search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "patients"

    • சிகிச்சை பெற்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய நோயாளிகள் அலறி அடித்து ஓடினார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருக்கும், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவருக்கும் இடையே விறகு போடுவதில் தகராறு ஏற்பட்டது.

    இதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. காயமடைந்த இருதரப்பின ரும் மேலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஆத்திர மடைந்த ஒரு தரப்பைச் சேர்ந்த உறவினர் நேற்று மாலை மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து சிகிச்சை பெற்றுவரும் எதிர் தரப்பினரை கம்பி, ஆயுதம் கொண்டு தாக்கினார். இதனால் வார்டில் இருந்த மற்ற நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.

    சம்பவ இடத்திற்கு வந்த துப்புரவு பணியாளர் மற்றும் காவலாளி அவர் களை தடுத்து கம்பிகளை பிடுங்கினர். கம்பியை பிடுங்கும்போது துப்புரவு தொழிலாளிக்கு காயம் ஏற்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை மருத்துவர் ஜெயந்தி மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் ெகாடுத்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • மருந்தாளுநர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
    • நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனை தொடங்கப்பட்டு 11 ஆண்டுகளாகிறது. இங்கு வெளி நோயாளிகள் பிரிவு, 300 படுக்கையறைகள், அவசர சிகிச்சை பிரிவு, தாய்-சேய் நல பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. தினமும் உள் நோயாளிகளாக ஆயிரத்தி ற்கும் மேற்பட்டோரும், வெளி நோயாளிகளாக 1200க்கும் மேற்பட்டோரும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அருகில் உள்ள புதுக்கோட்டை, ராமநாத புரம், விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்தவர்களும் இங்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்குள்ள வெளிநோயாளிகள் பிரிவில் மருந்து, மாத்திரைகள் வழங்க ஒரு இடம் மட்டுமே உள்ளது. அதிலும் 5 பேரும் மட்டுமே மருந்தாளுநராக பணிபுரிந்து வருகின்றனர்.

    இங்கு 14 பேர் பணிபுரிய வேண்டிய நிலையில் 5 பேர் மட்டும் பணிபுரிவதால் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குவதில் சிரமம் ஏற்படுகிறது. சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக நோயாளிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது.

    எனவே சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநர்கள் பற்றாக்குறையை போக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம்.
    • தொழு நோயாளிகளுக்கு சுயஉதவி மருந்து பெட்டகம் மற்றும் காலணிகள்.

    திருவோணம்:

    திருவோணம் அருகே ஊரணிபுரத்தில் டாக்டர் கலைஞர் வருமுன் காப்போம் வட்டார சுகாதார திருவிழா சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    ஊரணிபுரம் ஜோதி நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சரும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ.எஸ்.பழனிமாணிக்கம், கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

    மேலும் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகம் , கண்ணொளி காப்போம் திட்ட மூலம் பள்ளி மாணவர்களுக்கு கண்ணாடி, தொழு நோயாளிகளுக்கு சுய உதவி மருந்து பெட்டகம் மற்றும் காலணிகள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மாவட்ட சுகாதார துணை இயக்குனர் நமச்சிவாயம் திட்ட விளக்க உரையாற்றி பேசினார்.

    முகாமில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திருஞானசம்பந்தம், திருவோணம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், மருத்துவமி ல்லா மேற்பார்வையாளர், துரைராஜ், சுகாதார ஆய்வாளர் பஷீர்முகமது, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் திருவோணம் வட்டார மருத்துவ அலுவலர் காயத்ரி நன்றி கூறினார்.

    • ரூ. 20 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஆஸ்பத்திரி வளாக கட்டிடம் அமைய உள்ளது.
    • நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வளாகத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேசிய நகர்ப்புற வாழ்வார திட்டத்தின் கீழ் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட உட்புற நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் மற்றும் உறவினர்கள் தங்குவதற்கான கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு தலைமை டாக்டர் அருண் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சீர்காழி நகரசபை தலைவர் துர்கா ராஜசேகரன், துணை தலைவர் சுப்பராயன், நகராட்சி ஆணையர் வாசுதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பொறியாளர் சித்ரா அனைவரையும் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தி னராக பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்:-

    விரைவில் சீர்காழி ஆஸ்பத்திரி வளாகத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் பல்நோக்கு ஆஸ்பத்திரி வளாக கட்டிடம் அமைய உள்ளது.

    அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் வளாகத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

    விழாவில் டாக்டர் மருதவாணன், பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் ஒப்பந்தக்காரர் அன்பழகன் நன்றி கூறினார்.

    • நாள் ஒன்றுக்கு 400-க்கும் மேற்பட்டோர் பயன்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தினமும் காலையில் அரிசி கஞ்சி.

    நாகப்பட்டினம்:

    நாகை வள்ளலார் தர்ம சாலை, வள்ளலார் கருணை குழு, நாகூர் சித்திக் சேவை குழுமம், அருட்கஞ்சி குழு ஆகியவைகள் இணைந்து, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அங்கு வருகைதரும் பொது மக்களுக்கு தினமும் காலையில் அரிசி கஞ்சியை இலவசமாக வழங்குகின்றனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக இச்சேவையை செய்துவரும் இவர்கள் 1000 நாட்களை கடந்தும் இலவச சேவையை செய்து வருகின்றனர்.

    அரிசியுடன் பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், ஓமம், தேங்காய்பால், கீரை வகைகள், பூண்டு, இஞ்சி, உள்ளிட்ட 14 பொருட்களை சேர்த்து இலவசமாக வழங்கப்படும் அரிசி கஞ்சியை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி குடித்து செல்கின்றனர்.

    நாள் ஒன்றுக்கு 400 க்கும் மேற்பட்டோர் பயன்பெறுவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், கருணை யுள்ளம் கொண்டோரின் நிதி பங்களிப்பு காரணமாகவே இது சாத்தியமாகி இருப்பதாகும் தொடர்ச்சியாக இந்த சேவையை செய்வோம் என்று தெரிவித்தனர்.

    நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆயிரம் நாட்களை கடந்துள்ள வள்ளலார் அமைப்பினரின் இலவச கஞ்சி ஊற்றும் தொண்டு சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • மார்பக பரிசோதனை, வாய்ப்புண் புற்றுநோய், சிறுநீரக பரிசோதனைகள் செய்யப்பட்டது.
    • 860 வீடுகளுக்கு மருத்துவ குழுவினர் நேரில் சென்று பரிசோதனை செய்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி கிராமத்தில், மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவின்படியும், மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் குமரகுருபரன் பரிந்துரையின் பேரிலும் வட்டார சுகாதார துறை சார்பில், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமையில் மக்களைத் தேடி மருத்துவ கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.

    இதில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காச நோய், தோல்நோய், கர்ப்பப்பை பரிசோதனை, மார்பக பரிசோதனை, வாய்ப்புண் புற்றுநோய், சிறுநீரக பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி முதல் மற்றும் இரண்டாம் தவணை, பூஸ்டர் டோஸ் வழங்கப்பட்டுள்ளதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

    மக்களை தேடி மருத்துவ நோயாளிகளுக்கு அடையாள அட்டை, மருந்து பெட்டகம் கடைசியாக வழங்கிய தேதி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முட நீக்கியல் பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    இம் முகாமில் ஒவ்வொரு பணியாளருக்கும் 40 வீடு வீதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டதை தொடர்ந்து மணியிருப்பு கிராமத்தில் 252 வீடுகள், சேத்திருப்பு 136 வீடு, நாணல் படுகை188 வீடு, வெள்ளை மணல் 98 வீடு, காடுவெட்டி 186 வீடு ஆக மொத்தம் 860 வீடுகளுக்கு மருத்துவ குழுவினர் நேரில் சென்று ஒவ்வொரு நபரையும் விசாரணை செய்து பரிசோதனை செய்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

    இந்த முகாமில் மருத்துவர் மோகனா, நடமாடும் மருத்துவ குழு மருத்துவர் சிவனேசன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ், சேத்திருப்பு பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சியன், மருத்துவ சாரா மேற்பார்வையாளர் தவபாலன், சுகாதார ஆய்வாளர்கள் சுந்தரம், இள ஞ்செழியன், வேங்கட பிரசாத், வசந்த், செவிலியர்கள் அனுராதா, இந்திரா, தொழில்நுட்ப வல்லுனர் உஷா, மக்களை தேடி மருத்துவ பணியாளர்கள் மற்றும் டெங்கு கொசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்திருந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், தா.பழூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தினமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து, பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தா.பழூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தனர்.

