search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoners"

    • ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாள் அன்று தமிழக அரசு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது.
    • அரசியல் சட்டப்பிரிவு சாசனம் 161-ன் படி மாநில அமைச்சரவை முடிவு செய்து சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்காக மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து அதை அவர் ஏற்று பரிந்துரைக்கப்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய படுகிறார்கள்.

    திருச்சி :

    மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆண்டு தோறும் அண்ணா பிறந்த நாள் அன்று தமிழக அரசு ஆயுள் தண்டனை சிறைவாசிகளை விடுதலை செய்து வருகிறது. அரசியல் சட்டப்பிரிவு சாசனம் 161-ன் படி மாநில அமைச்சரவை முடிவு செய்து சிறைவாசிகளை விடுதலை செய்வதற்க்காக மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்து அதை அவர் ஏற்று பரிந்துரைக்கப்பட்ட சிறைவாசிகள் விடுதலை செய்ய படுகிறார்கள். ஆனால் இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை மட்டும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

    இஸ்லாமிய சிறைவாசிகள் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு ஜாமினில் செல்ல கூட அனுமதிக்க படுவதில்லை. சிறை விதிகளின் படி சிறைவாசிகளுக்கு வழங்கும் பரோல் விடுவிப்பு கூட இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்பட்டு வருகிறது. ஆகவே இஸ்லாமிய சிறைவாசிகளின் உடல் நலன் கருதி தாமதிக்காமல் உடனடியாக பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

    தமிழக சிறைகளில் இஸ்லாமிய சிறைவாசிகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கபட்டு சிலர் இறந்துள்ளனர். மேலும் சிறையிலிருந்து விடுதலை ஆவதற்கு முழு தகுதிகள் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய எந்தவித பாரம்பட்சம் பார்க்காமல் தமிழக அரசு முன்வர வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

    எனவே தமிழக சிறைகளில் பத்தாண்டுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறு வாழ்வு அளிக்கும் வகையில் கருணையின் அடிப்படையில் அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.
    • 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஆணையம் எந்த முகவரியில் இயங்குகிறது என்று மக்களுக்கு தெரியவில்லை.

    மேட்டுப்பாளையம்

    நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து விட்டு கோவை செல்லும் வழியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிமுன் அன்சாரி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக சிறையில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருக்கும் சிறைவாசிகளை சாதி, மத பேதமின்றி பொது மன்னிப்பில் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 10-ந் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியினர் போராட்டம் நடத்த உள்ளோம்.

    போராட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலந்து கொண்டு ஆயுள் சிறைவாசிகளுக்காக உரிமை குரலை முழக்கம் இடமுள்ளனர். அதன் அடிப்படையில் தமிழகத்தில் மேற்கு மண்டலத்தில் மக்களை சந்தித்து வருகின்றோம்.

    இதே கோரிக்கைக்காக கடந்த ஜனவரி மாதம் 8 -ந் தேதி கோவை மத்திய சிறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். அந்தப் போராட்டத்தை நாங்கள் அறிவித்த போது தமிழக அரசு ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை பற்றி விவாதித்து முடிவெடுத்து பரிசீலனை பெறுவதற்காக நீதிபதி தலைமையில் ஆணையத்தை அமைத்தது. 8 மாதங்கள் ஆகியும் இதுவரை ஆணையம் எந்த முகவரியில் இயங்குகிறது என்று மக்களுக்கு தெரியவில்லை.

    நாங்கள் பதிவு தபாலில் அனுப்பி வைத்த கோரிக்கை மனு கூட இந்த முகவரியில் அலுவலகம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. எனவே தமிழக அரசு இனியும் தாமதிக்காமல் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆவணம் செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியின் போது வடக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜாபர், பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட இளைஞரணி செயலாளர் அசார், துணைச் செயலாளர் ஜாபர் அலி, காஜாமைதீன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • முகாம் சிறையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் போலீசார் துணை ஆணையர்கள் தலைமையில் 150-க்கும மேற்பட்ட போலீசார் சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர்.
    • செல்போன்களை உடனடியாக தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி அங்குள்ள மரங்களில் ஏறி மிரட்டல் விடுத்தனர்.

