என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Padma Awards"
- பொதுசேவை புரிந்தவர்கள் பத்மா விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.
- குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகளை ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. நமது தேசத்திற்கு நற்பெயரையும், புகழையும் ஈட்டித் தந்து தன்னலமிக்க பொது சேவை, தனித்துவமான வேலை மற்றும் விதிவிலக்கான சாதனை போன்ற மேன்மை பொருந்திய பணிகளுக்காக ஒன்றிய அரசாங்கம் பத்ம விருதுகள் வழங்க அறிவித்துள்ளது.
கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப் பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு வருகிற 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழா அன்று பத்ம விருதுகள் வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை www.padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் 15-ந் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளைச் செய்தவா்களுக்கு குடியரசு தின விழாவின்போது பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
- தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-
மத்திய அரசு 2023- ம் ஆண்டு ஜனவரியில் பத்ம விருதுகள்(பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ) ஆகிய விருதுகளை வழங்க உள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளைச் செய்தவா்களுக்கு குடியரசு தின விழாவின்போது பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றுக்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய மத்திய அரசு இணையதளத்தை காணலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 15-ம் தேதிக்குள் தகுதியுடையோா் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் முதற்கட்டமாக சிலருக்கு கடந்த 11-ந்தேதி விருதுகள் வழங்கப்பட்டன. மீதமுள்ளவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்தது. இந்த விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.
இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சாலுமரதா திம்மக்கா (வயது 106) என்ற முதிய பெண்மணியும் பத்மஸ்ரீ விருது பெறுவதற்காக ஜனாதிபதி மாளிகைக்கு வந்திருந்தார். அங்கு அவர் விருதுக்காக அழைக்கப்பட்ட போது ஜனாதிபதியை நோக்கி புன்சிரிப்புடன் வந்தார்.
அவரிடம் பத்மஸ்ரீ விருதை வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், புகைப்படம் எடுப்பதற்காக போஸ் கொடுக்குமாறு கூறினார். ஆனால் அந்த பெண் திடீரென ஜனாதிபதியின் தலையில் கை வைத்து ஆசி வழங்கினார். இதை எதிர்பார்க்காவிட்டாலும், திம்மக்காவின் அந்த எளிய அன்பை ஜனாதிபதி பணிவுடன் தலை குனிந்து ஏற்றுக்கொண்டார்.
கர்நாடகாவின் குலிக்கல் கிராமத்தை சேர்ந்த திம்மக்கா தனது கணவருடன் இணைந்து ஏராளமான மரங்களை நட்டு வளர்த்துள்ளார். குழந்தைகள் இல்லாததால் இளம் வயதில் தற்கொலைக்கு முயன்ற அவர், பின்னர் தனது முடிவை மாற்றிக்கொண்டு மரம் வளர்ப்பில் கவனத்தை செலுத்தினார்.
இவ்வாறு கடந்த 65 ஆண்டுகளில் 400 ஆலமரங்கள் உள்பட 8 ஆயிரத்துக்கும் அதிகமான மரங்களை திம்மக்கா நட்டு வளர்த்து இருக்கிறார். மரங்களை வெறுமனே நட்டுவிட்டு செல்லாமல் அவற்றை தொடர்ந்து பராமரித்தும் வந்திருக்கிறார் திம்மக்கா. இதற்காக 4 கி.மீ. தொலைவு வரை சென்று தண்ணீர் சேமித்து வந்து அரிய சேவையில் ஈடுபட்டு உள்ளார்.
கடந்த 1991-ம் ஆண்டு அவரது கணவர் மரணமடைந்தார். எனினும் திம்மக்காவின் மரங்கள் மீதான காதல் தொடர்ந்தது. திம்மக்காவின் இந்த சேவைக்காக அவரை ‘மரங்களின் தாய்’ என்றே அனைவரும் அழைத்து வருகின்றனர். இந்த அரிய பணிகளுக்காகவே அவருக்கு பத்மஸ்ரீ விருதும் தேடி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவரை தவிர மேலும் பலர் நேற்று பத்ம விருதுகள் பெற்றனர். இதில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.
