search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "penalty"

    • பாளையங்கால்வாய் பகுதியில் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
    • அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி பாளையங்கால்வாய் பகுதியில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி துணை ஆணையர் தாணுமூர்த்தி மற்றும் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனைப்படி மேலப்பாளையம் மண்டல பகுதிகளில் சுகாதார அலுவலர் அரசகுமார், சுகாதார ஆய்வாளர் நடராஜன் மற்றும் தூய்மை இந்தியா திட்டப் பரப்புரையாளர்கள் ஆகியோர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது மேலப்பாளையம் பகுதிகளில் கால்வாய் பகுதியில் குப்பையை கொட்டியவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது .

    மேலும் பொது இடங்களிலும், கால்வாய் களிலும் குப்பைகளைக் கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

    • ஆம்னி பஸ்கள், டாக்சிகள், லோடுகேரியர் என 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டது.
    • இனி வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை நகர பகுதியில் முக்கிய சாலைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. புதுவை வடக்கு, கிழக்கு போக்குவரத்து எஸ்.பி. மாறன் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர்கள் செந்தில், கீர்த்திவர்மன் தலைமையி லான போலீசார் முருங்கப்பாக்கம், நயினார்மண்டபம், லாஸ்பேட்டை பகுதியில் முக்கிய வீதிகளில் நிறுத்தி யிருந்த வாகனங்களை அகற்றினர்.

    புதுவை-முதலி யார்பேட்டை கடலூர் சாலை, உப்பளம் அம்பேத்கர் சாலையில் சாலையோரம் நிறுத்த ப்பட்டிருந்த டிராவல்ஸ் வாகனங்கள், ஆம்னி பஸ்கள், டாக்சிகள், லோடுகேரியர் என 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் கண்டறியப்பட்டது.

    பொதுமக்ளுக்கும், போக்கு வரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த 30 வாகனங்களுக்கு அபராத நோட்டீஸ் வழங்கப்பட்டது. இனி வாகனங்களை சாலையில் நிறுத்தக்கூடாது என உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

    • கரூரில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 1,204 பேர் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது
    • வாகன விதி மீறலில் ரூ.13.70 லட்சம் அபராதம் வசூல்

    கரூர்,

    குளித்தலை காவல் உட்கோட்டத்தில் குளித்தலை, தோகைமலை, லாலாப் 'பேட்டை, மாயனூர், சிந்தாமணிப்பட்டி, பாலவிடுதி ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குளித்தலை போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாத வாகன சோதனையில் லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டியது, ஓட் டுநர் உரிமம் இல்லாதது, தலைக்கவசம் அணியாதது, காப்பீடு இல்லாதது. இருசக்கர வாகனத்தில் 3 பேர் சென்றது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, உரிய நம்பர் பிளேட் பொருத்தாமல் இருந்தது. தடை செய்யப்பட்ட இடத்தில் வாகனத்தை நிறுத்தியது. சீட் பெல்ட் அணியாதது போன்ற பல்வேறு விதிமீற லில் ஈடுபட்ட 1,204 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டு ரூ.13 லட்சத்து 70 ஆயிரம் அபராதம் விதிக் கப்பட்டுள்ளது. இத்தகவலை குளித் தலை போக்குவரத்து காவல் ஆய்வாளர் நாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

    • 259 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 201 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
    • 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்பட்டது.

    சென்னை:

    சென்னை 1,2 மற்றும் 3 -ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்கள்(அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சுதந்திர தின விடுமுறை நாளில் தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள்(தேசிய பண்டிகை விடுமுறை) சட்டம் 1958-ன் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள 324 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் 257 கடைகளில் முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

    259 உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 201 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதேபோல் 21 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 7 நிறுவனங்களில் குறைபாடுகள் காணப்பட்டது.

    இதையடுத்து மொத்தம் 465 நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சென்னை 3-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) எஸ்.நீலகண்டன் கூறுகையில், தேசிய விடுமுறை தினத்தன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கவேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காமல் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு வழங்க வேண்டும்.

    இதுபற்றி தொழிலாளர் உதவி ஆணையர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவேண்டும். அவ்வாறு அளிக்காத 465 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.

    • மாடு முட்டி சிறுமி காயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் சார்பில் வழக்குபதிவு செய்து அபராதம் வசூல் செய்யப்படும்.

    சீர்காழி:

    சீர்காழி நக ர்மன்ற தலைவர் துர்காராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிப்பதாவது:-

    சென்னையில் மாடு முட்டி பள்ளி சிறுமி காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இது போன்ற சம்பவம் நடைபெறாது இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளது.

    சீர்காழி நகரில் இது போன்று பொதுமக்கள், போக்குவரத்திற்கும், வாகனஓட்டிகளுக்கும் இடையூறாக கால்நடைகள் சுற்றிதிரிகிறது.

    கால்நடை உரிமையாளர்கள் தங்க ளது கால்நடைகளை தொழுவத்தில் கட்டி பராமரிக்கவேண்டும்.

    மாறாக மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக கால்நடைகளை சாலைகளில் திரியவிட்டால், சீர்காழி நகராட்சி சார்பில் காவல்துறை உதவியோடு கால்நடைகளை பிடித்து மயிலாடுதுறை கோசாலையில் விடப்படும்.

    மேலும் கால்நடை உரிமையாளர் மீது காவல்துறை சார்பில் வழக்குபதிவு செய்து அபரா தம் வசூல் செய்ய ப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்ப ட்டுள்ளது.

    • 2 தனியார் பஸ் ஊழியர்களுக்குமிடையே நேரத்தகராறு நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • பண்ருட்டிக்கு திரும்பி வரும் போது போலீஸ் நிலையம் வர வேண்டுமென கூறி அனுப்பிவைத்தார்.

    கடலூர்:

    கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு தனியார் பஸ் நேற்று புறப்பட்டது. நெல்லிக்குப்பம் பகுதியில் சாலை பணிகள் நடப்பதால், இந்த பஸ் மாற்று பாதையில் சென்றது. இதனால் காலதாமதம் ஏற்பட்டது. இந்த பஸ் நேற்று மாலை பண்ருட்டி அருகே தட்டாஞ்சாவடி அருகில் சென்றது. அப்போது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பஸ், கள்ளக்குறிச்சி பஸ்சின் குறுக்கே நிறுத்தப்பட்டது. இரண்டு தனியார் பஸ் ஊழியர்களுக்குமிடையே நேரத்தகராறு நடந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்த பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார், தனியார் பஸ் ஊழியர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார். மேலும், பயணிகளை இறக்கிவிட்டு பண்ருட்டிக்கு திரும்பி வரும் போது போலீஸ் நிலையம் வரவேண்டுமென கூறி அனுப்பிவைத்தார். இதையடுத்து இன்று காலை 2 தனியார் பஸ் ஊழியர்கள் பண்ருட்டி போலீஸ் நிலையம் வந்தனர். அங்கு பணியில் இருந்த போலீசார் பஸ் ஊழியர்களுக்கு அபராதம் விதித்து வசூலித்தனர். மேலும், பொதுமக்களுக்கும், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துக் கொள்ளக் கூடாதென எச்சரித்து அனுப்பினார்கள்.

    • ரெயில்களில் டிக்கெட் இன்றியும் முறைகேடாகவும் பயணம் செய்யும் நபர்களை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
    • சேலம் கோட்டத்தில் கோட்ட மேலாளர் பங்கஜ்கு மார் சின்கா உத்தரவின் பேரில் முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சேலம்:

    நாடு முழுவதும் ரெயில்களில் டிக்கெட் இன்றியும் முறைகேடாகவும் பயணம் செய்யும் நபர்களை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் சேலம் கோட்டத்தில் கோட்ட மேலாளர் பங்கஜ்கு மார் சின்கா உத்தரவின் பேரில் முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    3 ஆயிரம் சோதனை

    அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட சோத னைகள் நடத்தப்பட்டன. இதில் டிக்கெட் இன்றி பயணித்த 10 ஆயிரத்து 415 பேருக்கு ரூ. 78.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

    அதே போல முன்பதி வில்லா டிக்கெட் எடுத்து கொண்டு முன் பதிவு பெட்டியிலும், 2-ம் வகுப்பு முன் பதிவு டிக்கெட் எடுத்து கொண்டு ஏ.சி. பெட்டி களிலும் முறைகேடாக பயணித்த 5 ஆயிரத்து 890 பேரிடம் இருந்து ரூ.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    இது தவிர ரெயில்களில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்து சென்றதாக 41 பயணிகளுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ரூ.1 கோடியே 9 லட்சம்

    அதன்படி கடந்த மாதம் மட்டும் மொத்தம் 16 ஆயி ரத்து 346 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 877 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சோதனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • உணவு பாதுகாப்பு தரநிலை சட்டம் 2006ன் படி உணவு பாதுகாப்புத்துறை அபராதம் விதிக்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.
    • அபராதம் அனைத்து சம்மந்தப்பட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தின் கணக்கில் வரைவோலை மூலம் செலுத்தப்பட வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

    அதற்கேற்ப ஓட்டல்கள், சிறுநிறுவனங்கள், தெருவோர பெட்டிக்கடைகள், சிற்றுண்டி கடைகள் என எங்கு பார்த்தாலும் புற்றீசல்கள் போல பெருகிவிட்டது. நடைபாதைகள் முழுக்க கடைகளாகவே காட்சியளிக்கிறது.

