search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "projects"

    • திருப்புவனம்-காளையார் கோவில் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் திருப்புவனம் பகுதிகளில் புதிய திட்டப்பணிகளின் தொடக்க விழா நடை பெற்றது. சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். தமிழரசி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு திட்டங் களை தொடங்கி வைத்து பேசியதாவது:-

    காளையார்கோவில் ஊராட்சியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 1993-ல் தொடங்கப்பட்டு 2017-வரை சிறப்பாக நடைபெற்று வந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் 4,315 சதுரடி பரப்பளவில் புதிதாக பல்நோக்கு அரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    அதேபோன்று திருப்பு வனம் அருகே உள்ள கீழராங்கியம் கிராமத்தில் மானாமதுரை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16.41 லட்சம் மதிப்பீட்டில் என்.என்.498 திருப்புவனம் தொகுப்பு பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டுள்ளது.

    மேலும் இந்நிலையத்தில் எந்திரங்கள் நிறுவுவதற் கென கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய லிமிடெட் சார்பில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் எந்தி ரங்களும் நிறுவப்பட்டு உள்ளது.

    கிராம மக்களின் பொரு ளாதார மேம்பாட்டிற்கு வழிவகை ஏற்படுத்தி தந்த பால் உற்பத்தியாளர் கூட்டு றவு சங்க தலைவர் சேங்கை மாறன், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பழையனூர்-வல்லா ரேந்தல் சாலையில் பொது மக்களின் நீண்ட ரூ.3.56 கோடி மதிப்பீட்டில் சிறு பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசி னார்.

    இந்நிகழ்ச்சிகளில் க 32 மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 387 உறுப்பினர்களுக்கு ரூ.3 கோடியே 13 லட்சத்து 50 ஆயிரம் கடனுதவிகளும், 234 விவசாயிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சத்து 72 ஆயிரத்து 86 மதிப்பீட்டில் பயிர் கடனுதவி மற்றும் கால்நடை பராமரிப்பு கடனுதவியும், 1 மாற்றுத்தி றனாளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பீட்டிலான கடனுதவியும், பழையனூர் கிராமத்திற்குட்பட்ட மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு ரூ.67.66 லட்சம் மதிப்பீட்டிலான கடனுதவியும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் 12 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.8.5 கோடி மதிப்பீட்டில் கடனுதவியும், 14 பயனாளிகளுக்கு ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்பு கடனுதவியும் என மொத்தம் 653 பயனாளிகளுக்கு ரூ.6.5 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜூனு, நெடுஞ்சாலைத் துறை செயற் பொறியாளர் முரளிதர், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், ஆவின் பொது மேலாளர் சேக்முகமதுரபீக், துணைப் பதிவாளர் (பால்வளம்) செல்வம், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மாரிச்சாமி, காளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி, திருப்புவனம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சின்னையா, மானாமதுரை நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஆனந்தி அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    • திருச்சுழி தொகுதியில் ரூ. 10 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
    • காரியாபட்டி ஒன்றியத்திலும் பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் குச்சம் பட்டி புதூரில் நெடுஞ் சாலைத்துறை மூலமாக நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 18 லட்சத்து 63 ஆயிரம் மதிப்பீட்டில் திருச்சுழி - காரியாபட்டி சாலையில் இருந்து குச்சம்பட்டி புதூர் குண்டாற்றில் 10 தூண்களுடன் கூடிய சுமார் 9 கண்கள் கொண்ட புதிய உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணிகளை அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

    அதே போன்று திருச்சுழி ஒன்றியம் வடக்கு நத்தம் சாலையில் ரூ.2 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட பாலம் கட்டுவதற்கான பணியையும் அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.மேலும் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட இலுப்பையூர் கிராமத்தில் சுமார் ரூ.1 கோடியே 20 லட்சம் ரூபாய் திட்ட மதிப் பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுவதற்கான அரும்பணி யையும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அடிக் கல் நாட்டி தொடங்கி வைத் தார். மேலும் இந்நிகழ்ச்சியில் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை யும், மக்களை தேடி மருத்து வம் திட்டத்தின் கீழ் பயன் பெறும் 5 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகத்தையும் அமைச்சர் தங்கம் தென்ன ரசு வழங்கினார்.