    அவர்கள் மருத்துவ சீட்டுகளை பெற்று, டாக்டரிடம் சென்றனர். அப்போது அங்கிருந்த டாக்டர், பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்காமல், வேறு டாக்டர் வந்ததும் காண்பித்துக் கொள்ளுங்கள் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள் பொறுமை இழந்து அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தின் முன்பு திடீரென முற்றுகை போராட்டம் நடத்தினர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த வட்டார மருத்துவ அலுவலர் தட்சிணாமூர்த்தி, போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்த டாக்டர், அவசர நோயாளிக்கு சிகிச்சை அளித்துவிட்டு, அப்போதுதான் வந்த சூழ்நிலையில் திடீர் மன அயற்சி காரணமாக நோயாளிகளுக்கு மருத்துவம் அளிக்க தயங்கியதாகவும், இது பற்றி உடனடியாக தன்னிடம் சொன்னதால், தான் மருத்துவம் அளிக்க வந்துவிட்டதாகவும் டாக்டர் தட்சிணாமூர்த்தி, நோயாளிகளிடம் தெரிவித்தார்.

    இதனால் சமாதானம் அடைந்த நோயாளிகள், டாக்டரிடம் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் நிக்கோலஸ், ரவிச்சந்திரன், பாலச்சந்திரன் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களை அமைதிப்படுத்தினர்"

    • நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது.
    • மருத்துவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.

    ராதாபுரம்:

    நெல்லை மாவட்டத்தில் ராதாபுரம் அரசு மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் உள்ள 90-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தலைமை மருத்துவமனையாக விளங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மருத்துவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

    மருத்துவர்கள் அனைவரும் வெளியூர்களில் இருந்து மருத்துவமனைக்கு வருவதால் உரிய நேரத்திற்கு வருவதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் பல நாட்கள் மருத்துவர்கள் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது .

    இது குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்களையும் நடத்தி உள்ளனர். இந்த நிலையில் காலை 7 மணிக்கு மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

    அதுமட்டுமில்லாமல் பள்ளி குழந்தைகள் மருத்துவர் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதில் பலர் ரத்த அழுத்த நோய்க்கும், நீரழிவு நோய்க்கும் சிகிச்சை எடுக்க வந்தவர்கள். இதனால் பலர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். காலை 9.15 மணிக்கு மருத்துவர் வந்தார். அதனைத் தொடர்ந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதே போல் இரவு நேரங்களிலும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்காததால் இரவு நேரங்களில் வரக்கூடிய அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் செல்லக் கூடிய சூழ்நிலையும் இருந்து வருகிறது. இதுகுறித்து ராதாபுரம் ஒன்றிய பா.ஜ.க. ஊடக தலைவர் காமராஜ் கூறியதாவது: -

    ராதாபுரம் தாலுகாவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை தான் தலைமை மருத்துவமனையாக இருந்து வருகிறது. இந்த மருத்துவமனைக்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் சுழற்சி முறையில் இருக்க வேண்டும். ஆனால் பல நாட்கள் மருத்துவர்கள் இருப்பதே கிடையாது. மருத்துவர்கள் உரிய நேரத்திற்கும், மருத்துவ பணியாளர்கள் உரிய நேரத்திற்கும் வருவதும் கிடையாது.

    இதனால் இங்கு வரக்கூடிய நோயாளிகள் மருத்துவர்கள் இல்லாததால் தனியார் மருத்துவமனையை நாட வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே பணிக்கு வராத மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க மருத்துவ துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

    • கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    • தக்க சிகிச்சை அளித்து எப்படியாவது நோயாளிகளை காப்பாற்ற வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாகதேசிய மருத்துவர் தின நிகழ்ச்சி அவினாசி ரோட்டில் உள்ள டி. எஸ். கே. மகப்பேறு மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாநகர் நல அலுவலர் மருத்துவர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.

