search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Parliment Elections"

    • தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க துவங்கி உள்ளன.
    • பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

    இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இது தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளார்களை ஒவ்வொரு கட்சியும் அறிவிக்க துவங்கி உள்ளன.

    அந்த வரிசையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை அக்கட்சி வெளியிட்டது. இதோடு பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார்.

     


    மேற்கு வங்காள மாநிலத்தின் பஹரம்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசப் பதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இதே தொகுதியில் ஐந்து முறை காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இந்த முறையும் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

    பஹரம்பூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிடலாம் என்ற நிலையில், பிரபலம் ஒருவரை வேட்பாளராக களமிறங்க செய்யும் முடிவில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கிரிக்கெட் வீரர் யூசப் பதானை இந்த தொகுதியில் வேட்பாளராக அறிவித்து இருக்கிறது.

    பஹரம்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "இது போன்ற முடிவுகளை ஒருதலைப்பட்சமாக எடுப்பதோடு பேச்சுவார்த்தை மூலம் எட்டுவதையே காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இந்தியா கூட்டணியில் ஒன்றாக இணைந்து பா.ஜ.க.வை எதிர்க்கவே காங்கிரஸ் கட்சி நினைத்து வந்துள்ளது," என்று தெரிவித்தார்.

    • முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.
    • திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

    இந்தியாவில் பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி அதற்கான பணிகளை வேகப்படுத்தி உள்ளன. அந்த வகையில், பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியலை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது.

    இந்த பட்டியலில் 39 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் என்ற விவரம் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலின் படி காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மீண்டும் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில் சசிதரூர் போட்டியிடுகிறார்.

     


    இந்த வரிசையில் புகழ்பெற்ற நடிகர் சிவராஜ்குமாரின் மனைவி கீதா சிவராஜ்குமார் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோன்று சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ராக்நந்த்கான் தொகுதியிலும், கே.சி. வேனுகோபால் ஆலப்புழா தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

    பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூரில் உள்ள தனது வீட்டில் இருந்து தொடங்கினார். #LokSabhaElections2019 #MKStalin
    திருவாரூர்:

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணிக்கும் தி.மு.க. கூட்டணிக்கும் இடையே கடும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. கூட்டணியில் 8 கட்சிகளும், தி.மு.க. கூட்டணியில் 9 கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இரு கூட்டணிகளையும் ஏராளமான அமைப்புகள் மற்றும் சிறிய கட்சிகள் போட்டி போட்டு ஆதரிக்கின்றன.

    கூட்டணி அமைப்பதில் தொடங்கி வேட்பாளர்களை அறிவிப்பது, தேர்தல் அறிக்கை வெளியிடுவது மற்றும் பிரசாரத்தை தொடங்குவது ஆகியவற்றில் அ.தி.மு.க. தலைவர்களும், தி.மு.க. தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர். கடந்த 17-ந்தேதி ஒரே நாளில் அ.தி.மு.க.- தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. நேற்று அ.தி.மு.க.- தி.மு.க. தேர்தல் அறிக்கைகள் வெளியானது.

    இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 2 கட்டமாக சூறாவளி சுற்றுப்பயணம் செய்து அதிரடி தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். முதல் கட்டமாக மார்ச் 20-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை பிரசார சுற்றுப்பயண திட்டத்தை வெளியிட்டார். முதல் கட்டத்தில் இன்று முதல் மொத்தம் 18 நாட்கள் அவர் இடைவிடாமல் பிரசாரம் செய்கிறார்.

    மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை தனது பூர்வீக ஊரான திருவாரூரில் தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இதற்காக நேற்று அவர் சென்னையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் சென்றார். திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    பிறகு அங்கிருந்த கருணாநிதி படத்துக்கும் மாலை அணிவித்து வணங்கினார். பின்னர் திருவாரூர் கீழவீதியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்தார். இன்று அதிகாலை அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார்.

    திருவாரூர் கீழ சன்னதி தெரு, திருவள்ளுவர் நகர், வாசன் நகர், காந்தி நகர், மருதப்பாடி மற்றும் அய்யனார் கோவில் தெரு,கீழ வீதி உள்பட பல்வேறு இடங்களில் பொது மக்களிடம் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். திருவாரூர் தொகுதி சட்டசபை வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்வராசு ஆகியோருக்கு அவர் ஆதரவு திரட்டினார்.

    வீதி வீதியாக சென்ற அவர் தி.மு.க.வுக்கு வாக்களிக்க கோரி துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் விநியோகித்தார். நிறைய பேரிடம் அவர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

    பிரசாரத்தின் போது அவரை ஆண்களும், பெண்களும் உற்சாகமாக வரவேற்றனர். நிறைய இடங்களில் வாலிபர்களும், இளம்பெண்களும் சிரித்தப்படி மு.க.ஸ்டாலினுடன் செல்போனில் செல்பி படம் எடுத்து கொண்டனர். அப்போது செல்பிக்காக அவர்களுடன் மு.க.ஸ்டாலின் பொறுமையாக நின்று விட்டு சென்றார்.



    வீதி, வீதியாக சென்ற மு.க.ஸ்டாலின் ஒரு கட்டத்தில் வீடு வீடாகவும் சென்று தி.மு.க., கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டார். வாக்காளர்களை கண்டதும் முகம் மலர கை கூப்பியப்படி மு.க.ஸ்டாலின் வணங்கி வாக்கு சேகரித்தார்.

