search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாமதம்"

    • தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.
    • முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்

    திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்ட திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அருகே இன்று காலை 7. 40 மணியளவில் வந்தது. அப்போது ரெயிலில் பயணம் செய்த நாகர்கோவில் பகுதியை சேர்ந்த கொத்தனார் புஷ்பராஜ் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும் தான் சென்னை தாம்பரம் அருகே கொத்தனார் வேலைக்கு செல்வதாகவும் தெரிவித்து மயக்கம் அடைந்து கீழே விழுந்தார்.

    உடனே சக பயணிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து ரெயிலின் சங்கிலியை இழுத்து திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை நிறுத்தினர். ரெயில் டிரைவர் மற்றும் டி.டி.ஆர்.,ரெயில்வே ஊழியர்கள் விழுப்புரம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.ஒரத்தூர் பகுதியை சேர்ந்த கிறிஸ்டோபர் அவர் கையில் வைத்திருந்த நெஞ்சுவலி சம்பந்தமான மாத்திரையை கொடுத்து முதலுதவி செய்து 108 ஆம்புலசுக்கு போன் செய்து ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ெரயில் 10 நிமிடங்களுக்கு மேல் தாமதமாக சென்றது.  

    • தண்டவாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
    • செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக செங்கல்பட்டு அருகே ஒத்திவாக்கம் ரெயில் நிலையத்தில் நடை மேடையில் நின்று கொண்டிருந்த மரம் முறிந்து தண்டவாளத்தில் விழுந்தது.

    இதன் காரணமாக அந்த வழியாக ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில் தென் மண்டலங்களில் இருந்து சென்னை வந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன.

    அதன்பிறகு தண்ட வாளத்தில் விழுந்து கிடந்த மரத்தை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து வந்த ரெயில்கள் சுமார் 1 மணி நேரம் வரை தாமதமாக வந்தன. சென்னை வந்த அனந்தபுரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், சேது எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டது.

    செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை தாம்பரம், மாம்பலம், எழும்பூர் ஆகிய பகுதிகளில் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் ஆகியோர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஏறி செல்வது வழக்கம். அந்த ரெயில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக வந்ததால் சென்னைக்கு வேலைக்கு செல்பவர்களும், மாணவ-மாணவிகளும் பெரிதும் அவதிப்பட்டனர். இதனால் செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

    • பாபநாசம் ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.
    • கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது,

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு மயிலாடுதுறையில் இருந்து தஞ்சை நோக்கி பாசஞ்சர் ரெயில் வந்து கொண்டிருந்தது.

    அப்பொழுது திடீரென பசு மாடு ஒன்று குறுக்கே பாய்ந்தது.

    இதில் ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பசுமாடு இறந்தது.

    இதில் பசு மாடு ரயில் என்ஜினில் சிக்கி சிறிது தூரம் இழுத்து சென்றது.

    இதனால் ரெயில் என்ஜின் கோளாறு ஆனது.

    பின்னர் கும்பகோணத்திலிருந்து மாற்று ரயில் என்ஜின் வரவழைக்கப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டு சென்றது .

    இது சம்பவத்தால் தஞ்சாவூர் கும்பகோணம் ரயில் பாதையில் திருச்செந்தூர் உழவன் எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது,

    இதுகுறித்து கும்பகோணம் ரயில்வே சப்- இன்ஸ்பெக்டர் பாலசுப்ர மணியம், ஏட்டு ஆறுமுகம் ஆழ்கியர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டன.
    • ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

    நாகர்கோவில் :

    சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இது தவிர தாம்பரத்தில் இருந்து திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில்கள் அனைத் தும் இரவில் சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலையில் நாகர்கோவில் வந்து சேரும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட்டன. ஆனால் நாகர்கோவில் நிலையத்திற்கு தாமதமாக வந்தது. காலை 5 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு நிலையம் வரவேண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அரை மணி நேரம் தாமதமாக வந்தது.

    தாம்பரத்தில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரெயில் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் வர வேண்டும். ஆனால் இந்த ரெயில் 1 மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையம் வந்தடைந்தது.

    நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் வழக்கமாக காலை 8 மணிக்கு நாகர்கோவில் டவுன் நிலையத்தை வந்தடையும். ஆனால் இன்று சுமார் 3 மணி நேரம் தாமதமாக பகல் 11 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.

