என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Postmortem"
- சிகரெட் தீ படுக்கையில் பற்றி எரிந்தது
- புகை மூச்சு திணறி இறந்தார்
வேலூர், மே.16-
வேலூர், தோட்டப்பாளையம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 30). இவர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வந்தார்.
மேலும் லாட்ஜை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். விக்னேஷ் நேற்று மதியம் மது போதையில் வீட்டிற்கு வந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு அறையில் தூங்கினார்.
அப்போது சிகரெட் பிடித்தபடி தூங்கியதாக கூறப்படுகிறது. தூக்க கலக்கத்தில் விக்னேஷ் சிகரெட்டை படுக்கையில் போட்டுள்ளார்.
அப்போது சிகரெட் மெத்தையில் பட்டு தீப்பிடித்து புகை வந்து அறை முழுவதும் பரவியது. மது போதையில் இருந்ததால் விக்னேஷ்விற்கு புகை சூழ்ந்தது தெரியவில்லை.
அறைக்கு வெளியேயும் புகை வந்ததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி கதவை திறந்து பார்த்தார்.
அறை முழுவதும் புகைப்பரவி விக்னேஷ் மயக்கம் அடைந்த நிலையில் இருந்தார். அவரை மீட்ட அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விக்னேஷுக்கு திருமணமாகி ஒரு மகன் மகள் உள்ளனர்.
- குடும்பத்தினர் இடையே அடிக்கடி தகராறு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த புதூரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 50) டிரைவர். இவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் பெருமாள் நேற்றும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த பெருமாள் வீட்டில் இருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் இது குறித்து வேலூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெருமாள் பிணத்தை மிட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடன் தொல்லையால் விபரீதம்
- போலீசார் விசாரணை
நெமிலி:
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேரூராட்சிக்கு உட்பட்ட மூலப்பட்டு கிராமம் காந்தி சாலை யில் வசித்து வருபவர் அன்பு (வயது 25). இஸ்திரி தொழில் செய்து வந்தார். இவருக்கு நந்தினி என்ற மனைவியும், நிதிஷ், சாம் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
அன்பு, நெமிலி தட்டார தெருவில் தன் குடும்பத்தினரோடு வாடகை வீட்டில் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு நந்தினி அம்பத் தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதனால் அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மாடி படிக்கட்டில் ரத்தம் வழிந்து வருவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெமிலி போலீசார் அன்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் கடன் தொல்லையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உடல் மீட்பு
- போலீசார் விசாரணை
ஆம்பூர்,
திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் கரும்பூர் ஊராட்சி சாமுண்டிம்மன் தோப்பு பெட்ரோல் பங்க் அருகில் உள்ள கிணற்றில் ருக்கம்மாள் வயது (66) என்பவர் பிணமாக மிதந்தார்.
உமராபாத் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- குறைந்த மதிப்பெண் பெற்றதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் அடுத்த பாகாயம் துத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விமல் ராஜ். இவரது மகள் நித்தியா (வயது 18). இவர் இடையன் சாத்து பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்தார்.
இந்த நிலையில் நேற்று காலை பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவில் நித்தியா குறைந்த மதிப்பெண் பெற்று உள்ளார். இதனால் விரக்தி அடைந்த நித்தியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நித்தியா தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்ட அவரது பெற்றோர் கதறி துடித்தனர். இது குறித்து தகவல் அறிந்த பாகாயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிளஸ்-2 தேர்வு முடிவில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
- கொலை செய்யப்பட்ட 2 காவலாளிகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், அமராவதி சாலையில் உள்ள அருண்டல்பேட்டை, டோன்சர் சாலை, பதக்குண்டூர், பழைய ஆந்திரா பேங்க் சாலை, சுத்த பள்ளி, டோங்கா பகுதியில் நேற்று இரவு கொள்ளையர்கள் புகுந்தனர்.
அமராவதி சாலையில் உள்ள பைக் ஷோரூமில் கிருபாநிதி என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர் காவலாளியாக வேலை செய்து வந்தார். அங்கு வந்த கொள்ளை கும்பல் காவலாளியை சரமாரியாக தாக்கி கொலை செய்தனர்.
பின்னர் ஷோரூம் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அங்கிருந்த லாக்கர்களை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதையடுத்து அருண்டல்பேட்டையில் உள்ள மதுபான கடைக்கு சென்று அங்கு இருந்த காவலாளி சாம்பசிவம் என்பவரை அடித்தே கொன்றனர்.
