search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹெலிகாப்டர்"

    • தேனியில் டி.டி.வி.தினகரனுக்கு பிரசாரம் செய்ததை தொடர்ந்து ராமநாதபுரம் பயணம்.
    • முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஐ ஆதரித்து பிரசாரம்.

    ராமநாதபுரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வந்த ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

    தேனியில் டி.டி.வி.தினகரனுக்கு பிரசாரம் செய்ததை தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ்ஐ ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள அண்ணாமலை ராமநாதபுரம் வருகை தந்தார்.

    இந்நிலையில், அண்ணாலை பயணம் மேற்கொண்ட ஹெலிகாப்டரில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

    • கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.
    • உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இருதரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. போர் களத்தில் தினந்தோறும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில், உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் தனது நாட்டின் மீது வைத்த பாசத்தை அந்நாட்டு ராணுவ வீரர்கள் அங்கீகரித்த உணர்வுப்பூர்வமான சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

     


    போர் மூண்டுள்ள உக்ரைன் நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் தினமும் உக்ரைன் நாட்டு ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கை அசைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்துள்ளான். கையில் உக்ரைன் தேசிய கொடியுடன் சிறுவன் தினமும் உக்ரைன் ராணுவ ஹெலிகாப்டர்களை பார்த்து கொடியசைப்பதை ராணுவ விமானி ஒருவர் கவனித்துள்ளார்.

    அந்த வகையில், சிறுவனின் தேச பக்தியை பாராட்ட அந்த ராணுவ விமானி முடிவு செய்தார். அப்படியாக வழக்கமான ராணுவ பணிகளுக்கு இடையில், சிறுவன் கொடியுடன் நிற்பதை பார்த்த விமானி உடனே தனது ஹெலிகாப்டரை தரையிறக்கினார்.

    பிறகு, சிறுவனிடம் ஓடிச் சென்ற விமானி அவனிடம் நிவாரண பொருட்களுடன் மிட்டாய், பொம்மை மற்றும் உணவு உள்ளிட்டவை அடங்கிய பரிசு பெட்டகத்தை வழங்கினார். சிறுவனின் தேச பக்தியை வெகுவாக பாராட்டிய விமானி, அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வருகிறது.



    • திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேல் பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன.
    • சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    திருப்பதி:

    திருப்பதி மலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ஆகம விதிகள் கடைபிடிக்கப்படுவதால் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டு உள்ளன.

    தடையை மீறி அடிக்கடி விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஏழுமலையான் கோவில் மீது பறந்து செல்கின்றன. இது குறித்து திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் மத்திய விமான போக்குவரத்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவில் கோபுரம் மேல் பகுதியில் 2 ஹெலிகாப்டர்கள் வட்டமடித்தன.

    இதனைக் கண்ட அர்ச்சகர்கள், பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

    ஹெலிகாப்டர்கள் எங்கிருந்து எங்கு சென்றது என எந்த தகவலையும் தெரிவிக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் சட்டப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தேவஸ்தான அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

    • மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன.
    • மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மாலே:

    மாலத்தீவில் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்ட முகமது முய்சு, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து வருகிறார். மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தி னார்.

    மாலத்தீவில் இந்திய ராணுவ வீரர்கள் 70-க்கும் மேற்பட்டோர் உள்ளனர். மேலும் கடலோர ரோந்து பணிகளை மேற்கொள்ள டோர்னியர் ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிக்காக துருவ் ஹெலிகாப்டர் ஆகியவற்றை மாலத்தீவுக்கு இந்தியா வழங்கி உள்ளது.

    ராணுவம் வெளியேறுவது தொடர்பாக இரு நாடுகள் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்குப் பதிலாக திறமையான தொழில்நுட்ப பணியாளர்களை நியமிக்க இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. மார்ச் 10-ந் தேதிக்குள் ஒரு விமானப்படைத் தளத்தில் இருக்கும் ராணுவ வீரர்களுக்குப் பதிலாக தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும்,மே 10-ந் தேதிக்குள் மற்ற இரண்டு விமானப் படைத் தளங்களில் உள்ள ராணுவ வீரர்களும் திரும்பப் பெறப்பட்டு, தொழில்நுட்ப பணியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில் இந்திய படைகளுக்கு பதிலாகவும், மருத்துவ நோக்கங்களுக்காக இந்தியா வழங்கிய ஹெலிகாப்டர்களை கையாளவும் முதல் இந்திய தொழில்நுட்ப பணியாளர்கள் மாலத்தீவுக்கு வந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது சீனு கானில் நிறுத்தப்பட்டுள்ள இந்தியப் படைகளுக்குப் பதிலாக ஹெலிகாப்டரை இயக்கும் குழுவினர் மாலத்தீவு வந்தடைந்துள்ளனர் என்று கூறியுள்ளது. மேலும் இதற்கிடையில், லாமுகன் கத்தூ விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக இந்தியாவுக்கு அனுப்பப்படும் என்றும், மாற்று ஹெலிகாப்டர் இந்திய போர்க்கப்பலில் இருந்து நாளை வரவுள்ளதாகவும் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே கான் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் இன்று அதிகாலை தொழில்நுட்ப பணியாளர்கள் குழுவிடம் தங்களது பணியை ஒப்படைக்கும் நடைமுறையை தொடங்கினர்.

