search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "use"

    • மீன் மார்க்கெட் பயன்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
    • எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளா மல் இருப்பது புரியாத புதி ராக உள்ளது.

    ராமநாதபுரம்

    திருப்புல்லாணி ஊராட்சி யில் மீன் மார்க்கெட் இல்லாததால் மீனவர்கள் சாலையோரங்களில் மீன் விற்பனை செய்து வந்தனர். இதைத் தொடர்ந்து பல் வேறு சமூக நல அமைப்புகள் பொதுமக்கள் புதிய மீன் மார்க்கெட் கட்டக்கோரி கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மீன் மார்க்கெட் கட்டப்பட்டது. கடைகள் கட்டப்பட்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் தாமதத்தை ஏற் படுத்தி வருகின்றனர்.

    இதன் காரணமாக திருப் புல்லாணி பகுதியில் சாலை யோரங்களில் மீன் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக திருப்புல்லாணி ஆதி ஜெகநாதர் பெருமாள் சாமி ஆலயத்திற்கு செல்லும் வழியில் மீன்களை விற் பனை செய்து வருவ தால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் முகம் சுளித்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இது குறித்து எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் அப்துல் வஹாப் கூறியதாவது:-

    பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட மீன் மார்க்கெட் திறக்கப்படாத தால் திருப்புல்லாணி ஊரா ட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாலை யோரங்களில் விற்பனை செய்யப்படும் மீன் வியா பாரிகளை தடுத்து நிறுத்தி னால் மீனவர்கள் மீன் மார்க்கெட் உள்ளே விற் பனை செய்யும் நிலை ஏற் படும். இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை மனு அனுப்பியும் எவ்வித நட வடிக்கையும் மேற்கொள்ளா மல் இருப்பது புரியாத புதி ராக உள்ளது.

    ×