search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோர வியாபாரிகள் கடன் பெற  விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது
    X

    சாலையோர வியாபாரிகள் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது

    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
    • பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம்.

    திருப்பூர்,ஆக.22-

    திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடன் பெற விண்ணப்பங்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம் நாளை 23-ந்தேதி (புதன்கிழமை ) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருப்பூர் பார்க் ரோடு அருகில் உள்ள கே.எஸ்.ஆர்., திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சிக்குப்பட்ட பகுதிகளில் வியாபாரம் செய்யும் சாலையோர வியாரிபாரிகளுக்கு பாரத பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தின் மூலம் முதல் கடன் ரூ.10,000 பெறலாம். அதனை குறைந்தபட்சம் 10 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் போது இரண்டாவது கடன் ரூ.20,000 பெறலாம்.அதனை குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் திரும்ப செலுத்தும் போது 3-வது கடன் ரூ .50,000 பெறலாம்.அதனை வங்கிகளின் மூலம் வழங்கப்படும் காலத்திற்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

    கடன் பெற விருப்பம் உள்ள சாலையோர வியாபாரிகள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:ஆதார் அட்டை நகல்,வாக்காளர் அடையாள அட்டை நகல்,வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம்,ஆதார் அட்டையில் இணைக்கப்பட்டுள்ள செல்போன். மேற்கண்ட ஆவணங்களுடன் அவினாசி ரோடு, ஆர்.கே. ரெஸிடென்சி எதிர்புறம் மற்றும் வாலிபாளையம் மாநகராட்சி பள்ளி வளாகம் ஆகிய இடங்களில் நிரந்தரமாக செயல்பட்டு வரும் நகர்புற வாழ்வாதார மையத்தில் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் தகவலுக்கு மாநகராட்சி மைய அலுவலகத்தில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 9944054060 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    எனவே திருப்பூர் மாநகராட்சி சாலையோர வியாபாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×