search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 people were arrested"

    • போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட பகுதி களில் குற்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெறுகிறதா என கோபி, கவுந்தப்பாடி, ஈரோடு வடக்கு, கொடுமுடி போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோபி அரசு மருத்துவமனை, சேந்தம்பா ளையம் நேரு வீதி, அசோக புரம், கொடுமுடி பனப்பாளையத்தார் வீதி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட போதை பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்த கோபிசெட்டிபாளையம் நஞ்சப்பா தெருவை சேர்ந்த வேலுச்சாமி மகன் பரமசிவம் (வயது 74),

    பவானி சேந்தம்பாளையம் நேரு தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் மாணிக்கம் (63), ஈரோடு வீரப்பன் சத்திரம் அசோகபுரத்தைச் சேர்ந்த ராமசாமி (70),

    கொடுமுடி வெங்கம்பூர் வடக்கு புதுப்பாளையம் பழனியப்ப செட்டியார் மகன் பாலகிருஷ்ணன் (63) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் அவர்கள் விற்ப னைக்காக வைத்திருந்த பான் மசாலா, கூலிப், ஹான்ஸ் உள்ளிட்ட போதைப் பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெருந்துறை, கருங்கல்பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
    • அவர்களிடமிருந்து 78 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன்படி பெருந்துறை, கருங்கல்பாளையம், சத்தியமங்கலம், அம்மாபேட்டை போலீசார் தங்களது காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சிலர் அரசு மதுபானத்தை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

    இதையடுத்து, பெருந்துறை கருமாண்டிசெல்லி பாளையத்தைச் சேர்ந்த சரவணன் (37), ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (31), சத்தியமங்கலம் கரட்டூர் ரோடு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (26), பவானி தொட்டி பாளையத்தைச் சேர்ந்த பழனிசாமி (44) ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 78 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    • பாதுகாப்பு அற்ற முறையில் ஆவணங்கள் இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 720 மதிப்புள்ள 255 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பகுதியில் உள்ள கடைகளில் பாதுகாப்பு அற்ற முறையில் ஆவணங்கள் இல்லாமல் பட்டாசுகளை பதுக்கி வைத்து இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஆனைமலை போலீசார் வேட்டைகாரன்புதூர் பகுதியில் உள்ள ஒரு டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சரவெடி உள்பட பல்வேறு வகை பட்டாசுகள் 61 பெட்டிகள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டாசை பதுக்கி விற்ற வேட்டைகாரன்புதூரை சேர்ந்த உதயகுமார் (வயது 47) என்பவரை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.57,100 மதிப்புள்ள பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.இதேபோன்று ஆனைமலை போலீசார் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு பேன்சி கடையில் சோதனை செய்தனர். அங்கு ரூ.26,620 மதிப்புள்ள பட்டாசுகள் 64 பெட்டிகளில் பதுக்கி வைத்திருந்தனர். இதனை போலீசார் கைப்பற்றி விற்பனையில் ஈடுபட்ட பேன்சி கடைகாரர் அண்ணாமலை (51) என்பவரை கைது செய்தனர்.

    மேட்டுப்பாளையம் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி காரமடையில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 55 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைத்திருந்தனர்.

    ஊட்டி ரோட்டில் உள்ள மளிகை கடையில் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 75 பட்டாசு பெட்டிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காரமடையை சேர்ந்த குமரேசன் (48) மற்றும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த தேவநாத் (52) ஆகியோரை கைது செய்தனர்.நேற்று ஒரே நாளில் பட்டாசுகளை பதுக்கி விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 720 மதிப்புள்ள 255 பட்டாசு பெட்டிகளை பறிமுதல் செய்தனர்.

    • ஈரோட்டில் அனுமதியின்றி மது விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மேலும் அவர்களிடம் இருந்து 49 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகே மது விற்பனை நடைபெறுவதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அப்பகுதியில் சோதனை நடத்தியதில் மதுவிற்பனையில் ஈடுபட்டிருந்த குயிலான்தோப்பு பகுதியை சேர்ந்த சோமசுந்தரம் (62), செங்குட்டுவன் வீதியை சேர்ந்த அன்பழகன் (30) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

    இவர்களிடமிருந்து 25 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதேபோல குயிலான்தோப்பு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் கருங்கல்பாளையம் செங்குட்டுவன் வீதியை சேர்ந்த சக்திவேல்(47), ரமேஷ்(41) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 23 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×