search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபரம்"

    • விபரம் பெற்று, உடனுக்குடன் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர்.
    • நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலில் செல்போன்களை தவறவிட்டாலோ அல்லது தொலையவிட்டாலோ, உடனடியாக,அந்தந்த போலீஸ் நிலையத்திலோ, அல்லது, காரைக்கால் சைபர் கிரைம் போலீசாரிடமோ புகார் தரலாம் என சமீபத்தில் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மணீஸ், போலீஸ் சூப்பிரண்டுகள் நிதின் கவ்ஹால் ரமேஷ், சுப்பிரமணியம் ஆகியோர் அறிவித்திருந்தனர். அதன்படி, புகார் தரும் நபர்களிடம் விபரம் பெற்று, உடனுக்குடன் செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கடந்த சில நாட்களுக்கு முன், நெடுங்காடு பகுதியில், இருவர் தங்களது செல்போன்களை தவறவிட்டனர்.

    இது குறித்து, சம்பந்தப்பட்டவர்கள், நெடுங்காடு போலீசில் புகார் அளித்தனர். நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர், சி.ஐ.இ.ஆர்.போர்ட்டல் ஆப் மூலம் தொலைந்து போன செல்போன் எண்களை வைத்து அதை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து மீட்டு நேற்று உரியவர்களிடம் ஒப்பைடைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. போலீஸ் சூப்பிரண்டு நிதின் கவ்ஹால் ரமேஷ் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். நெடுங்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • சுற்றுலாத்துறை இணையதளத்தில் தங்கள் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
    • தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் சாகச சுற்றுலா உண்டு, உறைவிடம் முகாம் நடத்துபவர், முகாம் சுற்றுலா, முகாம் நடத்துபவர்கள், கேரவன் இயக்குபவர், கேரவன் சுற்றுலா நடத்துபவர் ஆகியோர் https://www.tntourismtors.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்தில் தங்கள் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பதிவு செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணை, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு: சுற்றுலா அலுவலகம், பூம்புகாரில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம் அல்லது 91769 95843 என்ற செல் நம்பரிலும், www.tourismpoompuhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நில உடமை விபரம் சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
    • உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்து கொள்ள வேண்டும்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் மற்றும் குடவாசல் விவசாயிகளுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயசீலன் ஒரு தகவல் கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மத்திய , மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக "வேளாண் அடுக்கு" என்ற திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.

    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை, தோட்டக்கலை. கூட்டுறவு, பட்டு வளர்ச்சி, உணவு வழங்கல், வேளாண் பொறியியல், ஊரக வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு ,வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு , சர்க்கரை துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்ட பலன்களும் கிடைக்கச் செய்யும் வகையில் GRAINS என்ற வலைதளத்தில் விவசாயிக ளுடைய விபரங்கள் குறிப்பாக நில உடமை விபரம் உள்ளிட்ட விபரங்களை சரிபார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் அந்தந்த கிராமங்களினங கிராம நிர்வாக அலுவலர்கள் உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இனி வரும் காலங்களில் அனைத்து விவசாய நல திட்டங்களும் GRAINS மூலம் விவசாய பெருமக்களை சென்றடை உள்ளது. இதனால் அனைவரும் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம்ஆகியவற்றுடன் உரிய அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும்.
    • மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் கட்டுபாட்டில் உள்ள நீர்நிலைகளில் அமைந்துள்ள மண், வண்டல் மண் மற்றும் களிமண் போன்ற சிறு கனிமங்களை தூர்வாரி கட்டணமில்லாமல் பொது மக்களின் வேளாண்மை நோக்கம் மற்றும் மண்பாண்ட தொழில் பயன்பாட்டிற்கு மண் எடுக்க விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களுடன் தொடர்புடைய வேளாண்மை அலுவலர்கள் சான்று/மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க சான்றுடன், கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

    விவசாய பயன்பாட்டிற்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 1 ஏக்கர் பரப்பளவுள்ள நஞ்சை நிலத்திற்கு 75 கனமீட்டர் மற்றும் 1 ஏக்கர் பரப்பளவுள்ள புஞ்சை நிலத்திற்கு 90 கனமீட்டர் வண்டல் மண் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள், மண்பாண்டங்கள் செய்வதற்கு 60 கனமீட்டர் மிகாமல் களிமண் இலவசமாக எடுத்து கொள்ள உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும்.

    இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • டிராக்டர் வாங்குவதற்கான கடன் விபரங்கள் குறித்து எடுத்துரைத்தனர்.
    • முடிவில் வேளாண் உதவி அலுவலர் சிற்றரசு நன்றி கூறினார்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், அன்னப்பன்பேட்டையில் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண்மை துறை மற்றும் மெலட்டூர் பரோடா வங்கி, இணைந்து விவசாயிகள் தினவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மெலட்டூர் பரோடா வங்கி மேலாளர் செல்வக்குமார் தலைமை வகித்தார்.

    கொத்தங்குடி ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஒன்றிய கவுன்சிலர் சுமத்ராமோகன், அன்னப்பன்பேட்டையில் ஊராட்சி தலைவர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அம்மாபேட்டை வேளாண்மை உதவிஇயக்குனர் மோகன், பரோடா வங்கி உதவி மேலாளர் கார்த்திக் ஆகியோர் விவசாயிகளுக்கு வழங்கப்படும் விவசாய கடன், மான்ய விலையில் உழவு, நடவு இயந்திரங்கள், டிராக்டர் வாங்குவதற்கான கடன் விபரங்கள் குறித்து எடுத்து ரைத்தனர்.

    இந்த விழாவில்வேளா ண்மைத்துறை,தோட்ட க்கலைத்துறை, மீன்வள த்துறை, கால்ந டைத்துறை உள்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டு தங்கள் துறை சம்மந்தமான திட்ட ங்கள் குறித்து விவசாயி களுக்கு எடுத்து கூறினர்.

    கூட்டத்தில் மெலட்டூர், கொத்த ங்குடி, அன்னப்பன்பேட்டை அதனை சுற்றியுள்ள கிராம ங்களை சேர்ந்த முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    இறுதியில் வேளாண் உதவி அலுவலர் சிற்றரசு நன்றி கூறினார்

    ஏற்பாடுகளை வேளாண்மைத்துறை, மற்றும் மெலட்டூர் பரோடா வங்கி ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • விவரங்களை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் பூர்த்தி செய்து கொடுத்து ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.
    • பான் கார்டு உட்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தினை வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் பேரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பணி மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளிலும் 1-8-2022 முதல் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களில் இதுவரை சுமார் 6 லட்சம் வாக்காளர்கள் தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துள்ளனர்.

    தற்பொ ழுது பொதுமக்கள் நலன் கருதி நாளை (ஞாயிற்றுக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 2305 வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பதற்கு ஏதுவாக சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் தாங்களாகவே முன் வந்து அவர்கள் வழக்கமாக வாக்குச் செலுத்தக்கூடிய வாக்குச்சாவடிகளில் அவர்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் மொபைல் எண் ஆகிய விவரங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் படிவம் 6B -இல் பூர்த்தி செய்து கொடுத்து வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

    பொதுமக்கள் அவர்களது ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகலினை கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை.

    ஆதார் எண் இல்லாதவர்கள் இந்திய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ள 100 நாள் வேலை அடையாள அட்டை, அஞ்சல் / வங்கி கணக்கு புத்தகம், ஓட்டுநர் உரிமம், பான் கார்டு உட்பட 11 வகையான இதர ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தின் விபரத்தினை வழங்கலாம்.

    எனவே, நாளைநடைபெறவுள்ள சிறப்புமுகாமில் பொதுமக்கள் அனை வரும் பங்குபெற்று இரட்டை பதிவற்ற நூறுசதவீத தூய்மையான வாக்காளர் பட்டியலினை ஏற்படுத்து வதற்கு தங்களது முழு பங்களிப்பும் ஒத்துழைப்பும் நல்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×