    இதுபோன்ற சூழலில் தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கலப்பட உணவுகள் குறித்து பொது மக்களிடமிருந்து அரசுக்கு தொடர்ச்சியான புகார்கள் வந்து கொண்டிருந்தது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷவர்மா உணவு சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்டோருக்கு உணவு விஷமாக மாறி உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இப்படி குறிப்பிட்ட நாளுக்கு மேல் பதப்படுத்தப்பட்ட சிக்கன், மீன், இறைச்சி போன்ற உணவகங்களில் பயன்படுத்தப்படுவதால் பொது மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுகிறது.

    இது குறித்து அரசின் கவனத்து பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கொண்டு சென்றனர். இதற்கிடையே உணவு பாதுகாப்பு தரநிலை சட்டம் 2006ன் படி உணவு பாதுகாப்புத்துறை அபராதம் விதிக்க கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கியுள்ளார்.

    தரநிலை சட்டத்தை மீறி கலப்படம் செய்வோருக்கு பல அடுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சிறு உற்பத்தியாளர்கள் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், முதல்முறை ரூ.3 ஆயிரமும், 2-ம் முறை ரூ.6 ஆயிரமும், 3-வது முறை ரூ.20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    அதேபோல் தற்காலிக சிறு கடை வைத்திருப்போர் (சிறிய சில்லரை விற்பனையாளர்கள்) கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால், முதல்முறை என்றால் ரூ.1000, 2-வது முறை ரூ.2 ஆயிரம், மூன்றாவது முறை ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    ஒரு நாளைக்கு 500 லிட்டர் பால் வரை கையாளும் நிறுவனங்கள் கலப்படம் செய்தால் முதல்முறை ரூ.2 ஆயிரமும், 2-வது முறை ரூ.4 ஆயிரம், 3-வது முறை ரூ.20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    இறைச்சி கடைகளில் ஒரு நாளைக்கு 10 சிறு விலங்குகள்(ஆடு,மாடு), 50 கோழிகள் வரை விற்கும் நிறுவனங்கள் முதல்முறை ரூ.2 ஆயிரம் அபராதம், 2-வது முறை ரூ.4 ஆயிரம் அபராதம், 3-வது முறை ரூ.20 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும்.

    பதிவு பெறாமல் இயங்கும் கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். தடை செய்யப்பட்ட பொருட்களை விற்கும் வணிக நிறுவனங்களுக்கு முதல்முறை ரூ.5 ஆயிரமும், 2-வது முறை ரூ.10 ஆயிரமும், மூன்றாவது முறை என்றால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

    உணவுக்கு பயன்படுத்தப்படாத தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அது மட்டுமல்லாமல் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும்.

    உணவுகளில் தடை செய்யப்பட்ட நிறமிகள் பயன்படுத்தினால் ரூ.20 ஆயிரம், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இந்த அபராதம் அனைத்து சம்மந்தப்பட்ட மருத்துவம் மற்றும் பொது சுகாதாரத்தின் கணக்கில் வரைவோலை மூலம் செலுத்தப்பட வேண்டும்.

    இந்த ஆணை உடனடியாக அமலுக்கு வருவதாக ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கான ஆணையை சுகாதாரத்துறை சார்பு செயலர் கந்தன் வெளியிட்டுள்ளார்.

    • போக்குவரத்து துறை எச்சரிக்கை
    • புதுப்புது டிசைன்களில் நம்பர்களை ஒட்டிச்செல்கின்றனர். பல வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் பயன்படுத்தப் படுகிறது.

    புதுச்சேரி:

    இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பதிவெண் நம்பர் பிளேட் பயன்படுத்த போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவுக்கு பின் உயர் பாதுகாப்பு பதிவெண் நம்பர் பிளேட் பொருத்தப் பட்டு வந்தது. இது மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். நம்பர் அளவு மோட்டார் வாகன சட்டப்படி இருக்கும். 20 மி.மீ. அகலம், 20 மி.மீ. உயரத்தில் அசோக சக்கிரத்தின் குரோமியம் ஹாலோகிராம் முத்திரையும் பதிக்கப்படும். மின்னணு முறையில் இணைக்கப்பட்ட இது வாகன திருட்டை தடுக்கவும் உதவும்.

    இந்நிலையில் உயர்பாது காப்பு நம்பர் பிளேட் புதுவையில் கட்டாய மாக்கப்பட வில்லை. இதனால் பலரும் புதுப்புது டிசைன்களில் நம்பர்களை ஒட்டிச்செல்கின்றனர். பல வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் பயன்படுத்தப் படுகிறது.