    8 மணிக்கு பிறகு பல இடங்களில் நடந்தே சென்று அவர் வாக்குகளை சேகரித்தார். அப்போது பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    மு.க.ஸ்டாலின் தெருக்களில் நடந்து சென்ற போது எதிரே வரும் அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தார். இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் தங்களது வாகனத்தை நிறுத்தி ஸ்டாலினிடம் கை குலுக்கினார்கள். அவர்களில் பலரிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

    இதுபோல திருவாரூர் வீதிகளில் பல இடங்களில் சிறுவர்-சிறுமிகள் மு.க. ஸ்டாலினுக்கு ஆர்வத்துடன் ஓடிவந்து பூக்கொத்துக்களை கொடுத்தனர். அவற்றை சிரித்தப்படியே வாங்கிக் கொண்ட மு.க.ஸ்டாலின் அந்த சிறுமிகளிடம் கை குலுக்கி பாராட்டு தெரிவித்தார்.

    மு.க.ஸ்டாலின் இந்த நட வடிக்கைகளால் திருவாரூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தி.மு.க. நிர்வாகிகளுடன் பொதுமக்களும் வரவேற்றதால் உற்சாகம் அடைந்த மு.க.ஸ்டாலின் பெரும்பாலான தெருக்களில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.

    தேர்தல் பிரசாரத்திற்கு இடையே திருவாரூர் கீழ சன்னதி வீதியில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க. தேர்தல் அலுவலகத்தையும் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். அங்கு சிறிது நேரம் அமர்ந்து நிர்வாகிகளுடன் தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

    பின்னர் திருவாரூரில் இருந்து காரில் புறப்பட்டு மணக்கால் கிராமத்துக்கு சென்றார். அங்கு பெண்கள் மற்றும் விவசாய தொழிலாளர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவர்களிடம் மறக்காமல் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டு கொண்டார்.

    அங்கு பிரசாரம் முடிந்ததும் திருக்காரவாசல் கிராமத்துக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்கு விவசாயிகள், பெண்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்தார். அந்த ஊர் மக்கள் மு.க.ஸ்டாலினிடம் ஒரு கோரிக்கையை முன் வைத்தனர்.

    அவர்கள் கூறுகையில், “எங்கள் ஊரில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தொடங்க நட வடிக்கை எடுத்துள்ளனர். இந்த திட்டம் எங்கள் பகுதிக்கு வேண்டாம். இதை உடனடியாக கைவிட செய்ய வேண்டும். இந்த திட்டம் வந்தால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும்” என்று கூறினார்கள்.

    பொதுமக்கள் சொன்னதை மு.க.ஸ்டாலின் உன்னிப்பாக கேட்டுக் கொண்டார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் அந்த பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.

    காலை 11 மணிக்கு திருவாரூர்-நாகை புறவழிச் சாலையில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அங்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

    இதையடுத்து மீண்டும் திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    இன்று மாலை மு.கஸ்டாலின் திருவாரூரில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர் செல்கிறார். தஞ்சை திலகர் திடலில் மாலை 6 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பேசுகிறார்.

    பின்னர் கூட்டத்தை முடித்துக் கொண்டு ஸ்டாலின் தஞ்சையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார். திருச்சி மாவட்டத்தில் நாளை முதல் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை தொடங்குகிறார்.  #LokSabhaElections2019 #MKStalin
    சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். #PMModi #ParlimentElection #SurjicalStrikes #Demonetizaiton #UrjitPatel #RamarTemple
    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சாமானியர் மற்றும் மெகா கூட்டணி இடையே தான் போட்டி இருக்கும். நான் சாமானியரின் பிரதிபலிப்பு தான்.

    பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் மீது இந்தியா நடத்திய துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் ஸ்டிரைக்) துணிச்சலான நடவடிக்கை. இந்த துல்லிய தாக்குதல் நடத்திய வீரர்கள் குறித்து கவலை கொண்டிருந்தேன். அவர்களில்
    எந்த ஒரு வீரரும் உயிரிழக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.



    ராமர் கோவில் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை காங்கிரஸ் தாமதப்படுத்தியது. சட்ட நடைமுறைகள் முடிந்த பிறகே, ராமர் கோவிலுக்கு அவசர சட்டம் கொண்டுவருவது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

    ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் பதவி விலகியதில் அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை. உர்ஜித் படேல் ரிசர்வ் வங்கி ஆளுநராக சிறப்பாக பணியாற்றினார். அவர் சொந்த காரணங்களுக்காகவே பதவி விலகினார்.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஒரு சிலர் மட்டுமே கருப்பு பணத்தை தாமாக முன்வந்து திரும்ப செலுத்தினர். நாட்டை நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்து வந்தவர்கள் பல நிதி மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். #PMModi #ParlimentElection #SurjicalStrikes #Demonetizaiton #UrjitPatel #RamarTemple
    பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. #NDAseatsharing #Biharseatsharing
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் மாநில வாரியாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்வதிலும் வேட்பாளர் தேர்விலும் பா.ஜ.க. தலைமை தீவிரம் காட்டி வருகிறது.

    இந்நிலையில், பீகார் மாநில முதல் மந்திரி நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோருடன் இன்று டெல்லியில் பா.ஜ.க. தலைவர் அமித் ஷா தொகுதி உடன்பாடு குறித்து ஆலோசனை நடத்தினார்.



    இந்த ஆலோசனைக்கு பின்னர் பீகார் மாநிலத்தில் உள்ள 40 தொகுதிகளில் பா.ஜ.க. மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலா 17 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

    மேலும், பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு இடம் அளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அநேகமாக, மேல்சபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #NDAseatsharing #Biharseatsharing
    ×