search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "penalty"

    • சிவகங்கையில் வீதிமீறலில் ஈடுபட்ட பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • 2 அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆர்.டி.ஒ தலை மையிலான குழுவினர் சோதனை செய்ததில் விதி முறைகளை பின்பற்றாமல் இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்து களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப் படும் பேருந்துகளில் அரசு விதிமுறைகளை பின்பற்றா மல் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது.

    மேலும் போக்குவரத்து துறை ஆணையர் சார்பில் வாகனங்களை அடிக்கடி போக்குவரத்து துறையினர் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்தநிலையில் சிவகங்கை வட்டார போக்கு வரத்து அலுவலர் மூக்கன் மற்றும் ஆய்வாளர் மாணிக் கம் தலைமையிலான குழுவினர் சிவகங்கை பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டனர்.

    இதில் 2 அரசு பேருந்துகளும், 5 தனியார் பேருந்துகளிலும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் மற்றும் அதிக ஒளி வீசும் விளக்குகள் பயன்படுத்தப்பட்டதும் அதே போல் ஓட்டுநர்கள் தங்களது பெயர்கள் பொறிக்கப்பட்ட பேட்ச்கள் அணியாமல் விதிமுறை களை மீறியது தெரியவரவே அவர்களுக்கு ரூ17.500 அபராதம் விதிக்கப்பட்டது.

    • மதுரை நகரில் 2 நாட்களில் விதிகளை மீறிய 3,773 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
    • போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரை நகர் பகுதியில் நாளுக்கு நாள் வாகன பெருக்கம் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றாற் ேபால் சாலைகளில் விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுவோரின் எண்ணிக்கை அதிகரித்து ள்ளது.

    அதிவேகமாக செல்லு தல், ஹெல்மெட் அணியா மல் செல்வது, அனுமதிக்கப் பட்ட நபர்களை விட அதிகளவில் வாகனங்களில் செல்வது உள்ளிட்ட விதி மீறல்களால் விபத்துகளும் அதிகரித்து உயிர்ப்பலி ஏற்படுகிறது.

    குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி சாகசம் செய்வது அதிகரித்துள்ளது.

    மதுரை நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தர விட்டார். அதன் அடிப்படை யில் நகரில் கடந்த 24 மற்றும் 25-ந்தேதிகளில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வாகன ஓட்டிய58 பேர் மீதும், குறைபாடுகொண்ட நம்பர் பிளேட்டுடன் 756 வாக னங்கள் மீதும், சைலன் சரில் மாற்றம்செய்து அதிக சத்தத்துடன் ஓட்டிச் சென்ற 28 வாகனங்கள் மீதும் மொத்தம் 842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது .அக்டோபர் மாதத்தில் மட்டும் விதிமீறி ஓட்டப்பட்ட மொத்தம் 3773 வாகனங்கள் ஓட்டிச்சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதமும் விதிக்கப் பட்டது. இனி வரும் நாட்களில் இந்த சோதனை நடவடிக்கைகள் தொடரும் எனவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மளிகை கடையில் புகையிலை பொருட்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    • உணவு பாதுகாப்பு அதிகாரி காளிமுத்து தலைமையில் சோதனை நடந்தது.

    பொள்ளாச்சி,

    தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இந்தநிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூரில் உள்ள சில மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி காளிமுத்து தலைமையில் அதிகாரிகள் மற்றம் போலீசார் அந்த பகுதி களில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.

    இந்த சோதனையில் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மளிகை கடை நடத்தி வரும் வின்சென் என்பவரது கடையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் ரியாஸ் என்பவரது மளிகை கடையில் இருந்தும் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொரு ட்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    • மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள்.
    • ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகரில் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுப்பதற்காக போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மாநகராட்சி ஊழியர்கள் ரோட்டில் திரியும் மாடுகளை பிடித்து சென்று தங்களது கட்டுப்பாட்டில் வைத்து அபராதமும் விதித்து வருகிறார்கள். இருப்பினும் மாடுகள் ரோட்டில் நடமாடுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதன் காரணமாகவே ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டி தள்ளிய சம்பவம் நடைபெற்று உள்ளது. அதே பகுதியில் ஏற்கனவே போலீஸ்காரர் உள்பட 6 பேரை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாடு முட்டி தள்ளியது. நங்கநல்லூர் பகுதியிலும் இதே போன்று 3 பேரை மாடு முட்டு தள்ளிய சம்பவமும் நடை பெற்று உள்ளது. இந்த சம்பவங்களில் போலீசாரும் மாநகராட்சி அதிகாரிகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். ஐஸ்அவுஸ் பகுதியில் முதியவரை மாடு முட்டிய சம்பவத்துக்கு பிறகு அந்த பகுதியில் போலீஸ் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. மாநகராட்சி அதிகாரிகளும் ரோந்து சென்று ரோட்டில் சுற்றித்திரிந்த மாடுகளை பிடித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 30 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப பட்டு விசாரணை நடை பெற்று வருகிறது.

    இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, சென்னையில் மாடுகளை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கைகள் தொடரும் என்று தெரிவித்தனர். இதன் மூலம் ரோட்டில் திரியும் மாடுகள் கட்டுப்படுத்தப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    • வீட்டிற்கு சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்துள்ளளார்.
    • கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த தருமகுளம் கடைவீதியில் பெருந்தோட்டத்தை சேர்ந்தவர் அசைவ உணவகம் நடத்தி வருகிறார்.

    இந்நிலையில், இவரது கடையில் கீழப்பெரும்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் நேற்று பரோட்டா வாங்கி சென்றுள்ளார்.

    வீட்டில் சென்று சாப்பிடுவதற்காக பரோட்டா மற்றும் குருமா பார்சலை பிரித்து பார்த்த போது குருமாவில் பூரான் ஒன்று இறந்த நிலையில் கிடந்துள்ளது.

    இதனை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இதுகுறித்து கடையின் உரிமையாளரிடம் கேட்டபோது அவர்கள் முறையாக பதில் அளிக்க வில்லை என கூறப்படுகிறது.

    இதனைஅடுத்த மூர்த்தி இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் அளித்ததார்.

    புகாரின்பேரில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர், கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி கடைக்கு அபராதம் விதித்தனர்.

    மேலும், கடையை முறையாக பராமரிக்காததால் அதனை சீரமைத்த பின்னரே கடையை திறக்க வேண்டும் எனக்கூறி கடையை மூடி சென்றனர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • பச்சைக்கிளிகளை கூண்டில் அடைத்து வளர்த்த தனியார் பள்ளிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • பிடிபட்ட 5 பச்சை கிளிகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வனத்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வை தொடர்ந்து, வன உயிரி னங்களை வளர்ப்பதும் மற்றும் அவற்றிற்கு உணவ ளிப்பதும் குற்றம் என்பதை உணர்ந்து பொதுக்கள் பலர் பச்சைக்கிளிகளை வனத்துறையில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் வனத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி. ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஆணையின் படி, ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் மற்றும் வனப் பணியாளர்கள் குழுவாக சென்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்ட போது வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாதுகாக்கப்பட்ட வன உயிரினமான பச்சைக் கிளிகள் 5 கூண்டில் அடைத்து வைத்திருந்தனர்.

    பச்சை கிளிகளை வளர்த்து வந்த சம்பந்தப் பட்ட பள்ளிக்கு ராமநாத புரம் மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி ரூ.75 ஆயிரம் இணக் கட்டணமாக விதிக்கப் பட்டது. பிடிபட்ட 5 பச்சை கிளிகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்கள்.

    • சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
    • குட்கா, பான் மசாலா பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் உணவு பொருட்களில் கலப்படம் உள்ளதா? என்பது குறித்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அகாரிகள் நேற்று இரவு 'திடீர்' சோதனை மேற்கொண்டனர்.