    இதனால் அந்த ரெயிலில் வந்த பயணிகள் தவிப்புக்குள்ளானார்கள். அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பணிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு ரெயில் வந்து சேராததால் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. திருச்சியில் தண்டவாளம் பராமரிப்பு பணி நடப்பதால், ரெயில்கள் அனைத்தும் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. இதேபோல் சென்னை சென்ற தென்மாவட்ட ரெயில்களும் பல மணி நேரம் தாமதமாக சென்றன.

    • கோவையில் இருந்து திருப்பூர் , ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பைக்கு இயக்கப்பட்டு வருகிறது.
    • மழை காரணமாக ரெயில் தாமத மானதால் 3 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு வரும் என தென்னக ரெயில்வே சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

    சேலம்:

    கோவையில் இருந்து திருப்பூர் , ஈரோடு, சேலம், தருமபுரி வழியாக லோகமானியா திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் மும்பைக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கமாக கோவையில் 8.50 மணிக்கு புறப்பட்டு 12 மணியளவில் சேலத்திற்கு வந்தடையும். இந்தநிலையில் மறு மார்க்கத்தில் மழை காரணமாக ரெயில் தாமத மானதால் 3 மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து 11.50 மணிக்கு புறப்பட்டு வரும் என தென்னக ரெயில்வே சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

    இதனால் இந்த ரெயில் சேலத்திற்கு வழக்கத்தை விட 3 மணிநேரம் தாமதமாக 3 மணியளவில் வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் அந்த ரெயிலில் பயணிக்க இருந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். 

    • விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.
    • உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6:55 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.

    விமானம் ஓடுபாதையில் செல்வதற்கு முன்பு விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்த போது அதில் கோளாறு இருப்பதை அறிந்தார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் எந்திரம் பழுது பார்க்கப்பட்டு இன்று காலை 8:10 மணிக்கு தாமத மாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரியான நேரத்தில், விமானி கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • விமானத்தில் பயணம்செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
    • பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து குவைத்துக்கு செல்லும் பயணிகள் விமானம் இன்று அதிகாலை 2 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய சுமார் 150 பயணிகள் தயார் நிலையில் இருந்தனர்.

    இதற்கிடையே விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை ஊழியர்கள் கண்டு பிடித்தனர். இதனால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படும் என்று விமான நிறுவனம் அறிவித்தது. இதனால் அந்த விமானத்தில் பயணம்செய்ய வந்த பயணிகள் விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

    இன்று மதியம் 12 மணி வரை விமானத்தில் தொழில் நுட்பகோளாறு சரி செய்யப்படாததால் விமானம் புறப்படுவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. மேலும் பயணிகளுக்கு முறையான அறிவிப்பு மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்படாததால் கடும் அவதி அடைந்தனர்.

    12 மணிநேரத்துக்கும் மேல் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமானநிறுவன ஊழியர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஊழியர்கள் சமாதானம் செய்தனர். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளா மல் இருப்பது புரியாத புதி ராக உள்ளது.

    ராமநாதபுரம்

    திருப்புல்லாணி ஊராட்சி யில் மீன் மார்க்கெட் இல்லாததால் மீனவர்கள் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து பல் வேறு சமூக நல அமைப்புகள் பொதுமக்கள் புதிய மீன் மார்க்கெட் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. கடைகள் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதத்தை ஏற் படுத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக திருப் புல்லாணி பகுதியில் சாலை யோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் சாமி ஆலயத்திற்கு செல்லும் வழியில் மீன்களை விற் பனை செய்து வருவ தால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுளித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் கூறியதாவது:-

    பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மீன் மார்க்கெட் திறக்கப்படாத தால் திருப்புல்லாணி ஊரா ட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலை யோரங்களில் விற்பனை செய்யப்படும் மீன் வியா பாரிகளை தடுத்து நிறுத்தி னால் மீனவர்கள் மீன் மார்க்கெட் உள்ளே விற் பனை செய்யும் நிலை ஏற் படும். இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனு அனுப்பியும் எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளா மல் இருப்பது புரியாத புதி ராக உள்ளது.

    • மதுரை விமான நிலையம் சர்வதேச அங்கீகாரம் பெறுவதில் தாமதம் ஏன்? என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பப்பட்டது.
    • இந்திய விமான நிலைய ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

    மதுரை

    தென் மாவட்டங்களில் முக்கிய விமான நிலையமாக திகழும் மதுரை விமான நிலையம் தென் மாவட்ட மக்களின் உள்நாட்டு சேவை மூலம் வான்வழி போக்குவரத்திற்கு பேருதவியாக விளங்கி வருகிறது. அதுமட்டுமின்றி சர்வதேச அங்கீகாரம் பெறாவிட்டாலும் துபாய், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து செல்லலாம்.

