search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பச்சைக்கிளி"

    • பச்சைக்கிளிகளை கூண்டில் அடைத்து வளர்த்த தனியார் பள்ளிக்கு ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • பிடிபட்ட 5 பச்சை கிளிகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்கள்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் வனத்துறையினர் ஏற்படுத்திய விழிப்புணர்வை தொடர்ந்து, வன உயிரி னங்களை வளர்ப்பதும் மற்றும் அவற்றிற்கு உணவ ளிப்பதும் குற்றம் என்பதை உணர்ந்து பொதுக்கள் பலர் பச்சைக்கிளிகளை வனத்துறையில் ஒப்படைத்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ராமநாதபுரம் வனத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி. ராமநாதபுரம் மாவட்ட வன அலுவலர் ஆணையின் படி, ராமநாதபுரம் வனச்சரக அலுவலர் மற்றும் வனப் பணியாளர்கள் குழுவாக சென்று ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் சோதனை மேற்கொண்ட போது வன உயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி பாதுகாக்கப்பட்ட வன உயிரினமான பச்சைக் கிளிகள் 5 கூண்டில் அடைத்து வைத்திருந்தனர்.

    பச்சை கிளிகளை வளர்த்து வந்த சம்பந்தப் பட்ட பள்ளிக்கு ராமநாத புரம் மாவட்ட வன அலுவலரின் உத்தரவின்படி ரூ.75 ஆயிரம் இணக் கட்டணமாக விதிக்கப் பட்டது. பிடிபட்ட 5 பச்சை கிளிகளை பறிமுதல் செய்து வனத்துறையினர் பாதுகாப்பாக பராமரித்து வருகிறார்கள்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் வீடுகளில் பச்சைக்கிளி வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
    • கிளிகள் மற்றும் பிற உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவவுறுத்தப்பட்டது.

    ராமநாதபுரம்

    பச்சை கிளி, மைனா, பஞ்சவர்ண புறா போன்ற உயிரினங்களை வீட்டில் வளர்க்க தடை விதிக்கப் பட்டு உள்ளது. அதனை வளர்த்தால் உடனடியாக வன அலுவலகங்களில் ஒப் படைக்க வேண்டும் என்று வனத்துறையினர் தெரி வித்து உள்ளது.

    வன உயிரினப்பா துகாப்பு சட்டம் 1972-ன் படி பச்சைக்கிளி, நீல பைங்கிளி, பஞ்ச வர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, கவுதாரி, பனங் காடை போன்ற வன உயிரினங்கள் வளர்ப்பது சட்டப் படி குற்றமாகும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கக்கூடிய வன உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த சர்ச், பள்ளிவாசல்கள் மூலம் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்யப்படுகிறது.

    எனவே வளர்ப்பில் உள்ள கிளிகள் மற்றும் பிற உயிரினங்களை வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும். வனப் பணியாளர்கள் ரோந்தில் கண்டுபிடிக்கப்பட்டால் அதனை வளர்த்தவர்களுக்கு ரூ.25ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும், என்று ராமநாதபுரம் மாவட்ட வனஅலுவலர் ஹேமலதா தெரிவித்துள்ளார்.

    • பம்பை இசை, பூஜையின் போதும் கிளி தலை மீது இருந்து நகருவதே கிடையாது.
    • மாசாணி அம்மன் சுயம்புவாக தோன்றியதா கவும் கதை வரலாறுகள் உள்ளது.

    நீலாம்பூர்,

    கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ளது இருகூர் கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த மாசாணி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த மாசாணி அம்மன் சுயம்புவாக தோன்றியதாகவும் கதை வரலாறுகள் உள்ளது.

    மாதந்தோறும் அமாவாசை நாட்களில் இங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இதுதவிர வெள்ளி, செவ்வாய் தினங்களிலும் பூஜைகள் நடைபெறும்.

    இந்த கோவிலில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளியூர் பக்தர்களும் தினமும் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். ஆடி மாதம் முழுவதும் இந்த கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சைக்கிளி அமர்வது வழக்கம். இதனை பக்தர்களும் தரிசித்து செல்வார்கள்.

    இந்த ஆண்டும் அதே போல ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இந்த பூஜைகளின் போது, மாசாணியம்மன் தலையிலும், வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவன், பார்வதி ஊஞ்சலிலும் கிளி அமர்ந்து தரிசனம் தந்து வருகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற சிறப்பு பூஜையிலும் கிளி அமர்ந்து தரிசனம் கொடுத்து வருகிறது.

    இதனை காண்பதற்காகவும், கிளி அம்மன் தலையில் அமர்ந்திருப்பதை தரிசிப்பதற்காகவும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து சாமி தரிசனம் செய்து சென்றனர்.

    • கூண்டுகளில் அடைத்து வைத்து பச்சைக்கிளி வளர்த்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ராமநாதபுரம் வன அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ராமநாதபுரம்

    வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி பச்சைக்கிளி, நீல பைங்கிளி, பஞ்சவர்ண புறா, வண்ணச்சிட்டு, மைனா, கவுதாரி, பனங்காடை போன்ற வன உயிரினங்கள் வளர்ப்பது குற்றமாகும். அவ்வாறு பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கக் கூடிய வன உயிரினங்களை ஜூன் 30-ந்தேதிக்குள் வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் ஹேமலதா கடந்த மே 26-ந் தேதி அறிவித்தார்.

    அதன்படி பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்த்த 10 பச்சைக்கிளிகளை மாவட்ட வன அலுவலகம் மற்றும் வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைத்தனர்.ஒப்ப டைக்கப்பட்ட பச்சைக் கிளிகள் பராமரிக்கப்பட்டு மாவட்ட வன அலுவலர் முன்னிலை யில் வனத்தில் விடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று 2 பச்சைக்கிளிகள் மாவட்ட வன அலுவலக வனத்தில் மாவட்ட வன அலுவலரால் விடுவிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வீடுகளில் வளர்க்கும் வன உயிரினங்களை தாமாக முன்வந்து வனச்சரக அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.

    தவறும் பட்சத்தில் வனக் கோட்ட களப்பணி யாளர்களால் ரோந்து பணியின் போது கண்டு பிடிக்கப்பட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட வன அலுவலர் ஹேமலதா தெரிவித்தார்.

    ×