என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
ஆதிதிராவிடர்கள் பாட்கோவில் பெற்ற கடனுக்கான வட்டி அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்
- விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
- 15 ஆண்டுக்கு முன் கடன் பெற்றவர்கள் முன் அனுபவம் இல்லாத தால் தொழில்களை நடத்த முடியாமல் நலிவடைந்தனர்.
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி அமைச்சகம், தேசிய அட்டவணை வகுப்பினர் மேம்பாட்டுக்கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டுக்கழகம் மூலம் குறுகிய கால தொழில்கட ன்கள் வழங்கி வருகிறது. புதுவை ஆதி திராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலம் 15 ஆண்டுக்கு முன் கடன் பெற்றவர்கள் முன் அனுபவம் இல்லாத தால் தொழில்களை நடத்த முடியாமல் நலிவடைந்தனர்.
அவர்களால் தொழில் கடனை திருப்பித்தர முடியாமல் மன உளைச்ச லோடு வாழ்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 3 நிறுவனங்களின் மூலம் கடன் பெற்ற பயனாகளிகள், அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி புதுவை முதல் அமைச்சரும் வட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்