    காரியாபட்டி ஒன்றியத் தில் சுமார் 3 கோடியே 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்ட பணி களையும் தொடங்கி வைத் தார். இந்த அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சிக்கு விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெய சீலன் தலைமை தாங்கினார். நெடுஞ்சா லைத்துறை கோட்டப்பொ றியாளர் முரளிதர், அருப்புக் கோட்டை வருவாய் கோட் டாட்சியர் கணேசன், நெடுஞ்சா லைத்துறை ஊரக சாலை உதவி பொறியாளர் வெங்கடேஷ், திருச்சுழி ஒன்றிய சேர்மன் பொன்னுத் தம்பி, நரிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர்போஸ்த் தேவர், தங்க தமிழ்வாணன், நரிக்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது
    • இந்த தகவலை நகராட்சி தலைவர் சகுந்தலா தெரிவித்துள்ளார்.

    மதுரை

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம் பட்டி நகராட்சிக்குட்பட்ட 24 வார்டுகளிலும் பல கோடி மதிப்பில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    ரூ.3 கோடி மதிப்பில் பேவர் பிளாக் சாலை, ரூ.1.கோடியே 50 லட்சம் மதிப்பில் வார்டுகளில் போர்வெல் அமைத்தல், ரூ.4 கோடி மதிப்பில் தார்சாலை, ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை, ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் தெருவிளக்குகள் அமைத்தல், ரூ.10 லட்சம் மதிப்பில் தூர்வாரும் பணிகள், சலவை தொழிலாளர்களின் வசதிக்காக 10 லட்சம் மதிப்பில் நீர்நிலை தொட்டி அமைத்தல், உசிலம்பட்டி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய பேருந்து நிலையம் ரூ. 8 கோடியே 50 லட்சம் மதிப்பில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பகுதி மக்கள் பொழுதுபோக்கிற்காக ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப் பட்டுள்ளது. உசிலம்பட்டி நகராட்சிக்கு ரூ.4 கோடியே 50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் பொற்கால ஆட்சியில் பல்வேறு திட்டப் பணிகளுக்கு அனுமதி வழங்கி நிதி ஒதுக்கி தந்த முதல்வரின் நடவடிக்கை யால் உசிலம்பட்டி பகுதி புதிய உயரத்தை தொட்டுள்ளதாக நகராட்சி தலைவர் சகுந்தலா தெரிவித்தார்.

    • வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், ஏழா யிரம்பண்ணை கிராமத்தில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக தேர்வு செய்த இடத்தினையும், ஏழாயிரம் பண்ணையில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நேரில் சென்று மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    15-வது நிதிக்குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் மதிப்பில் கட்டப் பட்ட ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியினை பார்வையிட்டார். பின்னர் மாணவர்களின் கல்விதிறன் மற்றும் வருகை குறித்த விவரங்களையும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

    அதனை தொடர்ந்து, சங்கரபாண்டியபுரம் கிராமத்தில், பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு ரூ.2.8 லட்சம் மதிப்பில் கட்டப் பட்டு வரும் வீட்டினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கரபாண்டியபுரம் கிராமம் அரசு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரை யாடினார்.

