search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "permission"

    • மேலசெவலை சுற்றி 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
    • போலீசார் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் மேலசெவல் சனிக்கிழமை வாரச்சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கமலக்கண்ணன் தலைமையில் வியாபாரிகள், பொது மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    வாரச்சந்தை

    மேலசெவலை சுற்றி 18-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள வர்கள் குறைந்த விலையில் பொருட்களை வாங்க நெல்லை டவுன், பாளை பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.

    எனவே மேலசெவலில் சனிக்கிழமை வாரச்சந்தை அமைக்க வேண்டும் என முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் சந்தை அமைப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் வாய்மொழி யாக உத்தரவை பெற்று சந்தை அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்தோம்.

    இதற்காக கடைகளுக்கு முன் தொகை, மாத வாடகை பேசி சந்தையில் பொது மக்கள் மற்றும் வியாபாரிகளின் அவசர தேவைகளுக்காக கழிவறை, குடிநீர் வசதிகள், மின் விளக்குகள் பொருத்தி உள்ளோம். 50 கடைகள் அமைப்பதற்காக அனைத்து பணிகளும் நடை பெற்று உள்ளது.

    மேலும் அந்த கடைகளில் விற்பனை செய்வதற்காக பழங்கள், மீன், கருவாடு, மளிகை சாமான்கள் உள் ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் பெற்று செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்து விட்டோம்.

    இந்நிலையில் முன்னீர் பள்ளம் போலீசார் மேல செவலில் வாரச்சந்தை அமைப்பதற்கு அனுமதி மறுத்து வருகின்றனர். சந்தை அமைப்பதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு விட்டதால் மேலசெவலில் சனிக்கிழமை தோறும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடை கள் செயல்பட அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
    • மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுபாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள மண், வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி கட்டணமில்லாமல் பொது மக்களின் வேளாண்மை நோக்கம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வேளாண்மை அலுவலர்கள் சான்று/மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க சான்றுடன், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

    விவசாய பயன்பாட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலத்திற்கு 75 கனமீட்டர் மற்றும் 1 ஏக்கர் பரப்பளவுள்ள புஞ்சை நிலத்திற்கு 90 கனமீட்டர் வண்டல் மண் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும்.

    இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழாவில் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சென்று வர வேண்டும் .
    • 30-ம் தேதி மட்டும் சொந்த ஊர்களில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 115- வது தேவர் ஜெயந்தி மற்றும் 60-வது தேவர் குருபூஜை நடைபெறுவதை முன்னிட்டு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு மனோகர் முன்னிலை வகித்தார்.

    இதில் கலெக்டர் பேசியதாவது:-

    தேவர் ஜெயந்தி, மற்றும் குருபூஜையை முன்னிட்டு அரசு அறிவுரைகளின் படி ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது அமலில் உள்ள ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின்படி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நபர்கள் வாடகை வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அஞ்சலி செலுத்த செல்பவர்கள் சொந்த வாகனங்களில், அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் மட்டுமே சென்று வர அனுமதிக்கப்படுவார்கள். மாவட்ட நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டுள்ள வழித் தடங்களில் செல்லக்கூடாது.

    இருசக்கர வாகனங்கள், டிராக்டர், ஆட்டோ போன்ற வாகனங்கள் மூலமாகவோ சைக்கிள் மற்றும் திறந்த வெளி வாகனங்களில் பயணம் செய்யவோ, நடை பயணமாகவோ நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. சொந்த நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருப்போர் சம்மந்தப்பட்ட உட்கோட்ட அலுவலகங்களில் முன் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும்.

    ஒவ்வொரு பதிவு செய்யப்பட்ட கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து அஞ்சலி செலுத்தி முடிக்க வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்தி செல்லக் கூடாது. வாகனத்தில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி வரவோ கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனங்களில் ஆயுதங்கள், பட்டாசுகள், மது பாட்டில்கள் எடுத்துச் செல்வது, வாகனங்களின் கூரை மேல் பயணம் செய்வது போன்றவைகள் தடை செய்யப்பட்டுள்ளன.

    வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    சொந்த ஊர்களில் 30-ம் தேதிக்கு முந்தைய தினமோ, பிந்தைய தினமோ எந்த வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும், ஒலிபெரு க்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது. 30-ம் தேதி மட்டும் சொந்த ஊர்களில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்பவர்கள் போலீசாரால் அனுமதிக்கப்பட்ட கீழ்கண்ட வழித்தடங்களில மட்டுமே செல்லவேண்டும்.

