search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "projects"

    • ரூ.1.04 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில், அரசின் பல்வேறு துறைக ளின் சார்பில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு பயனுள்ள வகை யில் பல்வேறு மேம் பாட்டு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    அவ்வாறாக மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளின் நிலைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வுகள் மேற்கொண்டு, பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    அதன்படி எஸ்.புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கலெக்டர் ஆஷாஅஜீத் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்வேறு துறை களின் சார்பில் அந்த பகுதி களில் நடைபெற்றுவரும். ரூ1.04கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மரம் நடுதல், மண் வரப்பு கட்டுதல், பள்ளி சுற்றுச்சுவர் கட்டும்பணி, அங்கன்வாடி கட்டிடம், கலையரங்கம் கட்டும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கு மாறு உத்தரவிட்டார். தொடர்ந்து 8 மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ55.25 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

    இந்த ஆய்வுகளின் போது எஸ்.புதூர் ஒன்றியக்குழு தலைவர் விஜயா, உதவிசெயற் பொறியாளர் முருகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் ராஜேஸ்வரன், சத்யன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • திட்டப்பணிகளை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிப்பதாக கீழக்கரை நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வேதனை தெரிவித்தார்.
    • அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி கூட்டம் நகர்மன்ற தலைவர் செஹானஸ் ஆபிதா தலைமையில் நடைபெற்றது.துணைத்தலைவர் வக்கீல் வி.எஸ்.ஹமீது சுல்தான் முன்னிலை வகித்தார்.ஆணையாளர் செல்வராஜ் வரவேற்றார். 21 வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பின் 20-வது வார்டு கவுன்சிலர் சேக் ஹுசைன் நகர் மன்ற கூட்டத்தில் பேசியதாவது:-

    கடந்த கால கூட்டங்களில் கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் என்னென்ன? எங்கே? எவ்வளவு? சதுர அடியில் இடம் உள்ளது என ஆய்வு செய்து பொதுமக்களும், எங்களுக்கும் தெரியும் வண்ணம் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அது இன்று வரை நடக்கவில்லை.

    நகரில் உள்ள வார்டுகள் குளறுபடிகள் பற்றி நான் மட்டுமல்ல, பல உறுப்பி னர்கள் அதை நிவர்த்தி செய்ய கோரிக்கையை முன் வைத்தனர். யார், யாருக்கு எந்த வார்டு என்பது பற்றி தெரியவில்லை. அதை தெரிவிக்க நகர்மன்ற உறுப்பினர்களை அழைத்து அவர்களிடம் விளக்கி அவரவர் எல்லையை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறை வேறவில்லை. நகரின் மெயின் ரோடு பகுதி அழ காகவும் நேர்த்தியாகவும் இருக்க வேண்டி ரோட்டின் இருபுறமும் பேவர் பிளாக் கல் பதித்து, ஆக்கிரமிப்பு களை குறைக்கும் வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் நடக்கவில்லை.

    கீழக்கரையில் ஒப்பந்ததா ரர்கள் பணிகள் தரமானதாக வும், விரைவாகவும் நேர்மை யாகவும் இருக்கும் வண்ணம் சமூக ஆர்வலர்கள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை யும் கண்டு கொள்ளவில்லை. எங்களின் நியாயமான கோரிக்கைக்கான பதிலை அடுத்த கூட்டத்தில் தெரி விக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • மதுரை மாவட்டத்தில் ரூ.2928 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடங்கப்படும்.
    • நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

    மதுரை

    மதுரை நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒபுளாபடித்துறை பாலம் திறப்பு விழா, அலங்கா நல்லூர், வாடிப்பட்டி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, திருமங்கலம், திருப்பரங் குன்றம், சேடப்பட்டி, மேலூர், கொட்டாம்பட்டி ஒன்றியங்களில் கட்டப்பட்டு உள்ள 1191 ஊரக குடியிருப்பு களுக்கான கூட்டு குடிநீர் திட்ட தொடக்க விழா ஆகி யவை இன்று மதுரையில் நடந்தது.

    நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மேற்கண்ட திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர வின்படி மதுரை மாவட்டத் தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வரு கிறது. அதன்படி ரூ.188 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள், ரூ.2.18 கோடி மதிப்பில் மழைநீர் வடிகால், ரூ.21.4 கோடி மதிப்பில் கல்வி வேளாண்மை திட்டப்பணிகள் நடை பெற்றுள்ளது.

    ரூ.15 கோடி மதிப்பில் தெருவிளக்குகள் எல்.இ.டி. பல்புகளாக மாற்றப்பட்டு உள்ளது. ரூ.347.8 கோடி மதிப்பில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    ரூ.58.2 கோடி மதிப்பில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறுகிறது. ரூ.5 கோடி மதிப்பில் மின் மயானம் அமைக்கும் பணி கள் நடந்து வருகின்றன. ரூ.2.88 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.7 கோடி மதிப்பில் புதிய சந்தைகள் உருவாக்கப் பட்டுளது. ரூ.6.9 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. ரூ.2.50 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ரூ.2.37 கோடி மதிப்பில் பள்ளி கட்டிட பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. இதர மாநகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகள் ரூ.54.8 கோடியில் நடந்து வருகிறது.

    மதுரை மாநகராட்சிக்கு இந்த அரசு ஒரு ஆண்டில் மட்டும் ரூ.217.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் மதுரை மாவட்ட நகராட்சியான மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி யில் ரூ.27.25 கோடி செல வில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. மேலும் நகராட்சிகளுக்கு திடக்கழிவு வாகனங்கள், எல்.இ.டி. விளக்குகள் வாங்கப்பட்டு உள்ளன.

    மேலும் பல கோடி ரூபாய் மதிப்பில் பூங்காக்கள், மயானங்கள், புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. திருமங்கலத்தில் நவீன பஸ் நிலையம் அமைக்க அதிக நிதி ஒதுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மணிமாறன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கிறேன்.

    மதுரை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளுக்கு ரூ.107.46 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மாநகராட்சியில் ரூ.717 ேகாடி மதிப்பிலும், நகராட்சிக்கு ரூ.95 கோடி மதிப்பிலும், குடிநீர் வடிகால் வாரிய திட்டத்திற்கு ரூ.2008 கோடி என மதுரை மாவட்டத்திற்கு மட்டும் ரூ.2928 கோடியே 30 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. வரும் காலங்களில் இன்னும் அதிக வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி பேசுகையில், தமிழ கத்தின் 2-வது தலை நகரமாகவும், கோவில் நகர மாகவும் விளங்கும் மதுரைக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அமைச்சர் பழனி வேல் தியாகராஜன், மதுைர மாவட்டத்தில் முத்தாய்ப் பான திட்டங்களை தொடங்கி வைத்த அமைச்சர் நேருக்கு நன்றி தெரிவித்தார்.

    இந்த விழாவில் அமைச்சர் ராஜகண்ணப் பன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், பூமிநாதன், வெங்கடேசன் எம்.பி, மேயர் இந்திராணி, நகராட்சி நிர்வாக இயக்கு னர் பொன்னையா, கலெக் டர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜித் சிங், மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, தி.மு.க. நிர்வாகிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது.
    • கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காட்டில் அடுத்த வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இந்த நிலையில் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு வளர்ச்சிப்ப ணிகளை செய்து வருகிறது. கொட்டஞ்சேடு – கே.நார்த்தஞ்சேடு வரை 2.66 கி.மீ நீளத்திற்கு புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரு கிறது. இதை கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மலைவாழ் மக்களுக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முழுமையாக கிடைக்கச் செய்வதை உறுதி செய்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.