    இந்த ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் பிரின்ஸ், வட்டாட்சியர் ரங்க நாதன், உதவி செயற் பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஊராட்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    • ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர்களுக்கான ஊரக வளர்ச்சி துறை பணிகள் குறித்தஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்து பேசுகையில்,

    பொது மக்களிடம் வரி வசூல் செய்யும் போது ரொக்கமாக பெறாமல் ஆன்-லைன் முறையில் வசூல் செய்ய வேண்டும். தனிநபர் வீடு கட்டும் திட்டத்தில் பணிகள் தாமதம் இன்றி விரைவில் முடிக்க வேண்டும்.குளங்கள் சீரமைத்தல், வரத்து கால்வாய் சீரமைத்தல், அங்கன்வாடி கட்டிடம் மற்றும் மயானங்கள் கட்டும் பணிகளை அந்தந்த நிதி ஒதுக்கீடு காலத்திற்குள் முடிக்க வேண்டும், என்றார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், மண்டபம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுப்புலட்சுமி ஜீவானந்தம், ஊராட்சிகள் உதவி இயக்குநர் பரமசிவம், மண்டபம் பி.டி.ஓ., க்கள் முரளிதரன், நடராஜன், பங்கேற்றனர்.

    • விருதுநகரில் நகராட்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • லட்சுமி காலனியில் உள்ள பூங்காவினை மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் நகராட்சி சார்பில் நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    விருதுநகர் நகராட்சி, அண்ணாமலையம்மாள் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் கல்லூரி சாலையில் ரூ.200 லட்சம் மதிப்பில் கட்டப்படும் அறிவுத்திறன் பயிற்சி மையம்.

    நமக்கு நாமே திட்டம் மூலம் வி.என்.பி.ஆர் நகராட்சி பூங்காவில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள ஸ்கேட்டிங் மைதானம் அமைக்கும் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    மேலும் அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் தயாளன் ராஜேஷ் காலனியில் உள்ள பூங்காவினை ரூ.44 லட்சம் மதிப்பிலும், லட்சுமி காலனியில் உள்ள பூங்காவினை ரூ.40 லட்சம் மதிப்பிலும் மேம்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.

    பாவாலி சாலையில் உள்ள முஸ்லீம் பள்ளியில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பு கட்டடம் அமையவுள்ள இடத்தியும் பார்வையிட்டார்.

    இந்த ஆய்வின்போது, விருதுநகர் நகர்மன்ற தலைவர் மாதவன், நகராட்சி பொறியாளர், உதவி பொறியாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நீர் ஆதாரம் மேம்பட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் நடை பெற்றது. தலைவர் திசை வீரன், கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    ஒரு மாவட்டத்தின் வளர்ச்சி என்பது அந்த மாவட்டத்தில் பணி புரியக்கூடிய அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து பணிபுரிந்தால் அந்த மாவட்டமானது வளர்ச்சி பெறும். அவ்வாறு செயல்படுவதற்கு திட்டக்குழு அவசியமான ஒன்றாகும்.

    நம்முடைய மாவட்டத்தை பொறுத்தவரையில் குடிநீர் மட்டுமே பற்றாக்குறையாக இருந்து வருகிறது. அந்த பற்றாக்குறையை போக்கு வதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரு கின்றது.

    தண்ணீர் சீராக கிடைத்திடும் பட்சத்தில் விவசாயம் மேம்படும், சட்டம் ஒழுங்கு சீராக அமை யும்,முதல்-அமைச்சரின் அறிவுறுத்த லின்படி குடிநீர் சீராக கிடைத்திடும் பொருட்டு கூட்டுக்குடிநீர் திட்டத்தை துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. அந்த குடிநீரானது கரூரி லிருந்து கொண்டு வரப்படு கிறது. அவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீரை எவ்வாறு வீணாகாமல் உபயோகிப்பது என திட்டக்குழு உறுப்பினர்கள் திட்டங்கள் வகுக்க வேண்டும். அவ்வாறு திட்டங்களை வகுக்கும் பட்சத்தில் குடிநீர் பற்றாக்குறை என்பது ஏற்படாது.