    மதுரை விமான நிலையம் அமைக்கப்பட்ட பின்னர் அமைக்கப்பட்ட கோயம்புத்தூர், திருச்சி விமான நிலையங்கள் சர்வதேச அங்கீகாரம் பெற்றநிலையில் மதுரை விமான நிலையம் தற்போது வரை சர்வதேச விமான நிலைய அங்கீகாரம் பெறவில்லை. மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்பதே தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    இந்த நிலையில் சமீபத்தில் மதுரை விமான நிலையம் விரிவாக்கம் நடைபெற உள்ளதாகவும், இந்தியாவில் 5 விமான நிலையங்கள் 24 மணி நேரம் செயல்பட உள்ளதாகவும், மத்திய அரசு ஒரு அறிவிப்பினை வெளியிட்டது. அதில் மதுரை விமான நிலையம் ஏப்ரல் மாதம் முதல் 24 மணி நேரமும் செயல்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

    ஆனால் தற்போது வரை மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் செயல்படவில்லை.

    இது தொடர்பாக பாஸ்கரன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு இந்திய விமான நிலையம் ஆணையம் பதில் அளித்துள்ளது.

    அதில், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிக்காக 2 நீர்நிலை நிலப்பரப்பு தமிழக அரசாங்கத்திடம் நிலுவை யில் உள்ளது. நிலத்தை ஒப்படைத்த பின்னரே விமான ஓடுதள விரிவாக்கப் பணிகள் நடைபெறும்.

    மதுரை விமான நிலைய கட்டுப்பாட்டு மைய விரிவாக்க பணிகள் இன்னும் வகுக்கப்படும் நிலையிலேயே உள்ளது. மதுரை விமான நிலையத்தில் 24 மணி நேர சேவைக்கான திட்டம் தற்போது வரை நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. 24 மணி நேரம் மதுரை விமான நிலையம் செயல்படுவதற்காக புதிய விமானங்கள் இயக்கப் பட வேண்டி உள்ளது. இதற்காக விமான சேவை நிறுவனங்க ளுடன் அறிக்கை பெறப் பட்டுள்ளது. மதுரை விமான நிலை யத்தை தரம் உயர்த்தி சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. கடந்த 2022 முதல் 2023 வரை மதுரை விமான 11லட்சத்து 38ஆயிரத்து 928 பயணிகள் பயணித்துள்ள னர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பால் வினியோகம் பல மணி நேரம் தாமதம்
    • முகவர்கள் காத்திருப்பு-விற்பனை செய்ய முடியாமல் அவதி திருச்சி ஆவின் நிறுவனத்தில் எந்திர கோளாறு என காரணம் கூறப்படுகிறது

    திருச்சி,

    திருச்சி ஆவின் நிறுவனம் மூலம் திருச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளி அடைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இது ஆவின் நிறுவன வாகனங்கள் மூலமாக அதிகாலை நேரங்களில் முகவர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. பின்னர் முகவர்கள் கடைகள் மற்றும் வீடுகளுக்கு கூலி ஆட்கள் மூலம் சப்ளை செய்கின்றனர்.இந்த நிலையில் இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகவர்களுக்கு ஆவின் பால் மிகவும் தாமதமாக வந்துள்ளது. அதிகாலை 4 மணிக்கு வரவேண்டிய பால் காலை 8 மணிக்கு வந்ததால் முகவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். உரிய நேரத்தில் நுகர்வோருக்கு பால் கிடைக்காத காரணத்தால் அவர்களும் தனியார் நிறுவன பால் பாக்கெட்டுகளை வாங்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். குறிப்பாக திருச்சி கண்டோன்மென்ட், தில்லைநகர், வயர்லெஸ் ரோடு, வரகனேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆவின் பால் சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.இதனால் ஆவின் முகவர்களின் பால் தேக்கமடைந்து நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே மாநகரில் உள்ள முகவர்கள் பால் வருவதற்கு தாமதமானதால் திருச்சி புதுக்கோட்டை சாலையில் உள்ள ஆவின் பால் பண்ணை முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக கொட்டப்பட்டு பகுதியில் உள்ள ஆவின் பால் முகவர் ஆனந்த் கூறும்போது, பால் பண்ணைக்கு மிக அருகாமையில் கொட்டப்பட்டு பகுதி அமைந்துள்ளது. வழக்கமாக அதிகாலை மூன்றரை மணி அளவில் எனக்கு பால் வந்து விடும். ஆனால் இன்று காலை 7.30 மணிக்கு பால் வந்தது. நான் தினமும் 500 லிட்டர் பால் கொள்முதல் செய்கிறேன். தாமதமாக வந்ததால் 300 லிட்டர் பால் கூட சப்ளை செய்ய முடியவில்லை. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பால் தாமதமாக சென்றுள்ளது. காலையிலேயே கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செய்யும் குடும்பத்தினருக்கு பால் சப்ளை செய்ய முடியவில்லை என்றார்.பால் சப்ளை தாமதமானதற்கு பால் பதப்படுத்தும் 2 எந்திரங்கள் நேற்று இரவு திடீரென பழுதடைந்து விட்டது காரணம் என கூறப்படுகிறது. மேலும் தனியார் நிறுவன பால் விலை உயர்ந்துள்ள காரணத்தால் ஆவின் விற்பனை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக பால் டப்பா தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் ஆவின் நிறுவனம் சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




