search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பத்ம விருதுகளுக்கு  விண்ணப்பங்கள் வரவேற்பு
    X

    பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    • குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளைச் செய்தவா்களுக்கு குடியரசு தின விழாவின்போது பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
    • தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    மத்திய அரசு 2023- ம் ஆண்டு ஜனவரியில் பத்ம விருதுகள்(பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ) ஆகிய விருதுகளை வழங்க உள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளைச் செய்தவா்களுக்கு குடியரசு தின விழாவின்போது பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றுக்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய மத்திய அரசு இணையதளத்தை காணலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 15-ம் தேதிக்குள் தகுதியுடையோா் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×