search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற  மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு
    X

    போட்டிகளில் வெற்றிபெற்ற ஒரு மாணவனுக்கு ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் தி.வெங்கட்ராமராஜ் பரிசு வழங்கிய காட்சி. அருகில் கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.


    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆண்டுதோறும் பயின்றோர் கழகம் சார்பில் கல்லூரி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் மற்றும் நிறுவனர் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நடைபெறும்
    • பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ஆண்டுதோறும் பயின்றோர் கழகம் சார்பில் கல்லூரி நிறுவனர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் மற்றும் நிறுவனர் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா நடைபெறும். இவ்வாண்டும் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு, வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.1,500 மற்றும் சான்றிதழ், இரண்டாம் பரிசாக ரூ.1,000 மற்றும் சான்றிதழ், மூன்றாம் பரிசாக ரூ.500 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

    திருக்குறள் ஒப்பிவித்தல் போட்டியில் காயல்பட்டினம் அரசு பள்ளி மாணவி சமீரா முதல் பரிசும், நாலுமாவடி காமராஜ் பள்ளி மாணவன் வெங்கடேஸ்வரன் 2-ம் பரிசும், வரண்டியவேல் இந்து நடுநிலைப்பள்ளி மாணவி அனிதா ரஞ்சிதம் 3-ம் பரிசும் பெற்றனர்.

    பள்ளி மாணவர் கட்டுரை போட்டியில் குலசேகரன்பட்டினம் வள்ளியம்மை பள்ளி மாணவி ஆஷிகா மீனா மற்றும் கல்லூரி மாணவர் கட்டுரை போட்டியில் வாவு கல்லூரி மாணவி ரீஜாய்ஸ் பியூலா முதல் பரிசும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மாணவி சித்திரை வடிவு 2-ம் பரிசும், கொமடிக்கோட்டை சங்கரபகவதி கல்லூரி மாணவி சித்ரா 3-ம் பரிசும் பெற்றனர்.

    பள்ளி மாணவர் பேச்சுப்போட்டியில் காமராஜ் பள்ளி மாணவி அபிபானு முதல் பரிசும், வள்ளிம்மையார் பள்ளி மாணவி அக்‌ஷரா 2-ம் பரிசும், காயல்பட்டினம் அரசு பள்ளி மாணவி சுபஸ்ரீ, திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவி நர்மதா 3-ம் பரிசும் பெற்றனர்.

    கல்லூரி மாணவர் பேச்சுப்போட்டியில் போப் கல்லூரி மாணவி பிரின்ஷியா எஸ்தர் முதல் பரிசும், சங்கரபகவதி கல்லூரி மாணவி சகாய பமீலா 2-ம் பரிசும், வாவு கல்லூரி மாணவி சவுமியா 3-ம் பரிசும் பெற்றனர்.

    வினாடி வினா போட்டியில் வாவு கல்லூரி மாணவிகள் பாத்திமா பாஹிரா, ஜெய்னப் ஆகியோர் முதல் பரிசும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி மாணவிகள் கிருபாதேவி, ரக்ஸனா ஆகியோர் 2-ம் பரிசும், விளாத்திகுளம் சுப்பிரமணிய சுவாமி கல்லூரி மாணவிகள் புவனேஷ்வரி, ஹேமா ஸ்ரீமதி ஆகியோர் 3-ம் பரிசு பெற்றனர்.

    கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் தி.வெங்கட்ராமராஜ் பங்கேற்று பரிசு வழங்கினார். ஆதித்தனார் கல்லூரி செயலர் டாக்டர் ச.ஜெயக்குமார், ஆதித்தனார் கல்வி நிறுவன செயலர் டாக்டர் நாராயணராஜன், பயின்றோர் கழக துணைத்தலைவர் ஜெயசிங்சாம்ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    தமிழ்த்துறை முன்னாள் பேராசிரியர் சுயம்பு சிறப்புரையாற்றினார். முன்னதாக பயின்றோர் கழக செயலர் ஜெயபோஸ் வரவேற்று பேசினார். இணைச்செயலர் கதிரேசன் நன்றி கூறினார். இவ்விழாவில் பயின்றோர் கழக செயற்குழு மற்றும் மூத்த உறுப்பினர்கள் பொருளாளர் சித்திரை ராஜா, மரிய சாமுவேல், அலெக்சாண்டர், பகவதி பாண்டியன், ராமச்சந்திரன், மூகாம்பிகை, பாலமுருகன், பேராசிரியர்கள் டாக்டர் பாலு, டாக்டர் ரமேஷ், டாக்டர் சுந்தரவடிவேல், நூலகர் முத்துகிருஷ்ணன், டாக்டர் ஜிம்ரீவ்ஸ், டாக்டர் வேலாயுதம், டாக்டர் மாலைசூடும் பெருமாள், டாக்டர் அந்தோணி சகாய சித்ரா, டாக்டர் ஆரோக்கியமேரி பெர்ணான்டஸ், டாக்டர் கவிதா, டாக்டர் தீபா ராணி, தர்மபெருமாள், அசோகன், அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, போட்டிகளில் நடுவர்களாக பணியாற்றிய டாக்டர் வசுமதி, டாக்டர் ஸ்ரீதேவி, டாக்டர் முத்துக்குமார், டாக்டர் எழிலி, டாக்டர் ராஜேஷ், டாக்டர் மகேஸ்வரி, டாக்டர் மோதிலால் தினேஸ் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் டாக்டர் து.சி.மகேந்திரன் வழிகாட்டுதல்படி தமிழ்த்துறை தலைவர் டாக்டர் கு.கதிரேசன், செயற்குழு உறுப்பினர் பாலமுருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×