    • திட்டப்பணிகளை தாமதமின்றி முடிக்க வேண்டும் என்று ஊராட்சித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    • குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் முன்னிலையில், ஊரக வளர்ச்சி, ஊராட்சித்துறை ஆணையர் தாரேஸ் அகமது தலைமையில் நடந்தது.

    கடந்த நிதியாண்டு மற்றும் நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆணையர் ஆய்வு செய்தார். இதில் அவர் பேசியதாவது:-

    ஊரக வளர்ச்சித்து றையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டுதல், அங்கன்வாடி கட்டிடம் சீரமைக்கும் பணி, பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 15-வது நிதி குழுவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், சமத்துவபுரம் வீடுகளை சீரமைக்கும் பணிகள், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. குடிநீர் திட்ட பணிகளுக்கு சிறப்பு கவனம் எடுத்து பொதுமக்களின் தேவைக்கேற்ப பணிகளை முடிக்க வேண்டும்.

    அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் மற்றும் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகளை பயனாளிகளுக்கு காலதாமதமின்றி கட்டுமான பொருட்களை வழங்க வேண்டும்.

    ஒவ்வொரு நிதியாண்டி லும் மேற்கொள்ளப்பட தேர்வு செய்யப்பட்ட பணிக ளுக்கான ஆணைகளை காலதாமதமின்றி பயனா ளிகளுக்கு வழங்கி பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் மற்றும் மண்டபம் ஊராட்சி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த பதிவேடுகளை ஆணையர் பார்வையிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர் ஊராட்சிகள் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு திட்டப்பணிகள் ஊராட்சிகளுக்கு உரிய காலத்தில் அனுமதி வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து காலதா மதமின்றி பணிகளை வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இதில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) நாராயண சர்மா, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சுந்தரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பிற்பட்டோர் நலத்துறை மூலமாக இலவச மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
    • கலெக்டருக்கு நத்தம் பட்டா வழங்க கோரி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டத்தில் திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்பட்டோர் நலத்துறை மூலமாக இலவச மனை பட்டா வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் பேருக்கும் மேற்ப ட்டோருக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் 3 ஆயிரம் பேருக்கு இலவச மனை பட்டா வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில ஆண்டாக வீட்டுமனை பட்டா வழங்குவதில் தொய்வு நீடிக்கிறது.

    மாவட்ட அளவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இலவச மனை பட்டா கேட்டு காத்திருக்கின்றனர்.

    இதுதொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின துறை அதிகாரிகள் கூறுகையில், அரூர் ஒன்றியத்தில் நீர் நிலை புறம்போக்கு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை த்துறை உட்பட பல்வேறு துறைகளுக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டது.

    நகர்ப் புற மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடுகள் கட்டி தரப்பட்டு வருகிறது. வீடுகளில் வசித்தவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு கிடைத்துள்ளது.

    கிராமங்களில் வசிப்பவர்களுக்கு வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு பல்வேறு ஆய்விற்கு பின்னர் இலவச மனை பட்டா வழங்கப்படுகிறது. வரும் காலங்களில் கூடுதலாக பட்டா வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது என்றனர்.

    கோட்டப்பட்டி ஊராட்சி சூரநத்தம் கிராமத்தில் சமீபத்தில் பெய்த கனமழையால் பல்வேறு வீடுகள் சேதமடைந்து குடியிருப்பதற்கு உகந்ததாக இல்லை. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், கலெக்டருக்கு நத்தம் பட்டா வழங்க கோரி மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    ×