    2022-23-ஆம் நிதியாண்டில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.37 லட்சம் மதிப்பீட்டில் 4 பணிகளும், கள்ளக்குறிச்சி நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் 1 பணியும், பொது நிதியின் கீழ் ரூ.2.36 கோடி

    மதிப்பீட்டில் 54 பணி களும், 15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் 123 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மேலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், கிராமப்புற நூலகங்கள் சீரமைக்கும் திட்டத்தின் கீழ் ரூ.4.69 லட்சம் மதிப்பீட்டில் 3 பணிகளும், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) ரூ.1.57 லட்சம் மதிப்பீட்டிலான பணிகளும், புதிய மற்றும் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.55 கோடி மதிப்பீட்டில் 5 பணிகளும் என 2022-23-ஆம் நிதியாண்டில் ஏற்காட்டை மேம்படுத்தும் வகையில் ரூ.10.79 கோடி மதிப்பீட்டிலான 222 வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    ஏற்காடு ஊராட்சி ஒன்றி யத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை குறிப்பிட்ட கால அள விற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்திடவும், மலைவாழ் மக்களுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளிட்டவற்றை நிறை வேற்றித்தரவும் துறை அலு வலர்கள் முனைப்போடு பணியாற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது, ஏற்காடு தாசில்தார் தாமோதரன், வட்டார வளர்ச்சி அலுவலர் அன்புராஜன், வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கல்யாணக்குமார், உதவிப் பொறியாளர் சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • நீர்ப்பாசன திட்டப் பணிகள் குறித்து கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.
    • நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றி யத்தில் நீர்ப் பாசன மேலாண்மை நவீனமய மாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெறும் பல் வேறு பணிகளை தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரும், திட்ட இயக்குநருமான தென்காசி ஜவகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தெற்கு கீரனூர் கிராமத்தில் கால்நடை மருத் துவ முகாமை தொடங்கி வைத்த அவர் இதன்மூலம் பயன் பெற்று வரும் பயனாளிகளுடன் கலந்து ரையாடினார்.

    பின்னர் மானாமதுரை, சிவகங்கை, திருப்புவனம் வட்டா ரங்களைச் சேர்ந்த உறுப்பினர்களிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டதற்கான காசோலையை கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கினார்.

    முனைவென்றி கிரா மத்தில் தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறையின் நீர்வள ஆதாரத் துறை சார்பில் தமிழ்நாடு பாசன மேலாண்மை நவீனப்படுத் தும் திட்டத்தின் கீழ் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங் கள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலநெட்டூர் கிராமத் தில் ரூ.29.45 லட்சத்தில் விதைப்பு கருவி மூலம் நெல் வரிசை விதைப்பு தொடர்பாக விவசாயி களுடன் கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் கலந் துரையாடினார்.

    கச்சாத்தநல்லூர் பகுதியில் நடைபெற்று வரும் இடது பிரதானக் கால்வாய் சீரமைப்புப் பணிகளைகள், வைகை ஆற் றில் உள்ள பார்த்திபனூர் மதகு அணைக்கு கீழ் இடது பிரதான கால்வாய் சீர மைப்புப் பணிகள், பிரிவு வாய்க்கால்கள், சாலைக் கிராமம் கால்வாய், மேல்,கீழ் நாட்டார் கால்வாய் ஆகிய வற்றைத் தூர்வாரி சீரமைக் கும் பணிகளையும் கூடுதல் தலைமை செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கலெக்டர் மதுசூதன் ரெட்டி, நீர்வள மேலாண்மை நிபுணர் கிருஷ்ணன், தோட்டக்கலை நிபுணர் வித்தியாசாகர், வேளாண்மைத் துறை நிபு ணர் ஷாஜகான், வேளாண் விற்பனை நிபுணர்

    ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஜவுளி பூங்காவில் திட்டப்பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரியை நியமிக்க வேண்டும்.
    • மாணிக்கம்தாகூர் எம்.பி. பேசினார்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே வடமலைகுறிச்சி கிராமத்தில் 100 நாள் திட்ட பயனாளிகளிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கர்நாடக சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி அறிவித்த பல்வேறு திட்டங்கள் மாநில மக்களுக்கு ஏற்புடையதாக இருந்துள்ளது. எனவே பணபலம், மத அரசியல் மற்றும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கை ஆகியவற்றை மீறி கர்நாடகத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும்.