    பூந்தமல்லி, குமணன்சாவடி, கரையான்சாவடி, காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள கடைகள் உணவகங்கள், மளிகை கடை குடோன்கள் உள்ளிட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை நடந்தது.

    சில கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து குட்கா, பான் மசாலா பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 10 கடைகளுக்கு ரூ.40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூறும்போது, முதல் முறை தடை செய்யப்பட்ட பொருட்களை கடைகளில் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும். 2-வது முறை தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5 ஆயிரமும், 3-வது முறை கண்டுபிடிக்கப்பட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி தொடர்ந்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் நிரந்தரமாக அந்த கடைகள் மூடி சீல் வைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது பூந்தமல்லி உணவு பாதுகாப்புதுறை அதிகாரி வேலவன் உடன் இருந்தார்.

    • சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
    • 60 கடைகளுக்கு மேல் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் 108 வைணவ தலங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் நேரில் வந்து மொட்டை அடித்து சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். கடந்த இரண்டு வாரங்களாக தினந்தோறும் பக்தர்கள் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்த நிலையில் சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.

    இதில் மிக முக்கியமாக 3-வது சனிக்கிழமை நாளை வர உள்ளதால் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இன்று இரவு முதல் கோவிலை சுற்றி தங்கி அதிகாலையில் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி நீண்ட வரிசையில் நின்று சாமி கும்பிட்டு செல்வது வழக்கம். இதன் காரணமாக அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதோடு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு முன்னெ ச்சரிக்கை நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று மாலை தேரடி வீதியில் சுமார் 60 கடைகளுக்கு மேல் சாலையை ஆக்கிரமித்து பொருட்களை அடுக்கி வைத்திருந்தனர்.

    இது பற்றிய தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறையினர், இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள், திருப்பாதி ரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் திருவந்திபுரம் தேரடி வீதியில் ஆக்கிரமித்து அடுக்கி வைக்கப்ப ட்டிருந்த பொருட்களை உடனடியாக அகற்றி சீரமைத்தனர் . மேலும் பொதும க்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் மீண்டும் சாலை ஆக்கிரமித்து பொரு ட்களை வைத்திருந்தால் அதனை முழுவதும் பறிமுதல் செய்து அபராதம் விதித்த கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் 3-வது வாரம் வியாழக்கிழமை என்பதால் நேற்று வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்பட்டு வந்ததோடு சுமார் 5 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தியது குறிப்பிடத்தக்கதாகும். நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலை த்துறை மற்றும் போலீ சார் அதிரடியாக சாலை யில் ஆக்கிரமித்து வைத்திரு ந்ததை அகற்றிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
    • 15 ஆண்டுக்கு முன் கடன் பெற்றவர்கள் முன் அனுபவம் இல்லாத தால் தொழில்களை நடத்த முடியாமல் நலிவடைந்தனர்.

    புதுச்சேரி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி அமைச்சகம், தேசிய அட்டவணை வகுப்பினர் மேம்பாட்டுக்கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டுக்கழகம் மூலம் குறுகிய கால தொழில்கட ன்கள் வழங்கி வருகிறது. புதுவை ஆதி திராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலம் 15 ஆண்டுக்கு முன் கடன் பெற்றவர்கள் முன் அனுபவம் இல்லாத தால் தொழில்களை நடத்த முடியாமல் நலிவடைந்தனர்.

    அவர்களால் தொழில் கடனை திருப்பித்தர முடியாமல் மன உளைச்ச லோடு வாழ்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 3 நிறுவனங்களின் மூலம் கடன் பெற்ற பயனாகளிகள், அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி புதுவை முதல் அமைச்சரும் வட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம்.
    • மேலும், கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் ஏ.பி.மகாபாரதி சீர்காழி நகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் முக்கூட்டு சாலையில் இயங்கி வந்த பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, அங்கு புகையிலை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் தேனீர் கப்புகள் இருந்ததை கண்டறிந்து பெட்டிக்கடை உரிமையாளரிடம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான புகையிலை மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளரிடம் மாவட்ட கலெக்டர் எச்சரித்தார்.

