என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
உயர்பாதுகாப்பு நம்பர் பிளேட் இல்லாவிட்டால் அபராதம்
- போக்குவரத்து துறை எச்சரிக்கை
- புதுப்புது டிசைன்களில் நம்பர்களை ஒட்டிச்செல்கின்றனர். பல வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் பயன்படுத்தப் படுகிறது.
புதுச்சேரி:
இந்தியா முழுவதும் அனைத்து வாகனங்களிலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு பதிவெண் நம்பர் பிளேட் பயன்படுத்த போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு பின் உயர் பாதுகாப்பு பதிவெண் நம்பர் பிளேட் பொருத்தப் பட்டு வந்தது. இது மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும். நம்பர் அளவு மோட்டார் வாகன சட்டப்படி இருக்கும். 20 மி.மீ. அகலம், 20 மி.மீ. உயரத்தில் அசோக சக்கிரத்தின் குரோமியம் ஹாலோகிராம் முத்திரையும் பதிக்கப்படும். மின்னணு முறையில் இணைக்கப்பட்ட இது வாகன திருட்டை தடுக்கவும் உதவும்.
இந்நிலையில் உயர்பாது காப்பு நம்பர் பிளேட் புதுவையில் கட்டாய மாக்கப்பட வில்லை. இதனால் பலரும் புதுப்புது டிசைன்களில் நம்பர்களை ஒட்டிச்செல்கின்றனர். பல வாகனங்கள் நம்பர் பிளேட் இல்லாமல் பயன்படுத்தப் படுகிறது.
இதுகுறித்து போக்கு வரத்துத்துறை அதிகாரிகள் கூறும்போது, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பின் புதுவையில் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் தங்கள் வாகன நம்பர் பிளேட் சேதமடைந்தால் புதிய உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் வாங்காமல், தனியார் ஸ்டிக்கர் கடைகளில் பதி வெண்ணை ஒட்டுகின்றனர். இது சட்டத்துக்கு புறம்பா னது. வாகனம் வாங்கிய இடத்தில் புதிய நெம்பர் பிளேட் கோரினால் அவை தயாரித்து வழங்கப் படும்.
வாகனத்தில் உயர் பாதுகாப்பு பதிவெண் நம்பர் பிளேட் இல்லா விட்டால் கட்டாயம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.