    தமிழக அமைச்சரவை மாற்றத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி பொறுப்பை ஏற்றுள்ளது மாவட்டத்திற்கு பெருமை யளிக்கிறது. மேலும் டெல்டா மாவட்டத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில் துறை வழங்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.

    பழனிவேல் தியாக ராஜன் இலாகா மாற்றம் அவரது ஆடியோ சர்ச்சை அடிப்படையில் என்று கூறுவது ஏற்புடையதல்ல. இதற்கு ஏற்கனவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.

    விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 2 ஆயிரத்து 400 கோடி மதிப்பீட்டில் தொழில்பூங்கா தொடங்கப்படும் என்று மத்திய தொழில் மந்திரி பியூஷ்கோயல் அறிவித்துள்ளது குறித்து மத்திய இணை மந்திரி முருகனிடம் விவாதித்துள்ளேன். தற்போது மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து இந்த திட்டத்தின் செயல்பாடு மற்றும் விரைவில் தொடங்கு வதற்கான நடவடிக்கை குறித்து விவாதிக்க உள்ளேன்.

    விருதுநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில் திட்டப் பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரியை நியமிக்க வேண்டும். ஆனைக்குட்டம் புனரமைப்புக்கு ரூ.49 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். சிவகாசி சாட்சி யாபுரம், திருத்தங்கல் ெரயில்வே மேம்பாலங்கள் தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. விரைவில் பணிகள் தொடங்கும்.

    விருதுநகர் மாவட்டத்தில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காங்கிரஸ் நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், சிவகுரு நாதன், வக்கீல் சீனிவாசன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆவுடையம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அமைச்சர் ஆர்.காந்தி பேச்சு
    • ராணிப்பேட்டையில் புதிய திட்டபணிகள் தொடக்கம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிய திட்ட பணிகள் கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று நடந்தது.

    வாலாஜா ஒன்றியம் வானாபாடி ஊராட்சியில் களத்துமேடு பகுதியில் ரூ.16 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வானாபாடி ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் மறுவாழ்விற்காக வழங்கப்படும் நிதியுதவி வழங்குதல்,

    கல்மேல்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கல்புதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ப ள்ளியில் ரூ.19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடம், ரூ.10.லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடம், கன்னிகாபுரத்தில் புதிய பகுதி நேர ரேசன் கடை, கல்மேல்குப்பத்தில் ரூ.19லட்சத்து50 ஆயிரம் மதிப்பில் புதியஆழ்துளை கிணறு, பைப்லைன்,

    தரைமட்டநீர்தேக்கத் தொட்டி , கல்மேல்குப்பம் ஊராட்சி மற்றும் அம்மூர் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா ரூ. 19 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடங்கள் என மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் முடிவுற்ற 7 திட்டப்பணிகள் தொடக்க மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் திறக்கப்பட்டது.

    விழா நிகழ்ச்சிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகத்ரட்சகன் முன்னிலை வகித்து பேசினார்.

    விழா நிகழ்ச்சிகளில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தும், பணிகளை தொடங்கி, நிதியுதவிகளை வழங்கினர்.

    அப்போது அவர் பேசியதாவது :-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்களில் வேறு எந்த மாநிலங்களிலும் இல்லாத வகையில் மகத்தான திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதியில் கூறாத பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்.

    இந்த மக்களாட்சியில் கட்சி பாகுபாடின்றி மக்களின் அடிப்படை பிரச்சனைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகிறது. ஒரு நல்லாட்சி என்பது மக்களின் வரிப்பணத்தினை தேவையற்ற திட்டங்களுக்காக வீணடிக்காமல் அப்பணம் மக்களையே சேரும் வகையில் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அதைத்தான் நமது முதல் அமைச்சர் செய்து வருகிறார்.

