search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுற்றுலா நிறுவனம் நடத்துபவர்கள் விபரங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை
    X

    கலெக்டர் மகாபாரதி

    சுற்றுலா நிறுவனம் நடத்துபவர்கள் விபரங்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை

    • சுற்றுலாத்துறை இணையதளத்தில் தங்கள் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.
    • தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்ட த்தில் சாகச சுற்றுலா உண்டு, உறைவிடம் முகாம் நடத்துபவர், முகாம் சுற்றுலா, முகாம் நடத்துபவர்கள், கேரவன் இயக்குபவர், கேரவன் சுற்றுலா நடத்துபவர் ஆகியோர் https://www.tntourismtors.com என்ற சுற்றுலாத்துறை இணையதளத்தில் தங்கள் விபரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.

    மாவட்டத்தில் பதிவு செய்யாமல் இயங்கும் சுற்றுலா சார்ந்த தொழில் நிறுவனங்கள் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    பதிவு செய்வது மற்றும் வழிமுறைகள் குறித்த அரசாணை, மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு: சுற்றுலா அலுவலகம், பூம்புகாரில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலரை தொடர்பு கொள்ளலாம் அல்லது 91769 95843 என்ற செல் நம்பரிலும், www.tourismpoompuhar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×