, 2021 - 2023 ஆகிய இரு நிதியாண்டுகளில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100 கிராம ஊராட்சி களில்தேர்வு செய் யப்பட்டு, அந்த கிராமங்களில் உள்ள தரிசு நிலங்களை மேம்படுத் தும் வகையில் இதுவரை ரூ.3.70 கோடி மதிப்பிலான திட்டப் பணி கள் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியனில் ரூ.53.85 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி யூனியன் தினைக்குளம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் தினைக்குளம் ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8.30 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டும் பணி நடைபெறுவதை பார்வையிட்டு மாணவ- மாணவிகளின் பயன்பாட்டிற்கு ஏற்ப பணிகளை உரிய காலத்தில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கான காம்பவுண்ட் சுவர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் ரூ.10.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டதுடன் பள்ளி வளாகத்தை சுற்றி உட்புறப் பகுதியில் காம்பவுண்டு சுவரில் மாணவ- மாணவிகள் பார்த்து பயன்பெறும் வகையில் கல்வி முன்னேற்றத்திற்கான விழிப்பு ணர்வு ஓவியங்கள் வரைந்துள்ளதை பார்வையிட்டு பாராட்டினார்.

    இதே போல் ஒவ்வொரு பள்ளியிலும் காம்பவுண்டு சுவர் உட்புறத்தில் பொது அறிவு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அமைத்து மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் அமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பின்னர் தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி கல்வித்திறன் குறித்து கேட்டறிந்தார்.தினைக்குளம் ஊராட்சியில் 15-வது நிதி குழு திட்டத்தின் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையத்தி ற்கான கட்டடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தினார். அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் கிராம சாலையின் பக்கவாட்டுகளில் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் வாய்க்கால் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன் கணேஷ் பாபு, ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் அருண் பிரசாத், ராமசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூர் அருகே ரூ.60 லட்சத்தில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • என்ஜினீயர்கள் ரவிக்குமார், கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி யூனியனைச் சேர்ந்த தும்பைபட்டி ஊராட்சியில் மதுரை தொகுதி எம்.பி. நிதி ரூ.5 லட்சத்தில் செட்டியார்பட்டியில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணியையும், தாமரைபட்டி கிராமத்தில் கனிம மற்றும் புவியியல் துறையின் கீழ் ரூ.5 லட்சம் செலவில் குடிநீர் போர்வெல் அமைக்கும் பணியையும், தாமரைபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில்ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் மற்றும் சமையலறை கட்டும் பணியையும் பார்வையிட்டார்.

    மேலூர் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சாலக்கிபட்டியில் சமுதாயக்கூடம் கட்டிடம் கட்டும் பணியையும் மதுரை மாவட்ட கூடுதல் கலெக்டர் சரவணன் ஆய்வு செய்தார்.

    அப்போது கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பரசன், தும்பைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அயூப்கான், கொட்டாம்பட்டி என்ஜினீயர்கள் ரவிக்குமார், கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.
    • 37.05 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சபரி நகர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து வடுகபாளையம் ரோடு மீன் குட்டை வரை 37.05 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையும், சித்தம்பலம் புதூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழாவும் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு சித்தம்பலம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் புவனேஸ்வரி வரவேற்றார். திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தும், சாலை பணியை துவக்கி வைத்தார்.இதில் பல்லடம் முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர்,சிவசக்தி சுப்பிரமணியம்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பானுப்பிரியா,வார்டு மெம்பர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பரமசிவம், ராஜேஸ்வரன், பானுமதி,பாலகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
    • அமைச்சர் பெரியசாமி, துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் பெரியசாமி துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையில், திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் மூலம் கிராம ஊராட்சிகளில் உள்ள அனைத்து குக்கிராமங்களி லும் கான்கிரீட் சாலை, தெருவிளக்குகள், குளம், இடுகாடு, சுடுகாடு, குடிநீர், விளையாட்டு, கிராம அங்காடிகள், நூலகங்கள் என பல்வேறு அடிப்படை கட்டமைப்புப் பணிகளை அந்தந்த ஊராட்சிகளே செய்வதற்காக ஆண்டிற்கு சுமார் ரூ.1,400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஊரகப்பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் நடை பெற்று வரும் வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் மற்றும் தரம் குறித்து தொடர்ச்சியான பல்வேறு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணிகளை அனைத்து அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிடோர் ஒருங்கிணைந்து செய்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியன் விழுப்பனூர் ஊராட்சி, கிருஷ்ணன் கோவில் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.32லட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகளையும், திருவண்ணா மலை ஊராட்சி என்.சண் முகசுந்தராபுரம் கிராமத்தில் முதல்வரின் கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.20லட்சம் மதிப்பில் சாலை அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தையும் அமைச்சர் பார்வையிட்டார்.

    மல்லி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணை மற்றும் மியா வாக்கி முறையில் மரக்கன்றுகள் நடப்பட்டு வரும் பணிகளையும், ராம கிருஷ்ணாபுரத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் ரூ.9.78லட்சம் மதிப்பில் கிழக்கு ஊரணியை ஆழப்படுத்தி தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடை பெற்று வருவதையும் அமைச்சர் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன்பிறகு ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பெரியசாமியை கலெக்டர் ஜெயசீலன் வரவேற்றார். இந்தகூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) தண்ட பாணி, செயற்பொறியாளர் இந்துமதி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி தலைவர் ரவிக் கண்ணன், யூனியன் தலைவர் ஆறுமுகம், வத்திராயிருப்பு யூனியன் தலைவர் சிந்துமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திட்டப்பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் என்று ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது தலைமையில் நடந்தது.

    கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். இதில் அவர் பேசியதாவது:-

    ஊரக வளர்ச்சித்து றையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கும் பணி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 15-வது நிதி குழுவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், சமத்துவபுரம் வீடுகளை சீரமைக்கும் பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.

    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பயனாளிகளுக்கு காலதாமதமின்றி கட்டுமான பொருட்களை வழங்க வேண்டும்.

    ஒவ்வொரு நிதியாண்டி லும் மேற்கொள்ளப்பட தேர்வு செய்யப்பட்ட பணிக ளுக்கான ஆணைகளை காலதாமதமின்றி பயனா ளிகளுக்கு வழங்கி பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் மற்றும் மண்டபம் ஊராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த பதிவேடுகளை ஆணையர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர் ஊராட்சிகள் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு திட்டப்பணிகள் ஊராட்சிகளுக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து காலதா மதமின்றி பணிகளை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் திட்டப்பணிகள் குறித்து தேசிய கூட்டுறவு வளர்ச்சி கழக அதிகாரி ஆய்வு நடத்தினர்.
    • கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் மத்திய அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், மத்திய அரசின் கூட்டுறவு மற்றும் நிர்வாக இயக்குநர் தேசிய கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் இணைச் செயலர் பங்கஜ்குமார் பன்சால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    போகலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவ மனையை பார்வையிட்டார். கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கையாக தேவையான சிகிச்சை முறைகளை கையாண்டு கால்நடைகளின் உயிரிழப்பை தடுக்க மருத்து வர்கள் கண்காணிப்பில் திட்டமிட்டு செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மருச்சுக்கட்டி ஊராட்சி யில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் பொது மக்களுக்கு முழுமையாக குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பொதுமக்களிடம் தனி நபர் கழிவறை திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டிற்கும் தனிநபர் கழிவறை கட்டிடம் கட்டி வழங்கப்படுகிறது. கழிவறை கட்டிடத்தை பொதுமக்கள் பயன்படுத்தி சுகாதாரத்துடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    பரமக்குடி அரசு தலைமை மருத்துவமனைக்கு சென்று குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கும் பிரிவு, தீவிர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளி நோயாளிகள் பிரிவு மற்றும் ஆய்வகம் உட்பட அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டதுடன் பொது மக்களுக்கு தேவையான சிகிச்சைகளுக்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும் என்று மருத்துவர்களிடம் தெரிவித்தார்.

    பரமக்குடி வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை பார்வையிட்டு அங்கு விவசாயிகள் விற்பனை செய்ய கொண்டு வந்துள்ள தானிய பொருட்களை இருப்பு வைத்துள்ளதை பார்வையிட்டார். அரிய னேந்தல் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குறுங்காடுகள் அமைத்து ஊராட்சிக்கு வருவாய் ஈட்டும் திட்டம் செயல்பட்டு வருவதை பார்வையிட்டு இதேபோல் மற்ற ஊராட்சிகளிலும் செயல்படுத்தலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்க ளுடன் ஆலோசனை நடத்தி னார். இந்த ஆய்வின்போது கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பிரவீன் குமார், பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, கூட்டுறவு வளர்ச்சிக் கழக முதன்மை இயக்குநர் சந்திரசேகரன், கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் முத்துக்குமார், ஒழுங்குமுறை விற்பனை குழு செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்கு சென்றடைய வேண்டும் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார்
    • அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர் மற்றும் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது. திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொது மக்களின் முன்னே ற்றத்திற்காக ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒன்றிய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் 45 திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களும் பயன்பெறும் வகையில் பரவலாக மேற்கொள்ளவும், அரசின் திட்டங்கள் ஏழை, எளிய பொதுமக்களை சென்றடையும் வகையில் முன்னுரிமை அளித்து செயல்படுத்துவதுடன், அரசின் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் திட்டங்கள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்வில் எம்.எல்.ஏ.க்கள் முத்துராஜா, ராமச்சந்திரன், வருவாய் அலுவலர் செல்வி, தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவேரி-வைகை-குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் ரேவதி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெய லட்சுமிதமிழ்செல்வன், நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக கவேரி - வைகை - குண்டாறு இணைப்பு திட்டத்திற்காக, நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக குழு உறுப்பினர்களிடையே மாவட்ட அளவிலான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வு குழுக் கூட்டம், திருநாவுக்க ரசர்தலைமையில் நடைபெற்றது.


    • தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் பயன்பெறும் வகையில் துறை அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என அரசு கூடுதல் தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்
    • தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என தெரிவித்தார்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கான, மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர், தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் (தாட்கோ) மேலாண்மை இயக்குநர் கந்தசாமி, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ஆனந்த், தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த், மாவட்ட காவல் சூப்பிரெண்டு வந்திதா பாண்டே, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி மற்றும் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், செயல்படுத்தப்படும் திட்டங்களான, நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதார கடனுதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின்கீழ் பயன்பெற்று வரும் பயனாளிகளின் எண்ணிக்கை குறித்தும், பயனாளிகளுக்கு வங்கி கடனுதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்களின் நிலை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.தமிழ்நாடு முதலமைச்சரால் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டிற்காக பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இத்திட்டங்கள் மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி சு.ஜவஹர் தெரிவித்தார்.





    ×