    மேலும், தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்ததால் கடை உரிமையாளர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட ஈசானிய தெருவில் இயங்கி வரும் பல்பொருள் விற்பனை பெட்டிக்கடையில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, கடை உரிமையாளரிடம் தடை செய்யப்பட்ட நெகிழி பைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்க ளுக்கு தீங்கு விளைவிக்கின்ற வகையிலான போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை கண்டறியப்பட்டால் கடை சீல் வைக்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் மகாபாரதி கூறினார்.

    தொடர்ந்து, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளி சமையலறை மேற்கூரை கடந்த சில தினங்களுக்கு முன்பு இடிந்து விழுந்ததை யொட்டி, மாவட்ட கலெக்டர் துறையூர் நகராட்சி தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டு, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பள்ளி சமையலறை, புதிய கட்டிடம் கட்டுவதற்கு நகராட்சி சார்பில் எடுக்க ப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆணையரிடம் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, நகராட்சி ஆணையர் ஹேமலதா , நகர் மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன் , நகர் மன்ற உறுப்பினர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    • குட்கா பொருட்கள் விற்ற மளிகை கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டது
    • உணவு பாதுகாப்பு துறையினர் ஈஸ்வரனிடம் இருந்த சுமார் 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்

    டி.என்.பாளையம்,

    டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறை யினர் சோதனையில் ஈடுப ட்டனர். அப்போது டி.என்.பாளையம் அடுத்த வாணிப்புத்தூர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை செய்தனர். சோதனையில் ஈஸ்வரன் என்பவர் தனது மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா எனும் பான் மசாலா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.

    அதைத்தொடர்ந்து ஈஸ்வரனிடம் இருந்த சுமார் 500 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறையினர் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறையின் அலுவலர் சக்திவேல் கூறியதாவது; மளிகை கடையில் தரம் குறைவு மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தால் 94 440423 22 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார்.

    • புதிய பஸ் நிலையம் முதல் பாகாயம் வரை எச்சரிக்கை பலகை
    • தடுப்பு சுவர்களை சீரமைக்க உத்தரவு

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் பழுதடைந்த சாலைகளால் ஏற்படும் விபத்துகள், முக்கிய சாலைகளில் வாகன நிறுத்தம் இல்லாத இடங்களில் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிப்பது, சாலைகளின் பக்கவாட்டில் உள்ள கால்வாய்களில் ஏற்பட்டுள்ள சேதாரங்களை சீரமைப்பது, உடைந்த நுழைவு வாயில் மூடிகளை மாற்றுவது, இடிந்த நிலையில் உள்ள சென்டர் மீடியன்கள் மற்றும் இரும்பு தடுப்பான்களை சீர்செய்வது, கழிவுநீர் வெளியேறுவதால் சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து பாதிப்பு உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    தேசிய நெடுஞ்சா லைகளில் உள்ள அகலம் குறைவான அணுகு சாலைகளை அகலப்படுத்த வேண்டும்.

    போக்குவரத்து பணிமனை அமைந்துள்ள ரங்காபுரம் பகுதியில் உள்ள அணுகுசாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்துல்லாபுரம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் அதிக அளவில் எதிர் திசையில் வருவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே அந்த இடத்தில் புதிய அணுகு சாலையை அமைக்க வேண்டும்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் முதல் சங்கரன்பாளையம் வழியாக பாகாயம் செல்லும் சாலையில் முக்கிய சந்திப்புகள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விபத்து நடைபெறும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் ஒளி எதிரொளிப்பான்கள் அமைக்க வேண்டும்.

    அபராதம்

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றி திரியும் மாடுகளால் போக்கவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே, அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

    காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி செல்வதை தவிர்க்கும் பொருட்டு காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி உள்ள பகுதிகளுக்கு செல்லும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

    பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசுரங்களை ஒட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×