    • H125 ரக ஹெலிகாப்டர்-ஐ FAL அசெம்பில் செய்ய இருக்கிறது.
    • வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.

    ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனம் டாடா குழுமத்துடன் இணைந்து இந்தியாவில் ஹெலிகாப்டர்களை அசெம்பில் செய்யும் மையத்தை கட்டமைக்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    இரு நிறுவனங்கள் கூட்டணியில் உருவாகும் ஃபைனல் அசெம்ப்லி லைன் (FAL)-இல் இந்தியாவில் ஹெலிகாப்டர்கள் அசெம்பில் செய்யப்பட உள்ளன. அதன்படி ஏர்பஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் H125 ரக ஹெலிகாப்டர் FAL-இல் அசெம்பில் செய்யபட இருக்கிறது.

     


    இந்தியாவில் கட்டமைக்கப்படும் FAL-இல் அசெம்பில் செய்யப்படும் ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்குள் போக்குவரத்து பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இதுதவிர, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்தியாவில் ஹெலிகாப்டர் உற்பத்தி பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொள்ள இருப்பது இதுவே முதல்முறை ஆகும்.

    டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனம் ஏர்பஸ் ஹெலிகாப்டர்ஸ் உடன் இணைந்து FAL-ஐ கட்டமைக்கிறது. இந்திய குடியரசு தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரான்ஸ் அதிபர் மேக்ரான் பங்கேற்றுள்ள நிலையில், இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    • ரத்னா ஜெயின், மணமகன்-மணமகளை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்தார்.
    • கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க இருக்க வேண்டும்.

    ஜோலார்பேட்டை:

    பெங்களூரைச் சேர்ந்தவர் ரத்னாஜெயின் (வயது 50). இவருடைய மகனுக்கு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள தங்கக் கோட்டையில் திருமணம் நடக்க உள்ளது.

    இதில் ரத்னா ஜெயின், மணமகன்-மணமகளை அழைத்துச் செல்ல பெங்களூரில் இருந்து வாடகைக்கு ஹெலிகாப்டரை வர வைத்தார்.

    அதன்படி ஹெலிகாப்டர் திடீரென ஏலகிரி மலையில் உள்ள தனியார் கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் வந்து தரை இறங்கியது. இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், ஹெலிகாப்டரை காண அந்த இடத்தில் குவிந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஏலகிரி மலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அனுமதி இல்லாமல் ஹெலிகாப்டரை தரை இறங்கியது குறித்து விளக்கம் கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    இது குறித்து போலீசார் கூறியதாவது:-

    ஏலகிரி மலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதிஇன்றி ஹெலிகாப்டர் தரை இறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்று நடந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுகுறித்து முறையாக கல்லூரி நிர்வாகம் போலீசாரிடம் தகவல் தெரிவித்து அனுமதி பெற்றிருக்க இருக்க வேண்டும்.

    இது குறித்து அந்த தனியார் கல்லூரி முதல்வரிடம் விசாரணை நடத்தினோம்.

    அதன்படி கல்லூரி முதல்வர் இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்துள்ளார். இனிமேல் ஹெலிகாப்டரை தரை இறங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட போலீசாரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
    • திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 40 லட்சம் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    நேற்று முதல் மழை ஓய்ந்த நிலையில் மீட்புப் பணி மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், மீட்புப்பணிக்கு கூடுதல் ஹெலிகாப்டர்களை அனுப்பக்கோரி மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. சில இடங்களில் 1871ம் ஆண்டுக்குப் பிறகு அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வசிக்கும் சுமார் 40 லட்சம் மக்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குறிப்பாக ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி நகரங்களில், தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட அதிக வெள்ளப்பெருக்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நம் அதிகாரிகள், மாநில பேரிடர் மீட்டு படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை குழுக்களை திரட்டியுள்ளோம். தமிழகம் முழுவதும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன.

