என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொள்ளாச்சியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற கடைகளுக்கு அபராதம்
- மளிகை கடையில் புகையிலை பொருட்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
- உணவு பாதுகாப்பு அதிகாரி காளிமுத்து தலைமையில் சோதனை நடந்தது.
பொள்ளாச்சி,
தமிழகத்தில் புகையிலை, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூரில் உள்ள சில மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரி காளிமுத்து தலைமையில் அதிகாரிகள் மற்றம் போலீசார் அந்த பகுதி களில் உள்ள மளிகை கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுகிறதா என சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் காமாட்சி அம்மன் கோவில் வீதியில் மளிகை கடை நடத்தி வரும் வின்சென் என்பவரது கடையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் ரியாஸ் என்பவரது மளிகை கடையில் இருந்தும் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொரு ட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அதிகாரிகள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி விற்ற 2 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்