    குடிநீர் வீணாக்காமல் நீங்கள் இருக்கும் பகுதியில் உள்ள குடிநீர் செல்லக்கூடிய கால்வாய்கள், குளங்கள் அனைத்தையும் தண்ணீரை சேமிப்பதற்கு உரிய நட வடிக்கைகளை திட்டக்குழு உறுப்பினர்கள் மேற் கொள்ள வேண்டும். புதிதாக பொறுப்பேற்று இருக்கக்கூ டிய திட்டக்குழு உறுப்பி னர்கள் திட்டங்களை வகுக்கின்ற போது தங்கள் பகுதிகளில் நீர் ஆதார மேம்பட திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்து ராமலிங்கம் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சின்னப்பம்பட்டி, செங்கோடனுர் ஆகிய பகுதியில் விளையாட்டு மைதானங்கள் போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.
    • ஆரூர்பட்டி பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    தாரமங்கலம்;

    சேலம் மாவட்ட கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.

    பின்னர் ஊராட்சி பகுதியில் நடைபெறும் திட்ட பணிகளான குறுக்குப்பட்டி ஊராட்சி மன்ற கட்டிடம், பவளத்தனுர்,பாப்பாம்பாடி கரட்டூர்,வணிச்சம்பட்டி ஆகிய பகுதியில் பள்ளிகட்டிட பணிகள், சின்னப்பம்பட்டி, செங்கோடனுர் ஆகிய பகுதியில் விளையாட்டு மைதானங்கள் போன்ற பணிகளை அவர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து பாப்பாம்பாடி தச்சங்காட்டூர் பகுதியில் இலங்கை தமிழர் குடியிருப்புகள், ஆரூர்பட்டி பகுதியில் நரிக்குறவர் இன மக்களுக்கு கட்டப்பட்டு வரும் வீடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது தாரமங்கலம் ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் கிராம ஊராட்சி ரவிச்சந்திரன், ஒன்றிய உதவி பொறியாளர்கள் சீனிவாசன், கண்ணன் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.

    • ரூ.2 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் அருகே, நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறினார்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாகமலை புதுக்கோட்டை, கரடிப்பட்டி, மேலக்குயில் குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரூ.2 கோடி மதிப்பில் சாலை, நிழற்குடை உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ராஜன் செல்லப்பா கூறியதாவது:-

    சென்னையில் மழையால் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆனால் முதல்-அமைச்சர் பீகார் சென்றுள்ளார். இந்த அரசு அமைந்து 2 ஆண்டுகளில் தற்போது வரை எந்தவித மக்கள் நல திட்ட பணி களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை.

    இவர்கள் ஒதுக்கீடு செய்தது அனைத்தும் கலைஞர் நூலகம், கலைஞர் நினைவு சின்னம், கலைஞர் கோட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்காகவே. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தொடங்கி வைத்த பல்வேறு திட்ட பணிகளை தான் தற்போது முதல்-அமைச்சர் திறந்து வைத்துள்ளார்.

    மதுரையில் வைகை கரை சாலை, சுற்றுச்சாலை, மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு திட்ட பணிகளை கொண்டு வந்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தி.மு.க. அரசு திட்ட ப்பணிகள் எதையும் செய்யாததால் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படுகிறது.

    மதுக்க டைகளை மூடுவதாக மக்கள் மத்தியில் தெரிவித்து விட்டு அதிக வியாபாரம் இல்லாத மதுக் கடைகளை மட்டுமே மூடியுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் மேம்பாலம் அருகே, பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக நடை மேம்பாலம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

    வருகிற 2026-ல் எய்ம்ஸ் மருத்துவமனை, நாகமலை புதுக்கோட்டை, வடபழஞ்சியில் தொழில் நுட்ப பூங்கா உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் வரவுள்ளது.

    நடிகர் விஜய் தற்போது நலத்திட்ட உதவிகள் செய்ததை அடுத்து அவர் அரசியலுக்கு வரலாம் என பல தெரிவிக்கின்றனர். எந்த நடிகர் வேண்டு மானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை போல நிலைத்து மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கக்கூடிய நடிகர்கள் இதுவரை வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் சந்திரன், மேலக்குயில்குடி நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் ரூ.4.89 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுவினர் ஆய்வு செய்தனர்.
    • தமிழக அரசு அறிவித்துள்ள திட்டங்களை இக்குழு ஆய்வு செய்து மக்களிடம் சேர்ப்பதே முக்கிய நோக்கம்.

