search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திட்டப்பணி"

    • இந்தப் பகுதியில் மான், மயில்களுக்கு சரணாலயம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்
    • ஊத்துக்குளி மின்வாரிய முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அலுவலா் ஈஸ்வரமூா்த்தி மீது பல்வேறு புகாா்கள் உள்ளன.

    திருப்பூர்:

    திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், அவிநாசி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு, திருப்பூா் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தலைமை வகித்தாா். அவிநாசி தாசில்தார் மோகனன் வரவேற்றாா்.

    கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    அவிநாசி-வட்டளபதியில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் வீட்டுமனைப் பிரிவு அமைத்து விற்பனை செய்துள்ளனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊத்துக்குளி வெங்கலப்பாளையத்தில் கல்குவாரி சட்டவிரோதமாக செயல்படுகிறது.

    அவிநாசி வட்டத்தில் மான், மயில்கள் அதிக அளவில் இருப்பதால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் மான், மயில்களுக்கு சரணாலயம் அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும். அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தில் விடுபட்ட குளம் குட்டைகளை இணைக்க வேண்டும். ஊத்துக்குளி புன்செய்தளவாய்பாளையத்தில் வெறிநாய்கள் கடித்ததில், ஆடுகள் உயிரிழந்தன. எனவே, சம்பந்தப்பட்ட விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வஞ்சிபாளையம் குட்டைக்காக நிலம் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்னும் பட்டா மாறுதல் செய்யப்படாமல் உள்ளது. உடனடியாக பட்டா மாறுதல் செய்யும் பணிகளை வருவாய்த்துறை தொடங்க வேண்டும். ஊராட்சிகளுக்கான 4-வது குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அவிநாசி பேரூராட்சி 2-வது வாா்டில், சங்கமாங்குளத்துக்கு செல்லும் மடத்துப்பாளையம் சாலை பிரதான வாய்க்காலில் சாக்கடை நீா் கலப்பதால், குளத்தின் நீராதாரம் பாதிக்கப்படுகிறது.

    ஊத்துக்குளி மின்வாரிய முறைகேடுகளை விசாரிக்க நியமிக்கப்பட்ட அலுவலா் ஈஸ்வரமூா்த்தி மீது பல்வேறு புகாா்கள் உள்ளன. அவரை மாற்ற வேண்டும் என்றனா்.கோரிக்கைகள் குறித்து அந்தந்த துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தி விரைவில் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் தெரிவித்தாா்.

    • திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
    • காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    காங்கயம்:

    காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.79.80 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல்படுத்தி வருகிறார்கள். இந்த திட்டப்பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடைபெற்று வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    அந்த வகையில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், பாப்பினி ஊராட்சியில் அனைத்துக்கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.12.94 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வேளாண் பொருட்கள் சேமிப்பு கிடங்கினையும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.1.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமூக சுகாதார வளாகத்தையும், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டையும் ஆய்வு செய்தனர்.

    மேலும் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.57.47 லட்சம் மதிப்பீட்டில் ஈரோடு தாராபுரம் சாலை முதல் மடவிளாகம் வழியாக நட்டார்பாளையம் சாலை வரை தார் சாலை மேம்பாட்டுப் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.2.59 லட்சம் மதிப்பீட்டில் வரதப்பம்பாளையத்திலிருந்து தொட்டியபட்டி வரை இருபுறமும் சங்கன் பிட் அமைக்கும் பணியினையும், ரூ.2.59 லட்சம் மதிப்பீட்டில் பி.பச்சாபாளையம் முதல் பகவதி பாளையம் வரை இருபுறமும் சங்கன் பீட் அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.79.80 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அப்போது காங்கேயம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மகேஷ்குமார், காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலாவதி, ஹரிகரன், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். 