    நமது முதல் அமைச்சர் மகளிர்க்கும்,கல்விக்கும்,சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார். அதனால் பொதுமக்கள் யார் மக்களுக்கான பயனுள்ள திட்டங்களை செயல்படுத்திகிறார்கள் என சிந்தித்து செயல்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையுடன் இருந்து அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடைய வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் ஆர்.காந்தி பேசினார்.

    நிகழ்ச்சிகளில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்,எம்.எல்.ஏ, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன். அம்மூர் பேரூராட்சி தலைவர் சங்கீதா மகேஷ், ஒன்றியக் குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம்,ஒன்றியக் குழு உறுப்பினர்கள் செல்வி, ராமச்சந்திரன், வானாபாடி, கல்மேல்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஈஸ்வரி, ராஜரத்தினம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடந்து வருகிறது.
    • மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருவாடானை ஊராட்சி ஒன்றியம், பெரிய கீரமங்கலம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.47.06 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை வணிகவளாக கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு அரசு வழிகாட்டுதலின்படி நிர்ணயிக்கப்பட்ட அளவீட்டு முறையில் கட்டப்பட்டு வருகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத்தொடர்ந்து இந்த பணியை உரிய காலத்திற்குள் முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர் சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு மழைக்காலத்தை கருத்தில் கொண்டு பணிகளை விரைந்து முடிக்க பணியாளர்களை அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து பாண்டுக்குடி ஊராட்சி, தினையத்தூர் கிராமத்தில் 15-வது நிதிக்குழு மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் திருவாடனை மற்றும் பாசிப்பட்டிணம் ஊராட்சியில், 'நம்ம ஊரு சூப்பரு" எங்களது கிராமம் எழில்மிகு கிராமம் என்பது குறித்தும், சுகாதாரத்துடன் வாழ்வது பற்றிய விழிப்பு ணர்வு குறித்தும் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, மாவட்ட ஊராட்சி செயலர் ரகுவீரக கணபதி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேஸ்வரி, ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி பொறியாளர்கள் செல்வகுமார், பாலமுருகன், ஜெயந்தி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரளாதேவி (பெரிய கீரமங்கலம்), இலக்கியாராமு (திருவாடானை), உம்மூர் சலீமா நூர் அமீன் (பாசிப்பட்டிணம்) மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நடப்பாண்டில் மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
    • மதுரையில் சர்வதேச ரோட்டரி தலைவர் பேட்டியளித்தார்.

    மதுரை

    மதுரையில் ரோட்டரி தலைவர்கள் சந்திப்பு நடந்தது. இதில் 1500-க்கும் மேற்பட்ட ரோட்டரி ஆளுநர்கள், முன்னாள் ஆளுநர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சர்வதேச ரோட்டரி சங்க தலைவர் கார்டன் மெக்கனரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    1905-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரோட்டரி இயக்கத்தில் உலகம் முழுவதும் 14 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் மட்டும் 1.80 லட்சம் பேர் உள்ளனர். 200 நாடுகளில் ரோட்டரி சங்கம் சேவை திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    பெண்கள் முன்னேற்றம், ஆரோக்கியம் நல்வாழ்வு, கல்வி மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு உதவும் வகையில், ரூ.28 ஆயிரம் கோடி செலவில் திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். நடப்பாண்டில் (2023-24) மனநல ஆரோக்கியம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

