search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலையோர வியாபாரி"

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
    • பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம்.

    திருப்பூர்,ஆக.22-

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பூர் பார்க் ரோடு அருகில் உள்ள கே.எஸ்.ஆர்., திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாரிபாரிகளுக்கு பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் போது இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம்.அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் போது 3-வது கடன் ரூ .50,000 பெறலாம்.அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

    கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்,ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல்போன். மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, ஆர்.கே. ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் நிரந்தரமாக செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    • முடி திருத்துவோர், வீட்டு வேலை செய்வோர் உள்ளிட்டோர் இதில் பதியலாம்.
    • வழிகாட்டுதலை மத்திய அரசு வகுக்க வேண்டியது, அவசியமாகியுள்ளது.

    திருப்பூர் :

    அமைப்பு சாரா தொழிலாளர் மேம்பாட்டிற்காக, இ - ஷ்ராம் எனப்படும் அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தை, மத்திய தொழிலாளர் நலத்துறை செயல்படுத்துகிறது.வருமான வரி செலுத்தாத, பி.எப்., மற்றும் இ.எஸ்.ஐ., பங்களிப்பு இல்லாத ஊழியர்கள், தொழிலாளர்களை இத்தளத்தில் பதிவு செய்வதே இதன் நோக்கம்.அந்தந்த நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி நிர்வாகங்களின் ஒத்துழைப்பு மற்றும் பரிந்துரை அடிப்படையில், 16 முதல் 59 வயதுக்குட்பட்ட துப்புரவு, தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள் உள்ளிட்ட சிறு வியாபாரிகள், விவசாயம், கட்டுமானம், கைத்தறி, தச்சு, சிற்பம், கட்டட தொழிலாளி, பெயின்டர் உள்ளிட்ட கூலித் தொழிலாளர்கள், முடி திருத்துவோர், வீட்டு வேலை செய்வோர் உள்ளிட்டோர் இதில் பதியலாம்.

    ஆங்காங்கே உள்ள பொது சேவை மையங்கள் மூலமும் தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆங்காங்கே நடத்தப்படும் சிறப்பு முகாம் மூலமும் இ-ஷ்ராம் தளத்தில், பயனாளிகள் இணைக்கப்படுகின்றனர்.அவர்களுக்கு காப்பீடு உள்ளிட்ட சில சேவைகள் வழங்கப்பட உள்ளன. இதில் சாலையோர வியாபாரிகளை திட்டத்தில் இணைப்பதில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் சார்பில் ஏற்கனவே, சாலையோர வியாபாரிகளுக்கு மத்திய அரசின் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    கொரோனாவுக்கு பின் சாலையோர வியாபாரிகள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.குறிப்பாக, பிரதான சாலைகள் மற்றும் கிராமப்புற சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமானோர் சாலையோர கடைகளை அமைத்துள்ளனர். இதனால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல், விபத்து கூட நேரிடுகிறது.இவர்களை இ-ஷ்ராம் தளத்தில் இணைப்பதா, அப்படி இணைத்தால் அவர்களின் ஆக்கிரமிப்புக்கு துணை போனதாக சர்ச்சை எழுமே என்ற குழப்பம் உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    உள்ளாட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், பலர் மத்திய அரசின் சலுகைகளை பெறும் நோக்கில், தவறான தகவல் அளித்து போலியாக சாலையோர வியாபாரிகளாக தங்களை இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பும் உள்ளது.சாலையோர வியாபாரிகளை முறைப்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத, அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்களால் அனுமதிக்கப்பட்ட வியாபாரிகளை மட்டும், இ-ஷ்ராம் திட்டத்தில் இணைப்பதற்கான வழிகாட்டுதலை மத்திய அரசு வகுக்க வேண்டியது, அவசியமாகியுள்ளது என்றனர்.

    • போக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் சாலையோரம் பழங்களை வியாபாரம் செய்து வருகிறோம்.
    • அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலன் திருப்பூர் மாவட்ட வருவாய்த்துைற அதிகாரியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    எங்கள் சங்கத்தை சேர்ந்த வியாபாரிகள் திருப்பூர்பல்லடம் ரோடு தெற்கு உழவர்சந்தை அருகே சாலையோரம் காலை 4மணி முதல் 8மணி வரை பழங்களை விற்பனை செய்து வருகிறோம். ேபாக்குவரத்திற்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்து வருகிறோம். கடந்த 29-6-2022 அன்று அரசு அதிகாரிகள் சாலையோரம் வியாபாரம் செய்யக்கூடாது, உழவர்சந்தை வியாபாரம் பாதிப்பதாக தெரிவித்துள்ளனர். உழவர்சந்தைக்கு 100 மீட்டர் தொலைவில் உள்ள சில தனியார் கடை உரிமையாளர்கள் நாங்கள் காலை 9மணிக்கு மேல்தான் திறப்போம். அதுவரை கடைவாசலில் வியாபாரம் செய்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். அதன்பேரில் வியாபாரம் செய்து வந்த நிலையில் சாலையோர கடைகளை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி உள்ளது.

    இதனால் சிறு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து சாலையோர சிறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.  

    • விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு வார காலமாக சாலையோரம் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டது .
    • கடை அமைப்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் பல்லடம் சாலை தென்னம்பாளையம் உழவர் சந்தைக்கு அருகாமையில் சாலையோரங்களில் வியாபாரிகள் கடை அமைத்து காய்கறிகள் விற்பனை செய்து வந்தனர்.

    இந்தநிலையில் விவசாயிகளின் எதிர்ப்பு காரணமாக கடந்த ஒரு வார காலமாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையோரம் கடை அமைக்க தடை விதிக்கப்பட்டது . மேலும் கடை அமைப்பவர்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் ஏற்கனவே சாலையோரங்களில் உழவர் சந்தையில் இருந்து 100 மீட்டர் அப்பால் வியாபாரம் செய்து வந்ததைப் போல தற்போதும் அனுமதி வழங்கிட வேண்டும் , காலை 4 மணி முதல் 8 மணி வரை வியாபாரம் செய்ய அனுமதி வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ,டி,யு. சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான சாலையோர வியாபாரிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ×