search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prizes"

    • போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும்.
    • தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தாமரை பன்னாட்டு பள்ளியின் 14-ம் ஆண்டு உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளுக்கான ஆண்டு விழா மண்வாசனை எனும் தலைப்பில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளித்தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    துணை தலைவர் நிர்மலா வெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு பள்ளி முதல்வர் விஜயாஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத் ஆண்டறிக்கை வாசித்தார்.

    பள்ளியின் தலைவர் வெங்கடேசன் தலைமை உரையாற்றினார். அவர் தஞ்சாவூரில் மேலும் பல பள்ளிகள் தோன்றும். 

    அதற்கு தாமரை பன்னாட்டு பள்ளி ஒரு தூண்டுதலாக இருக்கும் என்றார்.

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

    போட்டி நிறைந்த உலகில் போட்டி போட மாணவர்கள் முன்வர வேண்டும். போட்டி தேர்வுகளை முழுமன துடனும், விருப்பத்துடனும் எதிர்கொள்ளளும் சூழலுக்கு மாணவர்களை இப்பள்ளி அழைத்து செல்கிறது.

    தஞ்சை விவசாயம் சார்ந்த மண்வாசத்தை கொண்டது. அதில் பல திறமைகள் கொண்ட மண்வாசமாக மாற்றிக்கொண்டி ருக்கிறார்கள் மாணவர்கள். பிறந்த மண்ணை மணக்கச் செய்ய வேண்டும்.

    தமிழ்மீது உண்மையான நேசம் கொள்ள வேண்டும் என்றார். முன்னதாக, மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

    • பலூன் உடைத்தல், இசை கேட்டு இடம்பிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.
    • போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்று29-ந்தேதி மதுக்கூர் வட்டார வளமை யத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    இதில் ஓட்டப்பந்தயம், பலூன் உடைத்தல், தண்ணீர் பாட்டில் நிரப்புதல், இசை கேட்டு இடம்பிடித்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. 30- க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    மதுக்கூர் வட்டார கல்வி அலுவலர் வெ.மனோகரன் போட்டியை தொடங்கி வைத்தார்.

    போட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது.

    போட்டி ஏற்பாடு களை வளமைய மேற்பார்வையாளர் தங்கம், ஆசிரியர் பயிற்றுநர் வீரப்பராஜா, பிரகாஷ், சிறப்பாசிரியர்கள் புஷ்பா, இருதயராஜ், பழனிவேல் ஆகியோர் செய்தனர்.

    • தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொரடாச்சேரி ஒன்றியம் கிளையின் சார்பில் துளிர் வினாடி-வினா போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கொரடாச்சேரி ஒன்றியம் கிளையின் சார்பில் துளிர் வினாடி வினா போட்டி நடைபெற்றது.

    அறிவியல் இயக்க கொரடாச்சேரி கிளையின் தலைவர் ச.பாஸ்கரன் தலைமை வகித்தார். செயலாளர் ப.குமார் வரவேற்புரை ஆற்றினார்.

    சிறப்பு அழைப்பாளர்–களாக வட்டாரக்கல்வி அலுவலர்கள் விமலா, சுமதி மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் பிருந்தாதேவி, அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் யு.எஸ். பொன்முடி, மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், துளிர் வினாடி வினா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.கே சரவணராஜன், மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.முடிவில் பொருளாளர் ஜெயசங்கர் நன்றி கூறினார். கொரடாச்சேரி ஒன்றிய அளவில் துளிர் வினாடி வினா போட்டியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு பிரிவில் அபிவிருத்திஸ்வரம் நடுநிலைப் பள்ளி முதலிடமும்.

    மேலராதா நல்லூர் நடுநிலைப் பள்ளி இரண்டாமிடமும், திருவிடவாசல் நடுநிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றுள்ளன.

    9 மற்றும் 10-ம் வகுப்பு பிரிவில் கண்கொடுத்தவனிதம் உயர்நிலைப் பள்ளி முதலிடமும் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும் பெற்றுள்ளன.