    திருச்சி,

    திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டு கைதிகளுக்கான முகாமில் அதிக அளவில் செல்போன் பயன்பாடு மற்றும் போதை பொருட்கள் புழங்கி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த மாதம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் மீண்டும் முகாம் சிறையில் தங்கியுள்ள 156 பேரில் பெரும்பாலானவர்கள் செல்போன்கள் பயன்படுத்தி வருவதாக தகவல் கிடைத்தது. மேலும் கூர்மையான ஆயுதங்களும் அவர் பதுக்கி வைத்திருப்பதாக வெளியான தகவலின் பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உள்ளூர் போலீசார் துணை ஆணையர்கள் தலைமையில் 150-க்கும மேற்பட்ட போலீசார் சிறை முகாமில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    இதில் 150-க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கைதிகள் செல்போனை மீண்டும் தரக்கோரி கண்ணாடிகளை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று மீண்டும் அவர்கள் போராட்டம் நடத்தினர். செல்போன்களை உடனடியாக தராவிட்டால் தற்கொலை செய்து கொள்வோம் என்று கூறி அங்குள்ள மரங்களில் ஏறி மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    • கைதிகளை விடுதலை செய்யக்கோரி தலைமை செயலகம் நோக்கி நடை பயணம் நடைபெற்றது.
    • சிறையில் வாடுபவர்களை விடுதலை செய்ய வேண்டும்

    திருச்சி:

    தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் கே.எம்.சரீப் கலந்து கொண்டார்.

    கூட்டத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஆகஸ்ட் 75-வது சுதந்திர தினத்தையொட்டி திருச்சியில் இருந்து சென்னை நோக்கி 500-க்கும் மேற்பட்ட கட்சி தொண்டர்களுடன் 15 நாட்கள் பெருந்திரள் நடைபயணமாக சென்று முதலமைச்சரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ஆலோசனைக் கூட்டத்தில் ந மாவட்ட துணைச் செயலாளர் காஜா, மேற்கு தொகுதி செயலாளர் ரபீக் ராஜா,மாவட்ட இளைஞரணி சேக், ஆழ்வார்தோப்பு துணைச் செயலாளர் முபாரக்,சமயபுரம் பகுதி செயலாளர் பாருக் மற்றும் பாண்டியன் உள்ளிடோர் கலந்து கொண்டனர்.

    • டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர்.
    • சிறை அதிகாரிகள் விசாரணை

    வேலூர்:

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்தவர் பாண்டி (வயது 33).

    பல வழக்குகளில் தொடர்புடைய இவர் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இன்று காலை பாண்டி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் தனது கை, கால்களை அறுத்து கொண்டு ரகளை செய்தார்.

    இதனைக் கண்ட சிறை காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஜெயில் டாக்டர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாண்டி வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு பிளேடு எப்படி கிடைத்தது என்பது குறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையே மோதல் உருவானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #MaduraiCentralPrison
    மதுரை:

    மதுரை மத்திய சிறையில் காவல் துறையினர் தங்களை துன்புறுத்துவதாக கூறி சிறையில் உள்ள கைதிகள் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள்  சட்டைகளை அவிழ்த்து சிறையில் கட்டிடத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். காவலர்கள் மீது கைதிகள் கற்களை வீசினர். சிறை அருகே உள்ள சாலைகளில் கற்களை வீசியதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #MaduraiCentralPrison
    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர். #PuzhalJail #Prisoners
    செங்குன்றம்:

    புழல் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், பெண் குற்றவாளிகள் என மொத்தம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் முதல் முறையாக குற்றம் செய்து கைது செய்யப்பட்டவர்களும் அடங்குவர்.

    இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள முதல் முறையாக குற்றம் செய்த குற்றவாளிகளுக்கு ‘கவுன்சிலிங்’ வழங்க நீதிபதிகள் முடிவு செய்தனர்.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் தலைமையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 40 நீதிபதிகள் மற்றும் மாஜிஸ்திரேட்டு நீதிபதிகள் புழல் சிறையில் கைதிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    இதற்காக சிறை வளாகத்தில் உள்ள ஆடிட்டோரிடயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முதல் முறை குற்றவாளிகள் 150 பேருக்கு நீதிபதிகள் தனித்தனியாக ஆலோசனை மற்றும் அறிவுரை கூறினர்.



