search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குருதி கொடையாளர் சங்க கூட்டம்
    X

    குருதி கொடையாளர் சங்க கூட்டம்

    • அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் 24 மணி நேர ரத்ததான முகாம்.
    • ரத்ததான முகாமில் பங்கேற்கும் குருதி கொடையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவ ட்டம், நன்னிலம்வள்ள லார் குருகுலம் குருதி கொடையாளர் சங்க த்தின் செயற்குழுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்கு தலைவர் உத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் பரிமளா காந்தி வரவேற்றுப் பேசினார்.

    இக்கூட்டத்தில் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் 24 மணி நேர ரத்ததான முகாம் நடத்துவது, ரத்ததான முகாமில் பங்கேற்கும் குருதி கொடையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவது, குருதிக் கொடை யாளர்கள் விவரங்கள் அடங்கிய புத்தகம் வெளி யிடுவது, அதிக குருதிக் கொடை வழங்கிய குருதிக் கொடையாளர்கள் கவுரவி ப்பது, மேலும் அன்றைய தினம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவ முகாம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் பொருளாளர் நந்தன் நன்றி கூறினார்.

    Next Story
    ×