    • பணிகளை பேரூராட்சி தலைவர் யுவராஜ் நேரில் ஆய்வு செய்தார்.
    • நிர்வாகிகள் இளங்கோ, சரவணன் சுரேஷ் கவுன்சிலர்கள் விஜயகுமார், தனசேகர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

    மாமல்லபுரம்:-

    திருக்கழுக்குன்றம் பேரூராட்சி 16வது வார்டு எம்.என் குப்பம் பகுதியில் பொது நிதி ரூ.12.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட உள்ள சிமெண்ட் சாலை, 15வது வார்டு பரமசிவம் நகர் பொதுநிதி ரூ.8 லட்சம் மதிப்பில் சாஸ்திரி தெரு மழைநீர் வடிகால்வாய், 4வது வார்டு அன்னை சத்யா நகர் பொது நிதி ரூ.12.75 லட்சம் மதிப்பில் மழைநீர் வடிகால்வாய் மற்றும் நமக்கு நாமே திட்டத்தில் அன்னை சத்யா நகரில் ரூ.12.5 லட்சம் மதிப்பில் சிறுபாலமும், சாலையும் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    பணிகளை பேரூராட்சி தலைவர் யுவராஜ் நேரில் ஆய்வு செய்தார். நிர்வாகிகள் இளங்கோ, சரவணன் சுரேஷ் கவுன்சிலர்கள் விஜயகுமார், தனசேகர் கோபி ஆகியோர் உடனிருந்தனர்.

    • பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் பழுதுநீக்கம் பணிநடைபெற்றுள்ளதை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • இவ் ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    கடலூர்:

    பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னகுமட்டி ஊராட்சியில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்ரூ.1.31 லட்சம் மதிப்பீட்டில் முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்க ப்பட்டுள்ளதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.2 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் உறிஞ்சி குழாய் அமைக்கப்பட்டுள்ளதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.32 லட்சம் மதிப்பீட்டில் மயானகுளம் தூர்வாரி வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதையும், சின்னகுமட்டி, சில்லாங்குப்பம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில்; பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் பழுதுநீக்கம் பணி நடைபெற்றுள்ளதை கலெக்டர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மஞ்சக்குழி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொடிக்கால் நகர் பகுதியில் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் சமையல்கூடம் கட்டுமான பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் முருங்கை நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    கீழ்அனுவம்பட்டு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கொடிக்கால் நகர் பகுதியில் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் திட்டத்தின் கீழ்; ரூ.2 இலட்சம் மதிப்பீட்டில் முருங்கை நாற்றங்கால்; பண்ணை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், கீழ்அனுவம்பட்டு ஊராட்சி, அம்புபூட்டியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதை தொடர்ந்து தில்லைவிடங்கன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.31.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுமான பணி மற்றும் 15-வது நிதி குழு மானியத் திட்டத்தின் கீழ் ரூ.52 ஆயிரம் மதிப்பீட்டில் சமையல் கூடம் பழுதுநீக்கம் பணிகள் ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இவ் ஆய்வின் போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • 2023-24 ஆம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் .
    • இப்பணிகளை மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும்.

    கடலூர்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் வேளாண் பெருமக்கள் மேன்மையடையவும், உரிய நேரத்தில் விவசாய பணிகளில் முழுமையாக ஈடுபட்டு வேளாண்மை உற்பத்தியினை பெருக்கிடும் நோக்கத்திலும், 2023-24 ஆம் ஆண்டிற்கு சீரிய திட்டமாக காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பாசன வாய்க்கால்கள், கால்வாய்கள் மற்றும் வடிகால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பினை தொடர்ந்து, கடலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதியில் 55 பணிகள், ரூ.100 கோடி மதிப்பீட்டில் 768.30 கிலோமீட்டர் நீளத்திற்கு தூர்வார ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மேற்கொள்வதால் 78 ஆயிரத்து 451 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். 

    சிதம்பரம் அருகே பள்ளிப்படை கிராமத்திலிருந்து மீதிக்குடி வரையிலான பாசன நிலங்களுக்கு பாசனம் அளித்து வரும் மீதிக்குடி கிளை வாய்க்கால்களில் 1 முதல் 5 கிளை வாய்க்கால்கள் ரூ.20.30 லட்சம் மதிப்பீட்டில் 21.20 கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளையும், தொடர்ந்து கனகரப்பட்டு, குமாரமங்கலம் மற்றும் கடவாச்சேரி கிராமங்களில் 1,100 ஏக்கர் விலை நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் குமாரமங்கலம் வாய்க்கால், நரிமுடுக்கு வடிகால், சாலியந்தோப்பு வடிகால் மற்றும் உசுப்பூர் வடிகால்களை தூர்வாரி பலப்படுத்தும் பணிகள் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 15 கிலோ மீட்டர் தொலைவிற்கு நடைபெற்று வருவதையும், கவரப்பட்டு கிராம பகுதிகளில் 2,500 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி அளித்து வரும் கவரப்பட்டு வாய்க்கால் தொலைக்கல் 9 கிலோ மீட்டர் முதல் 18 கிலோ மீட்டர் வரையிலும் மற்றும் அதன் கிளை யு-டேம், டீ-டேம் இவைகளை ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் 9 கிலோ மீட்டர் தொலைவிற்கு தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது சிதம்பரம் சப்-கலெக்டர் சுவேதா சுமன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • திட்டப்பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றிய கவுன்சிலர் வலியுறுத்தினார்.
    • இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    விருதுநகர்