    11 மற்றும் 12-ம் வகுப்பு பிரிவில் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதலிடமும் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இரண்டாமிடமும் பெற்றுள்ளன.

    • அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது
    • சிறப்பாக பணியாற்றிதற்காக வழங்கப்பட்டது

    கரூர்:

    அரவக்குறிச்சி உட்கோட்ட அஞ்சலகங்களில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு பரிசளிப்பு விழா சவுந்திராபு ரத்தில் நடந்தது. விழாவுக்கு ஆய்வாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கரூர் அஞ்சலக கோட்ட கண் காணிப்பாளர் சிவகுமார் பங்கேற்றார். இதில் பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், க.பரமத்தி, தென்னிலை, வெள்ளியணை, ஈசநத்தம், மூலப்பட்டி உள்ளிட்ட தபால் நிலையங்களில், 2021-22ம் நிதியாண்டில் சேமிப்பு கணக்குகள், தபால் பட்டுவாடா, செல்வமகள் சேமிப்பு திட்டம், கிராமிய அஞ்சல் காப்பீடு போன்ற திட்டங்களில் அதிக கணகக்குகளை துவங்கிய துணை அஞ்சல் அலுவலர்கள் மற்றும் கிராமப்புற அஞ்சலக ஊழியர்களுக்கு அஞ்சலக ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில், வெரிச்சினம்பட்டி கிளை அஞ்சலக அலுவலர் சக்திவேல், பள்ளப்பட்டி அஞ்சலக துணை அலுவலர் மனோ உள்ளிட்ட அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆண்டுதோறும் பயின்றோர் கழகம் சார்பில் கல்லூரி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் மற்றும் நிறுவனர் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நடைபெறும்
    • பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆண்டுதோறும் பயின்றோர் கழகம் சார்பில் கல்லூரி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் மற்றும் நிறுவனர் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நடைபெறும். இவ்வாண்டும் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,500 மற்றும் சான்றிதழ், இரண்டாம் பரிசாக ரூ.1,000 மற்றும் சான்றிதழ், மூன்றாம் பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டியில் காயல்பட்டினம் அரசு பள்ளி மாணவி சமீரா முதல் பரிசும், நாலுமாவடி காமராஜ் பள்ளி மாணவன் வெங்கடேஸ்வரன் 2-ம் பரிசும், வரண்டியவேல் இந்து நடுநிலைப்பள்ளி மாணவி அனிதா ரஞ்சிதம் 3-ம் பரிசும் பெற்றனர்.

    பள்ளி மாணவர் கட்டுரை போட்டியில் குலசேகரன்பட்டினம் வள்ளியம்மை பள்ளி மாணவி ஆஷிகா மீனா மற்றும் கல்லூரி மாணவர் கட்டுரை போட்டியில் வாவு கல்லூரி மாணவி ரீஜாய்ஸ் பியூலா முதல் பரிசும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மாணவி சித்திரை வடிவு 2-ம் பரிசும், கொமடிக்கோட்டை சங்கரபகவதி கல்லூரி மாணவி சித்ரா 3-ம் பரிசும் பெற்றனர்.

    பள்ளி மாணவர் பேச்சுப்போட்டியில் காமராஜ் பள்ளி மாணவி அபிபானு முதல் பரிசும், வள்ளிம்மையார் பள்ளி மாணவி அக்‌ஷரா 2-ம் பரிசும், காயல்பட்டினம் அரசு பள்ளி மாணவி சுபஸ்ரீ, திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவி நர்மதா 3-ம் பரிசும் பெற்றனர்.

    கல்லூரி மாணவர் பேச்சுப்போட்டியில் போப் கல்லூரி மாணவி பிரின்ஷியா எஸ்தர் முதல் பரிசும், சங்கரபகவதி கல்லூரி மாணவி சகாய பமீலா 2-ம் பரிசும், வாவு கல்லூரி மாணவி சவுமியா 3-ம் பரிசும் பெற்றனர்.