    ஒவ்வொரு கைதிகளுக்கும் சுமார் 5 முதல் 10 நிமிடம் வரை கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது சிறையில் இருந்து செல்லும்போது புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தார்கள். இந்த கவுன்சிலிங் 3 மணி நேரம் நடந்தது.

    புழல் சிறையில் 150 கைதிகளுக்கு நீதிபதிகள் நேரில் சென்று கவுன்சிலிங் வழங்கியது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. #PuzhalJail #Prisoners

    தேசிய குற்ற ஆவண காப்பகம் சிறைத்துறை தொடர்பாக நடத்திய ஆய்வில் இந்திய சிறைகளில் உள்ளவர்களில் 67 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. #NCRB #Prisoners #Undertrials
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் நடைபெற்று வரும் குற்றங்களை உரிய முறையில் பதிவுசெய்து வரும் அமைப்பு தேசிய குற்ற ஆவண காப்பகம். இந்த அமைப்பு பல்வேறு துறைகளில் ஆய்வுகள் நடத்தி சில புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், தேசிய குற்ற ஆவண காப்பகம் சிறைத்துறை தொடர்பாக நடத்திய ஆய்வில் இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் 67 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் என்ற புள்ளிவிவரம் தெரிய வந்துள்ளது.

    இதுதொடர்பாக, தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    இந்தியா முழுவதிலும் மொத்தம் ஆயிரத்து 400 சிறைகள் உள்ளன. இதில் 2016, டிசம்பர் 31ம் தேதி வரை கிடைத்த தகவலின்படி 4.33 லட்சம் கைதிகள் இருக்கின்றனர்.



    இதில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 683 குற்றவாளிகளும், 2 லட்சத்து 93 ஆயிரத்த் 058 விசாரணை கைதிகளும், 3 ஆயிரத்து 089 பேர் தடுப்பு காவலிலும் உள்ளனர்.  இதன்மூலம், இந்திய சிறைகளில் உள்ள கைதிகளில் 67 சதவீதம் பேர் விசாரணை கைதிகள் என தெரிய வந்துள்ளது.

    இதில் உத்தரபிரதேசம் மாநிலத்தில் தான் அதிகளவில் விசாரணை கைதிகள் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    சிறைகளில் விசாரணை கைதிகளாக உள்ள பெண்கள் சிறையில் பிரசவித்த ஆயிரத்து 942 குழந்தைகளும் இந்த புள்ளிவிவரத்தில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. #NCRB #Prisoners #Undertrials
    தமிழக ஜெயில்களில் உள்ள அனைத்து கைதிகளும் இன்னும் 20 நாளில் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. #TNPrisoners #Insurance
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை செயல்படுத்த சிறைத் துறை நடவடிக்கை எடுத்தது.

    அதன்படி இன்னும் 20 நாளில் தமிழக ஜெயில்களில் உள்ள அனைத்து கைதிகளும் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்க்கப்படுகிறார்கள். இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    13 மத்திய சிறைச்சாலைகளில் உள்ள 3600 தண்டனை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் மற்றும் 13 ஆண்டுக்கு குறைவாக தண்டனை பெற்ற கைதிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.

    மத்திய அரசால் 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி சுரக்‌ஷா பிமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா ஆகிய 2 இன்சூரன்ஸ் திட்டங்களில் செயல்படுத்தப்படுகிறது.

    இதுகுறித்து சிறைத்துறை கூடுதல் இயக்குனர் அசு தோஸ் சுக்லா கூறியதாவது:-

    ஜெயில் கைதிகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் 2 இன்சூரன்ஸ் திட்டத்தில் குறைந்தபட்ச தொகையில் இன்சூரன்ஸ் செய்யப்படுகிறது.