கடைக்குள் சென்று பணத்தை கொள்ளையடித்தனர் அதே பகுதியில் உள்ள பேக்கரிக்கு சென்று கடையின் ஷட்டரை உடைத்தனர். சத்தம் கேட்டு பக்கத்து செல்போன் கடையில் இருந்த காவலாளி ரத்தின ராஜு தடுக்க ஓடிவந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அவரையும் சரமாரியாக தாக்கினர். அதே சாலையில் உள்ள நிதி நிறுவன த்தின் ஷட்டரை உடைத்து அதிலிருந்து டிவி, கம்ப்யூட்டர், மானிட்டர், ஆட்டோ செல்ஃப் ஸ்டார்ட் மோட்டார் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.
தொடர்ந்து பழைய ஆந்திரா பேங்க் சாலைப்பகுதிக்கு சென்று ஒருவரை தாக்கி அவரது செல்போன் பறித்தனர்.
இதையடுத்து சுத்த பள்ளி, டோங்கா ஆகிய இடங்களில் கடைகளை உடைத்து கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
காலையில் கடை உரிமையாளர்கள் கடையை திறக்க வந்தபோது ஒரே இரவில் அடுத்தடுத்து 10 கடைகளில் 2 காவலாளிகள் கொலை செய்து கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இது குறித்து அமராவதி போலீசில் தனித்தனியாக புகார் செய்தனர். டிஐஜி திரிவிக்ரம வர்மா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட 2 காவலாளிகளின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளையில் ஈடுபட்டது டோங்லீ நகர், கோபால்பேட்டை, பண்டரிபுரம் பகுதியை சேர்ந்த 2 வாலிபர்கள் என தெரிய வந்தது.
உடனடியாக 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- ராஜவள்ளி (வயது 74). இவர் நேற்று மாலை அருகிலுள்ள வாய்க்காலுக்கு கை, கால்களை கழுவச் சென்றார்.
- வாய்க்காலில் தவறி விழுந்து முச்சுத் திணறி இறந்து போனார்.
கடலூர்:
சிதம்பரம் அடுத்த நாஞ்சவயல் சத்யா நகரைச் சேர்ந்தவர் கலியபெருமாள் மனைவி ராஜவள்ளி (வயது 74). இவர் நேற்று மாலை அருகிலுள்ள வாய்க்காலுக்கு கை, கால்களை கழுவச் சென்றார். வயது முதிர்வு காரணமாக வாய்க்காலில் தவறி விழுந்து முச்சுத் திணறி இறந்து போனார். அங்கு சென்றவர்கள் இவரது வீட்டிற்கு தகவல் கொடுத்தனர்
. சம்பவ இடத்திற்கு வந்த இவரது மருமகள் பாரதி சிதம்பரம் தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். புகாரின் பேரில் மூதாட்டியின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சிங்காநல்லூரில் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
- 21 உடல்களை வைக்கும் குளிர்சாதன வைப்பறை வசதி உள்ளது.
கோவை,
கோவை சிங்காநல்லூரில் இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த 2016-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
இங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள கடந்த 2018-ம் ஆண்டே மாநில சுகாதாரத்துறை அரசாணை பிறப்பித்தது.
ஆனால் காவல் நிலைய எல்லைகள் பிரிக்கப்படாததால் பரிசோதனை தொடங்கவில்லை.
இந்த நிலையில் கோவை அரசு ஆஸ்பத்திரியின் கீழ் 24 போலீஸ் நிலையங்கள், இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியின் கீழ் 25 போலீஸ் நிலையங்கள் என வரையறுக்கப்பட்டு கடந்த ஆண்டுஜூலை மாதம் 23-ந் தேதி பிரேத பரிசோதனை தொடங்கியது.
இதையடுத்து கடந்த 6 மாதங்களில் இங்கு 310 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
பிரேத பரிசோதனை தவிர, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குக்கு(போக்சோ) தேவையான பரிசோதனை, வயது பரிசோதனை ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி 22 வழக்குகளில் மருத்துவ சான்று அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியின் டீன் ரவிந்திரன் கூறியதாவது:-
நாட்டில் உள்ள வேறு எந்த இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரியிலும் பிரேத பரிசோதனை வசதி இல்லை. இங்குதான் முதல் முறையாக தொடங்கப்பட்டது. சட்ட மருத்துவத்துறை பேராசிரியர் மனோகரன் தலைமையில் 4 உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 5 சட்டம் சார்ந்த மருத்துவர்கள் இங்கு உள்ளனர்.
