search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selling liquor without"

    • ஈரோட்டில் அனுமதியின்றி மது விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து 49 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே மது விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த குயிலான்தோப்பு பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (62), செங்குட்டுவன் வீதியை சேர்ந்த அன்பழகன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல குயிலான்தோப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த சக்திவேல்(47), ரமேஷ்(41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×