    வினாடி வினா போட்டியில் வாவு கல்லூரி மாணவிகள் பாத்திமா பாஹிரா, ஜெய்னப் ஆகியோர் முதல் பரிசும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மாணவிகள் கிருபாதேவி, ரக்ஸனா ஆகியோர் 2-ம் பரிசும், விளாத்திகுளம் சுப்பிரமணிய சுவாமி கல்லூரி மாணவிகள் புவனேஷ்வரி, ஹேமா ஸ்ரீமதி ஆகியோர் 3-ம் பரிசு பெற்றனர்.

    கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் தி.வெங்கட்ராமராஜ் பங்கேற்று பரிசு வழங்கினார். ஆதித்தனார் கல்லூரி செயலர் டாக்டர் ச.ஜெயக்குமார், ஆதித்தனார் கல்வி நிறுவன செயலர் டாக்டர் நாராயணராஜன், பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயசிங்சாம்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் சுயம்பு சிறப்புரையாற்றினார். முன்னதாக பயின்றோர் கழக செயலர் ஜெயபோஸ் வரவேற்று பேசினார். இணைச்செயலர் கதிரேசன் நன்றி கூறினார். இவ்விழாவில் பயின்றோர் கழக செயற்குழு மற்றும் மூத்த உறுப்பினர்கள் பொருளாளர் சித்திரை ராஜா, மரிய சாமுவேல், அலெக்சாண்டர், பகவதி பாண்டியன், ராமச்சந்திரன், மூகாம்பிகை, பாலமுருகன், பேராசிரியர்கள் டாக்டர் பாலு, டாக்டர் ரமேஷ், டாக்டர் சுந்தரவடிவேல், நூலகர் முத்துகிருஷ்ணன், டாக்டர் ஜிம்ரீவ்ஸ், டாக்டர் வேலாயுதம், டாக்டர் மாலைசூடும் பெருமாள், டாக்டர் அந்தோணி சகாய சித்ரா, டாக்டர் ஆரோக்கியமேரி பெர்ணான்டஸ், டாக்டர் கவிதா, டாக்டர் தீபா ராணி, தர்மபெருமாள், அசோகன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றிய டாக்டர் வசுமதி, டாக்டர் ஸ்ரீதேவி, டாக்டர் முத்துக்குமார், டாக்டர் எழிலி, டாக்டர் ராஜேஷ், டாக்டர் மகேஸ்வரி, டாக்டர் மோதிலால் தினேஸ் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் வழிகாட்டுதல்படி தமிழ்த்துறை தலைவர் டாக்டர் கு.கதிரேசன், செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பாவூர்சத்திரம் த. பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 5 நாட்களாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது
    • பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் சுமார் 28,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் த. பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் கடந்த 5 நாட்களாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவாக பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. அதற்கு மாவட்ட கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி தலைமை தாங்கினார். வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்க தலைவரும், கண்தான விழிப்புணர்வு குழு நிறுவனருமான கே.ஆர்.பி. இளங்கோ கலந்து கொண்டு சான்றிதழ்கள், கேடயம் வழங்கி கவுரவித்தார். சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தர குமார், தமிழ்நாடு கோ கோ கழக செயலாளர் ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆவுடையனூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி அருள் பிரதீப் நன்றியுரை ஆற்றினார். பள்ளி மாணவர்களுக்காக நடைபெற்ற வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகளில் சுமார் 28,000 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அதில் சுமார் 12 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

    • தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் என்ற கருப்பொருளில் இப்பொரு–ட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
    • மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனத்தில் உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி தொடங்கியது.