    மருத்துவர் ராய் நினைவாக இந்த தினம் மருத்துவர்களுக்காக கொண்டாடப்படுகிறது. மருத்துவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யவேண்டும் . நோயாளிகளிடம் கனிவாக பேசவேண்டும். தக்க சிகிச்சை அளித்து எப்படியாவது அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றார். மேலும் கடந்த வருடம் தொடங்கி இன்று வரை தமிழக அரசு வழிகாட்டுதலின் படி 30 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அனைத்து முகாம்களிலும் அலகு-2 மாணவர்கள் தன்னார்வலராக கலந்து கொண்டு சிறப்பாக சேவை செய்துள்ளனர். இது போல அனைத்து மாணவர்களும் பேரிடர் காலங்களில் சுகாதார துறையுடன் கைகோர்க்கும் போது எங்களுக்கும் உற்சாகம் எழும் என்றார். பிறகு மாணவர்கள் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் அவர்கள் தயார்படுத்தி வைத்திருந்த மருத்துவர் தின வாழ்த்து மடலையும், துணிப்பைகளையும், இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.

    பிறகு அலகு-2 மாணவர்கள் தாராபுரம் ரோட்டில் உள்ள திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று மருத்துவர்களுக்கு வாழ்த்துமடலை அளித்தனர். இறுதியில் மருத்துவர் கலைச்செல்வம் நன்றி கூறினார். மாணவ செயலர்கள் அருள்குமார் மற்றும் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.

    கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் கரடிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கோத்தகிரி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நேற்று காலை 7 மணியளவில் ஒரு கரடி புகுந்தது. அந்த கரடி அங்கு ஜாலியாக உலா வந்தது. இதை பார்த்த ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் கடும் அதிர்ச்சி அடைந்து அலறியடித்து ஓடினர். அவர்களின் கூச்சல் சத்தத்தை கேட்ட கரடி அங்கிருந்து ஓடி அருகில் உள்ள தேயிலை தோட்டத்துக்குள் சென்று மறைந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலையில் மீண்டும் அந்த கரடி ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதையடுத்து இந்த மருத்துவமனையில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரியில் அரசு மருத்துவமனை கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சிங்கம்புணரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு அங்கும் மருத்துவ பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தற்போது தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால் இங்கு 7 மருத்துவர்கள் இருக்க வேண்டிய நிலையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதுதவிர இங்கு செவிலியர்கள், மருந்தாளுனர், துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறையும் உள்ளது.

    இங்கு பணியாற்றிய மருத்துவர்கள் தற்காலிக பணிக்காக அருகில் உள்ள வேறு ஊர்களுக்கு மாற்றப்பட்டதால் தான் தற்போது போதிய மருத்துவர்கள் இல்லாமல் இந்த மருத்துவமனை உள்ளதாக தெரிகிறது. இது குறித்து இப்பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவர் கூறியதாவது:-

    சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் நாளுக்கு நாள் சிகிச்சை பெறுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த மருத்துவமனையில் தற்போது 2 மருத்துவர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். ஆனால் இங்குள்ள அறிவிப்பு பலகையில் 7 மருத்துவர்கள் வரை உள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தினம்தோறும் இங்கு வரும் நோயாளிகளுக்கு 2 மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இதனால் நீண்டவரிசையில் நின்று நோயாளிகள் மருத்துவரை பார்க்க வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இந்த மருத்துவமனையில் ஒரு மாத காலத்தில் 50-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகிறது. ஆனால் பெண் மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் தான் பிரசவங்கள் பார்க்கும் நிலை உள்ளது. அதேபோல் மருந்தாளுனர் ஒருவர் மட்டும் பணி செய்வதால் மருந்துகளை வாங்குவதற்கு பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    எனவே சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுனர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் டிசம்பர் 15-ம் தேதிவரை ஸ்கேன் எடுக்க கட்டணம் வசூலிக்க கூடாது என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #Gajaaffecteddistricts #Scanchargeswaived
    சென்னை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வீடு இடிந்து விழுந்தும், மரம் சாய்ந்தும் காயமடைந்துள்ளனர். இவர்களில் மிக சிலருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காக சிகிச்சைக்கு செல்பவர்களிடம் ஸ்கேன் எடுப்பதற்கு அரசு மருத்துவமனைகள் கட்டணம் வசூலிப்பதாகவும் சமீபத்தில் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.



    அடுத்தவேளை சோற்றுக்கு வழியறியாமல் நிர்கதியாக தவிக்கும் மக்களிடம் தயவு, தாட்சண்யம் காட்டாத அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கண்டனக் குரல்கள் பரவ தொடங்கின.

    இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலிக்கக்கூடாது என தமிழக சுகாதாரத்துறை இன்று உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #Gajaaffecteddistricts  #Scanchargeswaived
    ×