    புழல் மத்திய சிறையில் உள்ள 450 கைதிகள், வேலூர் ஜெயிலில் உள்ள 260 கைதிகள், பாளையங்கோட்டை ஜெயிலில் உள்ள 168 கைதிகள் மற்றும் புழல், திருச்சி சிறையில் உள்ள 32 பெண் கைதிகள் சேர்க்கப்படுகிறார்கள்.

    இப்பணிகளை 2 வாரத்துக்கு முன்பு தொடங்கினோம். தற்போது வரை 50 சதவீத பணிகள் முடிந்துள்ளன. தகுதி வாய்ந்த அனைத்து கைதிகளும் இன்சூரன்ஸ் திட்டத்தில் இன்னும் 2 வார காலத்தில் சேர்க்கப்படுவார்கள்.

    மேலும் இன்சூரன்ஸ் திட்டத்தை சிறைத்துறை ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.

    கைதிகளுக்கு வழங்கப்படும் இன்சூரன்ஸ் திட்டத்தில் மரணம், விபத்து மற்றும் உறுப்புகள் இழப்பு ஆகியவைகளுக்கு இழப்பீடு வழங்கவும் வழிவகை உள்ளது. அதன்படி விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.330 செலுத்த வேண்டும். கைதி விபத்தில் இறந்தால் அவரது வாரிசுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.

    ஜெயிலில் கைதிகள் செய்யும் வேலைகளுக்கு சம்பளமாக வழங்கப்படும் தொகை அவர்களது கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அந்த தொகையை வைத்து இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டப்படுகிறது. #TNPrisoners #Insurance
    வேலூர் ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்த தலைமை சிறைக்காவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் கைதிகள் செல்போன், கஞ்சா பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையை சேர்ந்த கைதி மண்ணில் புதைத்து வைத்திருந்த 3 செல்போன், ஒரு சிம்கார்டு சிக்கியது.

    கடந்த 2 மாதங்களில் 11 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக பாகாயம் போலீசார் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இதில் ஜெயிலில் பணியாற்றும் முதன்மை தலைமை சிறைக்காவலர் செல்வின் தேவதாஸ் கைதிகளுக்கு செல்போன், கஞ்சா சப்ளை செய்தது தெரியவந்துள்ளது.

    இதனையடுத்து வேலூர் ஜெயில் சூப்பிரண்டு ஆண்டாள், ஏட்டு செல்வின் தேவதாசை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ராஜீவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய கவர்னர் முடிவு எடுக்க தாமதமாகி கொண்டே செல்கிறது. #tngovernor #rajivgandhikilling

    சென்னை:

    ராஜீவ் கொலை கைதிகள் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபட் பெயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் 7 பேரும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயிலில் உள்ளனர்.

    அவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் மனு செய்தனர். அதை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு தமிழக அரசு இதில் முடிவெடுக்கலாம் என்று அறிவித்தது.

    இதை ஏற்று தமிழக அமைச்சரவை கூடி ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்ய ஒப்புதல் அளித்தது. இது தொடர்பான பரிந்துரை கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அவர் அந்த பரிந்துரையை ஏற்று ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் உடனே விடுதலை செய்ய உத்தரவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இதற்கிடையே ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு ஏற்கனவே தொடர்ந்து இருந்தனர். அவர்கள் ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யக் கூடாது என்று வலியுறுத்தி இருந்தனர்.

    இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்னமும் நிலுவையில் உள்ளது. இதை சுட்டிக்காட்டிய அவர்கள் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை கவர்னர் எந்த முடிவும் எடுக்க கூடாது என்று வேண்டுகோள் விடுத்தனர்.

    சமீபத்தில் அவர்கள் கவர்னர் பன்வாரிலாலை சந்தித்து இது தொடர்பான மனு அளித்தனர்.

    இதன் காரணமாக ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரும் ஜெயிலில் இருந்து விடுதலையாவது தாமதம் ஆனது. கவர்னர் என்ன முடிவு எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்கில் தீர்ப்பு வரும்வரை எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை என கவர்னர் பன்வாரிலால் தீர்மானித்து இருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையில் சிக்கல் நீடித்தப்படி உள்ளது.