    பொதுமக்கள் மன நோயாளிகளை கனிவுடன் பார்க்கும் வகையில் மாற்றுவோம். சென்னை எழும்பூரில் உள்ள இன்ஸ்டிட்யூட் ஆப் மென்டல் ஹெல்த் மையம், ரூ.1 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரோட்டரி மண்டல முன்னாள் ஆளுநர் முருகானந்தம், பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஷ், முன்னாள் ஆளுநர் குமணன், ஆனந்த ஜோதி, கார்த்திக், இந்நாள் ஆளுநர் ஜெரால்டு, அடுத்த நிதி ஆண்டுக்கான ரோட்டரி ஆளுநர் ராஜா கோவிந்தசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    மதுரை பசுமலை ஓட்டலில் ரோட்டரி சங்க கூட்டத்துக்கான ஏற்பாடு களை வெங்கடேஷ், முரு கையா பாண்டியன், வட்டாட்சியர் சிவக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

    • காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.75.7 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
    • நிகழ்ச்சி முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.75.7 லட்சம் செலவில் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி முசிறி சட்டமன்ற உறுப்பினரும் திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு நகர்புறச் சாலை கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் ரூ.43.70 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண் 2-ல், அத்தனூர் அம்மன் கோவில் தெரு வார்டு எண் 4-ல், ஆண்டாபுரம் ரோடு வார்டு எண் 1 மற்றும் வார்டு எண் 10, காமராஜர்த் தெரு மற்றும் வார்டு எண் 11-ல் பள்ளிவாசல் தெரு, 5-வது குறுக்குத் தெரு ஆகிய இடங்களில் தார் சாலை வலுப்படுத்துதல் பணிக்கும் தூய்மை இந்தியாத் திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் செலவில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி வளமீட்பு பூங்காவில் ஈரக் கழிவுகளை தீர்வு செய்வதற்கான செயலாக்க கட்டமைப்புப் பணி,முசிறி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் செலவில் கூட்டுறவு வங்கி அருகில் நிழற்குடை அமைத்தல், அதே திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் காட்டுப்புத்தூர் வார்டு எண் 13-ல், வடக்கு முத்துராஜா தெருவில் பேவர் பிளாக் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.75.7 லட்சம் செலவில் மேற்கண்ட திட்ட பணிகள் செய்ய பூமி பூஜை நடத்தி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதாசுரேஷ், துணைத் தலைவர் சுதாசிவ செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் ச.சாகுல்அமீது, ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல், திருஞானம், காட்டுப்புத்தூர் நகர செயலாளர் கே.டி.எஸ்.செல்வராஜ், தொட்டியம் ஒன்றிய சேர்மன் கிருஷ்ணவேணி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் சிவசெல்வராஜ், வார்டு கவுன்சிலர்கள் சிவஜோதி, பானுமதி, பழனிவேல், அன்னபூரணி, கருணாகரன், மணிவேல், ராணி, விஜயா, இளஞ்சியம், ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் காட்டுப்புத்தூர் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் சிவசெல்வராஜ் சிறப்பாக செய்திருந்தார். தொட்டியம் ஒன்றிய தி.மு.க. நிர்வாகிகள், காட்டுப்புத்தூர் நகர தி.மு.க. நிர்வாகிகள் பொதுமக்கள், பெண்கள் திரளாக பங்கேற்றனர்.

    • இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அரியலூர் மாவட்ட கோவில்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது
    • திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

    அரியலூர்

    அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதன்படி தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் பல்வேறு சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அரியலூர் மாவட்டத்தில் திருக்கோவில் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 186 திருக்கோவில்களில் பணிபுரியும் 186 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 மாத ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருவதுடன் திருக்கோவில் பணியாளர்களின் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கும் திட்டத்தின் கீழ் ஓய்வூபெற்ற இசைக் கலைஞர்கள், அர்ச்சகர்கள் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் 24 நபர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.3000 வீதம் மொத்தம் ரூ.72,000 ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும், திருக்கோவில் புனரமைப்புத் திட்டத்தின்கீழ் 42 திருக்கோவில்களில் ரூ.2.98 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகளும், திருக்கோவில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவிலில் பணிபுரியும் ஒரு தலைமுடி மழிக்கும் பணியாளருக்கு தலா ரூ.5000 மாத ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.இதே போன்று திருக்கோவில் பணியாளர்களுக்கு 2 சீருடை வழங்கும் திட்டத்தின் கீழ் திருக்கோவில்களில் பணிபுரியும் 26 ஆண் பணியாளர்கள் மற்றும் ஒரு பெண் பணியாளர் என மொத்தம் 27 பணியாளர்களுக்கு சீருடைகள் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டுள்ளது.