    இந்நிறுவன இயக்குநா் முனைவா் வி. சுப்பிரமணியனின் 120 -வது பிறந்த நாளை நினைவுகூரும் விதமாக இந்த உணவு தொழில்நுட்பப் பொருட்காட்சி இன்று வரை நடத்தப்படுகிறது. நிகழாண்டு சிறுதானிய உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் முறைகள் என்ற கருப்பொருளில் இப்பொரு–ட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

    எனவே, சிறுதானிய உணவுகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் உள்ளிட்டவை தொடா்பாக மொத்தம் 40 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 36 அரங்குகள் இந்நிறுவனத்தில் பயிற்சி பெற்று, தொழில்முனைவோராகி வெற்றிகரமாகச் செயல்படுபவா்களின் அரங்குகளாகும்.

    மேலும், இந்நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்கள், இயந்திரங்களின் செயல்விளக்கங்கள் ஆகியவையும் காட்சிப்படு த்தப்பட்டுள்ளன.

    இந்தக் கண்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகச் செயலா் அனிதா பிரவீன் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து, இந்நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் அடங்கிய கையேட்டையும், சிறுதானிய பதப்படுத்தும் முறைகள் பற்றிய கையேட்டையும் வெளியிட்டாா்.

    இந்நிகழ்வில் மலேசியா டெய்லா்ஸ் பல்கலைக்கழகத்துடன் கல்விசாா் ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் காவேரி ஸ்மாா்ட் புட் மற்றும் அக்ரோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தென்னை மதிப்பு கூட்டுப்பொருட்களுக்கான தொழில்நுட்பங்களின் தொகுப்புக்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

    மேலும், இந்நிறுவனத்தால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் திருவள்ளுவன், ஈச்சங்கோட்டை வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் வேலாயுதம், குமுளூா் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வா் ப ராஜ்குமாா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் (பொ) மருதுதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    இந்தக் கண்காட்சியைப் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவா்கள் பாா்வையிட்டனா். இதேபோல, விவசாயிகள், தொழில்முனைவோா், சுய உதவிக் குழுக்கள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், பொதுமக்கள் ஆகியோா் இன்று பாா்வையிட்டனர். மேற்கண்ட தகவலை நிறுவன இயக்குநா் (பொ) லோகநாதன் தெரிவித்து உள்ளார்.

    • சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார்.
    • ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்ளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியில் முதல் 3 இடம் பெற்ற மாணவ-மாணவிகள் பெயர்கள் வருமாறு:-

    13 வயது பிரிவில் முதல் 3 இடங்களில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தருண் வலம்புரிவேல், ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி பிரதீப் ராஜ், அமிர்த வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஷனேல் ஆண்டர்சன், மகளிர் பிரிவில் ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி சந்தியா, தேன்மொழி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிரதிக்ஷாஸ்ரீ வெற்றி பெற்றனர்.

    15 வயது பிரிவில் ராமநாதபுரம் சதக் கபீர் பப்ளிக் பள்ளி சீனிபர்ஹான் முகமது, டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி சச்சின், தர்வின் லியா. மகளிர் பிரிவில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அசனத்துல் பேகம், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹர்னிஸ்ரீ, ஜெய்ஸ்ரீ.

    17 வயது பிரிவில் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைபள்ளி தன சேகரன், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி அபி ேஷக், உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி அசோக் பிரபு. மகளிரில் ராஜா மேல்நிலைப்பள்ளி சர்மிளா, ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹார்மி, மண்டபம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காருண்யா வென்றனர்.

    முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-வது பரிசு ரூ.3000, 3-வது பரிசு ரூ.2000 வழங்கப்பட்டது. 4 முதல் 10-வது இடம் வந்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு தொகை, சான்றிதழ்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
    • சிறுவர்-சிறுமிகள் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் இன்று காலை தனுவர்ஷன் அறக்கட்டளை சார்பில் நம் கல்வி- நம் உரிமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 2-வது மாநில அளவிலான மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    இந்த போட்டியில் தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 8000-க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

    போட்டியை குழந்தைகள் நல சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சாத்தப்பன், டாக்டர் சிங்காரவேலு, துணை நீதிபதி டாக்டர் ரவி ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி முன்னிலை வகித்தார்.