    சுப்ரீம்கோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்கில் எப்போது தீர்ப்பு கூறப்படும் என்பது தெரியவில்லை. சமீபத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கின் அம்சங்களை பாதிக்கப்பட்டவர்கள் மாற்றி கொடுத்துள்ளனர்.

    எனவே விசாரணை கால அளவு மேலும் சில மாதங்களுக்கு செல்லக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜீவ் கொலை கைதிகள் விடுதலை தொடர்பாக கவர்னர் எடுக்க வேண்டிய முடிவும் தாமதமாகி கொண்டே செல்கிறது.

    சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு வந்த பிறகு ராஜீவ் கொலை கைதிகள் விடுதலையாவது பற்றிய உண்மை நிலவரம் தெரிய வரும். #tngovernor #rajivgandhikilling #supremecourt

    புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் உறவினர்கள் கைதிகளுக்கு கொண்டுவரும் பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. #PuzhalJail
    சென்னை:

    புழல் சிறையில் கைதிகளுக்கு சொகுசு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பு தகவல்கள் வெளியானது. இது தொடர்பான போட்டோ ஆதாரங்களும் வெளியானது.

    இதனை தொடர்ந்து சிறையில் சோதனை நடத்தி தொலைக்காட்சி பெட்டிகள், சமையல் பாத்திரங்கள், அழகு சாதன பொருட்கள், திரைச் சீலைகள், செல்போன்கள் மெத்தைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து சிறை துறையில் நடக்கும் இந்த முறைகேடுகள் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    சிறையில் கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் அவர்களுக்கு கொண்டு வரும் பொருட்களை விதிமுறைகளை மீறி சிறை துறை ஊழியர்களே வாங்கி கொடுத்துள்ளனர்.

    இதற்கு லஞ்சமாக பணம் பெற்று வந்தனர். சிறையில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் அது பல மடங்காக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சோதனைக்கு முன்பு ரூ.250-க்கு விற்கப்பட்ட பீடி கட்டு, சோதனைக்கு பின்பு ரூ.500 ஆகியுள்ளது. ரூ.600-க்கு விற்ற சிகரெட் பெட்டி, சோதனைக்கு பின்பு ரூ.1,200 ஆகவும், 20 கிராம் பாக்கெட் கஞ்சா சோதனைக்கு பின்பு ரூ.10,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.



    சோதனைக்கு முன்பு ரூ.350 ஆக இருந்த சிக்கன் பிரியாணி, சோதனைக்கு பின்பு ரூ.700 ஆகவும், மட்டன் குழம்பு சோதனைக்கு முன்பு ரூ.700, சோதனைக்கு பின்பு ரூ.1,500 ஆகவும், மட்டன் சுக்கா சோதனைக்கு முன்பு ரூ.600, சோதனைக்கு பின்பு ரூ.1,200 ஆகவும் உள்ளது.

    சிக்கன் 65 ரூ.1000 ஆகவும், ஆம்லேட் ரூ.100 ஆகவும், அவித்த முட்டை ரூ.40 ஆகவும் உள்ளது.

    சிறைகளில் ஒன்று அல்லது இரண்டு கைதிகள் மட்டுமே தங்கக்கூடிய அறைகளைப் பிடிப்பதற்கு கடும் போட்டி நிலவுகிறது. இந்த அறைகளை ஒதுக்குவதற்கு சிறைத்துறையில் பல்வேறு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால் அந்த விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்கிற குற்றச்சாட்டு இப்போதும் எழுந்துள்ளது.

    புழலில் செல்வாக்குமிக்க ஒரு கைதிக்கு அறை ஒதுக்க ரூ.2 லட்சம் முன் பணம் பெறப்படுவதாகவும், பின்னர் மாதம் தோறும் ரூ.40 ஆயிரம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

    இதற் கிடையே புழல் சிறையில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் சுப்பையாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள ஒரு கைதி மதுரை கூலிப்படையிடம் இது தொடர்பாகப் பேசியிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    இது தொடர்பாக புழல் கைதிகள் 2 பேர் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் சிலருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #PuzhalJail

    ×