    தற்பொழுது முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க இத்தொகை ரூ.50,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.மேலும் ஏழை, எளிய இணைகளுக்கு இலவச திருமண திட்டமும் செயல்படுத்த பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருமணம் நடைபெற்ற 3 இணைகளுக்கும் திருமண நாளன்று ஒவ்வொருவருக்கும் தலா திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம், மணமகன் ஆடை, மணமகள் ஆடை, திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டு நபர்களுக்கு உணவு, மாலை, புஷ்பம், பீரோ, கட்டில், மெத்தை, தலையணை, பாய், கைக்கடிகாரம், மிக்சி, பூஜைப் பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் வழங்கப்பட்டது.இதில் ஒவ்வொரு இணைகளுக்கும் தலா ரூ.50,000 மதிப்பில் மேற்கண்ட பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    ஓ.என்.ஜி.சி. சமூக பங்களிப்பு நிதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    ராமநாதபுரம்

    எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின்(ஓ.என்.ஜி.சி.) சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட வன உயிரின காப்பாளர் அலுவலக கட்டிடத்தினையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், வாலந்தரவை ஊராட்சி தெற்கூர் கிராமத்தில் ரூ.32.60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சமுதாய கூடத்தினையும் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சங்கர் லால் குமாவத் திறந்து வைத்தார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் சுந்தரமுடையன் மற்றும் நாகாச்சி கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு மாதிரி தோட்டக்கலை பண்ணையின் பயன்பாட்டிற்கான வாகனத்தையும், உச்சிப்புளி, தேவிபட்டினம், திருஉத்திரகோசமங்கை, ஆர். எஸ். மங்கலம், தொண்டி உள்ளிட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ.15.4 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ உபகரங்ணகளை எரிவாயு கழகத்தின் அலுவலர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து கலெக்டரிடம் வழங்கினர்.

    முன்னதாக மாவட்ட வன உயிரின காப்பாளர் அலுவலத்தில் கடல் பசு உயிரினங்களை அழிவில் இருந்து பாதுகாப்பதற்காக வனத்துறையின் ராமநாதபுரம் வனஉயிரினக் கோட்டம் காப்பாளர் அலுவலகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் “ உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மார்ட் போன்களுக்கான ஆன்ட்ராய்டு செயலி ‘காம்பா’ என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள கடல் பசுவினை பாதுகாக்க ‘‘சேவ்டுகோங்’’ என்ற ஆன்ட்ராய்டு செயலியை கலெக்டர் சங்கர் லால் குமாவத்  தொடங்கி வைத்தார்.

    இந்த மொபைல் செயலியை பயன்படுத்தி, மீனவர்கள் வலையில் சிக்கிய கடல் பசுக்களை உயிருடன் மீட்டு, மீண்டும் கடலில் விடும் காட்சிகளை வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்கலாம்.அவ்வாறு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்து கடல் பசுக்களை பாதுகாக்க வனத்துறைக்கு ஒத்துழைப்பு அளித்தமைக்காக சன்மானம் மற்றும் பரிசுத்தொகை பெறலாம். 

    கடல் பசுக்களை பாதுகாக்க, மிகப்பெரிய அளவில் மீனவர்களின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் பெறுவதற்கு இந்த மொபைல் செயலி பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் வன உயிரின காப்பாளர் ஜக்தீஷ் பகான் சுதாகர், உதவி வன பாதுகாவலர் கணேசலிங்கம், உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) சுரேஷ், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) பிரதாப், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் அலுவலர்கள் யாதவா, அனுராக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×