    இதுகுறித்து போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பின் புதுவையில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் தங்கள் வாகன நம்பர் பிளேட் சேதமடைந்தால் புதிய உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் வாங்காமல், தனியார் ஸ்டிக்கர் கடைகளில் பதி வெண்ணை ஒட்டுகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பா னது. வாகனம் வாங்கிய இடத்தில் புதிய நெம்பர் பிளேட் கோரினால் அவை தயாரித்து வழங்கப் படும்.

    வாகனத்தில் உயர் பாதுகாப்பு பதிவெண் நம்பர் பிளேட் இல்லா விட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • சிவகங்கை, காரைக்குடியில் முத்திரையிடப்படாத தராசுகளை பயன்படுத்திய வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • ெதாழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளது.

    சிவகங்கை

    சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த், சென்னை சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி லட்சுமிகாந்தன் ஆணையின்படியும் மதுரை கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன், மதுரை தொழிலாளர் இணை ஆணையர் சுப்பி ரமணியன் ஆலோசனை யின் பேரில், சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தலைமையில் தொழி லாளர் துணை ஆய்வாளர் வேலாயுதம், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் தீனதயாளன், வசந்தி ஆகியோர் தேவகோட்டை, காரைக்குடி பஸ் நிலையங்க ளின் அருகில் உள்ள கடைகளிலும் மற்றும் கடைநிறுவனங்களிலும், சிறப்பு கூட்டாய்வு மேற் கொண்டனர்.

    இதில் முத்திரை யிடப்படாத மின்னனு தராசுகளை பயன்படுத்திய 4 உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    மேலும் பொட்டலப் பொருட்களில் விபரங்கள் இல்லாமல் விற்பனை செய்த 3 நிறுவன உரிமையா ளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் பட்டது. மேலும் 6 மின்னனு தராசுகள், 3 இரும்பு எடை கற்கள் பறிமுதல் செய்யப் பட்டன.

    முத்திரையிடப்படாமல் எடையளவுகள் பயன்படுத் தினால் ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப் படும், மின்னனு தராசுகள் வருடத்திற்கு ஒரு முறையும். விட்டத்தராசுகள் மற்றும் படிக்கற்கள் 2 வருடத்திற்கு ஒருமுறையும் முத்திரை யிடப்பட வேண்டும். அதன் சான்றிதழை உடன் வைத்தி ருக்க வேண்டும்.

    பொட்டலப் பொருட்க ளில் முக்கிய விபரங்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். இல்லையெனில் ரூ.5ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.

    இந்த தகவலை சிவகங்கை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

    • மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது.
    • மோட்டார் சைக்கிளில் 3 நபராக செல்லக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் புவனகிரி வெள்ளாற்று பாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திடீரென்று அங்கு வந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி ரகுபதி இந்த பகுதியில் பல்வேறு குற்றசெ யல்கள் நடப்பதாகவும், மது போதையில் வாகனங்கள் ஓட்டி விபத்துகள் அதிகமாக நடைபெறுவதாகவும் அந்த பகுதியில் ரோந்து பணிகளை தீவிர படுத்த போலீசாருக்கு உத்தவிட்டார். மேலும் அந்த பகுதி வழியாக வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்யவும் கூறினார். அப்போது அந்த பகுதி வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தபோது அவர்கள் மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தது தெரியவந்தது. 

    இதையடுத்து மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த 8 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து தலா 10 ஆயிரம் வீதம் 80 ஆயிரம் அபராதம் விதித்தனர். பின்னர் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 3 நபராக வந்தவர்களை நிறுத்தி கேட்டபோது அதற்கு அவர்கள் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறினார். இருந்தபோதிலும் அவர்களை இதுபோன்று மோட்டார் சைக்கிளில் 3 நபராக செல்லக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    • கழிவுநீா் அகற்றும் வாகனங்களை இயக்குவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
    • கழிவுநீா் அகற்றும் வாகனங்களை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    வெள்ளக்கோவில்:

    வெள்ளக்கோவிலில் கழிவுநீா் அகற்றும் வாகனங்களை இயக்குவதற்கு உரிய அனுமதி பெற வேண்டும் என நகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    இது குறித்து வெள்ளக்கோவில் நகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

    குடியிருப்புகள், வணிக வளாகங்களில் இருந்து கழிவுநீா் எடுப்பதற்கும், அவற்றை வாகனங்களில் எடுத்து செல்வதற்கும், அப்புறப்படுத்துவதற்கும் தமிழ்நாடு அரசு புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. கழிவுகளை பாதுகாப்பற்ற வகையில் அப்புறப்படுத்துவது தொழிலாளா்களின் உயிருக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஆபத்தானது.

    எனவே கழிவுநீா் அகற்றும் வாகனங்களை நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். 2 ஆண்டுகளுக்கான பதிவுக் கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவா் தவிர மற்றவா்கள் வாகனத்தை இயக்கக் கூடாது.

    விதிகளை மீறி இயக்கினால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×