    சிவகங்கை

    சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அரசு துறைகளின் கீழ் திட்டப்பணிகள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இதில் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். கலெக்டர் ஆஷா அஜீத் முன்னிலை வகித்தார்.

    சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழு உறுப்பி னர்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி , மனோகரன், ராமலிங்கம், வில்வநாதன், சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தமிழரசி, மாங்குடி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் பேசியதாவது:-

    முதல்-அமைச்சர், அமைச்சர்கள் அறிவிக்கும் திட்டப்பணிகள் ஆகியவை உறுதிமொழியாக கருதப்படுகிறது. இதனை முழுமையாக நிறைவேற்றி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்களின் முக்கிய பங்கு ஆகும். தமிழக அரசு அறிவுத்துள்ள திட்டங்களை இக்குழு ஆய்வு செய்து மக்களிடம் சேர்ப்பதே முக்கிய நோக்கம்.

    அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்டு நிலுவையில் உள்ள உறுதிமொழிகள் மற்றும் அவற்றின் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப் பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் அரசின் சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் சட்டமன்ற பேரவை உறுதிமொழி குழுத்தலைவர் வேல்முருகன் உறுப்பினர்களுடன் மாவட்டத்தில் ரூ.4.89கோடி மதிப்பில் நடக்கும் பல்வேறு திட்டப்பணிகளை கள ஆய்வு செய்தார். மேலும் ரூ20.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து ெகாண்டனர்.

    • வளர்ச்சி திட்டப்பணிகளை உரிய காலத்தில் முடிக்க சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக்குழு வலியுறுத்தியுள்ளது.
    • மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் சட்டப்பேரவை மதிப்பீட்டு குழுவின் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை தாங்கினார். சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் சந்திரன், சிந்தனை செல்வன், சிவக்குமார், தளபதி, நாகைமாலி, பரந்தாமன், பூமிநாதன், காந்திராஜன், ஜவாஹிருல்லா, மணியன், அருண்குமார் முன்னிலையில், தமிழ்நாடு சட்ட மன்றப்பேரவை மதிப்பீட்டு குழு தலைவர் அன்பழகன், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் நீண்ட கடற்கரை கொண்ட பகுதியாகும். பிரதானமாக மீன்பிடி தொழில் உள்ளது. மீனவர்கள் பொருளாதார மேம்பாடு அடையும் வகையில் மீன்வளத்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களின் பயன்பாட்டிற்கேற்ப மருத்துவ சேவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் மிகவும் பழுதடைந்த, பயன்பாடற்ற கட்டிடங்களை பொது ப்பணித்துறை அப்புறப்படுத்த வேண்டும். சாலைவசதி, குடிநீர் வசதி போன்றவற்றை நிறைவேற்ற முன்னுரிமை அளிக்க வேண்டும். அரசின் திட்டப்பணிகள் பொது மக்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும். அந்த வகையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 38 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அன்பழகன் வழங்கினார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் காதர்பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் ரூ.10½ கோடி மதிப்பில் நடக்கும் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகள் களஆய்வு நடத்தினர்.
    • அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்கிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ரூ.10.48 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கண்கா ணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

    சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் கிடைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பணிகளை மேற்கொள்கிறது. அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் தொடர்பாக களஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது என கூட்டத்தில் தெரிவிக்கப் பட்டது.

    மேலும் வேளாண், தோட்டக்கலை, மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, கல்வி, கூட்டுறவு, கால்நடை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் பயன்கள், நிதிநிலை, செலவினங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப் பட்டது. கூட்டத்திற்கு பின் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் லால்வேனா, மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் ஆகியோர் திருப்புவனம், மானாமதுரை ஆகிய பகுதிகளில் ரூ.10.48 கோடி மதிப்பில் நடக்கும் வளர்ச்சித் திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தினவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×