search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புறா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
    X

    புறா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

    • புறா போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது.

    கரூர்:

    கரூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ரா.வைரப்பெருமாள் 52ம் ஆண்டு நினைவு புறா போட்டி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் தொடங்கியது. சாதா புறா போட்டியை கரூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த பண்டக சாலை தலைவரும், நகராட்சி முன்னாள் கவுன்சிலருமான வை.நெடுஞ்செழியன் தொடங்கி வைத்தார்.

    போட்டியில் 15 புறாக்கள் பங்கேற்றன. புறாக்கள் குறைந்தப்பட்சம் 6 மணி நேரம் பறக்கவே ண்டும். குறிப்பிட்ட இடத்தில் அமரவேண்டும் என்ற விதிகள் கடை பிடிக்கப்பட்டன. போட்டி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். முதல் நாள் போட்டியில் 6 மணி நேரம் பறந்த புறாக்கள் 2வது நாளிலும் அன்றும் 6 மணி நேரத்திற்கு மேல் பறக்கும் புறாக்கள் 3வது நாள் இறுதிப் போட்டியிலும் பங்கேற்கும். நடுவர்களாக எஸ்.அரங்கராஜ் உள்ளிட்டோர் செயல்படுகின்றனர்.

    கர்ணப்புறா போட்டி 3 நாட்கள் நடைபெறுகிறது. இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற புறாக்களுக்கு முதல் பரிசு தலா ரூ.13,001, 2ம் பரிசு தலா ரூ.10,000, 3ம் பரிசு ரூ.7,000, 4ம் பரிசு ரூ.4,000 வழங்கப்படுகிறது.

    Next Story
    ×