பரமத்தி வட்டாரத்தில் வேளாண் திட்டப்பணிகளை இணை இயக்குநர் ஆய்வு

இருட்டணை வருவாய் கிராமங்களில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.இருட்டணை வருவாய் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பு திட்டப்பணி–கள் குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.
திட்டப்பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் அசீர் கனகராஜன்  ஆய்வு செய்த போது எடுத்த படம்.
திட்டப்பணிகளை வேளாண்மை இணை இயக்குநர் அசீர் கனகராஜன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.
Published on

பரமத்திவேலூர்:

பரமத்தி வட்டாரத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை சென்னை விதைசான்று மற்றும் அங்ககச்சான்ற–ளிப்புத்துறை வேளாண்மை இணை இயக்குநர் அசீர்கனக–ராஜன் மேல்சாத்தம்பூர், இருட்டணை வருவாய் கிரா–மங்களில் திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செய்த திட்டப்பணிகளை அவர் பார்வையிட்டார். வேளாண்மை துறையின் மூலம் வழங்கப்பட்ட திட்டப்பணிகளான பண்ணைக் கருவிகள், தென்னங்கன்றுகள், கைத்தெளிப்பான்கள், தார்ப்பாய்கள் விநியோகம் குறித்து மேல்சாத்தம்பூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும் தோட்டக்கலை துறையின் சார்பாக மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி–னார்.

இருட்டணை வருவாய் கிராமத்தில் தரிசு நிலத்தொகுப்பு திட்டப்பணி–கள் குறித்து விவசாயிகளிடம் கலந்தாய்வு மேற்கொண்டார்.

ஆய்வின்போது நாமக்கல் வேளாண்மை இணை இயக்குநர் அசோகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் ராஜகோபால் (மாநிலத்திட்டம்), முருகன் (மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர்) மற்றும் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி, தோட்டக்லைத்துறை உதவி இயக்குநர் தமிழ்செல்வன், மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை அலுவலர்கள், தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் உடன் சென்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com