    ராஜபாளையம் -ஸ்ரீவில்லிபுத்தூர்- சிவகாசி-சாத்தூர்- விருதுநகர்-தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து பசும்பொன் செல்லும் வாகனங்கள் அருப்புக்கோட்டை-காந்தி நகர்-ராமலிங்கா மில்-கல்லூரணி-எம்.ரெட்டியபட்டி-மண்டபசாலை-கமுதி விலக்கு (கானாவிலக்கு)-கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

    ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கல்குறிச்சி-பாலையம்பட்டி பை-பாஸ்-காந்தி நகர்-ராமலிங்கா மில், கல்லூரணி-எம்.ரெட்டியபட்டி-மண்டபசாலை-கமுதி விலக்கு (கானாவிலக்கு) -கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

    திருச்சுழியில் இருந்து வரும் வாகனங்கள் ராமலிங்கா மில், கல்லூரணி, கமுதி விலக்கு (கானாவிலக்கு), கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே மீண்டும் திரும்ப வேண்டும்.

    நரிக்குடியில் இருந்து வரும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் சென்றடைய வேண்டும். பின்னர் மீண்டும் திரும்பும்பொழுது, பசும்பொன்-கோட்டை மேடு-நகரத்தார்குறிச்சி -அபிராமம் வழியாக பார்த்திபனூர்-பிடாரிசேரி-வீரசோழன் விலக்கு வழியாக வரவேண்டும்.

    தேவர் ஜெயந்தி விழாவிற்கு செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முத்துராமலிங்கபுரம்-புதூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் 2022-2023 சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லினை கொள்முதல் செய்வதற்கு இரண்டாம் கட்டமாக அரியலூர் மாவட்டம், அரியலூர் தாலுகாவில் தூத்தூர், மேலவரப்பன்குறிச்சி மற்றும் திருமழப்பாடி ஆகிய கிராமங்களிலும், செந்துறை தாலுகாவில் தளவாய், கூடலூர் கிராமம் மற்றும் ஆண்டிமடம் தாலுகாவில் காடுவெட்டி ஆகிய கிராமங்களிலும் 14-ந் தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கிராமங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால், அருகே உள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • பல லட்சம் செலவில் சுமார் 30 அடி நீளத்தில் பர்மா தேக்கிலான கொடி மரத்தை வாங்கி உபயோகமாக அளித்துள்ளார்.
    • மரம் கோவிலின் உள் பிரகாரத்தில் மழையிலும், வெயிலிலும் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதார ண்யேஸ்ரர் ்கோவிலுடன் இணைந்த தோப்புத்துறை அபீஷ்ட வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவில் வேத நாராயணன் அபீஷ்ட வரதராஜ பெருமாள்என்ற பெயருடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    ராமர் இலங்கைக்கு செல்வதற்கு முன்னர் தோப்புத் துறையில் உள்ள திருமாலை வழிபட்டதாகவும் கோவிலின் முகப்பில் அவர் பெயரால் ஒரு தீர்த்தம் அமைத்ததாகவும் கூறப்படுகிறது. ்இக்கோவிலில் கடந்த 2005ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    அப்பொழுது கொடி மரத்தை புதிதாக புதுப்பிக்க பக்தர் ஒருவர் பல லட்ச ரூபாய் செலவில் சுமார் 30 அடி நீளத்தில் பர்மா தேக்கிலான கொடி மரத்தை வாங்கி உபயோகமாக அளித்துள்ளார்

    4 ஆண்டுகளாக மரம் கோவிலின் உள் பிரகாரத்தில்மழை வெயில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. அறநிலைய துறையின் அனுமதி பெற்று அமைக்க வேண்டும் என்ற காரணத்தால் 4 ஆண்டுகளாக அப்படியே கிடக்கிறது. கொடிமரம் அமைக்க அறநிலையத்துறை அனுமதி அளிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்

    உபயதாரர்கள் செய்ய முன்வந்தும் அறநிலைய த்துறையின் அலட்சியப் போக்கால் பல லட்ச ரூபாய் மரம்தற்போது வீணாகும் நிலையில் உள்ளது முன்பு இங்கு அமைக்கப்பட்டிருந்த சிறிய கொடி மரமும் மழையில் முறிந்து விழுந்து விட்டது.

    இதனால் ஆண்டு பெருவிழாவிற்கு தற்போது புதிதாக சிறிய அளவில் ஆர்எஸ்பதி மரத்தில் கொடிமரம் நட்டு அதில் கொடியேற்றம் நடைபெற்று உள்ளது எனவே உடனடியாக கொடிமரம் அமைக்க அறநிலைய துறை அனுமதி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
    • ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்லை வேய்ந்தான்குளம் பஸ் நிலையம் புதிதாக கட்டப் பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இன்று மேயர் சரவணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றனர்.

    கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர் ஆகியோர் தலைமையில் 70-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் மேயர், துணைமேயரை முற்றுகையிட்டு ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-

    ஸமார்ட் திட்டத்தின் கீழ் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் நெல்லை வேய்ந்தான்குளம் பஸ் நிலையம் புதிதாக கட்டப் பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 2 நடை மேடைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு பிளாட்பாரத்தில் இருந்து அதிக தூரத்தில் இருசக்கர வாகனம் அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாகர்கோவில் செல்லும் பயணிகள் வாகனங்களை காப்பகத்தில் நிறுத்திவிட்டு வெகு தூரம் நடந்து சென்று பஸ் ஏற வேண்டிய நிலை உள்ளது.

    புதிய பஸ்நிலைய பகுதியில் சுமார் 132 ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. பஸ் நிலையத்திற்குள் ஆட்டோக்களை அனுமதிப்பதில்லை.

    இதனால் வெளியூர்க ளுக்கு செல்லும் முதி யவர்கள், மாற்று திறனாளிகள் பஸ் நிலைய நுழைவு வாயிலில் இருந்து பிளாட்பாரத்திற்கு சிரமத்து டன் நடந்து செல்கிறார்கள்.

    எனவே அவர்கள் நலன் கருதி 5 ஆட்டோக்கள் மட்டும் பஸ் நிலையத்திற்குள் சென்று பயணிகளை இறக்கி விட அனுமதி வழங்க வேண்டும். நாங்கள் சுழற்சி முறையில் 5 ஆட்டோக்களாக தினமும் சென்று வருவோம்.

    இதற்கு மாநகராட்சி மற்றும் காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, புதிய பஸ் நிலையத்தில் சமீப காலமாக தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு கூடுதல் போலீசார் பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

    தேவையில்லாத கூட் டத்தை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், விபத்து அபாயத்தை தடுக்கவும் ஆட்டோக்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு நிரந்தர தீர்வு காணப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
    • அப்போது அனுமதியின்றி மது விற்பனை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் சட்டம் - ஒழுங்கு மற்றும் மது விலக்குப் பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் கனிராவுத்தர் குளம் அருகே வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த அஸ்லம் (33) சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்கு வைத்திருந்த 6 மதுபாட்டில்களையும் பறி முதல் செய்தனர்.

    இதேபோல திங்களூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், நிச்சா ம்பாளையம், கீழ்பவானி வாய்க்கால் அருகே அதே பகுதியைச் சேர்ந்த குமார் (48) என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 6 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சிறுவலூர் போலீசார் மேற்கொண்ட சோதனையில், குட்ட ப்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக, அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்கரன் (42) மதுவிற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். அவரிடமிருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் தெரிவித்து, அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தார்.
    • இன்று முதல் 3 நாட்களுக்கு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

    ஆலங்குளம்:

    பாபநாசம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    அனுமதி மறுப்பு

    இந்த ஆண்டும் கால்நாட்டுதல் வைபவத்துடன் திருவிழா தொடங்கி உள்ளது. வழக்கமாக ஆலங்குளம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் ஒரு வாரத்திற்கு முன்பாகவே அதிக அளவில் அங்கு சென்று தங்கி இருந்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டு அங்கு செல்வதற்கு இன்று ஒரு நாள் மட்டுமே தனியார் வாகனங்களுக்கு வனத்துறை அனுமதி அளித்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் குறைந்தது 3 நாட்களாவது தனியார் வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அமைச்சரிடம் கோரிக்கை

    தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் உடனடியாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுக்கு தகவல் தெரிவித்து, அனுமதி வழங்க கோரிக்கை விடுத்தார்.

    தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு வனத்துறை துணை இயக்குனர் செண்பக பிரியாவிடம் பேசியதன் பேரில் இன்று முதல் 3 நாட்களுக்கு காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு தனியார் வாகனங்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது.

    இதனைத்தொடர்ந்து ஆலங்குளம் பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் கோவிலுக்கு செல்ல தொடங்கி உள்ளனர்.

    • ஈரோட்டில் அனுமதியின்றி மது விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து 49 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே மது விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த குயிலான்தோப்பு பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (62), செங்குட்டுவன் வீதியை சேர்ந்த அன்பழகன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல குயிலான்தோப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த சக்திவேல்(47), ரமேஷ்(41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் சாலையோரம் பழங்களை வியாபாரம் செய்து வருகிறோம்.
    • அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலன் திருப்பூர் மாவட்ட வருவாய்த்துைற அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் திருப்பூர்பல்லடம் ரோடு தெற்கு உழவர்சந்தை அருகே சாலையோரம் காலை 4மணி முதல் 8மணி வரை பழங்களை விற்பனை செய்து வருகிறோம். ேபாக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த 29-6-2022 அன்று அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். உழவர்சந்தைக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள சில தனியார் கடை உரிமையாளர்கள் நாங்கள் காலை 9மணிக்கு மேல்தான் திறப்போம். அதுவரை கடைவாசலில் வியாபாரம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பேரில் வியாபாரம் செய்து வந்த நிலையில் சாலையோர கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி உள்ளது.

    இதனால் சிறு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  

    மேற்கு வங்காளத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி கிடைக்காததால், அவரது பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. #LokSabhaElections2019 #Rahul #RahulChopper
    கொல்கத்தா:

    பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பல்வேறு பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றி, வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார். நேர விரயத்தை தவிர்ப்பதற்காக, ஹெலிகாப்டர் மூலம் பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடங்களுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார்.

    அவ்வகையில், மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியில் 14-ம் தேதி (நாளை) நடைபெற உள்ள பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்காக ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை அங்குள்ள போலீஸ் கிரவுண்டில் தரையிறக்க அனுமதி கோரப்பட்டது. ஆனால் காவல்துறை தரப்பில் அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே, ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சங்கர் மலாகர் கூறுகையில், “போலீஸ் கிரவுண்டில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டரை தரையிறக்க அனுமதி வழங்கும்படி நான் கோரிக்கை வைத்தேன். ஆனால், போலீஸ் அனுமதி வழங்கவில்லை. எனவே, பிரசார கூட்டத்தை ரத்து செய்துவிட்டோம்” என்றார்.



    சட்ட விதிகளின் படி, போலீஸ் கிரவுண்டில் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதாகவும், காங்கிரசார் மாற்று இடத்தை தேர்வு செய்து மீண்டும் தங்களை அணுகவில்லை என்றும் சிலிகுரி போலீஸ் கமிஷனர் மீனா தெரிவித்தார்.

    மேற்கு வங்காளத்தில் ராகுல் காந்தி இதுவரை மால்டா மற்றும் ராய்கஞ்ச் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுள்ளார். #LokSabhaElections2019 #Rahul #RahulChopper
    தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த அனுமதி பெற வேண்டும் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி கூறினார்.
    அரியலூர்:

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற தேர்தல்- 2019 தேதி அறிவிக்கப்பட்டு நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளது. இதை தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்றுதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசியதாவது:-

    தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடத்திட அனுமதிக்கப்பட்ட மைதானங்கள் மற்றும் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ள இடங்களை பயன்படுத்த அனைத்து கட்சியினர் மற்றும் வேட்பாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும். தேர்தலின் போது பிற கட்சியினர் மற்றும் அவர்களது வேட்பாளர்களின் கொள்கைகள், முந்தைய செயல்பாடுகள் மற்றும் வேலைகள் ஆகியவற்றை மட்டுமே விமர்சிக்கலாம். தேர்தல் பிரசார கூட்டங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் மற்றும் நேரம் குறித்து காவல் துறையினருக்கு முன்பே தெரிவித்து உரிய அனுமதி பெற்றிருக்க வேண்டும். கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தில் தடை ஏதும் முன்பே விதிக்கப்பட்டிருப்பின் அதை பின்பற்ற வேண்டும்.

    மேலும் தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக துவக்கப்பட்ட நலத்திட்ட நடவடிக்கைகளை தொடர தடையில்லை. வெள்ளம், பஞ்சம் அல்லது இன்ன பிற இயற்கை இடர்பாடு காலங்களில் துயர்துடைப்பு பணி செய்திட தடையில்லை. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தேர்தல் ஆணைய முன்அனுமதியுடன் பண உதவி செய்வதற்கும் தடை இல்லை.

    அலுவலக பணிகளோடு தேர்தல் பிரசார பணிகளை இணைக்கக்கூடாது. வாக்காளர்களுக்கு பணமோ அல்லது வேறு சில வழிகளிலோ தூண்டுதல் கூடாது. வாக்காளர்களிடையே ஜாதி, மதம் மற்றும் மொழி அடிப்படையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடக்கூடாது. மத வழிபாட்டு தலங்களில் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்ய கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, வருவாய் கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    ×