என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நோயாளிகளிடம் கனிவாக பேச வேண்டும் - மருத்துவர்களுக்கு அதிகாரி அறிவுறுத்தல்
- கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்துக்கள்.
- தக்க சிகிச்சை அளித்து எப்படியாவது நோயாளிகளை காப்பாற்ற வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு -2 சார்பாகதேசிய மருத்துவர் தின நிகழ்ச்சி அவினாசி ரோட்டில் உள்ள டி. எஸ். கே. மகப்பேறு மருத்துவமனையில் அனுசரிக்கப்பட்டது. அலகு -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக மாநகர் நல அலுவலர் மருத்துவர் பிரதீப் வாசுதேவன் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார்.
மருத்துவர் ராய் நினைவாக இந்த தினம் மருத்துவர்களுக்காக கொண்டாடப்படுகிறது. மருத்துவர்கள் தங்கள் கடமையை சரிவர செய்யவேண்டும் . நோயாளிகளிடம் கனிவாக பேசவேண்டும். தக்க சிகிச்சை அளித்து எப்படியாவது அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றார். மேலும் கடந்த வருடம் தொடங்கி இன்று வரை தமிழக அரசு வழிகாட்டுதலின் படி 30 மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. அனைத்து முகாம்களிலும் அலகு-2 மாணவர்கள் தன்னார்வலராக கலந்து கொண்டு சிறப்பாக சேவை செய்துள்ளனர். இது போல அனைத்து மாணவர்களும் பேரிடர் காலங்களில் சுகாதார துறையுடன் கைகோர்க்கும் போது எங்களுக்கும் உற்சாகம் எழும் என்றார். பிறகு மாணவர்கள் ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் அவர்கள் தயார்படுத்தி வைத்திருந்த மருத்துவர் தின வாழ்த்து மடலையும், துணிப்பைகளையும், இனிப்புகளையும் வழங்கி மகிழ்ந்தனர்.
பிறகு அலகு-2 மாணவர்கள் தாராபுரம் ரோட்டில் உள்ள திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சென்று மருத்துவர்களுக்கு வாழ்த்துமடலை அளித்தனர். இறுதியில் மருத்துவர் கலைச்செல்வம் நன்றி கூறினார். மாணவ செயலர்கள் அருள்குமார் மற்றும் பாலசுப்பிரமணியன் தலைமையில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டினை முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்