மேலும் மதுரையை சேர்ந்த சின்னப்பிள்ளை, முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, மலையேற்ற வீராங்கனை பச்சேந்திரபால், கூடைப்பந்து வீரர் பிரசாந்தி சிங், நடிகர் மனோஜ் பாஜ்பாய், ஒடிசாவை சேர்ந்த டீ வியாபாரி பிரகாஷ் ராவ் ஆகியோரும் விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர். #ManojBajpayee #PadmaAwards #RamNathGovind
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம விருது பெறுபவர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. மொத்தம் 112 பேர் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
இதையடுத்து கடந்த 11ம் தேதி, முதல் கட்டமாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 56 பேருக்கு ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் வழங்கினார். இதில் திரைத்துறை சார்பில் மோகன் லால், பிரபுதேவா, டிரம்ஸ் மணி உள்ளிட்டோர் பத்ம ஸ்ரீ விருதுகளை பெற்றனர்.
தமிழகத்தைச் சேர்ந்த நடன கலைஞர் நர்த்தகி நட்ராஜ் (பரத நாட்டியம்), ராமசாமி வெங்கடசாமி (மருத்துவம்) ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இதையடுத்து, கானா பாடகி தேஜன் பாய் பத்ம விபூஷண் விருது பெற்றார். மேலும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன், வர்த்தகம் மற்றும் தொழில்துறை, உணவுத்துறை ஆகியவற்றிற்காக மகாஷை தரம்பால் குலாத்தி, மலையேறும் பணிக்காக பச்சேந்திரி பால் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்விழாவில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி ராஜ் நாத் சிங் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். #PadmaAwards #RamNathGovind
பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய தேசிய விருதுகள் அரசியல்சாசன விதிகள் 18(1)-ன்படி விருது பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன்னாலோ, பெயருக்கு பின்னாலோ விருதுகளின் பெயர்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது. அப்படி தவறாக பயன்படுத்தினால், விருது பெற்றவர் அந்த உரிமையை இழந்தவர் ஆகிறார்.
ஜனாதிபதி அவர்களின் விருதுகளை ரத்து செய்யவோ, நீக்கவோ முடியும். அல்லது விருது பெற்றவர்களின் பெயர்கள் அதற்கான பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். அப்படி நீக்கப்பட்டால் அவர்கள் அந்த விருதுகளை திரும்ப ஒப்படைக்க நேரிடும். விருது பெற்ற ஒவ்வொருவரும் இதனை கடைபிடிக்க வேண்டும். எனவே விருது பெற்றவர்கள் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ விருதுகளை சேர்க்க வேண்டாம்.
1955-ம் ஆண்டில் இருந்து இதுவரை 38 பேருக்கு பாரத ரத்னா விருதும், 307 பேருக்கு பத்ம விபூஷண், 1,255 பேருக்கு பத்மபூஷண், 3,005 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PadmaAwards
பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்படுபவர்களுக்கும், சமூக சேவை செய்பவர்களுக்கும் சாதனையாளர்களுக்கும் மத்திய அரசு சார்பில் பத்ம விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய பத்ம விருதுகளை பெறுவது கவுரவமிக்கதாக கருதப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் பத்ம விருது பெறுபவர்களை மத்திய உள்துறை அமைச்சகம் தேர்வு செய்கிறது. இதற்காக பொதுமக்கள் விண்ணப்பம் அளிக்கலாம் என்ற நடைமுறை உள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு 1313 பேர் பத்ம விருதுக்காக விண் ணப்பித்திருந்தனர்.
2016-ம் ஆண்டு பத்ம விருது பெற விரும்பி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 768 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு அது 35 ஆயிரத்து 595 பேராக அதிகரித்தது.
2019-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெற விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. கடந்த மே 1-ந்தேதி விண்ணப்பம் பெறுவது தொடங்கியது. விண்ணப்பிக்க செப்டம்பர் 15-ந்தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. அன்று வரை விண்ணப்பித்தவர்கள் பற்றிய கணக்கீடு நடத்தப்பட்டது.
பத்ம விருதுகளுக்கு சாதனையாளர்களை பரிந்துரைக்கும் நடைமுறையும் அமலில் உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஆன்-லைன் மூலமாகவும் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்ற வசதி கொண்டு வரப்பட்டது. அதன் பிறகே பத்ம விருதுக்காக விண்ணப்பிக்கும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தற்போது விண்ணப்பித்துள்ள 49,992 பேரின் மனுக்கள் ஆய்வு செய்யப்படும். அதில் தகுதியானவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டு 2019-ம் ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்கள் விவரம் வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும். #PadmaAwards
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்