தினமும் சராசரியாக 10 முதல் 15 உடல்களை பிரேத பரிசோதனை செய்ய முடியும். தற்போது 21 உடல்களை வைக்கும் குளிர்சாதன வைப்பறை வசதி உள்ளது.
மேலும் 9 உடல்களை வைக்கும் வசதி ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பிரேத பரிசோதனை அரங்கில் சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி என 2 இடங்களிலும் பிரேத பரிசோதனை நடைபெறுவதால் விரைவாக பரிசோதனை முடிந்து உடல்களை உறவினர்கள் பெற்று செல்ல முடிகிறது.
மேலும் பிரேத பரிசோதனை சான்று 24 மணி நேரத்துக்குள் வழங்கி வருகிறோம்.
மருத்துவ கண்காணிப்பாளர் டி.ரவிக்குமார், இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் மணிவண்ணன் ஆகியோர்இந்த நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றனர்.
முன்பு இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் பயிலும் மருத்துவ மாணவர்கள் பிரேத பரிசோதனை பயிற்சிக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.
இங்கேேய அந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அந்த மாணவர்கள் பயன் பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொதுமக்களில் சிலர் கூறும் போது, மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடத்துக்கு அருகே உறவினர்கள் அமர ஷெட் ஏதும் இல்லை. இதை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி சந்திரசேகரன் உத்தரவு பிறப்பித்தார்.
- செம்புலிங்கம் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீது காவல்துறை பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
அரியலூர் மாவட்டம் காசாங்கோட்டையில் கடந்த 24-ந்தேதி நடந்த தடியடி வழக்கில் அருண்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது மாமனார் செம்புலிங்கம் (வயது 54) என்பவரிடம் விக்கிரமங்கலம் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் கடுமையான காயம் ஏற்பட்ட செம்புலிங்கம் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், அதன் பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உடலை வாங்க மறுத்து குடும்பத்தார் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் செம்புலிங்கத்தின் குடும்பத்தார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தஞ்சை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மருத்துவக்கல்லூரி மருத்துவர்களை கொண்ட சிறப்பு குழுவை நியமித்து அரியலூர் விவசாயி செம்புலிங்கம் உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இன்று மதிய 12 மணிக்குள் பிரேத பரிசோதனை முடித்து உடலை ஒப்படைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
மனுதரார் தரப்பில் மருத்துவர் அல்லாத ஒரு பிரதிநிதியை பிரேத பரிசோதனையின் போது அனுமதிக்க வேண்டும் எனவும், பிரேத பரிசோதனை முழுவதையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் நீதிபதி சந்திரசேகரன் உத்தரவு பிறப்பித்தார். மேலும் செம்புலிங்கம் மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரிய மனு மீது காவல்துறை பதில் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி இன்று காலை 10.05 மணிக்கு செம்புலிங்கம் உடல் பிரேத பரிசோதனை தொடங்கியது. கார்த்திகேயன் உள்ளிட்ட மேற்கண்ட மருத்துவக் கல்லூரிகளின் டாக்டர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் உடன் இருந்தனர். 11.45 மணியளவில் பிரேத பரிசோதனை முடிவடைந்தது. பின்னர் போலீசார் அவரது உடலை மகன் மணிகண்டனிடம் ஒப்படைத்தனர்.
முன்னதாக பிரேத பரிசோதனை நடந்ததையொட்டி, திருச்சி மத்திய மாவட்ட பா.ம.க. செயலாளர் உமாநாத், வன்னியர் சங்க துணைத் தலைவர் கதிர்ராஜா, தொழிற்சங்க பிரதிநிதி பிரபாகர், பாஸ்கர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உறவினர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் செம்புலிங்கத்தின் உடலுக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் அரியலூர் கொண்டு செல்லப்பட்டது.
மரணம் அடைந்த விவசாயி செம்புலிங்கத்தின் சொந்த ஊரான காசாங்கோட்டையில் பதட்டமான சூழல் நிலவுவதால் அங்கும், திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மோட்டார் சைக்கிளில் பரமத்தி- வேலகவுண்டம்பட்டி சாலையில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
- நிலை தடுமாறி தார் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் கூடச்சேரி அருகே மூர்த்தி பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகேசன் (43). லாரி டிரைவர். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் முருகேசன் லாரி ஓட்டுவதற்காக சென்று விட்டு இரவு தனது மோட்டார் சைக்கிளில் பரமத்தி- வேலகவுண்டம்பட்டி சாலையில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.கூடச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் வந்தபோது நிலை தடுமாறி தார் சாலையில் மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார். இதில் முருகேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் வரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்க னவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர்.இதுகுறித்து முருகேசன் தாய் உண்ணம்மாள் (64) என்பவர் நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுசாமி வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை ராயப்பேட்டையில் போலீஸ்காரர் ராஜவேலுவை (வயது 35) அரிவாளால் வெட்டிய வழக்கில் ராயப்பேட்டை பி.எம்.தர்கா பகுதியை சேர்ந்த 9 ரவுடிகள் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். இதில் ஆனந்தன் (25) என்ற ரவுடி, போலீஸ்காரர் ராஜவேலுவின் ‘வாக்கி-டாக்கி’யை திருடி தரமணி பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள புதர் பகுதியில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன், சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆகியோர் ரவுடி ஆனந்தனை மட்டும் தனியாக போலீஸ் ஜீப்பில் தரமணி பகுதிக்கு அழைத்து சென்றனர்.
சம்பவ இடத்தில் ‘வாக்கி-டாக்கி’யை எடுக்கும்போது, ரவுடி ஆனந்தன் அங்கு மறைத்து வைத்திருந்த அரிவாளால் திடீரென்று சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜாவின் கையை வெட்டினார். பின்னர் உதவி கமிஷனர் சுதர்சனத்தையும் தாக்க முயன்றார். இதையடுத்து அவர் மீது ‘என்கவுண்ட்டர்’ பிரயோகம் நடத்தப்பட்டது. உதவி கமிஷனர் சுதர்சன் ரவுடி ஆனந்தனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அவரது இடதுபக்க மார்பில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் அவர் பலியானார்.
இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் இரவோடு இரவாக அவரது உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறைக்கு மாற்றப்பட்டது.
தமிழகத்தில் நடைபெறும் ‘என்கவுண்ட்டர்’ சம்பவங்களை பொறுத்தவரையில் அரசு சார்பில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும். அதன்படி ரவுடி ஆனந்தன் என்கவுண்ட்டர் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சைதாப்பேட்டை கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் நியமிக்கப்பட்டார்.
அவர் உடனடியாக விசாரணை களத்தில் இறங்கினார். தரமணியில் என்கவுண்ட்டர் நடந்த இடத்தை நேற்று காலை நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மதியம் 12.20 மணியளவில் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டிருந்த ரவுடி ஆனந்தன் உடலை வந்து பார்வையிட்டார். ஆனந்தன் உடலை அவரது சகோதரர் அருண், சித்தப்பா மனோகரன் ஆகியோர் மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் அடையாளம் காட்டினார்.
பின்னர் ஆனந்தன் உடலில் எத்தனை குண்டுகள் பாய்ந்திருக்கிறது? என்பதை கண்டறிவதற்காக முதலில் ‘எக்ஸ்-ரே’ எடுக்கப்பட்டது. இதில் அவரது இடது பக்க மார்பு பக்கத்தின் உள்ளே ஒரு குண்டு மட்டும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ரவுடி ஆனந்தனின் பிரேத பரிசோதனை மதியம் 1.30 மணி முதல் 3 மணி வரை நடந்தது. மாஜிஸ்திரேட்டு சாண்டில்யன் முன்னிலையில் உடல்கூறு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் செல்வநாயகம், டாக்டர் குகன் ஆகியோர் பிரேத பரிசோதனையை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை காட்சிகள் அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனையின்போது ரவுடி ஆனந்தன் உடலை துளைத்திருந்த துப்பாக்கி குண்டு வெளியே எடுக்கப்பட்டு, தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
ரவுடி ஆனந்தன் உடல் பிரேத பரிசோதனையையொட்டி, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவரது வீடு அமைந்துள்ள ராயப்பேட்டை வி.எம்.தர்கா, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரி பிரேத பரிசோதனை அறை வளாகம், ராயப்பேட்டை போலீஸ்நிலையம் ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்