என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: ஒருவர் உயிரிழப்பு
Byமாலை மலர்8 Nov 2021 4:12 PM GMT (Updated: 8 Nov 2021 4:12 PM GMT)
ஜம்மு-காஷ்மீரில் இன்று பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகர் பகுதியில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு வருகிறது. பயங்கரவாதிகள் சாதாரண மனிதர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். வெளி மாநிலத்திலிருந்து வேலைக்காகச் சென்றவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்துபவர்களை உள்ளூர் போலீஸ் உதவியுடன் பாதுகாப்புப்படையினர் வேட்டையாடி வருகின்றனர். கடந்த 5-ந்தேதி ஸ்ரீநகரில் உள்ள ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாப்புப்படை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த நிலையில் இன்று மாலை ஸ்ரீநகரில் உள்ள போஹ்ரி கதல் பகுதியில் சாதாரண மனிதர் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அந்த நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஜம்மு-காஷ்மீர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற இடத்தை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X