    ஆனால், இணைப்பு சாலைகள் இருப்பதால், இந்த பொருட்களை மக்களுக்கு வழங்க முடியவில்லை. ஹெலிகாப்டர்கள் மூலம்தான் அவர்களை அடைய முடியும்.

    தற்போது விமானப்படையின் 4 ஹெலிகாப்டர்களும், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்களும், கடலோர காவல்படையின் 2 ஹெலிகாப்டர்களும் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகவும், உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுப்பப்படுகின்றன. பேரழிவின் தன்மை மற்றும் அதிக எண்ணிக்கையிலான குடியிருப்புகள் மூழ்கப்பட்டிருப்பதால், மீட்பு மற்றும் நிவாரண விநியோகத்திற்காக எங்களுக்கு அதிக ஹெலிகாப்டர்கள் தேவை.

    எனவே, அதிகபட்ச ஹெலிகாப்டர்களை உடனடியாக நிலைநிறுத்த உங்கள் அவசரத் தலையீட்டைக் கோருகிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

    • கோவையில் தயாரான ஒரு டன் உணவு பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.
    • உணவு வினியோகம் மற்றும் மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களுக்கு உதவுவதற்காக முப்படைகளும் களம் இறக்கப்பட்டு உள்ளன.

    சூலூர் விமானப்படை தளம், மண்டபம், கொச்சி கடற்படை தளங்களில் இருந்து 6 ஹெலிகாப்டர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    கோவையில் தயாரான ஒரு டன் உணவு பொருட்கள் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஹெலிகாப்டர்களில் ஸ்ரீ வைகுண்டம் சென்றனர்.

    காலை 10.15 மணியளவில் ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் உணவு பொட்டலங்களை போட்டனர். அதில் பிஸ்கட், உலர் பழங்கள், பால் பவுடர், தண்ணீர் பாட்டில்கள் இருந்தன.

    மற்ற 5 ஹெலிகாப்டர்களும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீரில் சிக்கி உள்ளவர்களுக்கு உணவு பொட்டலங்களை வினியோகித்தது.

    இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவு பொட்டலங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து பல பகுதிகளில் வினியோகிக்கப்படுகிறது.

    விமானப்படை தரப்பில் கூறும்போது, உணவு வினியோகம் மற்றும் மீட்பு பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் தெரி விக்கப்படும் இடங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் செயல்படுத்தப்படுகிறது என்றனர்.

    • மருத்துவ மீட்பு பிரிவுகளுக்காக இந்தியா வழங்கிய முதல் ஹெலிகாப்டரை கையாள 24 வீரர்கள் உள்பட மொத்தம் 77 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர்.
    • 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது.

    மாலத்தீவு:

    மாலத்தீவின் புதிய அதிபராக முகமது மூயிஸ் பதவி ஏற்றுக்கொண்டார். இவர் தனது தேர்தல் பிரசாரத்தின் போது மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்களை வெளியேற்றவதாக வாக்குறுதி அளித்தார். அதன்படி மரியாதை நிமித்தமாக சந்தித்த மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் மாலத்தீவில் இருந்து இந்தியா தனது ராணுவத்தை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

    இது தொடர்பாக அதிபர் அலுவலகத்தின் பொது கொள்கைக்கான துணை செயலாளர் முகமது பிர்ஸூல் அப்துல் கலீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ மீட்பு பிரிவுகளுக்காக இந்தியா வழங்கிய முதல் ஹெலிகாப்டரை கையாள 24 வீரர்கள் உள்பட மொத்தம் 77 இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் உள்ளனர். அவர்களை திரும்ப அனுப்புவதற்கான முயற்சிகளை அதிபர் முகமது மூயிஸ் தொடங்கி உள்ளார்.

    இந்தியாவுடன் துறைமுகத்துக்கான ஒப்பந்தம், பாதுகாப்பு துறை ஒப்பந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் முந்தைய அரசு கையெழுத்திட்டு உள்ளது. அந்த ஒப்பந்தங்கள் புதிய அரசால் மறு ஆய்வு செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாலத்தீவில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018 வரை அப்துல்லா யாமீன் அதிபராக இருந்தார். அவர் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார், அதன் பின்னர் வந்த முகமது கோலி இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தார். இந்த சூழ்நிலையில் புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள முகமது மூயிஸ் சீனாவுக்கு ஆதரவாக இருப்பார் என கருதப்படுகிறது.

