சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ராமநாதபுரம் கலெக்டர் வழங்கினார். ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பரிசு தொகை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
Published on

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு துறை சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்ளுக்கு சைக்கிள் போட்டி நடந்தது. போட்டியில் முதல் 3 இடம் பெற்ற மாணவ-மாணவிகள் பெயர்கள் வருமாறு:-

13 வயது பிரிவில் முதல் 3 இடங்களில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தருண் வலம்புரிவேல், ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி பிரதீப் ராஜ், அமிர்த வித்யாலயா மேல்நிலைப்பள்ளி ஷனேல் ஆண்டர்சன், மகளிர் பிரிவில் ஸ்ரீகுமரன் நடுநிலைப்பள்ளி சந்தியா, தேன்மொழி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிரதிக்ஷாஸ்ரீ வெற்றி பெற்றனர்.

15 வயது பிரிவில் ராமநாதபுரம் சதக் கபீர் பப்ளிக் பள்ளி சீனிபர்ஹான் முகமது, டி.டி. விநாயகர் மேல்நிலைப்பள்ளி சச்சின், தர்வின் லியா. மகளிர் பிரிவில் ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி அசனத்துல் பேகம், நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹர்னிஸ்ரீ, ஜெய்ஸ்ரீ.

17 வயது பிரிவில் உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைபள்ளி தன சேகரன், டி.டி.விநாயகர் மேல்நிலைப்பள்ளி அபி ேஷக், உத்தரகோசமங்கை அரசு மேல்நிலைப்பள்ளி அசோக் பிரபு. மகளிரில் ராஜா மேல்நிலைப்பள்ளி சர்மிளா, ஏ.வி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஹார்மி, மண்டபம்ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி காருண்யா வென்றனர்.

முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000, 2-வது பரிசு ரூ.3000, 3-வது பரிசு ரூ.2000 வழங்கப்பட்டது. 4 முதல் 10-வது இடம் வந்தவர்களுக்கு தலா ரூ.250 பரிசு தொகை, சான்றிதழ்களை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com