    விருதுநகர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி ராஜசேகரிடம் 9-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சி லர் சரோஜா கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    கூரைக்குண்டு பஞ்சாயத்து சாத்தூர் ரோடு நான்கு வழிச்சாலை அருகே புதிய சமுதாயக்கிணறு கடந்த 2020-21ம் ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் முடிக்கப்பட்டது. அதன் பின்னர் கிணற்று நீரை முத்துராமலிங்கம் நகர், நிறைவாழ்வு நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 300 குடும்பங்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

    சமுதாய கிணற்றில் இருந்து கோடைகால தேவைக்கு குடிநீர் விநியோ கம் செய்ய முடியாத நிலையில் அது காட்சி பொருளாக உள்ளது.

    எனது முயற்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் பாலம்மாள் நகர் பகுதியில் புதிய கழிவுநீர் கால்வாய் ரூ.10லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இதற்காக மாவட்ட ஊராட்சி பொது நிதி ரூ.4.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டும் மேற்படி பணி நடைபெறா மல் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    கூரைக்குண்டு பஞ்சாயத்தில் 1, 4-வது வார்டு பகுதிகளான முத்துராம லிங்கம் நகர், பாலம்மாள் நகர் ஆகிய பகுதிகளில் இதுவரை கிராமசபை கூட்டம் நடத்தப்படவில்லை. மேற்படி பகுதியில் கழிவுநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை.

    இதனால் எனது 9-வது வார்டு பகுதியின் வளர்ச்சி முற்றிலும் பாதிக்கப் பட்டுள்ளது. இதுதொடர் பாக கூரைக்குண்டு பஞ்சாயத்து தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நட வடிக்கையும் எடுக்கவில்லை.

    எனவே இந்த பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.
    • 37.05 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சபரி நகர் மேல்நிலைத் தொட்டியில் இருந்து வடுகபாளையம் ரோடு மீன் குட்டை வரை 37.05 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜையும், சித்தம்பலம் புதூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கும் விழாவும் நடைபெற்றது.

    இந்த விழாவிற்கு சித்தம்பலம் ஊராட்சி தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சோமசுந்தரம், பல்லடம் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் புவனேஸ்வரி வரவேற்றார். திருப்பூர் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும்,திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வராஜ் எம்.எல்.ஏ., இந்த நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தும், சாலை பணியை துவக்கி வைத்தார்.இதில் பல்லடம் முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர்,சிவசக்தி சுப்பிரமணியம்,ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பானுப்பிரியா,வார்டு மெம்பர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், பரமசிவம், ராஜேஸ்வரன், பானுமதி,பாலகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருப்புல்லாணி பகுதியில் திட்டப்பணிகளை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்புல் லாணி கிழக்கு ஒன்றிய பகுதிகளில் எம்.எல்.ஏ.வும், தி.மு.க. மாவட்ட செயலாளருமான காதர் பாட்சா முத்துராமலிங்கம் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    கோரைக்கூட்டம் ஊராட்சி தன்ரம்பல் கிராமத்தில் புதிய டிரான்ஸ்பார்மர், தினைக்குளத்தில் சைக்கிள் நிறுத்தம், மரைக்கா நக ரில் நிழற்குடை, பெரிய பட்டினத்தில் 63 கே.வி. திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர், ரேசன்கடை, வண்ணாங் குண்டு ஊராட்சி நேருபுரம் கிராமத்தில் கலையரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    தினைக்குளத்தில் கலையரங்கம் கட்டவும், வண்ணாங்குண்டு தொடக்கப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டவும் அடிக்கல் நாட்டினார். அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் மற்றும் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ.வுக்கு வரவேற்பு அளித்தனர். அங்கு தி.மு.க. கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். அனைத்து கிரா மங்களிலும் பொதுமக்களை சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு, கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம், துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மின்வாரிய செயற்பொ றியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் சோமசுந்தரம், ராமநாதபுரம் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன், பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர் ஜான் பீவி, ஒன்றிய கவுன்சிலர் பைரோஸ் கான், ஊராட்சி துணைத் தலைவர் புரோஸ் கான்.