    • ஹெலிகாப்டர் ஜான்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
    • ஹெலிகாப்டர் துங்கரியா எனும் ஏரியின் அருகில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

    இந்திய வான்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது, மத்திய பிரதேச மாநிலத்தின் போபால் மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. போபாலில் உள்ள ஏரி ஒன்றின் அருகில் இந்திய வான்படை ஹெலிகாப்டர் தரையிறங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

    இந்த ஹெலிகாப்டரில் பைலட் மற்றும் ஐந்து பேர் பயணம் செய்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஆகவில்லை என்று பெராசியா காவல் நிலைய கண்காணிப்பாளர் நரேந்திர குலாஸ்த் தெரிவித்தார். போபாலில் இருந்து கிளம்பிய ஹெலிகாப்டர் ஜான்சி சென்று கொண்டிருந்த போது, திடீரென அதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட சமயத்தில் இந்திய வான்படை ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை அடுத்து, துங்கரியா எனும் ஏரியின் அருகில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இந்த ஏரி போபால் விமான நிலையத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

    ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, இன்று மாலை 5 மணியளவில் ஹெலிகாப்டர் அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளது. போபால் மற்றும் நாக்பூரை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் ஹெலிகாப்டரை சரி செய்துள்ளனர்.

    • கட்டுப்பாட்டு அறையில் அமெரிக்க பென்டகன் நகரில் உள்ள ராணுவ மையம் போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
    • ஐதராபாத் நகரில் நுழையக்கூடிய ஒவ்வொரு வாகனங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் காவல்துறை புதிய கட்டுப்பாட்டு அலுவலகம் ரூ.500 கோடியில் கட்டப்பட்டுள்ளது.

    20 மாடிகள் இந்த கட்டிடத்தில் உள்ளன. முழுவதும் அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது

    இந்த கட்டிடத்தில் 4-வது மாடியில் டி.ஜி.பி அலுவலகம் 18-வது தளத்தில் கமிஷனர் அலுவலகம் இயங்குகிறது. மற்ற உயர்மட்ட அதிகாரிகளின் அறைகள் 7-வது மாடியில் உள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறையில் அமெரிக்க பென்டகன் நகரில் உள்ள ராணுவ மையம் போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஹெலிகாப்டர்கள் இறங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இது தவிர மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள 5 லட்சத்திற்கும் அதிகமான கேமராக்களை இந்த அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும். ஐதராபாத் நகரில் நுழையக்கூடிய ஒவ்வொரு வாகனங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும்.

    பேரழிவு ஏற்பட்டால் அனைத்து செயல்பாடுகளையும் மையமாக கட்டுப்படுத்தும் வகையில் இந்த அறை அதிநவீன வசதிகளுடன் இயங்குகிறது.

    கடுமையான வானிலை நிகழ்வுகளை முன்கூட்டியே கணிக்கக்கூடிய வானிலை முன்னறிவிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இந்த புதிய அலுவலகம் தெலுங்கானா மாநிலத்துக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஹெலிகாப்டர் மீண்டும் 2 முறை அதே பகுதியில் தாழ்வாக பறந்து சென்று வந்தது.
    • போலீசார் தாழ்வாக பறந்தவாறு சுற்றி வந்த ஹெலிகாப்டர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனி பகுதியில் இன்று ஒரு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது.

    குடியிருப்பு மற்றும் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் கப்பற்படை தளத்திற்கு சொந்தமான வளாக பகுதி உள்ள ரெட்டியார்பட்டி பகுதியில் அந்த ஹெலிகாப்டர் பறந்ததால் பரபரப்பு நிலவியது.

    இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தாழ்வாக பறந்த ஹெலிகாப்டரை தங்களது செல்போன்களில் வீடியோ, புகைப்படங்கள் எடுத்தனர். அந்த ஹெலிகாப்டரின் இறக்கை அதிவேகமாக சுழன்றது.

    அந்த ஹெலிகாப்டர் மீண்டும் 2 முறை அதே பகுதியில் தாழ்வாக பறந்து சென்று வந்தது. இது தொடர்பாக அப்பகுதி மக்கள் பெருமாள்புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன் பேரில் போலீசார் தாழ்வாக பறந்தவாறு சுற்றி வந்த ஹெலிகாப்டர் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த ஹெலிகாப்டர் ஐ.என்.எஸ். வளாகத்துக்கு வந்ததா? அவ்வாறு வந்ததெனில் தாழ்வாக பறந்ததன் காரணம் என்ன? என்பது குறித்தும் அவர்கள் விசாரித்து வருகின்றனர்.

    இந்த ஹெலிகாப்டர் இன்று காலை கூடங்குளம், வள்ளியூர் பகுதிகளிலும் தாழ்வாக பறந்து வந்துள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக கூடங்குளத்தில் இழுவை கப்பல் தரை தட்டி நிற்கும் நிலையில் அதில் இருக்கும் நீராவி ஜெனரேட்டர்களை வான் வழியாக மீட்பதற்காக இந்த ஹெலிகாப்டர் வர வழைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    ×