    இந்த போட்டியில் 16 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக 20 கி.மீ. தூரமும் அதாவது மைதானத்தில் இருந்து புறப்பட்டு வல்லம் சென்று மீண்டும் மைதானம் வரையும், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்- சிறுமிகளுக்கு தனித்தனியாக 5 கி.மீ. தூரமும் அதாவது மைதானத்தில் இருந்து புறப்பட்டு மருத்துவ கல்லூரி முதல் கேட் வரை சென்று மீண்டும் மைதானம் வரையும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    அதன்படி போட்டியில் கலந்து கொண்டவர்கள் உற்சாகத்துடன் மாரத்தான் ஓடினர்.

    முடிவில் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது. இந்த பரிசினை மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், நெல்லை ஜீவா ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தனித்தனியாக முதல் பரிசாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.1 லட்சம், 3-ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 5-ம் பரிசாக ரூ.10 பத்தாயிரம் மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்பட்டது. இது தவிர 20 நபர்களுக்கு ரூ.500 மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

    இதுபோல் சிறுவர் -சிறுமிகள் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு ,கோப்பை வழங்கப்பட்டது. மேலும் மாணவிகள் தலா 3 பேர் என 6 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தனுவர்ஷன் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன் செய்திருந்தார்.

    • புறா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது.

    கரூர்:

    கரூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரா.வைரப்பெருமாள் 52ம் ஆண்டு நினைவு புறா போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. சாதா புறா போட்டியை கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலை தலைவரும், நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான வை.நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் 15 புறாக்கள் பங்கேற்றன. புறாக்கள் குறைந்தப்பட்சம் 6 மணி நேரம் பறக்கவே ண்டும். குறிப்பிட்ட இடத்தில் அமரவேண்டும் என்ற விதிகள் கடை பிடிக்கப்பட்டன. போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். முதல் நாள் போட்டியில் 6 மணி நேரம் பறந்த புறாக்கள் 2வது நாளிலும் அன்றும் 6 மணி நேரத்திற்கு மேல் பறக்கும் புறாக்கள் 3வது நாள் இறுதிப் போட்டியிலும் பங்கேற்கும். நடுவர்களாக எஸ்.அரங்கராஜ் உள்ளிட்டோர் செயல்படுகின்றனர்.

    கர்ணப்புறா போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற புறாக்களுக்கு முதல் பரிசு தலா ரூ.13,001, 2ம் பரிசு தலா ரூ.10,000, 3ம் பரிசு ரூ.7,000, 4ம் பரிசு ரூ.4,000 வழங்கப்படுகிறது.

    • ராமேசுவரத்தில் நடந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடந்தன.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு 'என் குப்பை என் பொறுப்பு' என்ற பெயரில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம் நகராட்சி முழுவதும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் நகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் ராமேசுவரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாக சார்பில் சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான் மற்றும் நகர் மன்ற துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் 24 மணி நேர ரத்ததான முகாம்.
    • ரத்ததான முகாமில் பங்கேற்கும் குருதி கொடையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவ ட்டம், நன்னிலம்வள்ள லார் குருகுலம் குருதி கொடையாளர் சங்க த்தின் செயற்குழுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்கு தலைவர் உத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் பரிமளா காந்தி வரவேற்றுப் பேசினார்.

    இக்கூட்டத்தில் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் 24 மணி நேர ரத்ததான முகாம் நடத்துவது, ரத்ததான முகாமில் பங்கேற்கும் குருதி கொடையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவது, குருதிக் கொடை யாளர்கள் விவரங்கள் அடங்கிய புத்தகம் வெளி யிடுவது, அதிக குருதிக் கொடை வழங்கிய குருதிக் கொடையாளர்கள் கவுரவி ப்பது, மேலும் அன்றைய தினம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவ முகாம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் பொருளாளர் நந்தன் நன்றி கூறினார்.

    ×