    எஸ்.டி.பி.ஐ. நகர் தலைவர் மீராசா, நகர் செயலாளர் பீர் மைதீன், எஸ்.டி.டி.யூ. நகர் தலைவர் இஜாஸ், ஹக் அம்பலம், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், நகர்மன்ற உறுப்பினர்கள் நசீருதீன், மீரான் அலி, திருப்புல்லாணி கிழக்கு ஒன்றிய செயலாளர் நாகேசுவரன், மண்டபம் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவீன், பெரியபட்டினம் தி.மு.க. செயலாளர் அன்சாரி, ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் அபிபுல்லா, ராமநாதபுரம் மாவட்ட பிரதிநிதிகள் ஆனந்தன், டி.கே.குமார், ரகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபால கிருஷ்ணன், திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் கோவிந்த மூர்த்தி.திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலை வர் கஜேந்திரமாலா முத்துகி ருஷ்ணன், வண்ணாங் குண்டு ஊராட்சி தலைவர் தியாகரா ஜன், ஜமாத் தலைவர் நிஜாப் கான், தி.மு.க.நிர்வாகி பஷீர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திட்டப்பணிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது.
    • கூட்ட அரங்கில் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்ச ந்திரன் திறந்து வைத்தார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் நகராட்சியின் வளர்ச்சி திட்டப்பணிகளான தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை த்திட்டம், ெரயில்வே மேம்பாலம், புதிய பஸ் நிலையம் முதல் தென்காசி ரோடு வரையிலான இணைப்பு சாலை திட்டம் குறித்து அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தலைமையில் கலெக்டர் மேகநாதரெட்டி முன்னிலையில் நகராட்சி அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் கையில் வரைபடத்துடன் கலந்தா லோசித்து ஆய்வு செய்த அமைச்சர், ராஜபாளையம் நகரின் வளர்ச்சி திட்டப்ப ணிகள் அனைத்தும் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்வகுத்துக் கொடுத்து அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதற்கு பதில் அளித்த அதிகாரிகளும் மார்ச் மாதத்திற்குள் பணி களை முடித்துவிடலாம் என உறுதி அளித்தனர்.

    இணைப்பு சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்க இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நேருசிலை முதல் சொக்கர்கோவில் வரை செல்லும் தென்காசி ரோட்டில் பேட்ச் ஓர்க் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மேலும் புதிய தார்ச்சாலை அமைக்க மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் நிதி கோரப்பட்டுள்ளது. விரைவில் தார்ச்சாலை அமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதனைத்தொடர்ந்து ராஜபாளையம் நகராட்சி கூட்ட அரங்கில் கருணாநிதி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் படங்களை அமைச்சர் சாத்தூர் ராமச்ச ந்திரன் திறந்து வைத்தார். இதில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., நகர் மன்ற தலைவி பவித்ரா ஷியாம்ராஜா, யூனியன் சேர்மன் சிங்கராஜ், தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா, நகரசபை துணை தலைவர் கல்பனாகுழந்தைவேலு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • இருட்டணை வருவாய் கிராமங்களில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
    • இருட்டணை வருவாய் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பு திட்டப்பணி–கள் குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை சென்னை விதைசான்று மற்றும் அங்ககச்சான்ற–ளிப்புத்துறை வேளாண்மை இணை இயக்குநர் அசீர்கனக–ராஜன் மேல்சாத்தம்பூர், இருட்டணை வருவாய் கிரா–மங்களில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செய்த திட்டப்பணிகளை அவர் பார்வையிட்டார். வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்ட திட்டப்பணிகளான பண்ணைக் கருவிகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், தார்ப்பாய்கள் விநியோகம் குறித்து மேல்சாத்தம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும் தோட்டக்கலை துறையின் சார்பாக மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி–னார்.

    இருட்டணை வருவாய் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பு திட்டப்பணி–கள் குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ராஜகோபால் (மாநிலத்திட்டம்), முருகன் (மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, தோட்டக்லைத்துறை உதவி இயக்குநர் தமிழ்செல்வன், மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

    ×